Monday, September 7, 2020

பட்டினத்தார் - உய்யுமாறு அருளே

பட்டினத்தார் - உய்யுமாறு அருளே 


கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில், நாம் புதிதாகச் செய்தது என்ன?

உணவு, உடை, பேச்சு, நாம் கண்ட பொருள்கள், மனிதர்கள், கேட்ட செய்திகள்?

திருப்பி திருப்பி அதே தோசை, வடை, பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார்...

அதே உடை....சேலை,  சுடிதார், pant , shirt , டீ-ஷர்ட் ....

மீண்டும் மீண்டும் அதே பேச்சு...மாமியார் சரி இல்லை, வீட்டு காரருக்கு ஒண்ணும் தெரியாது, மனைவிக்கு சரியா சமைக்கத் தெரியாது, அந்த கட்சி மோசம், இந்த கட்சி நல்லது, வெயில், மழை.....

அதே டிவி, அதே சீரியல், அதே blog , அதே பாட்டு

சலிப்பு வராதா?

ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும், முன்னேற வேண்டும், நல்லது செய்ய வேண்டும், நமக்கும் பிறருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றாதா?

இப்படி செக்கு மாடு போல சில விஷயங்களில் சுத்தி சுத்தி வருகிறேனே, என்னக்கு ஒரு நல்ல வழியை காட்டுவாய் என்று சிவனை வேண்டுகிறார் பட்டினத்தடிகள்.

பாடல்

உண்டதேயுண்டு முடுத்ததேயுடுத்து மடுத்தடுத்துரைத்த யுரைத்தும்,
கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்,
விண்டதா மரைமேலன்னம் வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா,
அண்டரேபோற்ற வம்பலத்தாடுமையனேயு மாறருளே.


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_7.html


உண்டதேயுண்டு  = உண்டதே உண்டு

முடுத்ததேயுடுத்து = உடுத்ததே உடுத்து

மடுத்தடுத்து = அடுத்து அடுத்து

உரைத்த யுரைத்தும்,  = சொன்னதையே சொல்லி

கண்டதேகண்டுங் = பார்த்ததையே பார்த்து

கேட்டதேகேட்டுங் = கேட்டதையே கேட்டு

கழிந்தனக நாளெல்லாம், = கழிந்தன நாட்கள் எல்லாம்

விண்டதா மரைமேலன்னம் = விண்ணில் தாமரை மேல் அன்னம்

வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா, = அதன் மேல் வீற்று இருக்கும் திரு வெண்காட்டில் உறையும் சிவனே

அண்டரே = தேர்வர்களே

போற்ற = போற்ற

வம்பலத்தாடு = அம்பலத்து ஆடும்

உமையனே = உமை ஒரு பங்கனே

உய்யு மாறருளே. = உய்யுமாறு அருள் செய்யேன்

வேறு ஒன்றும் தெரியாததால், தெரிந்ததையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம்.

புதிதாக ஏதாவது செய்தி வந்தால் கூட, அதை நாம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை. "அதெப்படி? நான் நம்புவதற்கு எதிராக அல்லவா இருக்கிறது...அதை எப்படி ஏற்றுக் கொள்ளுவது"  என்று எந்த புதிய செய்தி வந்தாலும், அதை புறம் தள்ளி விடுகிறோம்.

அறிவு எப்படி வளரும்?

ஐந்து வயதில் தெரிந்தது தான் ஐம்பது வயதிலும் தெரியும் என்றால், 45 வருடம்  வீணாகி விட்டது என்று அர்த்தம்.

அறிவு வளர வேண்டாமா?

உய்யு மாறருளே...வேறு என்ன செய்வது....அவன் காப்பாற்றினால் தான் உண்டு.





2 comments:

  1. பட்டினத்தார் சொன்ன மாதிரியே இப்பவும் அதையே செய்து கொண்டிருக்கிறோம். அவராவது ஆண்டவனை வேண்டி கொண்டார்.

    ReplyDelete
  2. சில பேரைச் சந்திக்கும்போது "சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே" என்று சலிக்கத் தோன்றும்.

    ReplyDelete