Wednesday, July 24, 2013

தேவாரம் - என் கடன் பணிசெய்து கிடப்பதே

தேவாரம் - என் கடன் பணிசெய்து கிடப்பதே 


இறைவனுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது. அது அடியார்களை தாங்குவது.  தாங்குதல் என்றால் கீழே விழாமல் பிடித்துக் கொள்ளுவது. தவறி விழுந்து விடாமல் தாங்கிப் பிடிப்பது.

இறைவா, உன் கடமை என்னை தாங்கிப் பிடிப்பது என்று . கட்டளையாகச் சொல்கிறார். நான் உன்னை வணங்கி, வேண்டி, பெற்றுக் கொள்ளுவது எல்லாம் தேவை இல்லை. என்னை தாங்க வேண்டியது உன் கடமை. நீ உன் கடமையைச் செய்.

அதையும்  சொல்லுகிறார் என்றார், அந்த முருகனைப் பெற்ற பார்வதியை இடப் பாகமாக கொண்டவனே, என்னை தாங்குவது உன் கடமை.

யாருக்கும், அவர்களின் பிள்ளை பேரை சொன்னால் கொஞ்சம் மனம் கனியும். அதோடு மனைவியின் போரையும் கொஞ்சம் சேர்த்து  கொண்டால் இன்னும் இனிமை சேரும்.

அப்படி இறைவனுக்கு கடமையை சொன்ன நாவுக்கரசர், அடிவர்களுக்கும் ஒரு கடமை உண்டு என்று சொல்கிறார். அது, எப்போதும் பணிசெய்வது. பணி செய்த பின் அதற்கு என்று கூலி எதுவும் எதிர் பார்க்காமல் சும்மா கிடப்பது. அது அடியவர்களின் வேலை. திருத் தொண்டு புரிவது. 

பாடல்

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

சீர் பிரித்த பின்

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பை திருக் கர கோயிலான் 
தன் கடன் அடியேனையும் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே 

பொருள்


திருக்குறள் - நகையும், பகையும்

திருக்குறள் - நகையும், பகையும் 



நண்பர்களுக்கு இடையிலேயோ, உறவினர்களுக்கு இடையிலேயோ சில சமயம்  கிண்டல், குத்தல், நையாண்டி என்று வரும்போது ஏதாவது மற்றவர்களைப் பற்றி ஏதாவது சற்று மனம் புண் படும்படி சொல்லி விடுவோம்.

சும்மா ஒரு ஜோக்குக்குத் தானே, ஒரு தமாஷ் தானே என்று என்று நாம் நினைக்கலாம். அவர்களும் அதை பெரிதாக நினைக்காமல் விடலாம்.

ஆனால், அது அவர்களுக்கு மன வேதனையை தரும் என்பது  நிச்சயம். காட்டிக் கொள்ளா விட்டாலும், மனதுக்குள் வருந்துவார்கள்.

அது ஒருபுறம் இருக்கட்டும்.

நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் என்று யாரேனும் இருக்கலாம். நம்முடைய பகைவர் என்பற்காக அவர்கள் முட்டாள்கள் என்றோ, அறிவற்றவர்கள் என்றோ நினைக்கக் கூடாது. அவர்களிடமும் சில நல்ல பண்புகள் இருக்கலாம்.

இரண்டு விஷயங்களை கூறுகிறார் வள்ளுவர்.

நண்பர்கள்தானே என்று இகழ்ச்சியாகப் பேசக் கூடாது.
பகைவர்கள்தானே என்று அவர்களின் நல்ல குணங்களை மறுக்கக் கூடாது.

இது இரண்டும் நல்ல பண்புள்ளவர்களுக்கு அழகு.

அதாவது, விளையாட்டாகக் கூட நண்பர்களையோ உறவினர்களையோ இகழ்ந்து பேசக் கூடாது. அப்படி செய்தால், நாம் அவர்களின் நட்பையோ உறவையோ இழக்க நேரிடலாம்.

பகைவர்கள் ஆனால் கூட, அவர்களின் நல்ல பண்புகளை போற்ற வேண்டும்.


பாடல்

நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் 
பண்புள பாடறிவார் மாட்டு.


சீர் பிரித்த பின்

நகை உள்ளும் இன்னாது இகழ்ச்சி பகை உள்ளும்
பண்புள்ளது பாடு அறிவார் மாட்டு

பொருள்


இராமாயணம் - அவனா நீ ?

இராமாயணம் - அவனா நீ ?


இராமனும் இலக்குவனும்  மான் பின்னால் போன பின், இராவணன் கபட சந்நியாசி வேடத்தில் மெல்ல மெல்ல வருகிறான். அவன் எப்படி வந்தான் என்று முந்தைய ப்ளாக்கில் பார்த்தோம்.

அப்படி மெல்ல மெல்ல சீதை இருக்கும் குடிசையின் வாசலுக்கு வருகிறான்.

நாக்கு குழற, குரல் நடுங்க "யார் இங்க இருக்கா " என்று கேட்டான். அவன் தோற்றத்தையும், நடிப்பையும் பார்த்தால் தேவர்கள் கூட இவன் இராவணன் என்று கண்டு பிடிக்க முடியாது.

பாடல்

தோம் அறு சாலையின்    வாயில் துன்னினான்; 
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான்; 
'யாவர் இவ் இருக்கையுள்  இருந்துளீர்?' என்றான்- 
தேவரும் மருள்தரத் தெரிந்த மேனியான்.


பொருள்

Tuesday, July 23, 2013

இராமாயணம் - இராவணின் கபட வேடம்

இராமாயணம் - இராவணின் கபட வேடம் 


மாய மான் பின்னால் அந்த மாயவன் போனான்.

போனவனை பின் தொடர்ந்து இளையவன் போனான்.

இருவரும் போன பின் சீதை தனித்து இருக்கிறாள்.

இராவணன்   வயதான முனிவர் போல் கபட வேடம் பூண்டு சீதை இருக்கும் இடம் வருகிறான்.

பாடல்

பூப் பொதி அவிழ்ந்தன 
     நடையன்; பூதலம் 
தீப் பொதிந்தாமென 
     மிதிக்கும் செய்கையன்; 
காப்பு அரு நடுக்குறும் 
     காலன், கையினன்; 
மூப்பு எனும் பருவமும் 
     முனிய முற்றினான்.

பொருள்

பூப் பொதி = பூவின் இதழ்கள்

அவிழ்ந்தன = மலர்வதைப் போல உள்ள

நடையன் = நடையுடன். சத்தமே இல்லாமல், மிக மிக மெதுவாக....ஒரு பூ மலர்வதைப் போல

பூதலம் = பூமி

தீப் பொதிந்தாமென = தீ  எரிந்தால்

மிதிக்கும் செய்கையன் =  அந்த சூட்டின் மேல் எப்படி பட்டும் படமாலும் நடப்பார்களோ அப்படி நடக்கும் செய்கையன்.


காப்பு அரு = காத்துக் கொள்ள அருமையான, அல்லது கடினமான

 நடுக்குறும் = நடுக்கம் கொண்ட

காலன், கையினன் = காலும் கையும்  கொண்டு. அதாவது காலும் கையும் நடுங்குகிறது. தடுத்து அந்த நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை


மூப்பு எனும் பருவமும் = வயதான  பருவத்தோடு

முனிய = கோபப்படும்படி. வயதானவர்களுக்கே அவர்களின் முதுமையை பற்றி கோவம் வரும். கண் தெரியாமல், காது சரியாக கேட்காமல், எல்லாவற்றிற்கும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டு....

முற்றினான் = .அப்படிப்பட்ட முதுமையிலும் பழுத்த, முற்றிய உருவினனாய் வந்தான்

இந்தப் பாடலில் என்ன இருக்கிறது என்று கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

புல்லின் மேல் சறுக்கு விளையாடும் அந்த பனித்துளியில் என்ன இருக்கிறது...

தூக்கம் கலையாத காலைப் பொழுதில் எங்கேயோ கூவும் குயிலின் அந்த ஒத்தை  ஒலியில்என்ன இருக்கிறது ?

வெட்கப்படும் மனைவியின் கன்னச் சிவப்பில் என்ன இருக்கிறது ?

தோளில்தூங்கிப் போகும் குழந்தை, அதில் என்ன இருக்கிறது....

ஒரு வார்த்தை பேசாமல் ஒரு மணி நேரம் ஒன்றாய் நடக்கும் அந்த நட்பு, அதில் என்ன இருக்கிறது ....

இருப்பவைகளுக்கு விலை வைத்து விடலாம்...இல்லாததற்கு என்ன விலை சொல்லுவது ....

இன்று இல்லாவிட்டாலும், பின்னொரு நாள் இந்த கவிதைகளை படித்து பாருங்கள்....எங்கோ பெய்த  மழையின் மண் வாசம் இங்கே வருவதைப் போல காலம் கடந்தும் இந்த கவிதை   வாசனை உங்கள் நாசி  வருடிப் போகலாம்....

திருக்குறள் - விடாது கருப்பு

திருக்குறள் - விடாது கருப்பு 


வெல்லவே முடியாத பகை என்று ஒன்று இருக்கிறதா ?

இருக்கிறது.

அவரிடம் பெரிய பதவி இருக்கிறது. சொத்து பத்து எக்கச்சக்கம். பெரிய பெரிய அரசியல்வாதிகள்,  அதிகாரிகள் எல்லாம் அவர் கைக்குள். அவர் வைத்ததுதான் சட்டம்.

தனது செல்வாக்கை பயன்படுத்தி சில பல தீய காரியங்களை செய்கிறார். மற்றவர்களின் சொத்தை அபகரிக்கிறார். பொது சொத்தை தனதாக்கி கொள்கிறார். எதிர்த்தவர்களை, இல்லாதவர்களாக்குகிறார்.

யார் என்னை என்ன செய்ய  முடியும் என்று இருமாத்து இருக்கிறார்.

சட்டத்தை சட்டை செய்வது இல்லை.


இப்படி பட்டவர்கள் இராவணன் காலத்தில் இருந்து இன்றுவரை எத்தனையோ பேர். 

எவ்வளவு பெரிய பகை இருந்தாலும் அதை வென்று விடலாம்; ஆனால் தீவினை செய்வதால் வரும் பகையை வெல்லவே முடியாது. எங்கு போனாலும் துரத்தி வந்து பிடித்துக் கொள்ளும்.

பாடல்

எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென் றடும்.

சீர் பிரித்தபின்

எனை பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை 
வீயாது பின் சென்று அடும்

பொருள்


Monday, July 22, 2013

இராமாயணம் - வெஞ் சின விதியினை வெல்ல வல்லமோ?

இராமாயணம் - வெஞ் சின விதியினை வெல்ல வல்லமோ? 


துன்பம் மனிதனை எப்படி பக்குவப் படுத்துகிறது.

இராமனுக்கு மணி முடி கிடையாது என்று  கேட்டபோது "விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி " என்று சண்டமாருதம் போல் கோபத்தோடு கிளம்பிய இலக்குவன் எப்படி மாறிப் போனான்.

இராமன் , இந்த மானின் பேச்சை கேட்டு அந்த மானின் பின் போனான்.

இராமனுக்கு ஏதோ ஆபத்து நீயும் போ என்று இலக்குவனை போகும்படி சொல்கிறாள் சீதை.

இலக்குவன் சொல்கிறான் "எங்க அண்ணாவின் கோதண்டம் காதண்டம் வளையுமுன் இந்த மூவண்டம் அதிரும்...எங்க அண்ணாவுக்கு எப்படி  ஆபத்து வரும் " என்று கூறி போக மறுக்கிறான்.

நீ போகாவிட்டால் நான் உயிரை விடுவேன் என்கிறாள்.

இலக்குவன் சொல்கிறான்

பாடல்


'துஞ்சுவது என்னை? நீர் சொன்ன 
     சொல்லை யான் 
அஞ்சுவென்; மறுக்கிலென்; அவலம் 
     தீர்ந்து இனி, 
இஞ்சு இரும்; அடியனேன் 
     ஏகுகின்றனென்; 
வெஞ் சின விதியினை 
     வெல்ல வல்லமோ?

பொருள்


தாயுமானவர் - அன்னை வடிவான அப்பனே

தாயுமானவர் - அன்னை வடிவான அப்பனே 


தாயின் கருவறையில் இருந்தோம். எவ்வளவு பெரிய இருட்டு அறை அது.

வெளிச்சம் கிடையாது, கருவில் இருக்கும் குழந்தைக்கு அறிவு கிடையாது. கண் பார்வை கிடையாது.

அது போல ஆன்மாக்களாகிய நாம், ஆணவம் என்ற இருண்ட கரு அறையில்  அகப்பட்டு கிடக்கிறோம். தெளிவாக பார்கின்ற பார்வை இல்லை. அறிவு இல்லை. அங்கும் இங்கும் போக முடியாமல் கட்டுண்டு இருக்கிறோம்.

குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதல் இன்னல்தான்.

பசி, பிணி, மூப்பு என்ற முப்பெரும் துயரிலே இந்த உயிர்கள் கிடந்து உழல்கின்றன.

இந்த இருளில் இருந்து, இந்த துயரில் இருந்து உயிர்கள் விடுபட்டு, பேரின்பத்தை அடையச் செய்பவன் இறைவன்.

அன்னை வடிவான அப்பனே என்று உருகுகிறார் தாயுமானவ ஸ்வாமிகள்.

அவன் தந்தையானவன்.  தாயும் ஆனவன்.

பாடல்

காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப்போற்
கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங்
காப்பிட் டதற்கிசைந்த
பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்
பெலக்கவிளை யமுதமூட்டிப்
பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற
பெரியவிளை யாட்டமைத்திட்
டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்
டிடருற உறுக்கி இடர்தீர்த்
திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்துதுயில் கொண்மின்என்று
சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே.

சீர் பிரித்த பின்

கார் இருள் இட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற 
கண்ணில்லாக் குழவியைப் போல் 
கட்டு உண்டிருந்த எம்மை வெளியில் விட்டு அல்லலாம்
காப்பிட்டு மெய்யென்று பேசும் பாழும் பொய் உடல் 
பலக்க விளைய அமுதம் ஊட்டி 
பெரிய புவனத்திடை போக்கும் வரவும் உறுகின்ற
பெரிய விளையாட்டு அமைத்திட்டே 
இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு 
இடருற  உருக்கி இடர் தீர்த்து 
இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் 
இசைந்து துயில் கொண்மின் என்று 
சீரிட்ட உலக அன்னை வடிவான என் தந்தையே 
சித்தாந்த முத்தி முதலே 
சிரகிரி விளங்க வரும் தக்ஷிணா மூர்த்தியே 
சின்மயானந்த குருவே 


பொருள்

கார் இருள் இட்ட = கரு கும்முன்னு இருட்டு

ஆணவக் கருவறையில் =ஆணவமான கருவறையில்

அறிவற்ற  = அறிவு இல்லாத

கண்ணில்லாக் = கண்ணும் இல்லாத

 குழவியைப் போல் = குழந்தையைப் போல

கட்டு உண்டிருந்த = கட்டுப்பட்டு இருந்த

எம்மை = எங்களை 

வெளியில் விட்டு =   அந்தக் கருவறை விட்டு வெளியே வரவைத்து 

அல்லலாம் = துன்பம் என்ற

காப்பிட்டு = விலங்கை இட்டு

மெய்யென்று பேசும் = உண்மை என்று பேசும்

பாழும் பொய் உடல்  = பாழாய்ப்போன இந்த பொய்யான உடலை (இன்றிக்கும் நாளை போகும் பொய்யான இந்த உடலுக்கு மெய் என்று பெயர்  வைத்தது யார் )

பலக்க விளைய = பலமாகும்படி

அமுதம் ஊட்டி = அமுதம் ஊட்டி

பெரிய புவனத்திடை = பெரிய  உலகத்தில்

போக்கும் வரவும் உறுகின்ற = பிறந்து இறந்து வருகின்ற

பெரிய விளையாட்டு அமைத்திட்டே  = பெரிய விளையாட்டை அமைத்து

இட்ட தன் சுருதி மொழி தப்பில் = நாக்குக் குழறி, மொழி தப்பி

 நமனை விட்டு = எமனை விட்டு

இடருற  உருக்கி = துன்பங்களை உருக்கி

இடர் தீர்த்து  = துன்பங்களை தீர்த்து

இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் =  இரவும் பகலும் இல்லாத பேரின்ப வீட்டினில்

இசைந்து துயில் கொண்மின் என்று = நன்றாக சேர்ந்து தூக்கம் கொள்ளுங்கள் என்று

சீரிட்ட உலக அன்னை வடிவான என் தந்தையே  = சீரிய உலக அன்னையான  வடிவம் கொண்ட என் தந்தையே

சித்தாந்த முத்தி முதலே = அனைத்து சித்தாங்களும் ஆதி மூலமே

சிரகிரி விளங்க வரும் தக்ஷிணா மூர்த்தியே  = தலையில் உள்ள புத்தி விளங்க வரும் தட்சிணா மூர்த்தியே

சின்மயானந்த குருவே = சின்முத்திரைகள் மூலம் உபதேசம் செய்யும் குருவே