Showing posts with label அபிராமி அந்தாதி. Show all posts
Showing posts with label அபிராமி அந்தாதி. Show all posts

Tuesday, April 23, 2013

அபிராமி அந்தாதி - பெண் எனும் சீதனம்


அபிராமி அந்தாதி - பெண் எனும் சீதனம் 


பெண் கொண்டு வருவது அல்ல, அவளே ஒரு சீதனம்.

அவளை விடவா இன்னொரு பெரிய சீதனம் இருக்க முடியும் ?

திருமணம் முடித்து, முதன் முதலாய் மனைவியின் கை பிடித்து நடக்கும் போது  எப்படி இருக்கும் ?

இவள் என்னவள். எனக்கே உரியவள் என்ற சந்தோஷம் உடல் எல்லாம் படரும் அல்லவா. 

இவ்வளவு அழகானவள், இவ்வளவு இனிமையானவள் என் மனைவியா. சில சமயம் நம்ப முடியாமல் கூட இருக்கும்....

சின்ன நெற்றி, அதில் புரளும் ஓரிரண்டு முடி கற்றைகள், குழந்தை போன்ற மொழி, சில்லென்ற கை விரல்கள்....இவள் என் மனைவியா...என்னோடு இருக்கப் போகிறவளா...என்று மீண்டும் மீண்டும் மனதில் அலை அடிக்கும் அல்லவா....

அபிராமியை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. 

பட்டுச் சேலை, கன்னத்தில் வெட்கம், காதில் கம்மல்...புகுந்த வீடு போகிறாள்....

நடந்தது என்றோ...அபிராமி பட்டர் நினைத்துப் பார்க்கிறார்...

பாடல் 

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


பொருள் 

Thursday, April 18, 2013

அபிராமி அந்தாதி - மகிழ்நன்


அபிராமி அந்தாதி - மகிழ்நன் 

கண் போன்றவன் என்பதால் கணவன். கண் அவன் என்பதால் கணவன். மனைவியோடு கூடி என்றும் மகிழ்ச்சியாக இருப்பதால் மகிழ்நன் என்றொரு புதிய வார்த்தையை தருகிறார் அபிராமி பட்டர். அபிராமி போல ஒரு பெண்ணை மனைவியாக பெற்றால் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன குறை ?


அம்மா, என் உயிர் மத்திடை பட்ட தயிர் போல தளர்கிறது. இப்படி தளர்வு அடையும் என் உயிருக்கு ஒரு நல்ல கதியை நீ தான் தர வேண்டும். தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் (படைத்தல்), அயனும் (காத்தல்), நிலவை தலையில் கொண்ட மகிழ்நன் (உன் கணவன் சிவன் - அழித்தல்) இந்த மூவரும் வணங்கும் சிறந்த அடிகளை கொண்டவளே, சிவந்த திலகம் அணிந்தவளே, சுந்தரியே 

 பாடல் 


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர் 
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும், 
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும் 
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.


பொருள் 


Saturday, April 6, 2013

அபிராமி அந்தாதி - மெலிகின்ற மெல் இடை


அபிராமி அந்தாதி - மெலிகின்ற மெல் இடை 


பெண்களின் இடைக்கு மின்னலை உதாரணம் கூறுவது வழக்கம். அந்த மின்னலை விட மெலிந்த இடை உள்ளவள் அபிராமி.

நீண்ட கரிய வானில் ஒரு கணத்திற்கும் குறைவான நேரம் தோன்றி மறையும் மின்னலை விட மெலிந்த இடை. இருந்ததோ இல்லையோ என்று சந்தேகப் படும்படி தோன்றி மறையும் மின்னல். அது போல இடை உள்ளவள் எங்கள் அபிராமி.

அவளுடைய கணவன், அவனுக்கு ஏதேனும் ஒரு குறை என்றால் அவளுடைய பாதத்தை அணைத்து தன் தலைமேல் வைத்துக் கொள்வான். அவள் பாதம் உள்ள வரை என்ன கவலை?

சிவனுக்கே ஒரு குறை என்றால் அவள் பாதமே சரண் என்று அவளை அடைகிறான்.

அப்படி என்றால் நான் எம்மாத்திரம் ? எனக்கும் உன் பாதமே கதி என்று சரண் அடைந்து விட்டேன். இனி மேல் நான் மறுபடி பிறந்தால் அது அபிராமி உன் குறையே அன்றி என் குறை அல்ல. என்னை பிறவாமல் காப்பது உன் கடனே

பாடல்

என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே

பொருள்



Thursday, March 21, 2013

அபிராமி அந்தாதி - எமக்கு என்று வைத்த செல்வம்


அபிராமி அந்தாதி - எமக்கு என்று வைத்த செல்வம்

நமக்கு என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில் என்று கேட்டால் பணம், பொருள், புகழ், ஆரோக்கியம் என்று நாம் அடுக்கிக்கொண்டே போவோம்...அபிராமி பட்டர் சொல்கிறார்.


நமக்கு என்ன வேண்டும்...அவளோட பாதங்கள், அவளுடைய கைகள், அழகான அவள், அப்புறம் அவளோட பெயர், ...எல்லாத்துக்கும் மேல அவளோட கண்கள் ...இதுக்குமேல வேற என்ன வேணும் ....

அவஅணியும் ள் வேண்டும், அவளோட கைகள் , பாதம் , பெயர், கண்ணு எல்லாம் அவருக்குன்னு கிடைத்த பொக்கிஷமாம்....

 பாடல்


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே


பொருள்



Wednesday, March 20, 2013

அபிராமி அந்தாதி - அன்னையும் ஆயினள்


அபிராமி அந்தாதி - அன்னையும் ஆயினள் 


பெண் ஒரு பெரும் சக்தி. 

பெண்ணில், தாய்மை எண்ணம் எப்போதும் ஓங்கியே இருக்கும் என்று நினைக்கிறேன். உயிரை உருவாக்குவதும், அதை காத்து போற்றுவதும் பெண்ணிற்கு இயல்பாகவே உள்ள குணம் என்று நினைக்கிறேன். 

அபிராமியை காணும் பட்டருக்கு இரண்டு எண்ணம் தோன்றுகிறது. அவள், சங்கரனின் மனைவி மட்டும் அல்ல, சங்கரனின் தாயாகவும் இருக்கிறாள். 

எப்படி மனைவியே தாயாகவும் இருக்க முடியும் ? 

அதுதான் பெண்மை. அவள் என்னவாக இருந்தாலும் தாயாக, அன்னையாக எப்போதும் இருக்கிறாள். 

ஒவ்வொரு மனவிக்குள்ளும் ஒரு தாய் இருந்து கொண்டே இருக்கிறாள்....பரிந்தெடுக்க, அரவணைக்க, அன்பு காட்ட...


பாடல் 

தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் 
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால், 
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம், 
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே

பொருள் 

Tuesday, March 12, 2013

அபிராமி அந்தாதி - முருத்தன மூரலும்


அபிராமி அந்தாதி - முருத்தன மூரலும் 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று முன்னெச்சரிக்கை செய்து விடலாமா என்று தோன்றியது....

அபிராமி பட்டரின் அன்பு மிக மிக அன்யோன்யமானது. கல்மிஷம் இல்லாதது. உறுத்தல் இல்லாதது. அவரையும், அபிராமியும் தவிர இந்த உலகில் யாரும் இல்லை என்ற நினைப்பில் ஆழ்திருப்பவர் அவர்.....

அவரின் அன்யோன்யத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.....

ஒரு பெண்ணுக்கு மிகுந்த அழகைச் சேர்ப்பது அவளின் மார்பகங்கள்.


கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று.


என்பார் வள்ளுவர் 

அபிராமியின் மார்புகளை பார்க்கிறார் பட்டர்.

இந்த மார்புகள் எப்போதும் என் தந்தையான சிவனின் கருத்திலும், அவன் கண்ணிலும் இருக்கும் என்கிறார்...பெரிய பொன்னாலான மலை போல் இருக்கும் மார்புகள் என்று புகழ்கிறார்...

அந்த மார்புகள், பசி என்று அழுத பிள்ளைக்கு பால் வழங்கியது...

அருட் பசி கொண்டு அலையும், அழும் நமக்கும் அருளை தரும் அவை.

அந்த மார்புகளுக்கு நடுவே தொங்கும் மணி ஆரம்.

அவளுடைய ஒரு கையில் வில், இன்னொரு கையில் அம்பு, புன்முறுவல் பூக்கும் முகம்...

இவற்றோடு நீ என் முன்னால்  வந்து நிற்க வேண்டும் என்று வேண்டுகிறார்....

பாடல்

கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின் 
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் 
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும், 
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

பொருள்


Friday, March 8, 2013

அபிராமி அந்தாதி - சொல்லும் பொருளும்


அபிராமி அந்தாதி - சொல்லும் பொருளும் 


புல்லுதல் என்று ஒரு அருமையனா தமிழ் சொல் உண்டு. அணைத்தல், மருவுதல், தழுவுதல், புணர்தல் என்று தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள நெருக்கத்தை புலப்படுத்தும் ஒரு சொல். வள்ளுவர் இந்த சொல்லை பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்

அபிராமி, அவளுடைய துணைவனை அணைத்து இருக்கிறாள். அவளுடைய துணைவன் மீது அவளுக்கு அவ்வளவு அன்பு. நெருக்கம் என்றால் மிக நெருக்கம். பிரிக்க முடியாத நெருக்கம். அதை எப்படி சொல்லி விளங்க வைப்பது ?

ஒரு சொல்லும், அதன் பொருளும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி ஒரு நெருக்கம். பொருள் இல்லாவிட்டால் சொல் இல்லை. சொல் இல்லாமல் பொருள் இல்லை. இரண்டும் வேறுதான் என்றாலும் ஒன்றை விட்டு ஒன்று இல்லை.

கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவு, உள்ள ஒரு புரிதல் என்பது ஒரு அலுவகலத்தில் வேலை பார்க்கும் மற்றொரு நபருடன் உள்ள புரிதல் போல அல்ல.

ஒரே சொல் பல அர்த்தங்களை தரும்...

அறிவு பூர்வமாய் ஒரு அர்த்தம்

உணர்வு பூர்வமாய் ஒரு அர்த்தம்

சொல்லுபவரின் மன நிலையை கொண்டு ஒரு அர்த்தம்

சொல்லப் படும் இடத்தை கொண்டு ஒரு அர்த்தம்

என்று அர்த்தம் மாறுபடும். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அறிவு பூர்வமாய், உணர்வு பூர்வமாய், ஒருவரின் மனதை ஒருவர் அறிந்து கொண்டு...ஈருடல் ஒருயிராய் இருக்க வேண்டும்..அபிராமி அப்படி இருக்கிறாள்....

அவளுடைய பாதங்கள் ... மிக மிக மென்மையானவை...ஈரமானவை...மணம் வீசுபவை ....இப்படி சொல்லிக் கொண்டே போவதை விட ...அப்போது தான் மலர்ந்த மலர் போல் இருக்கும் அவளுடைய பாதங்கள்....

அந்த பாதங்களை எப்போதும் துதிப்பவர்களுக்கு அழியா அரசு கிடைக்கும். இந்த உலகில் உள்ள அரசுகள் எல்லாம் அழியும் அரசுகள். முடி சாய்த்த மன்னர் எல்லாம் பிடி சாம்பராய் போனார்கள்.....அபிராமி அழியாத அரசை தருவாள்.

அது மட்டும் அல்ல...சிவ லோகமும் கிடைக்கும். சிவ லோகத்தை எப்படி அடைவது...அங்கு போகும் வழியும் அவள் தருவாள் ...செல்லும் தவ நெறியும் ...அதையும் அவளே தருவாள்.....

பாடல்




சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன் 
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள் 
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் 
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. 



பொருள்


Tuesday, February 26, 2013


அபிராமி அந்தாதி - அறிதலும் புரிதலும்

இறைவனை அறிந்து கொள்ள முடியுமா ? அறிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ? அறிந்த பின் அவர்கள் என்ன செய்தார்கள் ? அறியும் முன் என்ன செய்தார்கள் ? இறைவனை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

பட்டர் சொல்கிறார்

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

பொருள்

Thursday, February 14, 2013

அபிராமி அந்தாதி - அபிராமி எந்தன் விழுத்துணை


அபிராமி அந்தாதி - அபிராமி எந்தன் விழுத்துணை 




உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை 
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

அபிராமி அந்தாதியின் முதல்  பாடல். 

இறைவனை பாடும் போது  திருவடிகளில் தொடங்கி திருமுடியில் முடிப்பதும், இறைவியை  பாடும் போது  திருமுடியில் தொடங்கி பாதத்தில் முடிப்பதும் மரபு 

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க என்று ஆரம்பிப்பார் திருவாசகத்தில் மாணிக்க வாசகர் 

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

மன்று உளே மாறி ஆடும் மறைச் சிலம்பு அடிகள்  போற்றி என்று ஆரம்பிக்கிறார் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில் 

இறைவியையை பாடும் போது தலையில் இருந்து ஆரம்பிப்பது மரபு. 

அந்த மரபின் படி, அபிராமி பட்டர் இங்கே அபிராமியின் தலையில் இருந்து ஆரம்பிக்கிறார். 

சிறிது நேரம் கண்ணை மூடி உங்கள் விருப்ப தெய்வத்தை மனதில் நினைத்துப் பாருங்கள். 

மூடிய கண்களில் என்ன நிறம் கோலம் போடுகிறது ? சிவப்பு நிறம் தானே ? அபிராமியின் அழகில் தன்னை மறந்து லயித்து இருக்கும் பட்டருக்கு எல்லாம் அவளாகத் தெரிகிறது. எல்லாம் சிவப்பாகத் தெரிகிறது. 

உதிக்கின்ற செங்கதிர் - அதிகாலை சூரியன். வெளிச்சம் தரும், சுடாது. எரிக்காது.  அவள் கருணை அப்படித்தான். 

வாழ்க்கைக்கு ஒளி  காட்டி வழி காட்டும். 

சுடாது. 

எரிக்காது. 

அஞ்ஞான இருள் விரட்டி, மெய்ஞான ஒளி  ஏற்றும். 

உதிக்கின்ற செங்கதிர். சூரியனை நம் கண்ணால் நேரடியாக காண முடியாது. காலை நேர சூரியனை நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியும். அபிராமி அறிவுக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்டு இருந்தாலும், அவளை தியானித்தால் காண முடியும் என்பது உட்பொருள் 
உச்சித் திலகம் - உச்சியில் இடுகின்ற குங்கும திலகம். அவள் நெற்றியில் இடுகின்ற திலகம் உதிக்கின்ற  செங்கதிரைப்  போல சிவப்பாக இருந்தது 

உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் = மாணிக்கக் கல் சிவப்பு. உயர்ந்தது. 

எவ்வளவு தான் உயர்ந்தாக இருந்தாலும் அதன் மதிப்பு எல்லோருக்கும் தெரியாது.

கழுதையின் கழுத்தில் கோஹினூர் வைரத்தை கட்டி விட்டால் அதற்கு அதன் மதிப்பு தெரியுமா ? எனவே, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்றார்.  அறிவுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்று சொல்லவில்லை. அவள் அறிவுக்கு அப்பாற்பட்டவள். உணர்வு உடையோர் அவளின் மதிப்பை அறிவார்கள் 

மாதுளம்போது = மாதுளம் மலர் 

மலர்க்கமலை = மாதுளம் மலர் போன்ற தாமரை. சிவந்த தாமரை. வெண் தாமரை அல்ல 

துதிக்கின்ற மின் கொடி = மின்னல் கொடி  போன்ற உருவம் உடையவள்  

மென் கடிக் குங்கும தோயம் = மென்மையான குங்குமத்தில் தோய்த்து எடுக்கப் பட்டதை போன்ற சிவந்த வடிவம் உள்ளவள் 

என்ன = என்ற 

விதிக்கின்ற மேனி அபிராமி = அப்படி எல்லாம் நூல்களில் மறைகளில் சொல்லப்பட்ட மேனி அழகை உடையவள் 

எந்தன் விழுத் துணையே = அவள்  எந்தன் விழுத் துணையே. 

ஒரு இரயில் நிலையத்திற்கோ, கோவில் திருவிழாவிர்க்கோ சின்ன பையனையோ அல்லது பெண்ணையோ அழைத்து செல்லும் அம்மா என்ன சொல்லுவாள். "என் கைய கெட்டியா பிடிச்சுக்கோ. கைய விட்டுறாத " அப்படின்னு சொல்லுவாள். அந்த குழந்தையும் அம்மாவின் கையையை பிடித்துக் கொண்டு கவலை இல்லாமல் திரியும். வேடிக்கை பார்க்கும், வருபவர்கள் போபவர்களை பார்க்கும்..அதுக்கு ஒரு கவலையும் இல்லை . அம்மாவின் கையை பிடித்து இருக்கும் வரை, உலகில் என்ன நடந்தாலும் குழந்தைக்கு ஒரு கவலை இல்லை 

சிறந்த துணை. வாழ்கைப் பாதை நீண்டது,  சிக்கலானது, ஆபத்து நிறைந்தது.  துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்பது அவ்வை வாக்கு. நமக்கு, நம் வாழ்க்கைப் பாதையில் எப்போதும் துணை இருப்பவள் அபிராமியே. அவள் கையை பிடித்து கொள்ளுங்கள். அவள் உங்களை வழி நடத்துவாள். அப்புறம் என்ன கவலை ? என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. அவ கையை விட்டுறாதீங்க....




Friday, February 8, 2013

அபிராமி அந்தாதி - உன்னை அறிவேன்


அபிராமி அந்தாதி - உன்னை அறிவேன் 


துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் 
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

அபிராமி, நீ என் வாழ்க்கை துணை. 

துணையும்: துணை எப்போது தேவைப்படும் ? பயம் வரும்போது, துன்பம் வரும்போது, ஒரு சிக்கல் வரும்போது துணை தேவைப்படும். ரொம்ப சந்தோஷம் வந்தாலும் அதை பகிர்ந்து கொள்ள துணை அவசியம். துணை என்பது கடைசிவரை வர வேண்டும். பாதியில் விட்டு விட்டு போவது அல்ல. எனவே கணவனையோ மனைவியையோ வாழ்கை துணை என்றனர் . அபிராமி ,  எப்போதும் என் கிட்டவே இரு. எனக்குத் துணையாய் இரு. 

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

என்பார் அருணகிரி.

தொழும் தெய்வமும் = துணை மட்டும் அல்ல, நான் தொழும் தெய்வமும் நீ தான். 

பெற்ற தாயும் = எனை ஈன்ற தாயும் நீ தான். 

சுருதிகளின் = வேதங்களின் 
 
பணையும் = பணை  என்ற சொல்லுக்கு சிறப்பு, உயர்வு, எழுச்சி, பெருமை என்று பல பொருள் உண்டு. வேதங்களின் சாரமாக இருப்பவள், சிறப்பாக இருப்பவள், வேதங்கள் பெருமை படுத்தும் பொருளாக இருப்பவள் அபிராமி. 


கொழுந்தும் = வேதங்களில் இருந்து வெளிவரும் அர்த்தம், உண்மையாக இருப்பவள் அபிராமி. மரத்தில் இருந்து கொழுந்து வருவது போல. "அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே"  என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் கூறியது போல. 

பதிகொண்ட வேரும்  = கொழுந்து என்றால் வேர் வேறு ஏதோ என்று நினைக்கக் கூடாது. வேதம் என்ற மரத்தின் வெறும் அவள் தான், அது தரும் சாரமும் அவள் தான், அதில் துளிர்க்கும் தளிரும் அவள்தான். 


பனி மலர்ப்பூங் = குளிர்ந்த மலர்களை 

கணையும் = கொண்ட கணை . கணை என்றால் அம்பு. 

கருப்புச் சிலையும் = கரும்பு வில் 

மென் பாசாங்குசமும் = மென்மையான பாசக் கயிறும், அங்குசமும் 

கையில் அணையும் = கையில் எப்போதும் கொண்டு இருக்கும் 
 
திரிபுர சுந்தரி = அனைத்து உலகங்களிலும் அழகானவள்  

ஆவது அறிந்தனமே = நீ தான் என்று அறிவோம். 

அது என்ன மலர் அம்பு, கரும்பு வில், பாசக் கயறு, அங்குசம் ? 

கரும்பு வில்லும் மலர் அம்பும் மன்மதனின் ஆயுதங்கள். அது மோகத்தை, காமத்தை, அன்பை தோற்றுவித்து  உயிர்களின் படைப்புக்கு வழி வகுப்பது. எல்லா உயிர்களின் தோற்றமாய், தோற்றத்திற்கு காரணமாய் அவள் இருக்கிறாள். அவள் காமத்தை ஆட்சி செய்பவள். காமாட்சி. 
 

மென் பாசக் கயறு: குழந்தைக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்க்கும் அதற்காக எந்த தாயும் அளவு இல்லாமல் இனிப்பை குழந்தைகளுக்குத் தருவது இல்லை போதும், அப்புறம் நாளைக்கு என்று எடுத்து உள்ளே வைத்து விடுவாள். கணவனுக்கு எண்ணெய்  பலகாரம் பிடிக்கும். ஆனால் ஏற்கனவே கொழுப்பு அதிகமாக இருக்கிறது. "போதுங்க...ரொம்ப சாப்பிடாதிங்க...இந்த ஒண்ணு தான் ... சரியா " என்று அவர்களின் ஆசைகளை கட்டு படுத்துபவள் அவள். ஆசைகளுக்கு கடிவாளம் போட கையில் மென்மையான பாசக் கயறு. 

அங்குசம்: தவறு செய்தால் தண்டிக்க குழந்தைகள் தவறான வழியில் சென்றால், தண்டித்து, திருத்துபவளும்  அவளே . அதற்க்கு அங்குசம். 

அவள் தாயாக இருக்கிறாள். வாழ்க்கை துணையாக இருக்கிறாள். தொழும் தெய்வமாக இருக்கிறாள். 

வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க ஆசையையும், காமத்தையும் மோகத்தையும் தருகிறாள் 

அது எல்லை மீறி போகாமல் அளவோடு இருக்க, அதை கட்டுப் படுத்தி நம் வாழ்வை நெறிப் படுத்துகிறாள். 

இன்பத்தை மட்டும் அல்ல, ஞானத்தையும் தருகிறாள். அவளே வேதமாகவும் வேதத்தின் சாரமாகவும், அதன் பலனாகவும் இருக்கிறாள். 

இத்தனைக்கும் மேலாக ரொம்ப அழகா இருக்கா.

அபிராமி...அபிராமி...அபிராமி....


 


Monday, January 21, 2013

அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


பெற்ற பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்கா விட்டால் நாம் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுவது இல்லை. எப்படியாவது அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தான் நாம் முயற்சி செய்வோம். மானிடர்களான நமக்கே நம் குழந்தைகள் மேல் இவ்வளவு பாசம் இருந்தால், அபிராமிக்கு அவளுடைய பிள்ளைகளான நம் மீது எவ்வளவு பாசம் இருக்கும் ?

அவள் தான் எல்லாம் என்று தெரியும், அவளைத்தான் அடைய வேண்டும் என்று தெரிந்து இருந்தாலும், அவள் மேல் அன்பு செலுத்துவதை விட்டு விட்டு வேறு எதை எல்லாமோ செய்து கொண்டு இருக்கிறோம். இருந்தாலும், அவள் நம் மேல் கோபப்படாமல், நம் மேல் அன்பு செலுத்துகிறாள். அவளின் கருணைக்கு எல்லை ஏது ?


பாடல் 

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே 
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் 
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் 
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

பொருள் 

Tuesday, December 18, 2012

அபிராமி அந்தாதி - அபிராமி எப்படி இருப்பாள் ?


அபிராமி அந்தாதி - அபிராமி எப்படி இருப்பாள் ?


அபிராமி எப்படி இருப்பாள் ? மற்ற பெண்களை போல் இருப்பாளா ? ரொம்ப அழகான பெண்ணாக இருப்பாளோ ? அவள் கண் எப்படி இருக்கும் ? மான் போல இருக்குமா ? அவள் மார்பகங்கள் எப்படி இருக்கும் ? தாமரை மொட்டு போல் இருக்குமா ? அவளை மலை மகள் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் அவளும் ஒரு சாதாரண பெண் போலத்தானே இருப்பாள் ? 

இப்படித்தான் அவளை எல்லோரும் கூறுகிறார்கள். இதை எல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் அபிராமி பட்டர். இந்த உலகை எல்லாம் ஈன்ற நாயகி இப்படி இருப்பாள், அப்படி இருப்பாள் என்று சொல்வது நகைப்புக்கு இடமானது. அதை விட்டு விட்டு அவளின் உண்மையான தன்மையையை அறிய முயலுங்கள் என்கிறார் பட்டர். 


பாடல் 

Monday, December 3, 2012

அபிராமி அந்தாதி - நீ துன்பம் தந்தாலும் உன்னை வாழ்த்துவனே


அபிராமி அந்தாதி - நீ துன்பம் தந்தாலும் உன்னை வாழ்த்துவனே 


 எவ்வளவோ நல்லது கேட்டது எல்லாம் எடுத்துச் சொன்னாலும், தாம் தவறு செய்யாமல் இருப்பதில்லை. அப்பப்ப ஏதாவது தவறு செய்து கொண்டுதான் இருக்கிறோம்...

தெரிந்து கொஞ்சம், தெரியாமல் மிச்சம் என்று பிழைகள் செய்வது நமது பிழைப்பாய் இருக்கிறது...

அதற்காக, அபிராமி என்னை கை விட்டு விட்டாதே...சிறியோர் செய்யும் சிறு பிழைகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை அல்லவா..இது ஒண்ணும் புதுசு இல்லையே...அந்த பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் சிவன் அள்ளி உண்டான்...அந்த நஞ்சையே நீ அவன் கழுத்தில் நிறுத்தி அவனை காத்தாய்...அவ்வளவு பெரிய ஆலகால விஷத்தின் தன்மையையே நீ மாற்ற வல்லவள் ... நான் செய்யும் சிறு பிழைகள் எம்மாத்திரம் உனக்கு....

அப்படியே நீ எனக்கு பிடிக்காத விஷயங்களை செய்தாலும்...நான் உன்னை கோவிக்க மாட்டேன் ...ஏன் என்றால் எனக்கு எது நல்லது கெட்டது என்று உனக்குத் தெரியாதா ?

பாடல் 

Tuesday, November 20, 2012

அபிராமி அந்தாதி - உதிக்கின்றதே


அபிராமி அந்தாதி - உதிக்கின்றதே 

அந்தாதி என்றால் ஒரு பாடலின் இறுதி வார்த்தையயை  கொண்டு அடுத்த பாடலின் முதல் வார்த்தை தொடங்க வேண்டும். தமிழில் நிறைய அந்தாதிகள் உண்டு. அபிராமி அந்தாதியின் சிறப்பு முதல் பாடலின் முதல் வார்த்தையும் நூறாவது பாடலின் கடைசி வார்த்தையும் ஒன்றாக இருப்பது. 

உதிக்கின்ற செங்கதிர் என்று முதல் பாடல் ஆரம்பிக்கிறது. 

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே என்று நூறாவது பாடல் முடிகிறது.

பூ சரத்தை தொடுத்துக்கொண்டே போய் கடைசியில் இறுதிக் கண்ணியையை முதல் வார்த்தையோடு சேர்த்து அந்த பூ சரத்தை மாலையாக செய்து விட்டார் பட்டர். 

முதல் பாடல் 

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை 
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

நூறாவது பாடல்

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி 
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும் 
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும் 
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!






Friday, November 16, 2012

அபிராமி அந்தாதி - கரை காணா இன்பம்


அபிராமி அந்தாதி - கரை காணா இன்பம்


அவள் இன்னைக்கு வருவாளா ? வர்றேன்னு சொன்னாளே ? ஒரு வேளை அது நாளைக்கோ ? நான் தான் சரியாக கேட்கலையோ ? வர்றேன்னு சொன்னா வந்துருவா ? இல்ல வர்ற வழியில என்ன பிரச்சனையோ பாவம்....

அது யாரு அவ தான ? அவளை மாதிரி தான் இருக்கு. 

அந்த உருவம், அந்த நடை, அவள் தான்னு நினைக்கிறேன். ஆமா, அவளே தான்....அப்பாட, ஒரு வழியா வந்துட்டாள்...அவ கிட்ட வர வர இதய துடிப்பு ஏறுகிறது...இன்னும் கிட்ட வந்துட்டாள்...லேசா வேர்க்குது...நிமிந்து பார்க்கிறாள்...மனதுக்குள் ஆளுயர அலை...அவள் கிட்ட வர வர மனதுக்கு சந்தோஷ ஊற்று குமிழியிட்டு கிளம்புகிறது...அருகில் வந்து விட்டாள்...தொடும் தூரம் தான்...அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வந்த மாதிரி ஒரே மகிழ்ச்சி மனதுக்குள்ளே...எங்கு பார்த்தாலும் வெள்ளம்...கரை காணா முடியாத வெள்ளப் பெருக்கு ..தத்தளிக்கிறேன் அந்த சந்தோஷ சாகரத்தில்...

மிகுந்த சந்தோஷம் வரும் போது அறிவு விடை வாங்கிக் கொண்டு போய் விடும்...ஆனால் அவளைப் பார்க்கும் போது உண்டாகும் அளவு கடந்த மகிழ்ச்சியிலும் அறிவு விடை பெற்று போகவில்லை...

அவள் அறிவையும் ஆனந்தத்தையும் ஒன்றே தருகிறாள்....


பாடல் 

Tuesday, November 6, 2012

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்


அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம் 


அபிராமி, இரவும் பகலும் உன் நினைவாகவே இருக்கிறது. நான் எதை எழுதினாலும், உன்னைப் பற்றியே இருக்கிறது. நான் படிப்பது எல்லாம் உன் பெயரைத்தான். உன் பாதத்தை பார்க்கும் போது என் மனத்திலும் ஈரம் கசிகிறது. உன் அடியார்களுடன் தான் நான் எப்போதும் இருக்கிறேன். 

இதை எல்லாம் செய்ய நான் என்ன புண்ணியம் செய்தேனோ. இந்த பிறவி எடுத்த பின் பெரிதாய் ஒன்றும் புண்ணியம் செய்து விடவில்லை. இதற்க்கு முன்னால் இருந்த பிறவிகளில் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். 

ஒரு பூ மலர்வதைப் போல், இந்த ஏழு உலகங்களையும் மலரவைத்தவளே, என் தாயே என்று கரைகிறார் பட்டர்.

இந்த பிறவியில் புண்ணியம் ஏதும் செய்யவில்லை என்கிறார் பட்டர். அவருக்கே அப்படிஎன்றால் நாம் எல்லாம் எம் மாத்திரம் ?

அவருடைய மனம் கல் போல கடினமாக இருக்கிறதாம். பக்தி ஏறும் போது, அந்த கல்லும் லேசாக விரிசல் விட்டு, அதன் வழியே அன்பும் கருணையும் கசிந்து வெளி வருகிறதாம். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பெருமான். இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால், மனம் நெகிழ வேண்டும். கல்லின் மேல் எப்படி திருவடி பதியும் ?

பாடல்:

Monday, November 5, 2012

அபிராமி அந்தாதி - அபிராமியின் பழைய இருப்பிடம்


அபிராமி அந்தாதி - அபிராமியின் பழைய இருப்பிடம்



நீங்கள் ஒரு திருமணம் ஆகாத வாலிபர். ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு உங்கள் வருங்கால மனைவி வருகிறாள். வீடு குப்பை மாதிரி கிடக்கிறது. பிரம்மச்சாரியின் வீடு பின் எப்படி இருக்கும். அவள் இறைந்து கிடந்த புத்தகங்களை எல்லாம் அழகாக அடுக்கி வைக்கிறாள், தினசரி தாள்களை மடித்து வைக்கிறாள், கண்ட படி கிடந் துணிகளை மடித்து அலமாரியில் வைக்கிறாள், இரைந்து கிடக்கும் CD போன்றவற்றை ஒழுங்கு படுத்தி வைக்கிறாள். எல்லாவற்றையும் சரி செய்து விட்டு, கோணல் மாணலாக கிடந்த நாற்காலி மேஜை எல்லாம் சரியாக வைத்து விட்டு, தனக்கு ஒரு நாற்காலியையை இழுத்துப் போட்டு கொண்டு ஜம்மென்று நடுவில் உட்கர்ந்து கொண்டு "இப்ப எப்படி இருக்கு " என்று கேட்கிறாள் ...என்னவோ ரொம்ப நாளாய் இந்த வீட்டை அவள் தான் பராமரித்தது போல...
 
அதில் உங்களுக்கு வருத்தம் ஒன்றும் இல்லையே ?

அனைத்து பொருள்களும் அதனதன் இடத்தில் பொருத்தமாக போய் உட்கார்ந்து கொண்டு விட்டன. 

பட்டரின் மனத்திலும் அபிராமி வந்து இருந்து கொண்டாளாம், ஏதோ பழகிய இடம் போல. 

பாடல் 

Sunday, November 4, 2012

அபிராமி அந்தாதி - மரணம் பிறவி இரண்டும் எய்தார்


அபிராமி அந்தாதி - மரணம் பிறவி இரண்டும் எய்தார் 


 தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் இருந்தார்கள். அவர்கள் பொன், வெள்ளி மற்றும் இரும்பிலான மூன்று உலகங்களை செய்து வைத்துக் கொண்டு எல்லோரையும் துன்புறுத்தி வந்தார்கள். அந்த உலகங்களுக்கு அரண் (தடுப்புச் சுவர்) இருந்தது....நாடுகளுக்கு கோட்டைச் சுவர் இருப்பது மாதிரி. 

அந்த அரணை பெரிய விஷயம் என்று எண்ணி மனதில் அருளே இல்லாமல் எல்லோரையும் துன்புறுத்திய அரக்கர்களின் கோட்டையை அழித்த சிவனும், திருமாலும் அபிராமி இடம் சரணம் சரணம் என்று வந்தனர். அவள், அவளுடைய அடியார்களின் மரணம் பிறவி இரண்டையும் வரமால் காப்பாள். 

"அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர்"

என்ன பொருள் ?

பொருட் செல்வம் பெரிது என்று நினைக்க நினைக்க அருள் நம்மை விட்டு விலகிப் போய் விடுகிறது. பணம் சேர்க்கும் குறிக்கோள் வந்தவுடன், மற்றவர்களுக்கு உதவ நேரமும் இருப்பது இல்லை, மனமும் இருப்பது இல்லை. பொருளே நிரந்தரம் என்று நினைத்து விடுகிறார்கள். மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஒரு அசுரத்தனம் வந்து விடுகிறது.  

அப்படிப் பட்ட அசுரர்கள் கடைசியில் அழிந்து போகிறார்கள். 

பிறவி என்று இருந்தால் பொருள் வேண்டும். நமக்கு, நம் குடும்பத்திற்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, நமது எதிர் காலத்திற்கு என்று பொருள் கட்டாயம் வேண்டும். எவ்வளவு பொருள் இருந்தாலும் பத்தாது என்றே தோன்றுகிறது. அதை செற்பதிலேயே காலம் முழுவதும் சென்று விடுகிறது. பின் என்ன தான் இதற்க்கு வழி ?

அபிராமி ஒன்றே இதற்க்கு வழி. அவளை வணங்கினால் பிறவியே வராது. பின் எங்கிருந்து பொருள் ஆசை வரும் ? 

மரணமும் இன்றி, பிறவியும் இன்றி ஆனந்த பெறு வாழ்வு வாய்க்கும். 

பாடல்

Wednesday, October 31, 2012

அபிராமி அந்தாதி - மனதின் இருள் அகற்றியவள்


அபிராமி அந்தாதி - மனதின் இருள் அகற்றியவள் 


சந்தையில் புதிதாக ஒரு பொருள் வந்தால் அதை வாங்க ஆசைப் படுகிறோம். புதிய கை தொலைபேசி, கணணி, சமையலறை சாதனம், புதிய புடவை, புதிய வண்டி என்று பொருள்கள் மேல் ஆசைப் படுகிறோம். 

ஆசைப் பட்டு வாங்கிய பொருள்கள் நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றின் பலனை அனுபவிக்கிறோம். சந்தோஷமாய் இருக்கிறது. இது இல்லாம எத்தனை நாள் கஷ்டப் பட்டேன் என்று நிம்மதி பெரு மூச்சு விடுகிறோம். 

நாள் ஆக ஆக பொருள் பழையதாகிறது. அடிக்கடி பழுதாகிறது. அதைவிட சிறந்த பொருள் சந்தையில் வருகிறது. நாம் பெருமையாய் நினைத்த பொருள் இன்று நன்றாக இல்லை. சில சமயம் அந்தநாள் எரிச்சல் வருகிறது. " இந்த சனியனை முதலில் தலைய சுத்தி விட்டு எரியனும்...இதை கட்டி யாரு மேய்கிறது ..." என்று அங்கலாய்க்கிறோம்.

பின் கொஞ்சம் தெளிவு வருகிறது. எல்லா சாமானும் இப்படித்தான். வாங்குன கொஞ்ச நாளைக்கு நல்லா இருக்கும். அப்புறம், இப்படித்தான். சரி சரின்னு போக வேண்டியது தான் என்று ஒரு ஞானம் பிறக்கிறது. 

அபிராமி, அந்த பொருளாகவும், அந்த பொருள் தரும் சுகமாகவும், அது சுகமா அல்லது சுமையா என்ற குழப்பமாகவும், அந்த குழப்பத்தில் இருந்து வரும் அறிவாகவும் இருக்கிறாள், இதை எல்லாம் அறிந்து கொள்ளும் அருளையும் அவள் எனக்குத் தந்தாள். 

முதலில் பொருட் செல்வம். பின்னர் அருட் செல்வம் ...இரண்டு செல்வத்தையும் தருபவள் அபிராமி.  

அவள் என் மனத்தில் வஞ்சமாகிய இருள் ஏதும் இல்லாமல் அத்தனையும் ஒளி வெள்ளமாகச் செய்தாள். 

அவளின் அருளை என்னவென்று சொல்லுவது.

பாடல்

Sunday, October 28, 2012

அபிராமி அந்தாதி -நெஞ்சத்து அழுக்கை எல்லாம் துடைத்தனை


அபிராமி அந்தாதி -நெஞ்சத்து அழுக்கை எல்லாம் துடைத்தனை


அபிராமி, இந்த பிறவி வஞ்சம்  நிறைந்ததாய் இருக்கிறது. முதலில் நான் வஞ்சகன். நினைப்பது ஒன்று செய்வது ஒன்றாய் இருக்கிறது என் நிலை. என் சுற்றி உள்ளவர்களும் அப்படியே. 

வஞ்சம் நிறைந்த இந்த பிறவி முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நீ அந்த பிறவி தொடரை உடைத்தாய். 

கல்லைப் போன்ற என் கடின நெஞ்சை நீ நெகிழ வைத்தாய். உருக வைத்தாய். உன் அன்பை கண்டு என் உள்ளம் உருகுகிறது.

உன் தாமரை போன்ற பாதங்களை என் தலையின் மேல் சூடும் பாக்கியத்தை நீ தந்தாய். 

என் மனத்தில் எத்தனையோ அழுக்குகள் குவிந்து கிடக்கிறது. அதை கொஞ்சம் தண்ணி விட்டு கழுவ முடியாது என்பதால் உன் அருளாகிய வெள்ளத்தால் அத்தனை அழுக்கையும் அடித்துக்கொண்டு போக வைத்தாய்.

உன் அருளை என்னவென்று சொல்லுவது.

பாடல்