Wednesday, May 31, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 3

  திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 3


(இந்தத் தொகுப்புரையின் முந்தைய பாகங்களின் வலை தள முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)



இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து.  வான்சிறப்பு , நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம்,  புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல் , இனியவை கூறல் , செய்நன்றி அறிதல்


என்ற 10 அதிகாரங்களின் தொகுப்புரையை முந்தைய பிளாகில் பார்த்தோம். 


தொடர்வோம்.


11. நடுவு நிலைமை : இல்லறத்தில் ஈடுபட்டு இருக்கும்போது, நண்பர்கள், உறவினர்கள் என்று  இல்லறம் பரந்துபட்டு இருக்கும். அவர்கள் நமக்கு பல நன்மைகள் செய்து இருப்பார்கள். உதவி செய்து இருப்பார்கள். நாளும் கிழமையும் என்றால் வாழ்த்துச் சொல்வார்கள், பரிசுகள் தருவார்கள். நம் வீட்டில் நடக்கும் நல்லது, அல்லாதது போன்ற நிகழ்வுகளுக்கு  வருவார்கள். ஆனால், அவர்கள் நமக்கு முக்கியமானவர்கள் என்று நினைத்து நீதி அல்லாத, நடு நிலை தவறி நாம் ஒன்று செய்து விடக்கூடாது. ஒரு நீதிபதி, ஒரு காவல் அதிகாரி, ஒரு அரசாங்க அதிகாரி வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் நடுவு நிலையாக செயல் பட வேண்டும். அம்மாவுக்கும், மனைவிக்கும்  இடையில் மனக்கசப்பு என்றால், நடு நிலை பேண வேண்டும். நமக்கு பிடித்த தலைவர், கட்சி என்றால் செய்தது எல்லாம் சரி என்று சொல்லக் கூடாது. அதே போல பிடிக்காத கட்சி, தலைவர் என்றால்   செய்வது எல்லாம் தவறு என்றும் சொல்லக் கூடாது. நடு நிலை மிக அவசியம். 



12. அடக்கமுடைமை - நடுவு நிலை என்றால் மற்றவர்கள் பொறுத்தது மட்டும் அல்ல. நாமே தவறு செய்தாலும், அது தவறு என்று அதை அறிந்து, கடிந்து, திருத்திக் கொள்ள வேண்டும். நான் எப்படி தவறு செய்வேன், என்று அடம் பிடிக்கக் கூடாது. அப்படி தவறை திருத்த முயற்சி செய்யும் போது , தவறான வழியில் செல்லும் மனம், வாக்கு, உடம்பை கட்டுப் படுத்த வேண்டும். எனவே, அடுத்து அடக்கமுடைமை பற்றி கூறுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/3.html



(please click the above link to continue reading)


13. ஒழுக்கமுடைமை: நடுநிலையில் நின்று, மெய், வாக்கு, உடலை அடக்கி ஆண்டாள், ஒழுக்கம் தானே வரும் என்பதால் அது பற்றி அடுத்துக் கூறினார். 


14. பிறனில் விழையாமை - ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால், அதில் உள்ள சமுதாயங்கள் சிறக்க வேண்டும். சமுத்தியாம் சிறக்க வேண்டும் என்றால், குடும்பங்கள் சிறக்க வேண்டும். குடும்பத்தின் ஆணி வேர் கணவன் மனைவி உறவு. பந்தம். அது அசைக்கப் படும் என்றால், குடும்பம் சீரழியும், சமுதாயம் கெடும், நாடு கெடும். எனவே, ஒழுக்கமுடைமையின் பின் பிறனில் விழையாமை பற்றிக் கூறினார். வல்லவர்கள், பணம் உள்ளவர்கள், அழகு உள்ளவர்கள் அது அவ்வளவாக இல்லாத ஒருவனின் மனைவியை ஏதோ ஒருவிதத்தில்   அபகர்த்துக் கொள்ள முடியும் என்றால், பின் சமுதாயம் சீர் குலையத் தொடங்கி விடும். 


15. பொறையுடைமை - பொறுமையை கடைபிடித்தல். எதற்கு எடுத்தாலும் கோபம், எரிச்சல், பகைமை என்று போகாமல், பொறுமையை சொல்லும் அதிகாரம். எதை எடுத்துக் கொண்டாலும் பொறுத்துக் கொள்ள முடியும், ஆனால் ஒருவனின் மனைவியை எடுத்துக் கொண்டால் பொறுக்க முடியுமா?  அந்த சமயத்திலும் பொறுமை வேண்டும் என்று சொல்வதற்காக இந்த அதிகாரத்தை பிறனில் விழையாமை என்ற அதிகாரத்தின் பின் வைத்தார். தன் மனைவியை கவர்ந்து சென்ற இராவணனிடம் பொறுமை காட்டினான் இராமன் (இன்று போய் நாளை வா), தன் மனைவியை சபையில் மானபங்கப் படுத்திய துரியோதனன் மீது பொறுமை காட்டினார் தர்மர். நம் இதிகாசங்கள் போதிக்கும் அறம் இது. 


[


தொகுப்புரை - பாகம் 1


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html

தொகுப்புரை - பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/2.html



]












No comments:

Post a Comment