Wednesday, February 7, 2024

கம்ப இராமாயணம் - தேவரையும் தெறும் ஆற்றல்

 கம்ப இராமாயணம் -  தேவரையும் தெறும் ஆற்றல்


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகையின் புலம்பல் தொடர்கிறது. 


"தேவர்களையும் ஆட்டிப் படைக்கும் இராவணனுக்கும், அவன் தம்பிகளுக்கும் இந்த ஊண் உடம்பைக் கொண்ட மானிடர்களைக் கண்டு வலி குன்றிப் போனதென்ன" என்று புலம்புக்கிறாள். 


பாடல் 


தேனுடைய நறுந் தெரியல்

     தேவரையும் தெறும் ஆற்றல்

தான் உடைய இராவணற்கும், தம்பி

     யர்க்கும், தவிர்ந்ததோ?

ஊனுடைய உடம்பினர் ஆய், எம்

     குலத்தோர்க்கு உணவு ஆய

மானுடவர் மருங்கே புக்கு

     ஒடுங்கினதோ வலி? அம்மா!`


பொருள் 


தேனுடைய = தேன் வடியும் 


நறுந் = நல்ல, அழகிய 


 தெரியல் = பூ மாலை (அணிந்த)  


தேவரையும் = தேவர்களையும் 


 தெறும் ஆற்றல் =  வெற்றி பெறும் வலிமை  


தான் உடைய  = உடைய 


இராவணற்கும் = இராவணனுக்கும் 


தம்பியர்க்கும் = அவனுடைய தம்பியற்கும் 


தவிர்ந்ததோ? = அந்த வலிமை நீங்கிப் போய் விட்டதா? 


ஊனுடைய உடம்பினர் ஆய் = மாமிசத்தை உடைய உடலைக் கொண்ட 


எம் குலத்தோர்க்கு உணவு ஆய = எம் குல அரக்கர்களுக்கு உணவாகும் 


மானுடவர் = மனிதர்கள் 

 

மருங்கே புக்கு = உடலிடம் சென்று 


 ஒடுங்கினதோ வலி? அம்மா! = ஒடுங்கி விட்டதா அந்த வலிமை எல்லாம் 




No comments:

Post a Comment