Monday, June 18, 2012

ஆசாரக் கோவை - உடை உடுத்தும் முறை


ஆசாரக் கோவை - உடை உடுத்தும் முறை


உடை உடுத்தலை பற்றி ஆசாரக் கோவை சில வழி முறைகளை கூறுகிறது.

ஒரு ஆடை கூட உடுத்தாமல் நீராடக் கூடாது (இது பொது இடங்களில், ஆறு, குளம் போன்ற இடங்களை குறிக்கும் என்று நினைக்கிறேன்),

ஒரு ஆடை மட்டும் உடுத்து உணவு உண்ணக் கூடாது, குறைந்த பட்சம்

இரண்டு ஆடையாவது உடுத்தி இருக்க வேண்டும்,

உடுத்திய ஆடையை நீரினுள் பிழியக் கூடாது,

ஒரு ஆடை மட்டும் உடுத்து பொது சபையில் நுழையக் கூடாது


Sunday, June 17, 2012

ஆசாரக் கோவை - ஒரு அறிமுகம்


ஆசாரக் கோவை - ஒரு அறிமுகம்


வாழ்வில் கடை பிடித்து ஒழுக வேண்டிய நெறிமுறைகளை தொகுத்து தருகிறது ஆசாரக் கோவை.

இதை இதை செய்ய வேண்டும், இதை இதை செய்யக் கூடாது என்று பட்டியல் போட்டு தருகிறது. 

சமஸ்க்ரிதத்தில் இது போன்ற நூல்களை ஸ்மிர்திகள் என்று சொல்வார்கள்.

இது தமிழில் உள்ள ஸ்ம்ருதி என்று சொல்லலாம். பல வட மொழி நூல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இந்த நூல்.

இதில் உள்ள பல வழி முறைகளை இன்று கடைபிடிக்க முடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும், அறிந்து கொள்வது நல்லது தானே. முடிந்தவரை கடை பிடிக்காலாம்.

இதில் சொல்லப் பட்ட வழி முறைகளுக்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நூல் எழுதிய ஆசிரியரே, "இது முன்னோர் சொன்னது"., "இது கற்று அறிந்தோர் சொன்னது", என்று குறிப்பிடுகிறார். 

பல பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கிறது.

முதல் பாடலிலேயே ஆசிரியர் நேராக விசயத்துக்கு வந்து விடுகிறார். 

எது ஆசாரத்துக்கு வித்து ? அடிப்படை என்று ஆரம்பிக்கிறார்:

எட்டு விதமான குணங்கள் ஆசாரத்திற்கு வித்து என்கிறார்:

அவையாவன:

கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன்


கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன் 


அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான்.

அவனுக்கு துக்கம் தாங்கவில்லை.

"என் தோளின் மேல் ஏறிக்கொள், இப்போதே உன்னை இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்..மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்றான். 

சீதை பதில் சொல்கிறாள்....

"துன்பம் தரும் விலங்குகளைப் போல உள்ள இந்த இலங்கை எம்மாத்திரம் ? 

எல்லையில்லா இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன்.

நான் அப்படி செய்தால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று நினைத்து அந்த எண்ணத்தை கூட குற்றம் என்று நினைத்து தூக்கி எரிந்து விட்டேன்" என்றாள்

நினைத்துப் பாருங்கள்.

ஒரு வேளை சீதை அவளே இராவணனை எரித்து விட்டு, நேரே இராமன் முன் வந்து நின்றால், எப்படி இருந்திருக்கும்?

இராமனை பற்றி இந்த உலகம் என்ன நினைக்கும் ?

கட்டிய மனைவியை எதிரியிடம் இருந்து காப்பாற்றத் தெரியாதாவன் என்று அல்லவா நினைக்கும்?

அந்த நினைப்புக்கு இடம் தரா வண்ணம் சீதை பொறுமை காத்தாள்.

அந்தப் பாடல்

Saturday, June 16, 2012

கம்ப இராமயாணம் - வார்த்தை நயம்


கம்ப இராமயாணம் - வார்த்தை நயம்


கம்ப இராமயாணத்தில் வார்த்தை நயம் மிக்க பாடல்கள் நிறைய உண்டு. அதில் இருந்து ஒன்று.

கார் காலமும் முடிந்து விட்டது. சீதையை தேட ஆள் அனுப்புகிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து விட்டான்.

அவனுக்கு அதை நினைவு படுத்தி வருமாறு இலக்குவனிடம் இராமன் சொல்லி அனுப்புகிறான்.

அந்தப் பாடல்:

சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி


சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி


கம்பன் கவிதைகளை படிக்கும் போது, இப்படி கூட ஒரு மனிதனால் கவிதை எழுத முடியுமா என்று நாம் வியக்காமல் இருக்க முடியாது.


எப்படி தன்னால் எழுத முடிந்தது என்று அவரே கூறுகிறார்

கல்விக் கடவுளான சரஸ்வதியையை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவி சொல்லுமாம்.

நான்மணிக்கடிகை - அனுபவ ஞானம்


நான்மணிக்கடிகை - அனுபவ ஞானம்


எல்லாம் அறிந்தாரும் இல்லை.

ஏதும் அறியாதாரும் இல்லை

எல்லா நல்ல குணங்களும் உள்ளவரும் இல்லை

ஒரு நல்ல குணம் கூட இல்லாதவரும் இல்லை.

மனிதர்களுக்குள் அறிந்ததும், அறியாததும், நல்லதும், கெட்டதும் கொஞ்சம் கூட குறைய இருக்கும்...மத்தபடி எல்லாரும் ஒண்ணுதான்

Friday, June 15, 2012

கம்ப இராமாயணம் - இராமனின் பிரிவு சோகம்


கம்ப இராமாயணம் - இராமனின் பிரிவு சோகம்


சீதையையை பிரிந்து இராமன் தனித்து இருக்கிறான்.

மழைக் காலம்.

கானகம்.

தனிமை.

மனைவியை பிரிந்த சோகம்.

பிரிந்த சோகம் கூட இல்லை, மனைவி தொலைந்த சோகம்.

அந்த நேரத்தில் பெய்யும் மழையை கம்பன் சொல்கிறான்....

மலையின் மேல் விழும் மழை, மன்மதன், சீதியையை பிரிந்த இராமனின் மேல் விடும் மலர் அம்புகள் போல இருந்ததாம்...