Saturday, November 2, 2013

நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு

நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு


பூக்காமலே காய்க்கும் மரங்கள் உண்டு. அது போல சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள். சில சமயம் நல்ல விதையை விதைத்தாலும், விதைத்த இடம் பழுதாக இருந்தால் செடி முளைக்காது. அது போல முட்டால்களிடமும்,  தீயவர்களிடமும் நல்லததை சொன்னாலும் அவர்களுக்கு மண்டையில் ஏறாது. அவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்...நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று.


பாடல்

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு.


பொருள்


இராமாயணம் - நோக்கியதும் கண்டதும்

இராமாயணம் - நோக்கியதும் கண்டதும் 


இராமனும் சீதையும் கானகதில் போய் கொண்டிருக்கிறார்கள். நாட்டுப் பிரச்னை இல்லை, வீட்டுப் பிரச்சனை இல்லை. அவனும் அவளும் மட்டும். துணைக்கு இலக்குவன்.

அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று கம்பன் காட்டுகிறான்.

அன்புள்ளவர்கள் அருகில் இருந்தால் கானகம் கூட சொர்க்கம் தான்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியில் நிறைய தாமரை மலர்கள் பூத்து இருக்கின்றன. அந்த ஏரியில் சக்கர வாகம் என்ற பறவைகள் தங்களுடைய வளைந்த கழுத்துகளை வளைத்து கண் மூடி உறங்கிக் கொண்டிருகின்றன. அதன் அந்த வளைந்த உருவத்தை பார்க்கும் போது இராமனுக்கு சீதையின் மார்புகளை பார்க்கும் எண்ணம் வருகிறது. அங்கிருந்த பெரிய குன்றுகளை பார்க்கும் போது சீதைக்கு இராமனின் உயர்ந்த தோள்கள் நினைவுக்கு வருகிறது. அந்த தோள்களின் மேல் தன் கண்ணை வைத்தாள் ....

தலைவனும் தலைவியும், தனிமையில் ஒருவரை ஒருவர் கண்டு இரசித்து இன்புற்றதை கம்பன் எவ்வளவு அழகாகச் சொல்கிறான்....


பாடல்



நாளம்கொள் நளினப் பள்ளி, 
     நயனங்கள் அமைய, நேமி 
வாளங்கள் உறைவ கண்டு, 
     மங்கைதன் கொங்கை நோக்கும், 
நீளம்கொள் நிலையோன்; மற்றை 
     நேரிழை, நெடியநம்பி 
தோளின்கண் நயனம் வைத்தாள், 

     சுடர்மணித் தடங்கள் கண்டாள்.

பொருள்



நாளம் கொள் = நாளம் என்றால் தண்டு. நீண்ட தண்டினை கொண்ட 

நளினப் = மென்மையான

பள்ளி = படுக்கை. தாமரை மலர்களால் ஆன படுக்கை.


நயனங்கள் = கண்கள்

அமைய = அமைதி உற ...அதாவது தூங்க

நேமி வாளங்கள் = சக்ர வாகம் என்ற ஒரு வகை நீர் பறவை

உறைவ கண்டு = இருப்பதைக் கண்டு

மங்கைதன் கொங்கை நோக்கும்  = சீதையின் மார்பை நோக்கினான் இராமன்

நீளம் கொள் நிலையோன் = நீண்ட வில்லை கொண்ட இராமன்

மற்றை நேரிழை = அப்போது சீதை

நெடிய நம்பி = உயர்ந்த இராமனின்

தோளின் கண் நயனம் வைத்தாள் = தன் பார்வையை அவன் மேல் வைத்தாள்

சுடர்மணித் = ஒளி வீசும்

தடங்கள்  = குன்றுகளை

கண்டாள் = பார்த்தாள் 


Friday, November 1, 2013

கந்தர் அலங்காரம் - புளித்த தேன்

கந்தர் அலங்காரம் - புளித்த தேன் 




பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!

சில சமயம் அல்வா,  குலோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை சாப்பிட்டபின் காப்பி குடித்தால் அது இனிப்பாக இருக்காது. காப்பியில் சர்க்கரை இருந்தாலும் அதற்கு முன் சாப்பிட்ட அதிக இனிப்பான பலகாரத்தால் காப்பி சுவை  குன்றுகிறது.

முருகன் அருள் பெற்ற பின், அருணகிரிக்கு இந்த உலகில் எல்லாமே சுவை குறைந்து விட்ட மாதிரி தெரிகிறது.

அதிக பட்ச இனிப்பு உள்ள தேனும் கரும்பும் அவருக்கு கசக்கிறது. அப்படி என்றால் முருகன் அருள் அவ்வளவு சுவை.


பொருள்

பெரும் = பெரிய

பைம் = பசுமையான

புனத்தினுள் = திணை புனத்தில்

சிற்றேனல் = ஏனல் என்றால் கம்பு. கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் இவற்றை

காக்கின்ற = காவல் காக்கின்ற

பேதை = வெகுளிப் பென்னாணன வள்ளியின்

கொங்கை = மார்புகளை

விரும்பும் = விரும்பும்

குமரனை = குமாரனானான முருகனை

மெய் அன்பினால் = மெய் அன்பினால்

மெல்ல மெல்ல உள்ள = மெல்ல மெல்ல நினைக்க

அரும்பும் = ஒரு பூ அரும்பு மெல்ல மெல்ல அரும்புவதைப் போல, மலர்வதைப் போல

தனி = தனிச் சிறப்பான

பரமானந்தம்! = பரமானந்தம்

தித்தித்தது = தித்தித்தது

அறிந்தவன்றோ! = அறிந்த அன்றே

கரும்பும் துவர்த்து = கரும்பு துவர்த்து

செந்தேனும் புளித்து = சுவையான தேன் புளித்து

அற கைத்ததுவே = ரொம்ப கசந்து போனது

உலகத்தில் உள்ள பொருள்கள் மேல் , அனுபவங்களின் மேல் இன்பமும், சுவையும் இருந்தால்  இறை அருளின் சுவை இன்னும் அறியப் படவில்லை என்று அர்த்தம்.

இறை அனுபவம் வந்து விட்டால் இந்த உலகின் சுவைகள் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

பற்றறுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை - பற்றற்றான் பற்றினை பற்றி விட்டால்.

பெரிய ஒன்று கிடைத்த பின் மற்றவை எல்லாம் சிறிதாகப் போய் விடும்.

சிந்திப்போம்


Thursday, October 31, 2013

இராமாயணம் - நீ என் பிழைதனை ?

இராமாயணம் - நீ என் பிழைதனை ?


பிள்ளைகள் அம்மாவிடம் வந்து அப்பா திட்டினார், அப்பா அடித்தார் என்று குற்றச் சாட்டு கூறினால் பெரும்பாலான அம்மாக்கள் என்ன ஏது என்று கேட்காமல் அப்பாவை திட்டத் தொடங்கி  விடுவார்கள்.

அப்பா என்று இல்லை, பிள்ளை யாரைப் பற்றி குற்றம் சொல்லிக் கொண்டு வந்தாலும், உடனே அவன் யார் பேரில் குற்றம் சொல்கிறானோ அவனை வைய வேண்டியது.

என்னை காடு போ என்று அரசன் சொன்னான் என்று இராமன் சொன்னவுடன் கோசலை வருந்தினாள்.

ஆனால் உடனே இராமனிடம் கேட்டாள் "உன் மேல் அன்பு கொண்ட அரசன் உன்னை கானகம் போகச் சொல்லும் அளவிற்கு நீ என்ன தவறு செய்தாய் " என்று.

இராமன் தவறு செய்திருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். இருந்தாலும், அவள் கேட்கிறாள்.

உணர்ச்சி வசப் படக் கூடாது. வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் "நீ என்ன செய்தாய் " என்று கேட்கிறாள்.

கோசலையின் வருத்தம் பற்றி கம்பன் கூறுகிறான்

ஏழை ஒருவன் கொஞ்சம் பொன் பெற்று பின் அதை இழந்தால் எப்படி வருந்துவானோ அப்படி வருந்தினாள் என்று கூறுவான்.

பிள்ளை இல்லாமல் பல காலம் இருந்து பெற்ற பிள்ளை, இப்போது இழக்கப் போகிறாள்.

வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்கள்....ஏழைக்கு லாட்டரியில் பாத்து கோடி  பரிசு விழுந்தது. தன்  வறுமை எல்லாம் போய் விட்டது. இனி வாழ்வில் வசந்தம் தான் என்று இருந்தவனுக்கு , பரிசுச் சீட்டு தொலைந்து போனால் எப்படி இருக்கும்  ? அப்படி வருந்தினாள் கோசலை.


பாடல்

‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ
என் பிழைத்தனை? ‘என்று நின்று ஏங்குமால்;
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்
பொன் பிழைக்கப் பொதிந்தனர் போலவே.


பொருள் 

Tuesday, October 29, 2013

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்


அரசன் என்னை கானகம் போகச் சொன்னான் என்று இராமன் சொன்ன அந்த வாசகம் தீ போல் கோசலையின் காதில் நுழைந்தது. தீயை தொட வேண்டும் என்று அல்ல..அருகில் சென்றாலே  சுடும்.அது போல அந்த வாசகம் அவள் காதைத் தொடவில்லை...அதற்கு முன்பே சுட்டது என்றான் கம்பன்.


பாடல்

ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ.


பொருள்


Monday, October 28, 2013

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி


என்னை நல்ல நெறியில் செலுத்த சக்கரவர்த்தி சொன்ன பணி ஒன்று உண்டு என்று இராமன் கோசலையிடம் கூறினான்.

மெல்ல மெல்ல தான் கானகம் போக வேண்டும் என்ற செய்தியை சொல்ல வருகிறான்.

"பெரிய கானகத்தில் உள்ள பெரிய தவம் செய்யும் முனிவர்களோடு பதினாலு வருடம் இருந்துவிட்டு வர வேண்டும்" என்று கூறினார் என்று கூறினான்.

பாடல்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு,
'"ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை
மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். 

பொருள்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு = இன்று உரைத்த வேலை என்ன என்று கேட்ட கோசலையிடம்

ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் = பதினாலு வருடம்

அகல் கானிடை = அகன்ற கானகத்தில், விலகி நிற்கும் கானகத்தில்

மாண்ட = மாண்புள்ள 

மாதவத் தோருடன் = மா தவம் செய்தோருடன்

வைகிப் பின் = உடன் இருந்து பின்

மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். = மீண்டும் நீ வர வேண்டும் என்று கூறினான் என்றான்.

முனிவர்களை சென்று பார்த்து விட்டு வரும்படி சொன்னான் என்று மிக மிக   எளிதாக  சொல்கிறான்.

பிரச்சனைகளை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இராமன் பாடம் நடத்துகிறான்.

கைகேயி சொன்னது

"தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நணுகி, புண்ணிய துறைகள் ஆடி" என்று.

இராமன் சொல்கிறான். முனிவர்களை பார்த்துவிட்டு வரும்படி அரசன் சொன்னான் என்கிறான்.

துன்பங்களை துச்சமாக எண்ணிப் பாருங்கள். அவை பெரிதாக இருக்காது.

சின்ன விஷயத்தை கூட பெரிதாக பெரிதாக ஊதி பெரிதாக்கி கவலைப்  படுபவர்களும்  இருகிறார்கள். அவர்கள் வாழ்கையை நரகமாக்கி கொள்பவர்கள்.

காலா, என் காலருகில் வாடா என்று பாரதி சொன்னது  போல...

மரணப் பிரமாதம் நமக்கு இல்லை என்றார் அருணகிரி

துன்பங்களை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது அதன் வேகம்....


இராமனிடம் இருந்து படிப்போம். .



திருவாசகம் - கண்டேன் கண்டேன்

திருவாசகம் - கண்டேன் கண்டேன்

இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. காணதவர்கள் , இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இறைவனை கண்டவர்கள் , கண்டேன் கண்டேன் என்று சொல்கிறார்கள்.

மாணிக்க வாசகர் தான் இறைனை கண்டதாக வாக்கு மூலம் தருகிறார் - கண்ட பத்து என்ற பத்து பாடல்களில்.

நமக்கு வரும் மூன்று பெரிய துன்பங்கள் எவை ?

பிணி, மூப்பு, சாக்காடு - இந்த மூன்றிலும் இருந்து யாரும் தப்ப முடியாது. மூப்பு வந்தே தீரும். சாக்காடும் வந்தே தீரும். இடையில் பிணி வரும் போகும்.

இந்த மூன்றையும் தவிர மனிதனுக்கு துன்பம் தருவது - ஆசை அல்லது பற்று.

உறவுகள் மேல் , பொருள்கள் மேல், அனுபவங்கள் மேல் கொள்ளும் பற்று.

மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த நான்கையும் மாற்றி தனக்கு காட்சி தந்ததாகச் சொல்கிறார்.

பாடல்



பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே.

பொருள்