Saturday, June 3, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 4

   திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 4



(இந்தத் தொகுப்புரையின் முந்தைய பாகங்களின் வலை தள முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து.  வான்சிறப்பு , நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம்,  புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல் , இனியவை கூறல் , செய்நன்றி அறிதல்,  நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை,  பிறனில் விழையாமை, மற்றும் பொறையுடைமை 


என்ற 15 அதிகாரங்களின் தொகுப்புரையை முந்தைய பிளாகில் பார்த்தோம். 


தொடர்வோம்.


16. அழுக்காறாமை - பொறையுடைமையைத் தொடர்ந்து அடுத்த அதிகாரமாக அழுக்காறாமை என்ற அதிகாரத்தை வைக்கிறார். அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமல் இருத்தல். பொறாமை ஏன் வருகிறது? மற்றவன் வைத்திருக்கும் ஏதோ ஒன்றின் மேல் நமக்கு ஆசை. அது நமக்கு கிடைக்கவில்லை. மற்றவனுக்கு கிடைத்து விட்டது. எனவே ஒரு பொறாமை வருகிறது. அடக்கமும் பொறுமையும் இருந்தால், இந்த பொறாமை வராது என்பதால், இதை அந்த அதிகாரங்களுக்குப் பின் வைத்தார். 


17. வெஃகாமை: அதாவது பிறரது பொருளை தவறான வழியில் அபகரிக்க நினைக்காமல் இருப்பது. பொறாமை வந்தால், எப்படியாவது மற்றவன் பொருளை தான் அடைய வெறி வரும். அது சில சமயம் தவறான வழியிலும் நம்மை இட்டுச் சென்று விடலாம் என்பதால், இதை அழுக்காறாமையின் பின் கூறினார். இலஞ்சம், கொள்ளை, திருட்டு, போன்றவை ஏன் நிகழ்கின்றன?  பிறரது பொருளை தவறான வழியில் அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில். அதைத் தவிர்க்க இந்த அதிகாரம் செய்தார். 



https://interestingtamilpoems.blogspot.com/2023/06/4.html


(please click the above link to continue reading)




18. புறங்கூறாமை - புறம் சொல்லுதல் என்றால் ஒருவரை பற்றி தவறாக அவர் இல்லாத போது மற்றவர்களிடம் சொல்லுவது. இது சொல்லில் வரும் குற்றம் என்பதால் அழுக்காறாமை, வெஃகாமை போன்ற மனக் குற்றங்களுக்குப் பின் வைத்தார். 


19. பயனில சொல்லாமை - சொல்லில் வரும் குற்றங்கள் நான்கு. அவையாவன, பொய், குறளை , கடுஞ் சொல், பயனில்லாத சொல் என்பன. இதில், இல்லறத்தில் இருப்பவன் பொய்யை முழுவதும் விட முடியாது. சில சில தீமை இல்லாத பொய்களை சொல்லத்தான் வேண்டி இருக்கும். சமையல் எப்படி இருக்கிறது என்று மனைவி கேட்டால், அது நன்றாக இல்லாவிட்டாலும் "மிகப் பிரமாதம்" என்று பொய் சொல்லத்தான் வேண்டும். அது தவிர்க்க முடியாது என்பதால் அதை விட்டுவிட்டார். குறளை என்பது புறம் சொல்லுவது. அது பற்றி முந்தைய அதிகாரத்தில் பார்த்தோம். கடும் சொல் கூறக் கூடாது என்பதை "இனியவை கூறல்" என்ற அதிகாரத்தில் கூறினார். எனவே, இறுதியாக பயனில சொல்வதை பற்றி இணைத்த அதிகாரத்தில் கூறினார்.


இதுவரை நாம் சிந்தித்த திருக்குறளின் தொகுப்பை பார்த்தோம். இனி அடுத்த அதிகாரமான "தீ வினை அச்சம்" பற்றி சிந்திப்போம். 


[

தொகுப்புரை - பாகம் 1

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html

தொகுப்புரை - பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/2.html

தொகுப்புரை - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/3.html


]






















No comments:

Post a Comment