Saturday, April 7, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - சேறு செய்யும் கண்ணீர்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - சேறு செய்யும் கண்ணீர்


கண்ணீர்.
உணர்சிகளின் வடிகால்.
அன்புக்கும், காதலுக்கும், பிரிவுக்கும், துன்பத்திற்கும், சந்தோஷத்திற்கும் அது தான் வடிகால்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்
அன்பை அடைத்து வைக்க முடியுமா ? அப்படி அன்பு கொண்டவர்களின் கண்ணீர் பூஜைக்கு உகந்தது என்கிறார் வள்ளுவர்.
இறைவனை நினைத்து காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி அந்த கண்ணீர் ஆறாக ஓடி திருவரங்கத்தின் கோயில் பிரகாரத்தில் உள்ள மண்ணை சேறு ஆக மாற்றி விடுமாம். அந்த சேறு என் நெற்றியில் இட்டுக்கொள்ளும் அணிகலன் என்கிறார் குல சேகர ஆழ்வார்.


Thursday, April 5, 2012

கம்ப இராமாயணம் - A twist in the tale

இராவணனின் மகன் இந்திரஜித் போரில் மாண்டு விடுகிறான்.

இராவணன் மிகுந்த புத்திர சோகத்தில் ஆழ்கிறான்.

புத்திர சோகம் அவன் கண்ணை மறைக்கிறது.

இத்தனைக்கும் காரணம் அந்த சீதைதான் என்று நினைக்கிறான்.

அவளை கொல்வதற்காக வாளை உருவிக்கொண்டு வேகமாக செல்கிறான்.

யார் அவனை தடுக்க முடியும் ?

அவனை மகோதரன் தடுத்து நிறுத்துகிறான் ?

என்ன சொல்லி தெரியுமா ?

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் ?

விபீஷணன் சொல்லாத அறிவுரையா ?

கும்பகர்ணன் சொல்லாத அறிவுரையா ?

எதற்கும் அசையாத இராவணன் மகோதரனின் ஒரு வரிக்கு மடங்குகிறான்.

பாடலைப் படிக்கு முன் அது என்னவா இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் .

---------------------------------------------------------------------------------------------
தெள்ள அருங் காலகேயர் சிரத்தொடும் திசைக் கை யானை
வெள்ளிய மருப்பு சிந்த வீசிய விசயத்து ஒள் வாள்
வள்ளி அம் மருங்குல் செவ்வாய் மாதர் மேல் வைத்த போது
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால்

---------------------------------------------------------------------------------------------

"எவ்வளவோ பெரிய பெரிய வீர தீர செயல்களை செய்த உன் வீர வாள், ஒரு பெண்ணின் மேல் வைத்தால் அது வெட்கத்தால் தலை குனியுமே அல்லாமல் அவளைக் கொல்லாது"

தெள்ள அருங் காலகேயர் = தெளிந்து கொள்ள அரிதான கால கேயர் (அவ்வளவு வீரம் உள்ளவர்கள் )

சிரத்தொடும் = அவர்கள் தலைகளை கொய்த

திசைக் கை யானை வெள்ளிய மருப்பு சிந்த = எட்டு திசை யானைகளின் வெள்ளி போன்ற (=வெண்மையான ) தந்தங்கள் சிதற

வீசிய விசயத்து ஒள் வாள் = அப்படிப்பட்ட விஷயங்களுக்காக வீசிய விரைந்த வாள்

வள்ளி அம் மருங்குல் = வள்ளி செடி போன்ற கொடி இடையும்

செவ்வாய் = சிவந்த அதரங்களையும் கொண்ட

மாதர் மேல் வைத்த போது = மாதர் மேல் வைத்த போது (வாளை அவர்கள் மேல் செலுத்தினால் )

கொள்ளுமே ஆவி = அது அவர்கள் ஆவியை கொள்ளுமா (கொள்ளாது)

தானே நாணத்தால் குறைவது அல்லால் = தன்னை தான் நாணத்தால் குறை பட்டு தலை குனியும்.

அதை கேட்டு இராவணன் சீதையை கொல்லும் எண்ணத்தை கை விடுகிறான்.

ஒரு வேளை இராவணன் அவளை கொல்லப் போயிருந்தால், இராமாயணமே மாறிப் போய் இருக்கும்.

இந்த ஒரு பாடல், இராமாயணத்தின் போக்கை மாற்றி அமைக்கிறது.

கம்ப ராமாயணம் - ஆத்தோரம் செல்லக்குட்டி

இந்த காலத்துல பசங்க, பொண்ணுங்கள சைட் அடிக்கனும்னா பஸ் stand , பீச், பெண்கள் கல்லூரி என்று நிறைய இடங்கள் இருக்கு.

கம்பர் காலத்தில் இது எல்லாம் ஏது ? பொண்ணுங்க குளிக்க ஆத்துக்கு வருவாங்க. பசங்க அந்த ஆத்தங்கரை ஓரம் நின்னு சைட் அடிச்சுட்டு போவாங்க. ஏதோ ஒன்ணு இரண்டு பேரு இல்ல. பெரிய கும்பலே இருக்குமாம். சொன்னா நம்ப மாட்டீங்க, இந்த பாடலைப் பாருங்க.


------------------------------------------------------------------------------------------------------------
புதுப்புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும் கருங் கடல் தரங்கம்; என்றால்,
மதுப் பொதி மழலைச் செவ் வாய், வாள் - கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும், அன்னார் மிகுதியை விளம்பலாமோ?
---------------------------------------------------------------------------------------------------------

ஆற்றில் குளிக்கும் பெண்களின் கூந்தலில் உள்ள பூவும், அவர்கள் பூசும் மஞ்சளும் ஆற்றில் கரைந்து கலந்து கடலுக்குப் போய் சேருகிறது. அதனால் அந்த கடல் நீரே நறுமணமாய் இருக்கிறது. அப்படி குளிக்கும் பெண்களின் அழகை ரசித்துப் பார்க்கும் ஆண்களின் எண்ணிக்கையை சொல்ல முடியாது.

புதுப்புனல் = புதிய புனல், அதாவது ஆறு. குளத்தில் பழைய நீர் தானே இருக்கும்.

குடையும் மாதர் = குளிக்கும் பெண்கள்.

பூவொடு = அவர்கள் தலையில் உள்ள பூக்களோடு

நாவி பூத்த = நறுமண பொருட்கள் நிறைந்த

கதுப்பு = கூந்தல்

உறு வெறியே நாறும் = மிகுந்த மணம் கமழும்

கருங் கடல் தரங்கம் = கரிய அலைபாயும் கடல் (தரங்கம் என்றால் அலைவீசும் கடல். தரங்கம்பாடி என்று ஒரு ஊர் உண்டு)

என்றால், = அப்படி என்றால்

மதுப் பொதி = மதுவை பொதிந்து வைத்த

மழலைச் செவ் வாய் = குழந்தை போல் பேசும் சிவந்த இதழ்கள்

வாள் - கடைக் கண்ணின் = வாள் போன்ற கூரிய கண்களை உடைய பெண்களை

மைந்தர் = நம்ம பசங்க

விதுப்பு உற நோக்கும் = விருப்பத்துடன் நோக்கும்

அன்னார் மிகுதியை விளம்பலாமோ? = அவங்க எத்தனை பேருன்னு சொல்ல முடியுமா

(ஜொள்ளர்களின் எண்ணிக்கை சொல்ல முடியாது )


இதுக்கு கொஞ்சம் வேற அர்த்தமும் சொல்லலாம்.

அப்படி பார்க்கப் படும் பெண்களின் எண்ணிக்கை அல்லது அழகின் மிகுதியையை சொல்லவும் முடியுமோ என்று. உங்களுக்கு எது சௌகரியமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்....

எல்லாமே அழகுதான்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஆண்டாள் - சின்ன வளை


ஏன் நினைவா நான் உனக்கு ஒண்ணு தருவேன், அத பத்திரமா வச்சுகுவியா ?

அவன்: நீ தந்து அதை நான் தொலைப்பேனா
? சொல்லு என்ன அது ?

அவள்: நீ சொல்லு பாப்போம் ?

அவன்: ம்ம்...பேனா ?

அவள்: இல்லை...

அவன்:ம்ம்ம்..வாட்ச் ?

அவள்: இல்ல

அவன்: கொலுசு ?

அவள்: இல்ல...

அவன்: தெரியல சொல்லு...

அவள்: என்னோட வளையலை தர்றேன்... பத்திரமா வச்சுகுவியா ?

அந்த அவள் "ஆண்டாள்", அந்த அவன் "திருவரங்கத்து பெருமான்". அவன் கேட்கவில்லை.

அவள் கூறுகிறாள்.

-------------------------------------------------------------------
மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே
------------------------------------------------------------------------

அந்த காலத்தில் வாமனனாகி வந்து மூன்றடி கேட்டு, அது முற்றும் கிடைக்காமல்,
குறையாகி, இப்போ தெருவில் போகும் போது என் வளையலை ஆசையோடு பார்கிறாரே என்று புன் முறுவல் பூக்கிறாள் ஆண்டாள்....

--------------------------------------------------------------
மச்சு அணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சை குறை ஆகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை உடையறேல் இத் தெருவே போதாரோ ?
----------------------------------------------------------------

பதம் பிரித்த பின் புரியுதா ?


மச்சு = மாடி


அணி = சிறப்பான அணிகலன்களை அணிந்த


மாட மதிள் = அந்த மாளிகைகளில் மணிகள், விலை உயர்ந்த
கற்கள் பதிக்கப் பெற்று இருக்கின்றன


வாமனனார் = வாமன அவதாரம் கொண்டவர்


பச்சை பசும் தேவர் = பசுமையான நிறம் கொண்ட அந்த
திருமால்


தாம் = அவர்


பண்டு = முன்பு (பண்டைய காலம் என்று சொல்வது இல்லையா
)


நீர் ஏற்ற = யாசிப்பதர்க்காக நீர் ஏற்ற


பிச்சை குறை ஆகி = பிச்சை குறை ஆகி. என்ன குறை ?

கேட்டது மாவலியிடம் மூன்று அடி. ஒரு அடியால் பூலோகம் முழுதும் அளந்தார்.
பூலோகம் முழுதும் மாவலியிடம் இல்லை. அவரிடம் இல்லாததை எப்படி இவர் அளந்து எடுத்துக்கொள்ள முடியும். சரி, அதுதான் போகுதுன்னு பாத்தா அடுத்த அடியில் வானுலகம் முழுதும் அளந்தார். அது மாவலியின் இடம் இல்லை.

இப்படி , அந்த பிச்சை குறை ஆகிப் போனது.


என்னுடைய பெய் வளை மேல் = அதனால், என்னுடைய வளையல்
மேல்


இச்சை உடையறேல் = போன பிச்சை தான் சரியா கிடைக்கலை, என்னவோ குறை இருக்கிறது இருக்கிறது எண்று நினைத்து, அதை சரி செய்ய என்னுடைய வளையல் மேல் ஆசை வைத்து தான்


தெருவே போதாரோ ? = இந்த தெரு வழியாகப் போகிறாரோ
என்று அரங்கன் வீதி உலா போனபோது அதை கண்டு ஆண்டாள் பாடுகிறாள்.

அவனுக்கு என் வளையல் மேல் ஆசை , அதுக்காகத்தான் இந்த
தெரு வழியாக அடிக்கடி வருகிறான் என்கிறாள்.


திருவரங்க திவ்ய
தேசத்தை ஆண்டாள் மங்களாசாசனம் செய்த 610 ஆவது பாசுரம்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - மரவடி பணையம்

நாம் ஒருவரிடம் ஒரு பொருளை கடன் வாங்கி இருந்தால், மறக்காமல் அதை திருப்பி கொடுபதற்காக எதையாவது அடமானம் வைப்போம்.

ஒரு செக்யூரிட்டி தான்.

பரதன், இராமனை நாட்டுக்கு திரும்பி வரச் சொல்லுகிறான்.

இராமன் மறுத்து பதினான்கு வருடம் கழித்து வருகிறேன் என்று சொல்கிறான்.

"சரி, அப்படியானால் மறக்காம இருக்க எதையாவது அடமானமாய் தா " என்று கேட்கிறான். இராமானும்

தன் பாதுகையை தருகிறான்.
------------------------------------------------------------------------------------------------------------------
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழசெருவுடைய திசைக்கருமம்திருத்திவந்து உலகாண்ட திருமால்கோயில்திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர்கண்ணும் காட்டி நின்றஉருவுடையமலர்நீலம் காற்றாட்ட ஓசலிக்கும் ஒளிய ரங்கமே
------------------------------------------------------------------------------------------------------

"மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்" ஏன் கானகம் போனான் ?

வானவர்கள் வாழ. இராவணன் அவர்களை பிடித்து அடித்து வைத்து படாத பாடு படுத்தினான். அவனிடம் இருந்து வானவர்களை காப்பாற்ற கானகம் போனான்.

"வானோர் வாழ செருவுடைய திசைக் கருமம் திருத்தி"

செரு = போர்.

தென் திசை சென்று, அங்கு செய்ய வேண்டிய கடமைகளை திருத்தமாக செய்து (கருமம் = கடமை ) அவற்றை செய்து முடித்து வந்து, இராமன் உலகை ஆண்டான்.

அவன் இருந்த கோயிலில் என்ன எல்லாம் பாக்கலாம் தெரியுமா ?

அவன் திருவடி

அவன் திரு உருவம்

தாயாரின் திரு உருவம் மற்றும்

அவளின் மலர் போன்ற கண்கள்

எந்த ஊர்ல இது எல்லாம் ?

நல்ல உருவமுடைய நீல மலர்கள் காற்றில் ஓளி வீசும் திருவரங்கம் பெரிய

ஆழ்வார் அருளிச் செய்த 412 ஆவது பாசுரம்.

நல்லாயிர திவ்ய பிரபந்தம் - வளையல் திருடன்

இந்த அரங்கன் இருக்கிறானே ரொம்ப பொல்லாதவனாய் இருப்பான் போல் இருக்கே.

வாமன உருவமாய் வந்து உலகை எல்லாம் பெற்றுக் கொண்டது போதாது என்று, இப்ப தன் அழகில் என்னையே கொள்ளை கொண்டு போய் விடுவான் போல் இருக்கே என்று ஆண்டாள் செல்லமாக பயப் படுகிறாள்.

----------------------------------------------------------
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே

-----------------------------------------

சீர் பிரித்த பின்

----------------------------------------------------------
பொல்லாக் குறள் உருவாய் பொற் கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் ரங்க நாக
இல்லாதோம் கைபொருளும் எய்துவான் ஒத்து உளானே

----------------------------------------------------------

பொல்லாக் குறள் உருவாய் = குறள் எவ்வளவு சின்ன உருவம். இரண்டு அடி அவ்வளவு தான். ஆனால் எவ்வளவு பொருள் செறிந்தது ? அதுபோல் வாமன உருவமாய் வந்து. பொல்லா குறள் என்றால் ஏதோ தீமை செய்யும் குறள் அல்ல. செல்லமாக சொல்லுவது. துறு துறு என்று வரும் பிள்ளையை "பொல்லா பிள்ளை" என்று சொல்லுவது இல்லையா, அது போல.

பொற் கையில் நீர் ஏற்று = தன்னுடைய பொன்னான கையால் நீர் ஏற்று (தானம் பெறுவதற்காக)

எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான் = எல்லா உலகத்தையும் அளந்து கொண்ட எம் பெருமான்

நல்லார்கள் வாழும் = நல்லவர்கள் வாழும்

நளிர் ரங்க நாக அணையான் = நளினமான பாம்பு அணையில்

இல்லாதோம் கைபொருளும் = ஒன்றும் இல்லாத எங்களின், கைப் பொருளும்

எய்துவான் ஒத்து உளானே = அதையும் எடுத்துக்கொண்டு போய் விடுவான் போல இருக்கே

Wednesday, April 4, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்

+ 2 படிக்கும் போது, நான் வாசித்து ரொம்ப உணர்ச்சி வசப் பட்ட பாசுரம் இது.

காதலுக்கு ஒரு பெண்ணின் மன நிலை ரொம்பவும் சௌகரியம் என்று தோன்றுகிறது. ஒரு ஆணால் இந்த அளவு உருக முடியுமா ?


இந்த பாடலுக்கு பின்னால் இருக்கும் மனம் புரியாவிட்டால், இந்த பாடல் புரியாது.

ஒரு தாய், காதல் வசப்பட்ட தன் மகளைப் பற்றி பாடுவதாக அமைந்த பாடல்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள், கண்ண நீர் கைகளால் இறைக்கும்

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்., தாமரை கண் என்று தளரும்

எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும், இரு நிலம் கை துழாவி இருக்கும்

செங் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் ! இவள் திறத்து என் செய்கின்றாயே ?


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சொற் பொருள்;

கங்குலும் = இரவும்

பகலும் = பகலும்

கண் துயில் அறியாள், = தூங்க மாட்டேன்கிறாள்

கண்ண நீர் கைகளால் இறைக்கும் = கண்ணில் இருந்து தாரை தாரை தாரையாய் கண்ணீர் வழிகிறது. அதை இரண்டு கைகளாலும் இறைக்கிறாள். அவ்வளவு தண்ணீர்.

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்., = எப்போதும் சங்கு , சக்கரங்கள் என்று
கை கூப்புகிறாள்

தாமரை கண் என்று தளரும் = தாமரை கண்கள் என்று சொல்லி சொல்லி தளர்ந்து போகிறாள்

எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும், = உன்னை பிரிந்து எப்படி இருப்பேன்
என்று புலம்புகிறாள்

இரு நிலம் கை துழாவி இருக்கும் = தரை எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாமல், அதை தடவி தடவிப் பார்க்கிறாள்

செங் கயல் = நல்ல மீன்கள்

பாய் நீர் திருவரங்கத்தாய் ! = பாயும் நீர் நிலைகளை கொண்ட திருவரங்கத்தை
உடையவனே

இவள் திறத்து என் செய்கின்றாயே ? = இவளை நீ என்ன செய்யப் போகிறாய்