Saturday, May 6, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - மாசறு காட்சி யவர்

     

 திருக்குறள் - பயனில சொல்லாமை - மாசறு காட்சி யவர்



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


ஏன் பயனற்ற சொற்களை பேசுகிறோம்? 


இது பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா? 


பொழுது போகவில்லை, சும்மா அரட்டை அடிப்பது...


பேச ஒன்றும் இல்லை. சும்மா மெளனமாக இருக்க முடியுமா? எதையாவது பேசுவது. 


என்ன பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பது. 


இப்படி பல காரணங்கள். 


எல்லாவற்றையும் ஆராய்ந்து, வள்ளுவர் சொல்கிறார் 


நாம் தேவையற்ற சொற்களை பேசுவதற்கு காரணம் நம்மிடம் ஒரு தெளிவு இல்லாமை என்று. 


எது சரி, எது தவறு என்ற தெளிவு இல்லை. 


எது நல்லது, எது கெட்டது என்ற தெளிவு இல்லை. 


எது உண்மை, எது அபிப்ராயம் என்ற தெளிவு இல்லை. 


உண்மையை கண்டு பிடிக்க முயற்சி செய்வது இல்லை. சொல்வதை எல்லாம், கேட்பதை எல்லாம் 

நம்பிக் கொண்டு, அது தான் சரி என்று வாதம் செய்துகொண்டு திரிவது. 


இப்படி பல காரணங்களால் நம்மிடம் ஒரு தெளிவு இருப்பது இல்லை. 


பாடல் 

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post.html



(please click the above link to continue reading)



பொருள்தீர்ந்த = பொருள் தீர்ந்து போன, பொருளற்ற, அர்த்தம் இல்லாத, பயனில்லாத (சொற்களை)

 


பொச்சாந்தும் = மறந்தும் கூட 


சொல்லார் = சொல்ல மாட்டார்கள் 


மருள்தீர்ந்த = மயக்கம் நீங்கிய, மயக்கம் இல்லாத, 


மாசறு = குற்றம் இல்லாத 


காட்சி யவர் = பார்வை கொண்டவர்கள். 


மருள் என்றால் மயக்கம். 


இதுவா, அதுவா எது சரி என்று தெரியாமல் மயங்குவது. 


இதுவோ, அல்லது அதுவோ என்று குழம்புவது. 


எப்படி முடிவு செய்வது என்று அறியாமல் தவிப்பது. 


இந்த மயக்கம் முதலில் தீர வேண்டும். 


அப்படி தீர்ந்தால், மாசறு காட்சி கிடைக்கும். 


அது என்ன மாசறு காட்சி. 


நாம் ஒன்றை பார்க்கிறோம் (கேட்கிறோம், படிக்கிறோம்) என்றால் அது உண்மையில் என்ன என்று பார்பது கிடையாது. 


நமக்கு தெரிந்த, பிடித்த, நாம் நம்பும் வகையில் அவற்றைப் பார்ப்போம்.


அது குற்றம் உள்ள பார்வை. வேண்டியவன், வேண்டாதவன், பிடித்தது, பிடிக்காதது, என்பதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, தெளிவான காட்சி இருந்தால், பேச்சு குறையும். பயனற்ற பேச்சு குறையும். 


மருள் தீர்ந்த 

மாசறு காட்சி 


நம்மிடம், எத்தனை விடயங்களில் இப்படிப்பட்ட காட்சி இருக்கிறது?


நாம் நம்புவது எல்லாம் சரியாகி விடாது. நம்பிக்கையைத் தாண்டி உண்மை எது என்று அறிய வேண்டும். அந்த உண்மையின் மேல் ஒரு குழப்பமும் இருக்கக் கூடாது. அப்போது தெளிவான காட்சி கிட்டும். அப்போது பயனற்ற சொற்கள் மறையும். 







(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


பயனில சொல்லாமை நன்று




அரும்பயன் ஆயும் அறிவினார்

No comments:

Post a Comment