Friday, October 8, 2021

சிலப்பதிகாரம் - முறை இல் அரசன் வாழும் ஊர்

சிலப்பதிகாரம் - முறை இல் அரசன் வாழும் ஊர் 


தன் கணவன் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு கொலையுண்ட செய்தியை கேட்கிறாள் கண்ணகி. அவளுக்குத் தெரியும் கோவலன் கள்வன் அல்ல என்று. 


இருந்தும், சூரியனைப் பார்த்துப் கேட்கிறாள்..."காய் கதிர் செல்வனே, கள்வனோ என் கணவன்" என்று. 


"உன் கணவன் கள்வன் அல்லன், இந்த ஊரை தீ தின்னும்" என்று ஒரு அசரீரி கேட்டது. 


‘கள்வனோ அல்லன்; கருங் கயல் கண் மாதராய்!

ஒள் எரி உண்ணும், இவ் ஊர்’ என்றது ஒரு குரல்.


கேட்டவுடன் எழுகிறாள் கண்ணகி. 


ஒரு பெண்ணின் முழு ஆளுமையை, அவள் கோபத்தை, யாருக்கும் அஞ்சாத அவள் துணிச்சலை, தன் கணவன் மேல் விழுந்த பழியை துடைக்க அவள் துடித்த துடிப்பை இளங்கோ கட்டுகிறார். 


மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள். உணர்சிகளோடு பின்னிச் செல்லும் கவிதை வரிகள். 


"உன் கணவன் கள்வன் அல்ல என்று சூரியன் சொன்னவுடன், அதன் பின் ஒரு கணம் கூட கண்ணகி தாமதம் செய்ய வில்லை. தன்னிடம் இருந்த மற்றொரு சிலம்பை ஒரு கையில் ஏந்திக் கொண்டு...முறை இல்லாத அரசன் வாழும் இந்த ஊரில் வாழும் பத்தினிப் பெண்களே, இது ஒன்று " என்று புறப்படுகிறாள்...



பாடல் 


என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி


நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி:


‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்


நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று:


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_8.html


(Please click the above link to continue reading)


என்றனன் வெய்யோன் = உன் கணவன் கள்வன் அல்லன் என்று கூறினான் பகலவன் 


இலங்கு ஈர் = அறுத்து செய்யப்பட்ட 


வளைத் தோளி = வளையல்களை அணிந்த தோள்களை உடைய கண்ணகி 


நின்றிலள் = நிற்கவில்லை 


நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி: = மீதம் இருந்த ஒரு சிலம்பை கையில் ஏந்தி 


‘முறை இல் அரசன் = முறை இல்லாத அரசன் 


தன் ஊர் = உள்ள ஊரில் 


இருந்து வாழும் = இருந்து வாழும் 


நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்!  = நிறையுடை பத்தினி பெண்களே  


ஈது ஒன்று: = இது ஒன்று, அதாவது அந்த இரண்டு சிலம்பில், இது ஒன்று 


என்று கூறி கிளம்புகிறாள். 




1 comment: