Saturday, August 31, 2013

குறுந்தொகை - தெரியாமல் பேசும் ஊர்

குறுந்தொகை - தெரியாமல் பேசும் ஊர் 


அவர்களுக்குள்  காதல். அவர்கள் காதலிப்பதை ஊரே  அறியும். திருமணத்திற்கு பொருள் சேர்க்க வேண்டாமா ? அவன் திரும்பி வருவதாகச் சொல்லி, பொருள் தேட சென்று  .விட்டான். நாள் ஆகிக் கொண்டே  இருக்கிறது.அவன் வந்தபாடில்லை. ஊர் எல்லாம் ஒரு மாதிரி பேசத் தொடங்கி  விட்டது. "இனிமேல் எங்கே வரப் போகிறான்....இவளை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான்...பாவம் இவ...இனிமேல் இவளை யார் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார்கள்" என்று கண்டமேனிக்கு ஊர் பேசுகிறது.

அவளுக்கோ, அவன் வரவில்லையே என்று ஒரு புறம்  கவலை. இன்னொருபுறம் அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று கவலை. போன வழியோ பாலை  வனம். நல்ல ரோடு  கிடையாது. கொதிக்கும் பாலை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நீர்ச் சுனைகள்  இருக்கும்.வழிப் பறி கொள்ளைகாரர்கள் வேறு. அவனுக்கு ஏதும் ஆகி இருக்குமோ என்று கவலை. 
இன்னொரு புறம், இந்த ஊரைப் பற்றி  எரிச்சல்...அவளுடைய வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வாய்க்கு வந்த மாதிரி பேசுகிறதே என்று....

பாடல்


எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்பவர் தேர் சென்ற ஆறே
அது மற்ற அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.

பொருள்


எறும்பி அளையின் = எறும்பு ஊர்ந்து சென்ற தடம் போன்ற சின்ன பாதைகள் உள்ள

குறும்பல் சுனைய = சின்ன , பல குட்டைகளை  கொண்ட

உலைக் கல் அன்ன பாறை ஏறிக் = உலை போல் கொதிக்கும் பாறையின் மேல் ஏறி


கொடு வில் எயினர் = கொடிய வில்லை ஏந்திய வேடர்கள்

 பகழி மாய்க்கும் = அம்புகளை எய்து ஆட்களை கொல்லும்

கவலைத்து = கவலை தரக் கூடியது

என்பவர் தேர் சென்ற ஆறே = அவர் தேர் சென்ற வழி

அது மற்ற அவலம் கொள்ளாது = அப்படி அவர் சென்ற துன்பத்தை நினைக்காது

நொதுமல் கழறும் = பழிச் சொற்களை கூறும் 

இவ் அழுங்கல் ஊரே. = இந்த ஆரவாரமான, சத்தம் போடும் ஊரே



வில்லி பாரதம் - முடித்ததும் முடிக்காததும்

வில்லி பாரதம் - முடித்ததும் முடிக்காததும் 


சமாதானமாய் போகலாம் என்று சொன்ன தருமனைப் பார்த்து பீமன் கோபம் கொண்டு சொல்கிறான் .....

"நாம் என்னவெல்லாம் முடித்து விட்டோம்...போரை முடித்து விட்டோம், பாஞ்சாலியின் விரித்த கூந்தலை முடித்து விட்டோம், துரியோதனன் சபையில் நாம் எடுத்த சபதங்களை முடித்து விட்டோம், பிச்சை எடுப்பதில் பேர் வாங்கி பெருமையை, புகழை  முடித்து விட்டோம், நம்முடைய புகழை முடித்து விட்டோம், இவனோடு பிறந்த நான் என்னவெல்லாம் சாதித்து விட்டேன்"

என்று வெறுத்து  கூறுகிறான்.

பாடல்

போர்முடித்தானமர்பொருது புலம்புறுசொற்பாஞ்சாலி பூந்தண்
                                         கூந்தற், 
கார்முடித்தா னிளையோர்முன் கழறியவஞ்சின முடித்தான்
                                    கடவுட்கங்கை, 
நீர்முடித்தா னிரவொழித்த நீயறியவசையின்றி
                               நிலைநின்றோங்கும், 
பேர்முடித்தா னிப்படியே யார் முடித்தாரிவனுடனே
                                    பிறப்பதேநான்.


சீர் பிர்த்தபின்


Friday, August 30, 2013

இராமாயணம் - வரம்பு அறு திருவினை

இராமாயணம் - வரம்பு அறு திருவினை 


அரசு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் தசரதன்  வேண்டுகிறான்.

"எனக்கு வயதாகி விட்டது. நொண்டி எருது பாரம் சுமப்பது மாதிரி இந்த வயதான காலத்தில் நான் இந்த அரச பாரத்தை இழுத்துக் கொண்டு  செல்கிறேன். இதை விடுத்து , அந்த எல்லை இல்லாத இன்பத்தை அடையும் ஆசை எனக்கு இருக்கிறது...ஐயா, நீ இதை எனக்கு அருள வேண்டும் " என்று இரைஞ்சுகிரான் .

பாடல்

ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி
எருத்தின், ஈங்கு நின்று, இயல்வரக் குழைந்து, இடர் உழக்கும்
வருத்தம் நீங்கி, அவ் வரம்பு அறு திருவினை மருவும்
அருந்தி உண்டு, எனக்கு; ஐய! ஈது அருளிடவேண்டும்

பொருள்


வில்லி பாரதம் - வான் ஆளத் தருவேன்

வில்லி பாரதம் - வான் ஆளத் தருவேன் 


சமாதானமாக  போகலாம் என்று தருமன் சொன்னதை கேட்டு பீமன் கோபம் கொள்கிறான். துரியோதனன் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றவன் மேலும் சொல்லுவான்.

நம்மை காடு ஆள விட்ட அந்த துரியோதனன் உன்னை வெறுக்காதபடி அவனுக்கு வேறு ஒரு அரசை நான் தருவேன். அது எந்த  அரசு தெரியுமா ? அந்த விண்ணரசை அவனுக்கு தருவேன். அதனால் அவனும் உன் மேல் வெறுப்பு கொள்ள  மாட்டான்.

பாடல்

கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன் 
                  காதல் மைந்தன் 
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ 
                  ஆளத் தருவன், இன்றே; 
மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன், 
                  உனை வெறாதவண்ணம், 
வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே 
                  வழங்குவேனே.

பொருள்


Thursday, August 29, 2013

இராமாயணம் - உய்யல் ஆவது ஓர் நெறி

இராமாயணம் - உய்யல் ஆவது ஓர் நெறி 


இராமனிடம் தசரதன்  வேண்டுகிறான்.  ஐயா, கடினமானதும், மிக நீண்டதுமான மூப்பு எனக்கு  வந்துவிட்டது. இந்த  அரசாட்சி என்ற சிறையை விட்டு வெளியேறி நான் பிழைக்கும் வழியை காண நீ எனக்கு உதவிட வேண்டும் என்றான்.

பாடல்

‘ஐய ! சாலவும் அலசினென் ; 
     அரும் பெரு மூப்பும்
மெய்யது ஆயது ; வியல் இடப்
     பெரும் பரம் விசித்த
தொய்யல் மா நிலச் சுமை உறு
     சிறை துறந்து, இனி யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக,
     உதவிட வேண்டும்.

பொருள்

‘ஐய ! = ஐயனே

சாலவும் = ரொம்பவும்

அலசினென் = தளர்ந்து விட்டேன் 

அரும் = அரிய  இங்கு கடினமான என்று  கொள்ளலாம்

பெரு மூப்பும் = பெரிய  மூப்பு.அதாவது நீண்ட மூப்பு. எது நமக்கு பிடிக்காதோ அது நீண்டு கொண்டே போவது மாதிரி  இருக்கும். காதலிக்கு காத்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் யுகம் போல இருக்கும். அவளோடு இருக்கும் போது யுகமும் நொடி போல்  போகும்.


மெய்யது ஆயது = உண்மையை ஆராயப் போனால்

வியல் இடப் = பரந்த இந்த உலகம் என்ற

பெரும் பரம் = பெரிய பாரத்தை

விசித்த தொய்யல் = விசித்தல் என்றால் வலிந்து கட்டப்பட்ட. தொய்யல் என்றால்  துன்பம்.

மா நிலச் சுமை = பெரிய, நிலைத்த பாரத்தை

உறு = கொண்ட

சிறை துறந்து = சிறையை துறந்து

இனி யான் = நான் இனிப் போய்

உய்யல் ஆவது = பிழைக்கும் வழியை காண. உய்தல் என்றால் தப்பி பிழைத்தல். உய்வார்கள் உய்யும் வழி எல்லாம் உய்து அறிந்தோம், எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்  என்பது மணிவாசகம்

ஓர் நெறி புக = ஒரு நல்ல வழியில்  புக. நெறி என்றால் வழி. அது எப்படி நல்ல வழி என்று பொருள் கொள்வது என்றால் பெரியவர்கள் நெறி என்றால் நல்ல நெறி  என்றுதான் கொள்வார்கள்.  நெறி அல்லாத நெறி தன்னை நெறியாகக் கொள்வேனை என்பார்  மணிவாசகர். வழியே ஏகுக, வழியே மீளுக என்பது அவ்வை  வாக்கு.நல்ல வழியில் சென்று நல்ல வழியில் திரும்பி வர வேண்டும்.

உதவிட வேண்டும் = நீ எனக்கு உதவி செய்ய வேண்டும்

ஒரே ஒரு நரை முடியை காதோரம் பார்த்தான் தசரதன். அவனுக்கு மூப்பை பற்றி இவ்வளவு  கவலை.

நாமாக இருந்தால் ஒரு டை அடித்து சரி செய்து  விடுவோம்.

இயற்கைக்கு முரணாக வாழ்வதே வழியாகப் போனது நமக்கு. 

சக்ரவர்த்தி பதவி ஒரு சிறை, ஒரு பாரம் என்று நினைக்கிறான்  தசரதன். 60000  மனைவிகள், அளவற்ற செல்வம், புகழ் இது எல்லாம் பிழைக்கும் வழி அல்ல என்று  உணர்ந்தான்.

வாழ்க்கைக்கு வேறு ஏதோ வேண்டும் என்று நினைக்கிறான். அதைத் தேடித் போக   விரும்புகிறான்.

அரச பொறுப்பை நீ ஏற்றுக் கொண்டு எனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று இராமனிடம்  வேண்டுகிறான். 

காலம் வரும்போது பொறுப்பை இளைய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். 

மிக மிக ஆழ்ந்து படிக்க வேண்டிய  பாடல்கள்.

பதவி, புகழ் ,  பணம்,செல்வம், செல்வாக்கு என்று ஓடிக்  கொண்டிருக்கிறோம். ஆனால்  அது அல்ல வாழ்வின் நோக்கம் என்று அதை ஆண்டு அனுபவித்தவன்    சொல்கிறான். அது சுமை, அது சிறை  என்கிறான். அந்த சிறைக்கு  செல்ல இத்தனை பேர் போட்டி போட்டுக்  கொண்டிருக்கிறார்கள். அந்த தண்டனை  கிடைக்கவில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  உள்ளே  இருப்பவன்,எனக்கு விடுதலை தா என்று  கெஞ்சுகிறான்.


சிந்தனைக்குரிய பாடல். 


Wednesday, August 28, 2013

வில்லி பாரதம் - உன் அருளுக்கு அஞ்சினேன்

வில்லி பாரதம் - உன் அருளுக்கு அஞ்சினேன் 


தருமன் , கிருஷ்ணனிடம், நாட்டில்  பாதி கேள், அது தராவிட்டால் ஐந்து ஊர் கேள், அதுவும் தராவிட்டால் ஐந்து வீடு கேள், அதுவும் தராவிட்டால் போரைக் கேள் என்று சொன்னான்.

அதை கேட்டு பீமன் கோபம்  கொண்டான்.அன்று அரசவையில் திரௌபதி வெட்கப் பட்டு வேதனையில் நின்றபோது , அண்ணா, நீ எங்களைத்  தடுத்தாய். நாம் காடு  போகவும்,அஞ்ஞாத வாசம் போகவும் நீயே காரணம்  ஆனாய். துரியோதனின் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான்.


துரியோதன் கொடுமை  செய்தான். அந்த கொடுமையை எப்படியாவது சண்டைபோட்டு , அவனை வென்று, அந்த கொடுமைகளை குறைத்துக் கொள்ள  முடியும். ஆனால், அண்ணா, உன் அருள் உள்ளத்தினால்  படும் பாட்டை எங்களால் பொறுத்துக் கொள்ள  முடியவில்லை. அவன் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான்.

பாடல்

விரிகுழற்பைந் தொடிநாணிவேத்தவையின் முறையிடு நாள்
                                வெகுளே லென்று, 
மரபினுக்கு நமக்குமுல குள்ளளவுந் தீராதவசையேகண்டாய், 
எரிதழற் கானகமகன்று மின்னமும் வெம்பகை முடிக்க
                                விளையாநின்றாய், 
அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோயுனதருளுக்
                                    கஞ்சினேனே.

சீர்  பிரித்த பின்

விரி குழல் பைந்தொடி நாணி வேந்தர் அவையில் முறையிடும்  நாள்
                                வெகுளேல் என்று, 

மரபினுக்கும்  நமக்கும் குலம் உள்ள அளவும்  தீராத வசையே கண்டாய், 

எரிதழல்  கானகம் அகன்று பின்னமும் வெம்பகை முடிக்க
                                விளையா நின்றாய், 

அரவு உயர்த்தோன் கொடுமையினும்  முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே 



பொருள்


Tuesday, August 27, 2013

வில்லி பாரதம் - தருமன் வேண்டுகோள்

வில்லி பாரதம் - தருமன் வேண்டுகோள் 


பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் முடிந்தபின் பாண்டவர்களுக்குத் தரவேண்டிய அரசை துரியோதன் தரவில்லை.

அவனிடம் தூது போகச் சொல்லி கண்ணனை பாண்டவர்கள் வேண்டினார்கள்.

முதலில் தருமன் வேண்டுகிறான்.....

"நீ எங்களுக்காகத் தூது சென்று நாங்கள் நினைப்பதை அவனிடம் சொல்லி,  எங்களுக்குச் சேர வேண்டிய பாகத்தை கேள். கொடுத்தால் நல்லது. நாட்டை கொடுக்க  மாட்டேன், போரை (war )க்  கொடுப்பேன் என்றால் அதுவும் நல்லது. நாடு அல்லது போர், இதில் இரண்டில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு வா " என்கிறான்.



பாடல்

நீதூதுநடந்தருளி யெமதுநினைவவர்க்குரைத்தானினைவின்வண்ணந்
தாதூதியளிமுரலுந் தண்பதியுந் தாயமுந்தான் றாரானாகின்
மீதூதுவளைக்குலமும் வலம்புரியுமிகமுழங்கவெய்யகாலன்
மாதூதர்மனங்களிக்கப்பொருதெனினும் பெறுவனிது வசையுமன்றே.


சீர் பிரித்த பின்

நீ தூது நடந்து அருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் 

தாதூ ஊதி அளி  முரலும் தண் பதியும் தாயமும் தாரானாகின் 

மீது ஊது வளைக் குலமும்  வலம்புரிம் மிக முழங்க வெய்ய காலன்

மா தூதர் மனங் களிக்கப் பொருதெனினும் பெறுவன் இனிது, வசையும் அன்றே 

பொருள்

நீ தூது நடந்து அருளி = நீ தூது சென்று அருளி

எமது நினைவு = நாங்கள் நினைப்பதை

அவர்க்கு உரைத்தால் = துரியோதனுக்கு உரைத்தால்

 நினைவின் வண்ணம்  = நினைத்த மாதிரி

தாதூ ஊதி = பூக்களில் உள்ள மகரந்தப் பொடிகளை ஊதி

அளி  முரலும் = வண்டுகள் முரலும்

தண் பதியும் = குளிர்ச்சியான இடமும்

தாயமும் = அதிகாரமும்

தாரானாகின் = தரவில்லை என்றால்

மீது = அதற்கு மேல்

 ஊது வளைக் குலமும் = சப்தமிடும் சாதாரண சங்குகளும்

வலம்புரிம் =  சிறந்த வலம்புரி சங்குகளும்

மிக முழங்க = மிகுந்த சப்த்தம் எழுப்ப

வெய்ய காலன் = கொடிய காலனின்


மா தூதர் = பெரிய தூதர்கள்

மனங் களிக்கப் = மனம் சந்தோஷப் படும்படி (ஏன் சந்தோஷம் ? போர் வந்தால் நிறைய உயிர்கள் கிடக்குமே...அடிக்கடி அலைய வேண்டாமே ...அந்த சந்தோஷம் )

பொருதெனினும் = போர் என்றாலும்

பெறுவன் இனிது = சந்தோஷமாக பெற்றுக் கொள்வேன்

வசையும் அன்றே = அது வசை பேச்சுக்கு உரியது அல்ல . உறவினனை கொன்றான் என்ற பழி வராது. போருக்கு அஞ்சி கானகம் போனான் என்ற பழியும் வராது.