Tuesday, August 29, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - உயிர் வாழ்வான்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - உயிர் வாழ்வான் 


ஒருவனை பணம் இல்லாதவன், ஏழை என்று திட்டலாம். பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். 


அறிவில்லாதவன் என்றால் கொஞ்சம் கோபம் வரும். இருந்தாலும், அறிவு என்பது கடல் போன்றது என்பதால், ரொம்ப பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். 


உயிரில்லாத பிணமே என்று திட்டினால் யாருக்கும் பெரும் கோபம் வரத்தான் செய்யும். 


வள்ளுவர், அப்படி திட்டுகிறார். 


யாரைத் தெரியுமா?


ஒப்புரவு அறியாத மக்களை, உயிரற்ற பிணம் என்று சாடுகிறார். 


பாடல் 


ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_29.html


(Please click the above link to continue reading)


ஒத்தது = உலகுக்கு ஏற்றது எது என்பதை  


அறிவான் = அறிந்து செய்பவன்


உயிர்வாழ்வான் = உயிரோடு வாழ்பவன் என்று ஏற்றுக் கொள்ளப்படுவான் 


மற்றையான் = மற்றவர்கள் எல்லாரும் 



செத்தாருள் வைக்கப் படும் = இறந்தவர்கள் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர்கள். 


அது எப்படி, ஒத்தது அறியாவிட்டால் பிணம் என்று எப்படிச் சொல்ல முடியும்?


உயிர் என்பது என்ன?


உயிர் மூன்று வகையான செயல்களை செய்விக்கும். 


ஆசையைத் தூண்டும். 


அறிவைத் தூண்டும். 


செயலைத் தூண்டும். 


இந்த மூன்றும் இல்லாவிட்டால், உயிரில்லை என்று பொருள். 


எறும்பில் இருந்து, புல் , பூண்டு, மரம், செடி, கொடி என்று உயிர் உள்ள அனைத்தும் இந்த மூன்றையும் வெளிப்படுத்தும். 


இதை நம் சமயத்தில் இச்சா சக்தி (ஆசை), கிரியா சக்தி (செயல்), ஞானா சக்தி என்று கூறுவார்கள். 


நமக்கு ஆசை இருக்கிறது. அதை அடைய அறிவு இருக்கிறது. அதை செயல்படுத்த உடல் இருக்கிறது. 


எங்கோ இருக்கும் நீரைத் தேடி ஆசை ஆசையாக மரம் தன் வேரை அனுப்புகிறது. வெளிச்சம் தேடி மேலும் மேலும் வளர்கிறது. 


இங்கே ஒப்புரவு இல்லாதவன் அறிவும், செயலும் இல்லாமல் இருப்பதால் அவனை உயிரற்ற பிணம் என்றார் என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


"உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார்"


ஒப்புரவு செய்யாதவன் வெறும் ஆசை மட்டும் உள்ளவன். எல்லாம் எனக்கு என்ற ஆசை உள்ளவன். 




No comments:

Post a Comment