Sunday, May 14, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்ல வேண்டியதும் வேண்டாததும்

      

 திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்ல வேண்டியதும் வேண்டாததும் 



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


முந்தைய குறளில் 


பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீரந்த

மாசறு காட்சி யவர்.


என்று கூறினார். 


அதாவது மயக்கம் அற்ற, குற்றம் அற்ற பார்வை உடையவர்கள் மறந்தும் கூட பொருள் இல்லாத வெட்டிப் பேச்சுகளை பேசமாட்டார்கள் என்றார். 


சரி. 


எதை பேச மாட்டார் என்று கூறினார். 


எதைப் பேச வேண்டும் என்றும் கூற வேண்டும் அல்லவா?


அதை இங்கே கூறுகிறார். 



முதலில் ஒன்றுமே பேசாமல் இருப்பது நலம். 


ஒருவேளை பேச வேண்டி வந்தால், மிக்க பலன் உள்ள சொற்களை தேர்ந்து எடுத்து பேச வேண்டும்.  பெரும் பலன் தராத   சொற்களைப் பேசக் கூடாது என்கிறார். 


பாடல் 


சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க

சொல்லின் பயனிலாச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_14.html


(please click the above link to continue reading)


சொல்லுக = சொல்ல வேண்டி வந்தால் சொல்லுக 


சொல்லின் = சொற்களில் 


பயனுடைய = பயனுடைய சொற்களை 


சொல்லற்க = சொல்லாமல் விடுக 



சொல்லின் = சொற்களில் 


பயனிலாச் சொல் = பயன் இல்லாத சொற்களை 



முதலில், இவரோடு, இன்று, இது பற்றி பேச வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். கேட்பவர் தரம் அறிந்து பேச வேண்டும். தெரியாதவர்களுக்கு விளங்கும்படி பேச வேண்டும். அறிந்தவர்களுக்கு சுருக்கமாக பேச வேண்டும். என்ன பேசப் போகிறோம் என்று அறிந்து பேச வேண்டும். எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். இவை எல்லாம் அறிந்து தெளிந்த பின்தான் பேசவே தொடங்க வேண்டும். 


சும்மா, தொலைபேசி வந்தால் உடனே எடுத்து மணிக்  கணக்கில் வள வளா என்று பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. 


சரி, பேசுவது என்று முடிவு எடுத்து விட்டால், நாம் பேசுவதால் கேட்பவருக்கு என்ன பலன் என்று அறிந்து பேச வேண்டும். ஒரு மணி நேரம் சிலர் பேசுவார்கள். ஒரு சாரமும் இருக்காது. பேசிய பின் தொலை பேசியை வைத்து விட்டு நாம் நம் வேலையை பார்க்க போய் விடலாம். ஒரு பலனும் இருக்காது. அப்படிப் பேசக் கூடாது. பேசினால், கேட்பவருக்கு ஏதோ ஒரு பலன் இருக்க வேண்டும்.


சொல்ல ஒன்றும் இல்லையா, அல்லது சொல்ல வந்த விடயத்தை எப்படி தெளிவாகச் சொல்வது என்று தெரியவில்லையா? பேசாமல் இருந்து விடுவது நலம். 


"சொல்லற்க" என்று ஒரு கட்டளையாகச் சொல்கிறார். 


நீ சொல்வதால் ஒரு பலனும் இல்லை என்றால் எதற்கு உன் நேரத்தையும், கேட்பவர் நேரத்தையும் வீணாக்குகிறாய் என்று கேட்கிறார். 


சில பேர் இருக்கிறார்கள், என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது. அல்லது தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் சொல்வதால் ஒரு பயனும் இல்லை என்பதால், சொல்லாமல் இருப்பதே நலம். 



(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


பயனில சொல்லாமை நன்று




அரும்பயன் ஆயும் அறிவினார்

1 comment:

  1. ஐயா தங்கள் பெயர் என்ன? (sivamano199607@gmail.com)

    ReplyDelete