Monday, December 31, 2012

வில்லி பாரதம் பிறந்த கதை


வில்லி பாரதம் பிறந்த கதை 


வில்லிபுத்துராழ்வார் ஒரு தீவிர வைணவ பக்தர். சிறந்த தமிழ் அறிஞர். தமிழில் வரும் படைப்புகளில் தவறு இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். புலவர், கவிஞர் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களை அவர் வாதுக்கு அழைப்பார். அப்படி வாதிடும் போது ஒரு நிபந்தனை வைப்பார். இரும்பினால் செய்த கொக்கி போன்ற ஒரு கூறிய ஆயுதத்தை அவர்கள் காதில் மாட்டி அதன் ஒரு முனையையை தன் கையில் வைத்துக் கொள்வார். அதே போல் ஒன்றை தன் காதில் மாட்டி அவர்கள் கையில் கொடுத்து விடுவார். வாதில் வென்றவர் கொக்கியை ஒரு இழு இழுத்தார் தோற்றவரின் காது அறுந்து விழுந்து விடும்.  இப்படி பல பேரின் காதுகளை அறுத்தவர் வில்லிபுத்துராழ்வார். 

இதை கேள்விப் பட்ட அருணகிரிநாதர் , காதறுப்பது தகாது என்று எண்ணி, வில்லிபுத்துராழ்வாரோடு வாதுக்குப் போனார். 

வில்லியார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அருணகிரி பெருமான் விடை பகர்ந்தார். 

பின் அருணகிரி நாதர் ஒரு பாடலை கூறி அதற்க்கு பொருள் கேட்டார். அதன் பொருள் தெரியாமல் வில்லிபுத்தாரழ்வார் திகைத்தார். "காதை அறுக்கலாமா " என்று அருணகிரி கேட்க, சரி என்றார் வில்லிபுத்துராழ்வார். 

அறுப்பாரா அருணகிரி ? காதறுப்பது தகாது என்று கூறி...காதறுத்த பாவம் போக தமிழில் பாரதம் பாடுக என்று அவரைப் பணித்தார். 

அருணகிரி பாடி, வில்லிபுத்துராழ்வார் பதில் தெரியாமல் தவித்த அந்தப் பாடல் 

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

வாரியார் ஸ்வாமிகள் அருளிய உரை 


திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,

திதி – திருநடனத்தால் காக்கின்ற

தாதை – பரமசிவனும்

தாத – பிரமனும்

துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய

தா – இடத்தையும்

தித – நிலைபெற்று

தத்து – ததும்புகின்ற

அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி – தயிரானது

தித்தித்ததே – தித்திக்கின்றதென்று

து – உண்ட கண்ணனும்

துதித்து – துதி செய்து வணங்குகின்ற

இதத்து – பேரின்ப சொரூபியான

ஆதி – முதல்வனே!

தத்தத்து – தந்தத்தையுடைய

அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட

தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத – தொண்டனே!

தீதே – தீமையே

துதை – நெருங்கிய

தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து – மரணத்தோடும்

உதி – ஜனனத்தோடும்

தத்தும் – பல தத்துக்களோடும்

அத்து – இசைவுற்றதுமான

அத்தி – எலும்புகளை மூடிய

தித்தி – பையாகிய இவ்வுடல்

தீ – அக்கினியினால்

தீ – தகிக்கப்படுகின்ற

திதி – அந்நாளிலே

துதி – உன்னைத் துதிக்கும்

தீ – புத்தி

தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்
 

வில்லி பாரதம் - சிறப்பு பாயிரம்


வில்லி பாரதம் - சிறப்பு பாயிரம்


வியாசர் பதினெட்டு அத்தியாங்களில் சொன்ன மகா பாரதத்தை, தமிழில் வில்லி புத்துராழ்வார் பத்து அத்தியாங்களில் பாடினார். 

காப்பியத்தின் முதலில் இறை வணக்கம் பாடுவது மரபு.

ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடி காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள் வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது. 

வில்லிபுத்துராழ்வார் பாடிய தமிழ் தாய் வாழ்த்து....

பொதிகை மலையில் பிறந்து, பாண்டியர்களின் அரவணைப்பிலே வளர்ந்து, முச்சங்கத்தின் கவனிப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து, நெருப்பிலே நீந்தி, கற்றோர் நினைவிலே நடந்து, ஆதி நாள் திருமால் பூமி நீரில் மூழ்கியபோது பன்றியாக அவதாரம் எடுத்து அதை தன் கொம்பிலே தாங்கி வெளியே கொண்டு வந்தார், அப்போது அந்த பூமா தேவியோடு கூடவே பிறந்து வளர்ந்து வந்தவள் இந்த தமிழ் தாய் என்று தமிழின் பெருமையை எடுத்து உரைக்கிறார்.


பாடல் 

Sunday, December 30, 2012

சிலப்பதிகாரம் - நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே ?


சிலப்பதிகாரம் - நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே ?


கண்ணன் தான் எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கிறான்.

பிறந்து பெரியவானாகும் வரை மாமன் கம்சன் மூலம் பிறந்த சிக்கல்களை சமாளிக்க வேண்டி இருந்தது.

பின் பாண்டவரக்ளுகாக படாத பட்டு பட்டான்.

துரியோதனன் போன்ற மூடனிடம் தூது போனான்.

அறம் அல்ல என்று தெரிந்தும் பாண்டவர்களுக்காக சிலவற்றை செய்தான்.

தன்னை நம்பிய பக்தர்களுக்காக பகவான் தான் என்ன பாடு படுகிறான்.

அவனைப் போற்றாத நா என்ன நாவே....

பாடல்


இராமாயணம் - தூங்கும்போதும் அருள் பொழியும் கண்கள்


இராமாயணம்  - தூங்கும்போதும் அருள் பொழியும் கண்கள்


கைகேயி புரிந்து கொள்ள முடியாத ஒரு பாத்திரம். அவள் நல்லவளா, கெட்டவளா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

சிலர் தூங்குவதை பார்த்தால் பயமாக இருக்கும். வாய் பிளந்து, குறட்டை விட்டுக் கொண்டு பார்க்கவே படு பயங்கரமாக இருக்கும். சில பேர் தூங்கும் போது பார்த்தால் உயிரோடு இருக்கிறானா இறந்து விட்டானா என்று தெரியாது. வெட்டிப் போட்ட பனை மரத் துண்டு போல கிடப்பான். தூங்கும்போதும் அழகாக இருப்பது குழந்தைகள் தான். 

கைகேயி தூங்கும் போதும் அவள் கண்ணில் இருந்து அருள் வழிகின்றது. மனதில் எத்தனை அன்பும் கருணையும் இருந்தால் உறக்கத்திலும் அருள் தெரியும்?

கைகேயி பஞ்சணையில் படுத்து இருக்கிறாள். வெள்ளை வெளேர் என்ற பட்டு மெத்தை. அதன் மேல் விரித்த வெள்ளை விரிப்பு ஒரு சில இடங்களில் மடிந்தும் சுருங்கியும் இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்றால் பாற் கடலில் அலை அடிப்பது போல இருக்கிறது. மடிப்புகளும் சுருக்கங்களும் அலை போல இருக்கிறது. 

தசரதன் சக்கரவத்தி. அவனுக்கு எந்த நிறத்தில் வேண்டுமானாலும் படுக்கை விரிப்பு கொள்ள முடியும். ஆனாலும் வெள்ளை நிறம் தான் அவன் அரண்மனையில் இருந்து இருக்கிறது. படுக்கை விரிப்புக்கு வெள்ளை நிறம் தான் சிறந்தது என்பது ஒரு கருத்து இதில் இருந்து பெறப் படுகிறது.

அதன் மேல் அவள் படுத்து இருக்கிறாள். அவள் சிவந்த முகம் உடையவள். மேலிருந்து பார்த்தால் பாற்கடலில் பூத்த தாமரை போல் இருக்கிறது. 

அவள் உடல் கொடி போல் மெலிந்து வளைந்து வளைந்து இருக்கிறது. தாமரை கொடியில் பூத்தது மாதிரி இருக்கிறது. நீர் நிலையில் தாமரை கொடி நீரின் சலனத்திற்கு ஏற்ப ஆடுவது மாதிரி இருக்கிறது அவள் படுத்து இருப்பது, அவள் அசைவது எல்லாம். 

அவளின் அவயங்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட மணிகள் மாதிரி இருக்கிறது. அப்படி ஒரு ஜொலிக்கும் அழகு. 

அமைதியாகத் தூங்குகிறாள். முகத்தில் ஒரு அமைதி, சாந்தம். உறங்கும் போதும் கண் ஓரம் ஒரு அருள். 

உறங்கும் போது ஒருவன் தன்னை மறக்கிறான். அந்த நிலையிலும் அருள் வெளிப் படும் என்றால், அவன் இயற்கையாகவே அருள் உள்ளம் கொண்டவனாக இருக்க வேண்டும். விழித்து இருக்கும் போது அருள் இருப்பதை போல் நடிக்க முடியும். உறக்கத்தில் அது முடியாது. 

சக்கரவர்த்தியின் மனைவி என்ற அகம்பாவம் இல்லை. 
தான் பெரிய அழகு உள்ளவள் என்ற பெருமிதம் இல்லை. 
அவள் கண்ணில் அருள் வழிகிறது. 

பாடல்
 

இராமாயணம் - நல்லாருக்குச் செய்த உதவி


இராமாயணம் - நல்லாருக்குச் செய்த உதவி

வாமனன் மூன்றடி நிலம் கேட்டு வந்தான். மாபலியும் கேட்ட மூன்றடி நிலத்தை தானமாக தந்தான். நீர் வார்த்து தானம் தந்தவுடன், எதிரில் நின்றவர்கள் பயப்படும்படி வானம் வரை வளர்ந்தான். அவன் எப்படி வளர்ந்தான் என்றால், நல்லவர்களுக்கு செய்த உதவி போல் வளர்ந்தானாம். 

நல்லவர்களுக்கு செய்த உதவி நாளும் நாளும் வளர்ந்து நன்மை தருவதை போல அவன் வளர்ந்தான். 

நல்லவர்களுக்குச் செய்த உதவி முடிவில்லா இன்பத்தை தருவதைப் போல முடிவில்லாமல் வளர்ந்து கொண்டே போனான். 

தீயவர்களுக்குச் செய்த உதவி மூலம் நமக்கு முதலில் நன்மை விளைவது போல் தோன்றினாலும் பின் ஒரு நாளில் அது நம்மை கீழே தள்ளி முன் இருந்த நன்மைகளையும் சேர்த்து கொண்டு போய் விடும். 

பாடல்'

Saturday, December 29, 2012

இராமாயணம் - கானும் கடலும் கடந்து போய்


இராமாயணம்  - கானும் கடலும் கடந்து போய்


இந்த உலகம், இதில் உள்ள பொருள்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன ? 

ஏதோ ஒன்றிலிருந்து வந்தது என்று வைத்துக் கொள்வோம். 

அப்படி என்றால் எல்லாவற்றிற்குள்ளும் அந்த ஏதோ ஒன்று தான் இருக்க வேண்டும் இல்லையா?

 அது தானே மூலப் பொருள் ? 

சரி எல்லாவற்றிக்குள்ளும் அது இருக்கிறது, ஒத்துகொள்ள கூடிய விஷயம் தான். 

எல்லா பொருள்களுக்கும் வெளியே என்ன இருக்கிறது ?

வெளியே இருப்பதும் ஒரு பொருள் தானே ?

அந்தப் பொருளும் அந்த மூலப் பொருளில் இருந்து தானே வந்து இருக்க வேண்டும் ?

அப்படிப் பார்த்தால் நாம் காணும் அனைத்துப்  பொருள்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பது அந்த ஆதி மூலப் பொருள் தானே ? 

அது எப்படி ஏதோ ஒன்று அனைத்துப் பொருள்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும் ? 

அது அப்படியே இருக்கட்டும். 

இந்த பொருள்களில் இருந்து உயிர்கள் பிறந்தன.

அப்படிஎன்றால் இந்த உயிர்களுக்குள்ளும் அந்த மூலப் பொருள் தானே இருக்க வேண்டும் ?

உயிர்கள் தோன்றியபின் அவற்றிற்கு உணர்வு தோன்றியது...நல்லது, கெட்டது, அன்பு, பாசம், காதல், பக்தி என்ற உணர்வுகள் தோன்றின...உடலும், உயிரும், உணர்வுமாய் இருப்பது அந்த ஆதி மூலப் பொருள் தானே ? சந்தேகமில்லையே ? இதில் ஒரு குழப்பமும் இல்லையே ?

அனாதியான அந்த மூலப் பொருள் அல்லது சக்தி எது ? அதை நாம் அறிய முடியுமா ? அதை நீங்கள் பொருள் என்று சொல்லுங்கள், சக்தி என்று சொல்லுங்கள், ஆண் என்று சொல்லுங்கள், பெண் என்று சொல்லுங்கள்...எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். 

கம்பர் அதை ஆணாக வைத்து கொள்கிறார்....அவன், கூனியும், சிறிய தாயும், அவனுக்கு கொடுமை இழைக்க, அதனால் அவன் தன் செங்கோல் துறந்து காட்டையும், கடலையும் கடந்து போய், இமைக்காத தேவர்களின் துன்பம் தீர்த்த வீரக் கழல் அணிந்த வேந்தன் (இராமன்)....

அந்த ஆதி மூலம் இராமனாக அவதரித்தது....

பாடல் 

Friday, December 28, 2012

திருக்குறள் - பயன் இல்லாத சொல்


திருக்குறள் - பயன் இல்லாத சொல்


யாரவது அவர்களின் கணவனுக்கோ, மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ, உடன் பிறப்புகளுக்கோ, பெற்றோருக்கோ , நெருங்கிய நண்பர்களுக்கோ தீமை செய்ய நினைப்பார்களா ?  அப்படி செய்தால் அது எவ்வளவு மோசமான ஒன்று ? அதை விட மோசமானது பலபேர் முன்னால் பயன் இல்லாத சொற்களை கூறுவது. பயன் இல்லாத சொற்களை கூறுவதை வள்ளுவர் மிக மிக வெறுக்கிறார். 

பாடல்