Friday, January 18, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது


இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது 


வாழ்க்கையில் சில பேரை பார்த்து இருப்பீர்கள்...என்ன சொன்னாலும் அதற்க்கு எதிர் மறையான ஒன்றை சொல்லுவதில் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் இருக்கும். 

நான் இன்று முதல் உணவில் கட்டுப் பாடோடு இருக்கப் போகிறேன் என்று சொன்னால், "அது எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான், மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறிருவ பாரு " என்று சொல்வார்கள். 

இப்படி எதைச்சொன்னாலும் ஒரு முட்டு கட்டை போடுவது அவர்கள் இயல்பு. 

கோவில், இறை வணக்கம் என்று சொன்னால் உடனே, சாமியாவாது, மண்ணாவது என்று சொல்லி விடுவார்கள். 

அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது. அவர்கள் தாங்களும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் செய்ய vidaamal, ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். 

யாரை விலக்க வேண்டும் என்று சொல்லியாகி விட்டது. 

யாரோடு சேர வேண்டும் ?  

நாம் எதைச் செய்ய முயல்கிறோமோ, அதில் நாட்டம் உள்ளவர்கள், அதில் சாதனை புரிந்தவர்கள்...அப்படி பட்டவர்களோடு நாம் இருக்க வேண்டும். அவர்கள் சொல்லுவது ஏதாவது காதில் விழும், அவர்கள் செய்வதைப் பார்த்து நாமும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம்...

பாடல்  

கள்ளார்பொழில் தென்னரங்கன்  கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி  குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு  ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.

சீர் பிரித்த பின் 

கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பாதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிராண்டிக் கீழ் 
விள்ளாத அன்பன் இராமானுஜன் மிக்க சீலம் அல்லால் 
உள்ளாத என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்கு உற்ற பெரிய இயல்பே 

பொருள் 

Thursday, January 17, 2013

கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று


கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று 


குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலும்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையும்அற் றதுவே.


அருணகிரி நாதர் பாடல் என்றால் பதம் பிரிக்காமல் படித்து அறிய முடியாது. 

சீர் பிரித்த பின் 

குறியை குறியாது குறித்து அறியும் 
நெறியையை தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று உலகோடு உரை சிந்தையும் அற்று 
அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே 

பொருள் 

Tuesday, January 15, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி


இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி 


என் நாவில் ஏதேதோ தேவை இல்லாத விஷயங்கள் எல்லாம் வந்து கொண்டு இருக்கிறது. பொய், புறம் சொல்லுவது, முகஸ்துதி சொல்லுவது, பயனற்ற விஷயங்களைப் பேசுவது என்று தேவை இல்லாமால் பல விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறது என் நாக்கு. 

இராமானுசரே, எனக்க ஒரே ஒரு வேண்டுகோள் தான் உண்டு. இரவும் பகலும் உன் நாமம் மட்டும் என் நாவில் தங்கி இருக்கும்படி செய்து விடும்...வேறு எதுவும் வேண்டாம்....

எங்கே நாவில் நாமம் நின்றால், ஒரு வேலை நடந்து எங்காவது போய் விடுமோ என்று அஞ்சி, நாமம் அமரும் படி வேண்டுகிறார். 

பாடல்

சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.

சீர் பிரித்த பின் 

சொல்லின் தொகை கொண்டு உனது அடிப் போதுக்கு தொண்டு செய்யும் 
நல்ல அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவினுள்ளே 
அல்லும் பகலும் அமரும்படி நல்க அறு சமயம்
வெல்லும் பரம ராமானுஜ இது என் விண்ணபமே

பொருள்

புற நானூறு - இன்றும் வரும் கொல் ?


புற நானூறு - இன்றும் வரும் கொல் ?

இன்னைக்கும் வருவார்களா ?

அவன் பெரிய கொடையாளி. எல்லோருக்கும் இல்லாருக்கும் உதவி செய்பவன். நல்ல வீரனும் கூட. ஒரு நாள், அவன் ஊரில் உள்ள பசுக்களை பக்கத்து நாட்டு அரசனின் படைகள் கவர்ந்து சென்று விட்டன. அதை கேள்விப் பட்டு, இவன் சண்டைக்குப் போனான். சண்டையில் இவன் பக்கம் வெற்றி பெற்றாலும், அவன் சண்டையில் இறந்தான். அவனை அடக்கம் பண்ணி, அடக்கம் பண்ணிய இடத்தில் ஒரு கல்லை நட்டு வைத்தனர். அந்த கல்லை பூவாலும், மயில் சிறகாலும் தடவிக் கொடுத்தனர். அப்போது அங்கே வந்த புலவர் ஒருவர் நினைக்கிறார், இவன் இப்படி இறந்து போனது ஊருக்குள் தெரியுமோ தெரியாதோ...இவனிடம் உதவி பெற இன்னைக்கும் வருவார்களா என்று துக்கம் இதயத்தை நிறைக்க நினைத்துப் பார்க்கிறார்.....

பாடல்


பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே.

பொருள்


Monday, January 14, 2013

திருமந்திரம் - புலன்களை அடக்காதீர்கள்


திரு மந்திரம் - புலன்களை அடக்காதீர்கள் 


மெய், வாய், விழி, நாசி, செவி என்ற ஐந்து புலன்களும் நம்மை படாத பாடு படுத்துகின்றன. 

பார்ப்பது எல்லாம் வேண்டும் என்கிறது மனம்.

ருசியானவற்றை கண்டால் ஜொள்ளு விடுகிறது நாக்கு,  

சினிமா பார்க்க வேண்டும், புதுப் புது இடங்களை பார்க்க வேண்டும் என்று கண் அலை பாய்கிறது

பாடலை, இசையையை கேட்க வேண்டும் என்று காது ஆசைப் படுகிறது....

ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லா மதங்களும் போதிக்கின்றன. 

ஆனால், ஐம்புலன்களை அடக்க முடியுமா ? அடக்கியபின் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

திருமூலர் ரொம்ப ப்ராக்டிகலான ஆளு. 

பாடல் 

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்,
அஞ்சும் அடக்கும் அறிவறி வார்இல்லை,
அஞ்சும் அடக்கின் அசேதனமாம் என்றிட்(டு)
அஞ்சும் அடக்காத அறிவறிந்தேனே

பொருள்

Sunday, January 13, 2013

இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம்


இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம் 


நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!



நயம் தரும் பேரின்பம் எல்லாம் பழுது என்று - பேரின்பம் எப்படி பழுது ஆகும் ?

நிறைய வியாக்கியானங்கள் எழுதப்பட்டு உள்ளன. சிலவற்றைப் பார்ப்போம். 

1. பெரியவர்கள் தீயவை, தீமை, சிற்றின்பம் போன்றவற்றை நேரடியாகச் சொல்வது இல்லை. தீய நெறியை 

நெறி அல்லாத நெறி தன்னை 
நெறியாகக் கொள்வேனே 
சிறு நெறிகள் சேராமே 
பெறு நெறியே சேரும் வண்ணம் 
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு 
அறியும் வண்ணம் அருளியவாறு யார் தருவார் அச்சோவே என்று பாடுகிறார் மணிவாசகர்.

தீ நெறி என்று சொல்லவில்லை....நெறி அல்லாத நெறி என்று குறிப்பிடுகிறார். 

கொடிய நஞ்சு உள்ள பாம்பை நல்ல பாம்பு என்று கூறுகிறோம் அல்லவா "? அது போல் இங்கே மங்கலமாக புலன் இன்பத்தை பேரின்பம் என்று குறிப்பிட்டார்.

2. பேரின்பம் என்றால் முக்தி, வீடு பேறு, சொர்க்கம் என்று சொல்லலாம். இறைவன் அடியாருக்கு அது எல்லாம் பழுது தான். அவர்களுக்கு மிகுந்த விருப்பம் உள்ளது அவன் அழகில் தோய்வதுதான்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே 

என்று சொர்கமும், முக்தியும், இந்திர லோகமும் வேண்டாம் என்று அவனை கண்டு கழிப்பதிலேயே அவர்களுக்கு ஆனந்தம் கிடைத்து விடுகிறது. 

3. பேரின்பம் அடைய வேதங்களும் சாஸ்திரங்களும் ஞான, கர்ம, பக்தி மார்கங்களை காட்டுகின்றன. வைணவ அடியார்கள் அதை எல்லாம் பழுது என்று விட்டுட்டு ஆச்சாரியன் திருவடிகளே சரணம் என்று இருந்து விடுவார்கள். 

நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

ஆச்சாரியனின் நாமங்களை சொல்வதும், அவன் திருவடிகளை பற்றிக் கொள்வதும் தவிர அவர்களுக்கு பெரிய இன்பம் ஒன்றும் இல்லை....

Saturday, January 12, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - மனமே ஒத்துக் கொள்


இராமானுஜர் நூற்றந்தாதி - மனமே ஒத்துக் கொள் 

நல்லது என்று தெரிந்தாலும் இந்த மனம் அதை விட்டு விட்டு மற்றவற்றின் பின் செல்கிறது. சொன்னால் எங்கே கேட்கிறது. கேட்டாலும் ஒரு கணம் கேட்க்கும் அடுத்த கணம் குரங்கு போல் வேறொன்றுக்குத்  தாவி விடும். எனவே, ஏ மனமே, நான் சொல்வதை கேளு, திருவரங்கத்து அமூதனார் பாடிய இராமானுஜர் நூற்றந்தாதியை ஒழுங்காகப் படி என்று வேண்டுகிறார் வேதப் பிரகாசர். 


பாடல்  

நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

பொருள்.....