Sunday, June 24, 2012

நல்வழி - எல்லோரும் போகும் வழி


நல்வழி - எல்லோரும் போகும் வழி


நல்வழி என்ற நூல் ஔவையாரால் எழுதப்பட்டது.

எல்லாம் விதி வழி நடக்கும். ரொம்ப அலட்டிகொள்ளாதீர்கள் என்ற ரீதியில் எழுதப்பட்ட நூல்.

வாழ்க்கையில் பிரச்சனைகளும் சங்கடங்களும் வரும்போது புரட்டி பார்க்க உகந்த நூல். மன ஆறுதல் தரும்.

எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்தவர்கள் மீண்டும் வருவது இல்லை.

அது மட்டும் அல்ல, நாமும் ஒரு நாள் இந்த உலகை விட்டு சென்று விடுவோம்.

அதுவரை, பெரிதாக அலட்டி கொள்ளாமல், முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்து வாழுங்கள்.

Saturday, June 23, 2012

திருக்குறள் - நமக்கு ஏன் துன்பம் வருகிறது?


திருக்குறள் - நமக்கு ஏன் துன்பம் வருகிறது?


நமக்கு ஏன் துன்பம் வருகிறது ? திருவள்ளுவர் சொல்கிறார் நம் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் என்ன என்று.

நமக்கு வரும் துன்பத்திற்கு எல்லாம் காரணம் நாம் மற்றவர்களுக்கு செய்த துன்பம் தான்.

எனவே, நமக்கு துன்பம் வேண்டாம் என்றால், நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்யக்க் கூடாது.

சிறு பஞ்ச மூலம் - ஒரு அறிமுகம்


சிறு பஞ்ச மூலம் - ஒரு அறிமுகம்


பஞ்சம் என்றால் ஐந்து.
சிறு என்றால் சின்னது
ஐந்து சிறிய வேர்களை (மூலம்) கொண்டு உருவாக்கிய மருந்து எப்படி உடலுக்கு நன்மை செய்கிறதோ, அது போல், இந்த சிறு பஞ்ச மூலம் பாடல்கள் நம் வாழ்க்கைக்கு நன்மை செய்யும்.
அதில் இருந்து எனக்குப் பிடித்த சில பாடல்களை தருகிறேன்.


ஆசாரக் கோவை - எதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்?


ஆசாரக் கோவை - எதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்?


நம் உடல் நலம், தன் மனைவி, நம்மிடம் பொறுப்பாக பிறர் கொடுத்த பொருள், நம் வாழ்கைக்கு நாம் சேமித்து வைத்த செல்வம் இந்த நான்கையும் பொன் போல பாதுகாக்க வேண்டும்.

நளவெண்பா - காமனை எரித்தது பொய்


நளவெண்பா - காமனை எரித்தது பொய்


புராணகள் எல்லாம் சிவன் காமனை எரித்ததாக சொல்கிறது.

தமயந்தி அதை நம்பவில்லை. காமன் எரிந்து போனது உண்மையானால், தான் இப்படி காதலில் கஷ்டப் பட வேண்டியது இருக்காதே என்று நினைக்கிறாள்.

Thursday, June 21, 2012

ஆசாரக் கோவை - யாரோடு தனித்து இருக்கக் கூடாது


ஆசாரக் கோவை - யாரோடு தனித்து இருக்கக் கூடாது

சில சமயம் வயது வந்த ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் தனியே வீட்டில் விட்டுவிட்டு போக பெற்றோர்களுக்குத் தயக்கமாய் இருக்கும்.

சின்ன பசங்க, ஏதாவது தவறு நடந்து விடுமோ என்று ஒரு சின்ன அச்சம் இருக்கும்.

ஆசாரக் கோவை ஒரு படி மேலே போகிறது.

தனிப்பாடல் - எப்பதான் விடியுமோ ?


தனிப்பாடல் - எப்பதான் விடியுமோ ?


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

இரவு அவளுக்கு நீண்டு கொண்டே போகிறது.

ஒருவேளை, இந்த இரவு இனிமேல் விடியவே விடியாதோ என்று சந்தேகம் வருகிறது அவளுக்கு.....