Friday, February 2, 2024

திருக்குறள் - இதுவே சாட்சி

 திருக்குறள் -  இதுவே சாட்சி 


https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_2.html


மனதில் அருள் இருந்தால் தன் உயிர் அஞ்சும் வினை வராது என்றார் வள்ளுவர். அவர் சொன்னால் போதுமா? நமக்கு ஒரு நிரூபணம் வேண்டாமா?  சொன்னால் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது என் மரபில் கிடையாது. எதையும், சான்றுகளோடு, வாத பிரதிவாதம் செய்துதான் ஏற்றுக் கொள்வது நம் மரபு.


வள்ளுவர் சொல்கிறார் 


"மனதில் அருள் உள்ளவர்களுக்கு ஒரு துன்பமும் வராது என்பதற்கு இந்த உலகமே சான்று"  


என்று. 


அது எப்படி இந்த உலகம் சான்றாகும்? குழப்பமாக இருக்கிறதே.


பாடல் 


அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு

மல்லல்மா ஞாலம் கரி.


பொருள் 


அல்லல் = துன்பம் 


அருளாள்வார்க்கு = மனதில் அருள் உள்ளவர்களுக்கு 


இல்லை  = இல்லை 


வளி வழங்கு = காற்றை வழங்குகின்ற 


மல்லல் = வளம் நிறைந்த 


மா = பெரிய 


ஞாலம் = இந்த உலகே 


கரி = சான்று .


உலகம் சான்று என்றால், உலகில் உள்ளவர்கள் சான்று. ஊரே பாராட்டுகிறது என்றால் ஊரில் உள்ளவர்கள் பாராட்டுகிறார்கள் என்று அர்த்தம். 


இந்த உலகில் அருள் உள்ளவர்களைப் பார்த்தால் தெரியும், அவர்கள் மனதில் ஒரு சாந்தம், அமைதி, பொறுமை, எல்லாம் இருக்கும். எல்லோரும் அவர்களிடம் சென்று ஆசி பெறுவார்கள், அவர்கள் சொல்வதைக் கேட்பார்கள், அவர்களை வணங்குவார்கள். அவர்களுக்கு ஒரு துன்பமும் இருக்காது. 


அருள் உள்ள மகான்கள், துறவிகளை துன்பம் பற்றாது. 


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் ஒருவனை யார் துன்புறுத்தப் போகிறார்கள்? ஒருவரும் செய்ய மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு துன்பம் இல்லை. 





No comments:

Post a Comment