Sunday, July 8, 2012

திருவாசகம் - ஒண்ணுக்குள் ஒண்ணு


திருவாசகம் - ஒண்ணுக்குள் ஒண்ணு


சிவனுக்குள் சக்தி

சக்திக்குள் சிவம்.

சிவனும் சக்தியும் அடியாரின் மனதுக்குள்

அடியார் தொண்டர் கூட்டத்திற்குள்....

ஒண்ணுக்குள் ஒன்றாய் செல்லும் சைவ சித்தாந்த நெறியை மணி வாசகப் பெருந்தகை விளக்குகிறார்....


கம்ப இராமாயணம் - காமம் ஏன் சுடுகிறது ?


கம்ப இராமாயணம் - காமம் ஏன் சுடுகிறது ?


சுடுவதற்கு நெருப்பு வேண்டும்.

நெருப்பு வேண்டும் என்றால், விறகு போன்ற எரிபொருள் வேண்டும்.

காமத்தில் ஏது எரிபொருள் ?

கம்பன் சொல்கிறான் எது எரிபொருள் என்று....காமன் வீசும் அம்புகள் விறகாக காமத் தீ கொளுந்து விட்டு எரிகிறதாம்.

இராமனை உப்பரிகையில் இருந்து பார்த்த பின், சீதை விரக தாபத்தில் வேகிறாள்.

திருக்குறள் - நகைச்சுவை உணர்வு


திருக்குறள் - நகைச்சுவை உணர்வு


திருவள்ளுவர் ஏதோ ரொம்ப சீரியசானவர்  என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படியல்ல.
அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராய் இருக்கிறார். அது மட்டும் அல்ல, நம்மையும் சிரித்து வாழ சொல்கிறார்.

நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு இந்த உலகம் பகலே இல்லாத நீண்ட இரவாய் இருக்கும் என்கிறார்.

நகைச்சுவை என்றால் எப்ப பார்த்தாலும் பல்லை காட்டிக் கொண்டு இருப்பது அல்ல. எப்ப சிரிக்க வேண்டும், எதற்கு சிரிக்க வேண்டும், எவ்வளவு சிரிக்க வேண்டும் என்று ஒரு கணக்கு வேண்டும்.

சிரிப்பிலும் ஒரு வல்லமை வேண்டும்.

Friday, July 6, 2012

நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


சில விஷயங்கள் தோன்றுவதை விட தோன்றாமல் இருப்பதே மேல் என்று குமர குருபரர் நீதி நெறி விளக்கத்தில் கூறுகிறார்.

கம்ப இராமாயணம் - யாரும் மறக்க முடியாத பெயர்


கம்ப இராமாயணம் - யாரும் மறக்க முடியாத பெயர்


இராமன் என்று ஒருவன் இருந்தானா இல்லையா என்று ஒரு சந்தேகம் எழலாம்.

இராமாயணம் என்று ஒன்று நடந்ததா என்று கூட சந்தேகம் எழுப்பப் படலாம்.

ஆயிரம் சந்தேகம் இருந்தாலும், இராம நாமம் என்ற ஒன்று என்றென்றும் மக்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

அதை இன்றல்ல, கம்ப இராமாயணம் எழுதும்போதே கம்பர் சொல்கிறார் "யாராலும் மறக்கிலா நாமம்" என்று.

மும்மை சால் உலகுக்கெலாம் மூல மந்திரம் அது. 

இராமன் கானகம் போகிறான். 

"ஆ" அழுதன, அன்றலர்ந்த "பூ" அழுதன என்று ஊரே சோகத்தில் ஆழ்ந்த காட்சியை காட்ட வந்த கம்பன் சொல்லுவான்....

அயோத்தி அரண்மனையில் இருந்த யானைகளும், "இனி நாமும் இந்த மண்ணை விட்டு செல்வோம்" என்று கிளம்பின.

Thursday, July 5, 2012

கம்ப இராமாயணம் - சிறை இருந்த சீதை


கம்ப இராமாயணம் - சிறை இருந்த சீதை


அசோக வனத்தில் சீதை இருந்த நிலையை கம்பன் காட்டுகிறான்.

கல்லையும் கரைக்கும் கவிதைகள் அவை. 

படித்துப் பாருங்கள். நாம் பட்ட அல்லது படும் துன்பங்கள் தூசு என்று உணர்வீர்கள்.

நீதி நெறி விளக்கம் - கல்வியும் காமமும்


நீதி நெறி விளக்கம் - கல்வியும் காமமும் 


நீதி நெறி விளக்கம் என்ற நூல் குமர குருபரர் எழுதியது.

தமிழில் உள்ள அற நெறி நூல்களில் மிக மிக அருமையான நூல்.

கல்வி, ஆரம்பிக்கும் போது கஷ்டமாய் இருக்கும்.

இரவு பகலாய் கண் விழித்து படிக்க வேண்டும்.

மனப்பாடம் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் பரீட்சை எழுத வேண்டும்.

முதலில் கடினமாய் இருந்தாலும், பின் நல்ல வேலை கிடைத்து, நிறைய பணம் சம்பாதிக்கும் போது, கல்வியால் புகழ் வரும் போது சந்தோஷமாய் இருக்கும். கல்வியின் தொடக்கம் கடினம், முடிவு இனிமை.

காமம், முதலில் இன்பம் தருவது போல் இருக்கும். ஆனால் போகப் போகப் அதனால் வரும் துன்பம் பெரிது. "நெடுங்காமம்" என்கிறார். இதற்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள்.

ஒன்று, வரம்பற்ற காமம். ஒரு வழிமுறை இல்லாத காமம். விதிகளை மீறிய காமம். முறையற்ற காமம்.

இன்னொன்று, காலங்கடந்து வரும் காமம்.

உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.