Monday, October 19, 2015

பெரிய புராணம் - பேசக் கற்றுக் கொள்வோம்

பெரிய புராணம் - பேசக் கற்றுக் கொள்வோம் 


பெரிய புராணம் போன்ற நூல்களை எதற்குப் படிக்க வேண்டும் ? ஏதோ கொஞ்சம் நாயன்மார்கள் இருந்தார்கள், பக்தி செய்தார்கள், சொர்க்கம் சென்றார்கள். இதைப் படிப்பதால் நமக்கு என்ன நன்மை என்று படிக்காமல் விட்டு விடுகிறோம். நாம் படிக்காமல் விட்டது மட்டும் அல்ல, அடுத்த தலைமுறைக்கும் அதன் சிறப்புகளை சொல்லாமல் விட்டு விடுகிறோம். அப்படி , நம் மொழியில் உள்ள பலப் பல அருமையான நூல்களின் சிறப்புகள் ஒரு தலைமுறைக்கே போய் சேராமல் நின்று விடுகிறது.

பரிட்சையில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?

நேர்முகத் தேர்வில் (interview ) தேர்ச்சி பெறுவது எப்படி ?

ஒரு நல்ல presentation தருவது எப்படி ?

இவை எல்லாம் நமக்கு மிக இன்றி அமையாதது, வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது.

இவற்றை நமக்குச் சொல்லித் தருகிறது பெரிய புராணம்.

ஒரு கேள்வி கேட்டால், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் ? அந்த பதில் முழுமையாக இருக்க வேண்டும் . கேள்வி கேட்டவருக்கு அந்த பதிலால் ஒரு பயன்  இருக்க வேண்டும். அந்த பதிலை கேள்வி கேட்டவர் உபயோகப் படுத்த முடிய வேண்டும்....இதை எல்லாம் ஆராய்ந்து, தெளிவாக பதில் சொன்னால் பரீட்சையில்  நல்ல மதிப்பெண் வரும், நேர்முகத் தேர்வில் சிறப்பாக பதில் சொல்ல முடியும்,  presentation சிறப்பாக அமையும்.

எப்படி என்று பார்ப்போம்.

அப்பூதி அடிகள் என்று ஒரு நல்லவர் இருந்தார். அவருக்கு திருநாவுக்கரசர் மேல் அளவு கடந்த பக்தி. அவர் செய்யும் எல்லா திருதொன்டிற்கும் திருநாவுகரசர் பெயரையே சூட்டுவார்.

திருநாவுகரசர் தண்ணீர் பந்தல்.

திருநாவுக் ரசர் மருத்துவ மனை

திருநாவுக்கரசர் அன்ன தான சத்திரம் என்று எல்லாம் அவர் பெயரில் செய்வார்.

இத்தனைக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை ஒரு முறை கூட நேரில் சந்தித்தது கிடையாது.

ஒரு நாள் , திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் இருக்கும் ஊருக்கு வந்தார். அங்கு வந்து , அடிகள் வைத்திருந்த தண்ணீர் பந்தலை கண்டு, இப்படி தன் பெயரில் தண்ணீர் பந்தல்  வைத்திருக்கும் அவர் யார் என்று அங்கு வேலை செய்பவர்களை கேட்டார்.

இங்கு சற்று நிறுத்துவோம்.

நீங்கள் அங்கு வேலை செய்து, உங்களை யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்.

"யாராய் இருந்தால் உனக்கு என்ன ...உனக்கு என்ன தண்ணி தான வேண்டும்...குடிச்சிட்டு போவியா "

என்று எடுத்து எரிந்து பேசலாம்.

அல்லது,

"அப்பூதி அடிகள் னு ஒருத்தர்...அவர் தான் இந்த தண்ணீர் பந்தலை வைத்து நடத்துகிறார் " என்று பவ்யமாகச் சொல்லலாம்.

அதற்கு மேலே என்ன இருக்கிறது சொல்ல ?

அங்கு வேலை செய்த ஆள் கூறுகிறார்...


கேட்ட ஒரு கேள்விக்கு 6 பதில் தருகிறார். இந்தத் தண்ணீர் பந்தலை நடத்துபவர்

1. அவர் பொருந்திய நூலை மார்பில் அணிதிருப்பவர் (பூணுல்)
2. இந்த பழைய ஊரில் தான் இருக்கிறார்
3. வீட்டுக்குப் போனார் (நீங்க அங்க போனால் அவரைப் பார்க்கலாம் என்பது உள்ளுறை)
4. இப்பதான் போனார் (அதுனால நீங்க அவர் வீட்டுக்குப் போனால், அங்க தான் இருப்பார்)
5. அவர் வீடு பக்கத்தில் தான் இருக்கு,
6. தூரம் இல்லை

பாடல்


என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்
துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண்

சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்.


பொருள்

என்று உரைக்க = இந்த தண்ணீர் பந்தல் முதலிய அறங்களை செய்வது கேட்டு

அரசு  கேட்டு = திருநாவுக்கரசர் கேட்டு

இதற்கு என்னோ கருத்து என்று = இதற்கு காரணம் என்ன ? தன் பெயரில் செய்யாமல் திருநாவுக்கரசர் பெயரில் செய்யக் காரணம் என்ன என்று

நின்ற வரை நோக்கி = அங்கு நின்றவரை பார்த்து

அவர் எவ்விடத்தார் என வினவத் = இதையெல்லாம் செய்யும் அந்த அப்பூதி அடிகள் எந்த ஊர் காரர் என்று கேட்க

துன்றிய நூல் மார்பரும் = பொருந்திய நூலை மார்பில் அணிந்தவரும்

இத் தொல் பதியார் = இந்த ஊரில் ரொம்ப நாள் இருப்பவர்

மனையின் கண் சென்றனர் = அவருடைய வீட்டுக்குப் போனார்

இப்பொழுது = இப்போதுதான் போனார்

அதுவும் சேய்த்து அன்று  = அவர் வீடு ரொம்ப தூரம் இல்லை

நணித்து என்றார்.= பக்கத்தில் தான் இருக்கிறது என்றார்.

இப்போதுதான் போனார் என்றால், அது வரை அங்கு இருந்து அவர் தண்ணீர் பந்தல் வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டார் என்று அர்த்தம்.

எப்படி ஒரு கேள்வியை புரிந்து கொண்டு , அதற்கு முழுமையான ஒரு பதிலை ஒரு வேலையாள் தருகிறான் பாருங்கள்.

இப்படி பேசிப் பழக வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும். தெளிவாகச் சொல்ல வேண்டும். முழுமையாகச்  சொல்ல வேண்டும்.

அப்படி சொல்ல வேண்டும் என்றால், கேள்வியை புரிந்து கொண்டு, ஆழமாக சிந்தித்து  பின் பதில் சொல்ல வேண்டும்.

அதற்கு நிறைய பயிற்சி வேண்டும்.

பழகுங்கள். வரும்.






Thursday, October 15, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 3

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 3


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....

============================= பாகம் 2 =================================

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். எத்தனையோ பாவ புண்ணியங்கள் அனுபவித்து  முடிக்காமல் இருக்கின்றன. இந்த பாவ புண்ணியம் யாரைப் போய்  சேரும் ? இதை யார் தீர்மானிப்பது. 

இந்தப் பிறவியில் நல்லவர்களாக இருப்பவர்கள் துன்பப் படுவதும், தீயவர்களாக  இருப்பவர்கள்  பணம்,புகழ் , அதிகாரம் என்று இன்பமாக இருப்பதும்  முற் பிறவியில் செய்த புண்ணிய பாவங்கள் மற்றும் புண்ணியங்களால் வருகிறது என்று கொண்டால்  அந்த பாவ புண்ணியங்கள்  எப்படி ஒருவரை   வந்து அடைகின்றன ?

நாலடியார் சொல்லுகிறது,

ஒரு பெரிய மாட்டுத் தொழுவத்தில் ஒரு கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை கண்டு கொள்ளும். நமக்குத் தெரியாது எந்த பசு எந்த கன்றின் தாய் என்று. ஆனால் கன்றுக்குத் தெரியும் எது அதன் தாய் என்று.


பாடல் 

பல் ஆவுள் உய்த்துவிடினும், குழக் கன்று
வல்லது ஆம், தாய் நாடிக் கோடலை; தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

பொருள் 

பல் ஆவுள் = பல பசுக்களுக்கு நடுவில் (ஆ = பசு) 

உய்த்துவிடினும், = விட்டாலும் 

குழக் கன்று = குட்டிக் கன்று 

வல்லது ஆம் = வல்லமை உடையது 

தாய் நாடிக் கோடலை = தாய் பசுவை கண்டு கொள்வதை 

தொல்லைப் = பழமையான, தொல்லை தரும் 

பழவினையும் = பழைய வினைகளும் 

அன்ன தகைத்தே = அதைப் போன்றதே 

தற் செய்த = அதைச் செய்த 

கிழவனை = தலைவனை (வினையின் தலைவன், வினையை செய்தவனை) 

நாடிக் கொளற்கு = கண்டு கொள்வதற்கு 

நாம் செய்த வினைகள், நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்திருக்கும். 

இப்படியும் கூட இருக்குமா ? முற் பிறவியில் செய்த பாவ புண்ணியம் இந்தப் பிறவியில் வருமா ?

பட்டினத்தார், ஒன்றும் வேண்டாம் என்று துறவு மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பத்ரகிரி என்ற ஊரில் தங்கி இருந்த போது , ஒரு கள்ளன், அரண்மனையில் களவு செய்து விட்டு, தப்பித்து ஓடும் போது , களவாண்ட நகைகளை பட்டினத்தார் இருந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு ஓடி விட்டான். துரத்தி வந்த காவலர்கள் நகையை கண்டு கொண்டார்கள். பட்டினத்தார் தான் களவாடி இருக்க வேண்டும் என்று நினைத்து அரசனிடம் கூறினார்கள். அரசனும், பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் படி உத்தரவு போட்டான். 

பட்டினத்தார் சிந்தித்தார்...இந்தப் பிறவியில் செய்த பாவம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்க, எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்தார். ஒரு வேளை  முன் பிறவியில் செய்த வினைகள் தான் இப்போது இந்தத் துன்பமாக வந்து சேர்ந்ததோ என்று நினைக்கிறார். 

பாடல் 

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

(மிக எளிய பாடல் என்பதால் அருஞ்சொற் பொருள் விளக்கம் தரவில்லை). 

முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே என்று பாடினார். கழு மரம்  தீ பிடித்து எரிந்தது வேறு விஷயம். 

மாணிக்க வாசகர் பாடுவார், பழ வினைகள் தொலைந்து போகும்படி செய்து, என் மன அழுக்குகளை நீக்கி, என்னையே சிவமாகச் செய்த அவன் அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே என்று வியக்கிறார். 


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


சரி, வினைகள் தொடர்கின்றன . இந்த தொடரும் வினைகளை நாம் விதி என்கிறோம். 

இந்த விதியை இராமன் நம்பினான்.

நல்ல நீர் இல்லாதது நதியின் பிழை அன்று, விதியின் பிழை என்றான் இராமன்.  கைகேயி நல்ல வரம் கேட்க்காதது அவள் பிழை அல்ல, விதியின் பிழை. 

நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

வினைகள் தொடரும். தொடரும் வினைகளை அனுபவிக்கும் போது மீண்டும் ஏதோ ஒன்றைச் செய்கிறோம். அந்த செயலில் இருந்து பாவ புண்ணியங்கள் தோன்றுகின்றன.  அவற்றை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி. இப்படி பொய் கொண்டே இருந்தால்  இதற்கு எப்படி ஒரு முடிவு கொண்டு வருவது ? 

அதற்கும் வழி இருக்கிறது.....


=============== பாகம் 3 ========================================

நல்லது செய்தால் அதை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 
தீயது செய்தால் அதை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 

எப்படி ஆயினும், அனுபவித்தது போக, மீதி பழ வினையாக மீண்டும் வந்து சேரும். 

பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

செயல்களின் மேல் பற்று இல்லாமல் அந்த செயல்களை செய்தால் அவற்றின் பாவ  புண்ணியங்கள் நம்மைச் சேராது என்கிறான் கண்ணன் கீதையில். 

तस्मादसक्त: सततं कार्यं कर्म समाचर |
असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुष: || 19||

tasmād asaktaḥ satataṁ kāryaṁ karma samāchara
asakto hyācharan karma param āpnoti pūruṣhaḥ

tasmād = எனவே 

asaktaḥ = பற்று இல்லாமல் 

satataṁ = சதா சர்வ காலமும் 

kāryaṁ = கடமைகளை 

karma =செயல்பட்டு 

samāchara = வந்தால் 

asakto = பற்றின்மை 

hy = நிச்சயமாக 

ācharan = செய்வது 

karma = வினை 

param āpnoti pūruṣhaḥ = பரம நிலையை அடைகிறான் அவன் 

காரியங்களின் மேல் பற்று இல்லாமல் செய்தால், அந்த காரியங்களின் பாவ புண்ணியங்கள்  உங்களைச் சேராது. 

இன்னும் ஒரு படி மேலே போவோம்...

இன்பம் துன்பம், பாவம் புண்ணியம் இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனம் வந்து விட்டால் , செயல்களின் விளைவுகள் நம்மை பாதிக்காது.

இதைத்தான் சைவ சிந்தாந்தம் "இரு வினை ஒப்பு" என்கிறது. 

மாணிக்க வாசகர் சொல்லுவார் "என் வினை ஒத்த பின், வித்து மேல் விளையாமல், கணக்கில்லா திருக்கோலம் நீ வந்து காட்டினாய், திருக் கழுக்குன்றிலே" என்று. 


பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

நல்லது, கெட்டது 
பாவம் , புண்ணியம் 
உயர்ந்தது, தாழ்ந்தது 

என்ற இரு வினைகளும் ஒன்றான பின், பிறவி முடிந்தது என்கிறார்.

விதை இனி முளைக்காது , அது உலர்ந்து விட்டது. "உணக்கு இல்லாதது ஓர் வித்து "  

இதையே கீதையும் ஸ்தத ப்ரன்ஞன் என்கிறது. 

மனம் அங்கும் அலையாமல் நிலை பெற்று நிற்பது. 

இந்த பாடலுக்கு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...மற்ற பாடல்களையும் பார்க்க வேண்டி இருப்பதால், இங்கே நிறுத்திக் கொண்டு அடுத்த பாடலுக்கு போவோம்.




Wednesday, October 14, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 2

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 2


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....

============================= பாகம் 2 =================================

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். எத்தனையோ பாவ புண்ணியங்கள் அனுபவித்து  முடிக்காமல் இருக்கின்றன. இந்த பாவ புண்ணியம் யாரைப் போய்  சேரும் ? இதை யார் தீர்மானிப்பது. 

இந்தப் பிறவியில் நல்லவர்களாக இருப்பவர்கள் துன்பப் படுவதும், தீயவர்களாக  இருப்பவர்கள்  பணம்,புகழ் , அதிகாரம் என்று இன்பமாக இருப்பதும்  முற் பிறவியில் செய்த புண்ணிய பாவங்கள் மற்றும் புண்ணியங்களால் வருகிறது என்று கொண்டால்  அந்த பாவ புண்ணியங்கள்  எப்படி ஒருவரை   வந்து அடைகின்றன ?

நாலடியார் சொல்லுகிறது,

ஒரு பெரிய மாட்டுத் தொழுவத்தில் ஒரு கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை கண்டு கொள்ளும். நமக்குத் தெரியாது எந்த பசு எந்த கன்றின் தாய் என்று. ஆனால் கன்றுக்குத் தெரியும் எது அதன் தாய் என்று.


பாடல் 

பல் ஆவுள் உய்த்துவிடினும், குழக் கன்று
வல்லது ஆம், தாய் நாடிக் கோடலை; தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

பொருள் 

பல் ஆவுள் = பல பசுக்களுக்கு நடுவில் (ஆ = பசு) 

உய்த்துவிடினும், = விட்டாலும் 

குழக் கன்று = குட்டிக் கன்று 

வல்லது ஆம் = வல்லமை உடையது 

தாய் நாடிக் கோடலை = தாய் பசுவை கண்டு கொள்வதை 

தொல்லைப் = பழமையான, தொல்லை தரும் 

பழவினையும் = பழைய வினைகளும் 

அன்ன தகைத்தே = அதைப் போன்றதே 

தற் செய்த = அதைச் செய்த 

கிழவனை = தலைவனை (வினையின் தலைவன், வினையை செய்தவனை) 

நாடிக் கொளற்கு = கண்டு கொள்வதற்கு 

நாம் செய்த வினைகள், நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்திருக்கும். 

இப்படியும் கூட இருக்குமா ? முற் பிறவியில் செய்த பாவ புண்ணியம் இந்தப் பிறவியில் வருமா ?

பட்டினத்தார், ஒன்றும் வேண்டாம் என்று துறவு மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பத்ரகிரி என்ற ஊரில் தங்கி இருந்த போது , ஒரு கள்ளன், அரண்மனையில் களவு செய்து விட்டு, தப்பித்து ஓடும் போது , களவாண்ட நகைகளை பட்டினத்தார் இருந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு ஓடி விட்டான். துரத்தி வந்த காவலர்கள் நகையை கண்டு கொண்டார்கள். பட்டினத்தார் தான் களவாடி இருக்க வேண்டும் என்று நினைத்து அரசனிடம் கூறினார்கள். அரசனும், பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் படி உத்தரவு போட்டான். 

பட்டினத்தார் சிந்தித்தார்...இந்தப் பிறவியில் செய்த பாவம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்க, எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்தார். ஒரு வேளை  முன் பிறவியில் செய்த வினைகள் தான் இப்போது இந்தத் துன்பமாக வந்து சேர்ந்ததோ என்று நினைக்கிறார். 

பாடல் 

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

(மிக எளிய பாடல் என்பதால் அருஞ்சொற் பொருள் விளக்கம் தரவில்லை). 

முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே என்று பாடினார். கழு மரம்  தீ பிடித்து எரிந்தது வேறு விஷயம். 

மாணிக்க வாசகர் பாடுவார், பழ வினைகள் தொலைந்து போகும்படி செய்து, என் மன அழுக்குகளை நீக்கி, என்னையே சிவமாகச் செய்த அவன் அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே என்று வியக்கிறார். 


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


சரி, வினைகள் தொடர்கின்றன . இந்த தொடரும் வினைகளை நாம் விதி என்கிறோம். 

இந்த விதியை இராமன் நம்பினான்.

நல்ல நீர் இல்லாதது நதியின் பிழை அன்று, விதியின் பிழை என்றான் இராமன்.  கைகேயி நல்ல வரம் கேட்க்காதது அவள் பிழை அல்ல, விதியின் பிழை. 

நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

வினைகள் தொடரும். தொடரும் வினைகளை அனுபவிக்கும் போது மீண்டும் ஏதோ ஒன்றைச் செய்கிறோம். அந்த செயலில் இருந்து பாவ புண்ணியங்கள் தோன்றுகின்றன.  அவற்றை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி. இப்படி பொய் கொண்டே இருந்தால்  இதற்கு எப்படி ஒரு முடிவு கொண்டு வருவது ? 

அதற்கும் வழி இருக்கிறது.....





 

Tuesday, October 13, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து 


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....



Wednesday, October 7, 2015

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?


வாழ்வில் பெரிய சாதனைகளை செய்ய என்ன செய்ய வேண்டும் ? வாழ்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?

ஆண்டாண்டு காலமாய் இதைப்  பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது ?

கடின உழைப்பு, அதிர்ஷ்டம், சூழ்நிலை, தொலை நோக்கு பார்வை, மனிதர்களை வழி நடத்தும் தலைமை குணம், என்று எத்தனையோ சொல்கிறார்கள்.

ஆனால், இவை இல்லாதவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படிக்காமல், கல்லூரிக்கு கூட போகாத பெரிய பெரிய பணக்காரர்கள் உண்டு. அவர்களிடம் கை கட்டி வேலை செய்யும் பெரிய படிப்பு படித்தவர்கள் உண்டு.

அப்படி என்றால் சாதனையாளர்களிடம் பொதுவாக காணப் படுவது எது ? எல்லா சாதனையாளர்களும் செய்யும் ஒன்று என்ன ?

அபிராமி பட்டர் சொல்கிறார் - அப்படி சாதித்த பெரியவர்கள் எல்லோரும் அபிராமியை போற்றினார்கள்.

சாதித்தவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் பணம் சேர்த்தவர்கள், சண்டை பிடித்து நாடுகளை பிடித்தவர்கள் அல்ல. அதுக்கும் மேலே, அதுக்கும் மேலே....

பட்டியல் தருகிறார் பட்டர் ...

பாடல்

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


பொருள்

ஆதித்தன் = சூரியன்

அம்புலி = சந்திரன்

அங்கி = அக்கினி கடவுள்

குபேரன் = செல்வத்தின் அதிபதியான குபேரன்

அமரர் தம் கோன் = தேவர்களின் தலைவனான இந்திரன்

போதிற் பிரமன் = மலரில் இருக்கும் பிரமன் (போது = மலர்)

புராரி = முப்புரங்களை எரித்த சிவன்

முராரி = திருமால்

பொதியமுனி = அகத்தியர்

காதிப் பொருபடை கந்தன் = பெரிய படைகளை கொண்ட கந்தன்

கணபதி = கணங்களுக்கு அதிபதியான கணபதி

காமன் = அழகில் சிறந்த மன்மதன்

முதல் = அவர்களில் இருந்து


சாதித்த புண்ணியர் = இன்று வரை உள்ள சாதனை செய்த புண்ணியம் செய்தவர்கள்

எண்ணிலர் = கணக்கில் அடங்காதவர்கள்

போற்றுவர் தையலையே = போற்றுவார்கள் அபிராமியையே

செல்வம் வேண்டுமா ? செல்வத்தின் அதிபதியான குபேரன் அபிராமியை போற்றுகிறான்.

பதவி வேண்டுமா ? தேவ லோகத்தின் தலைவனான இந்திரன் அவளைப் போற்றுகிறான்.

வீரம் வேண்டுமா ? சிறந்த சேனாதிபதியான முருகன் அவளைப் போற்றுகிறான்.

அறிவு விடுமா ? அகத்தியர் அவளைப் போற்றுகிறார். 

அழகு வேண்டுமா ? அழகிற் சிறந்த மன்மதன் அவளைப் போற்றுகிறான் 

உலகை வழி காட்டும் ஒளியாக இருக்க வேண்டுமா ? சூரியன் அவளைப் போற்றுகிறான். 

மக்கள் மேல் கருணை செலுத்த வேண்டுமா ? குளிர்ந்த சந்திரன் அவளைப் போற்றுகிறான்.

அவர்கள் எல்லாம் அவளைப் போற்றி அந்த நிலையை அடைந்தனர். 

எல்லா பெண்ணுக்குள்ளும் அபிராமியின் ஒரு பகுதி உண்டு. 

பூத்தவளே , புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே என்பார் பட்டர்.

உலகில் உயிர்களை கொண்டு வந்து அவற்றை காக்கும் எந்த பெண்ணும் அபிராமியின் அம்சம்தான். 

பெண்ணைப் போற்றுங்கள். பெருமை வரும்.

அபிராமி....அபிராமி...அபிராமி....

நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதி படித்து, அருஞ்சொற் பொருள் புரிந்து அறிந்து கொள்வது அல்ல.

அதையும் தாண்டி, பட்டரின் மனம் உணர்ந்து பாடல்களை உணர வேண்டும். 



Sunday, October 4, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?


எதுவரை அறத்தை கடை பிடிக்கலாம் ?

உயிருக்கே ஆபத்து என்றாலும் அறத்தை கடை பிடிக்க வேண்டுமா ? உயிரை விட்டு விட்டு அறத்தை தூக்கிப் பிடித்து என்ன பயன் ? தற்காப்புக்காக அறத்தை மீறலாமா ?

நம் சட்டங்கள் தற்காப்புக்காக கொலை செய்யலாம் என்று அனுமதி அளிக்கிறது.  தன்னைக் கொல்ல வருபவனை கொல்லுவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

நம் உயிருக்கு ஆபத்து என்றால் கூட சில சமயம் பொறுத்துக் கொள்ளலாம். நாம் மிகுந்த அன்பு செலுத்துபவர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் அறமாவது மண்ணாவது என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

மனைவியின் உயிர், பிள்ளையின் உயிர், கணவனின் உயிருக்கு ஆபத்து என்றால் யார் அறத்தைப் பற்றி சிந்தித்து கொண்டிருப்பார்கள் ?

இராமன் சிந்தித்தான். தன் உயிருக்கு மட்டும் அல்ல, உயிரினும் மேலான தம்பியின் உயிருக்கு ஆபத்து என்ற போதும் அவன் அறத்தை மீறவில்லை.

தாடகை கோபத்தோடு வருகிறாள். கையில் சூலத்தை ஏந்திக் கொண்டு வேகமாக வருகிறாள். சூலத்தை இராம இலக்குவனர்களின் மேல் எறியப் போகிறாள்.

விஸ்வாமித்திரன் சொல்கிறான், "அவளைக் கொல் " என்று.

இராமன் பேசாமல் நிற்கிறான். பெண்ணைக் கொல்வது அறம் அன்று நினைத்து பேசாமல் நிற்கிறான்.

எவ்வளவுதான் கொடியவள் என்றாலும் பெண் என்று நினைத்து பேசாமல் நிற்கிறான்.

பாடல்

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள். தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும். பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து. நான்மறை அந்தணன் கூறுவான்.

பொருள்

வெறிந்த  = மணம் வீசும். இங்கே நாற்றம் எடுக்கும் என்ற பொருளில் வந்தது.

செம் மயிர் = சிவந்த மயிர். எண்ணெய் போடாமல் செம்பட்டையாக இருந்த முடி.

வெள் எயிற்றாள் = வெண்மையான பற்களைக் காட்டிக் கொண்டு வருகிறாள் தாடகை

தனை = அவளை

எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் = சூலாயுதத்தை எறிந்து இராம இலக்குவனர்களை கொல்லுவேன் என்று ஏந்திக் கொண்டு வந்த போதும்


பார்க்கிலாச் = அதை கண்டு கொள்ளாத

செறிந்த தாரவன் = அடர்ந்த மலர்களை கொண்டு செய்த மாலையை அணிந்த இராமன் (தார் = மாலை)

சிந்தைக் கருத்து எலாம் = சிந்தனையின் ஓட்டம், அவன் கருத்து எல்லாம்

அறிந்து = அறிந்து கொண்ட

நான்மறை அந்தணன் கூறுவான் = நான்கு வேதங்களை ஓதிய அந்தணனாகிய விஸ்வாமித்திரன் கூறுவான்.


விஸ்வாமித்திரன் அந்தணன் அல்ல. அவன் ஒரு அரசன். அது கம்பனுக்கும் தெரியும்.  இருந்தும் தேடி எடுத்து அந்தணன் என்ற சொல்லைப் போடுகிறான்.

அந்தணன் என்போன் அறவோன். அற வழியில் நிற்பவன் அந்தணன். இங்கே விஸ்வாமித்திரன் அற வழியில்  நின்று அறத்தைக் கூறுகிறான் என்ற பொருள் பட  அவனை அந்தணன் என்று அழைக்கிறான் கம்பன்.

அது மட்டும் அல்ல, அற வழியில் நிற்போர் எல்லாம் அந்தணர் தாம்.

பரிமேல் அழகர் கூறுவார் அந்தணர் என்பது காரணப் பெயர் என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சுகமான காலத்தில், ஆபத்து இல்லாத காலத்தில் எல்லோரும் அறத்தை கடை பிடிப்பார்கள்.

கொல்ல வரும் அரக்கி, சூலத்தொடும் கோபத்தோடும் எதிரில் நிற்கும் போது ?

அது இராமன் காட்டிய வழி....

இதற்காகவும் இராமாயணம் படிக்க வேண்டும்.


Saturday, October 3, 2015

தேவாரம் - பின்னை எண்ணார்

தேவாரம் - பின்னை எண்ணார் 


யாரிடமாவது நாம் உதவி வேண்டிப் போனால், கேட்ட உடனேயே எத்தனை பேர் அந்த உதவியை நமக்குச் செய்து விடுவார்கள் ?

மறவர்களை விடுங்கள், "கொஞ்சம் தண்ணி  வேண்டும்" என்று கேட்டால் எத்தனை பிள்ளைகள் உடனேயே கொண்டு வந்து கொடுக்கும் ?  "நான் busy யா இருக்கேன்...நீயே போய் எடுத்துக்கோ" என்று பதில் வரும். இல்லைனா "இதோ வரேன் " என்று பதில் மட்டும் வரும்...ஆள் வர நாள் ஆகும்.

புடவை வேண்டும், நகை வேண்டும் என்று மனைவி ஆசைப் பட்டு கேட்டால் எத்தனை கணவன்மார் உடனேயே வாங்கித் தந்து விடுவார்கள் ?  "பார்க்கலாம், தீபாவளிக்கு வாங்கலாம், பொங்கலுக்கு வாங்கலாம் " என்று தள்ளிப் போடும் கணவர்கள் தான் பெரும்பாலும் இருப்பார்கள்.

பதவி உயர்வு வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் என்று வீட்டில் வேலை பார்க்கும் பணியாள் கேட்டால் நாம் உடனே கொடுத்து விடுவோமா ? எந்த முதலாளியும் தருவது கிடையாது.

உலகம் அப்படி.

கேட்ட உடன் கொடுக்காவிட்டால்,  சாதாரண மனிதர்களுக்கும்  இறைவனுக்கும் என்ன வித்தியாசம் ?

பக்தா , என்னிடம் கேட்டாயா...பார்க்கலாம், அப்புறம் தருகிறேன்...அடுத்த தீபாவளிக்குத் தருகிறேன் ...என்று இறைவன் தள்ளிப் போடுவது இல்லை. கேட்ட உடனேயே  தந்து விடுவான் என்கிறார் நாவுக்கரசர்.


பாடல்

உன்னி வானவ ரோதிய சிந்தையில்
கன்னல் தேன்கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை யென்னார் பெருமா னடிகளே.

சீர் பிரித்த பின்


உன்னி வானவர் ஓதிய சிந்தையில் 
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் 
தன்னை நோக்கித் தொழுது எழுவார்கு எல்லாம் 
பின்னை எண்ணார் பெருமான் அடிகளே 

பொருள்

உன்னி = மனதில் எண்ணி

வானவர் = தேவர்கள்

ஓதிய = தினம் போற்றிய

சிந்தையில் = மனதில்

கன்னல் தேன் = கரும்புச் சாற்றில் தேன் கலந்தார் போல தித்திப்பவர்

கடவூரின் மயானத்தார் = திருக் கடவூர் மயானம் என்ற ஊரில் உள்ளவர்

தன்னை நோக்கித் = தன்னை நோக்கித்

தொழுது எழுவார்கு எல்லாம் = தொழுது எழுவார்கெல்லாம்

பின்னை எண்ணார்  = பின்னால் தரலாம் என்று நினைக்க மாட்டார்

பெருமான் அடிகளே = பெருமான் அடிகளே

அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போடும் குணம் கிடையாது.

கேட்டவுடன் , இந்தா பிடி , என்று உடனே வழங்குவார்.

நானும் தான் எவ்வளவோ கேட்கிறேன். எங்கே தருகிறார். இதெல்லாம் சும்மா என்று  நினைக்கத் தோன்றும்.

நீங்கள் கேட்பதைத் தரமாட்டார். உங்களுக்கு எனது நல்லதோ அதைத் தருவார். அதையும் உடனே தருவார்.

உங்களுக்குத் தெரியுமா , உங்களுக்கு எது நல்லது என்று ? அல்லது இறைவனை விட உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா ?

இந்தப் பெண் தான் வேண்டும், அவள் இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்று  வேண்டி விரும்பிக் கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்..."இதையா கட்டிக் கொண்டேன் " என்று வருந்துகிறான்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ  என்பார் மணிவாசகர்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்டமுழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொணடாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.

நீங்கள் தொழுது எழுங்கள். உங்களுக்கு வேண்டியதை அவன் உடனே செய்வான்.




(எழுது)

Wednesday, September 30, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?

இராமாயணம்  - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? 



விஸ்வாமித்திரன், பலப் பல காரணங்களைச் சொல்லி , தாடகையை "கொல் " என்றான் இராமனிடம்.

என்னதான் கொடுமைக் காரியாக இருந்தாலும் அவள் ஒரு பெண். பெண்ணைக் கொல்வது என்பது வில் அறத்திற்கு ஏற்றது அன்று என்று இராமன் நினைக்கிறான்.

பெண்ணைக் கொல்வது சரியல்ல என்று இராமனுக்குத் தெரியும். அப்படித்தான் வசிட்டர் அவனுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்.

ஆனால், விச்வாமிதரனோ பெண்ணைக் கொல் என்கிறார்.

செய்தாலும் பிழை. செய்யாவிட்டாலும் பிழை. எப்படியும் அறத்தினின்று பிறழத்தான் போகிறான் இராமன்.

பாடல்

அண்ணல் முனிவற்கு அது
   கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
   தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
   தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
   பெருந்தகை நினைந்தான்.

பொருள்

அண்ணல் முனிவற்கு = முனிவனான விச்வாமித்திரனுக்கு

அது கருத்துஎனினும் = தாடைகையை கொல்வது தான் கருத்து என்றாலும்

‘ஆவி உண்’  = அவள் உயிரை உண்டு வா

என.  = என்று

வடிக் கணை = வடிவான அம்பை

தொடுக்கிலன்; = அவள் மேல் விடவில்லை

உயிர்க்கே = உயிருக்கு

துண்ணெனும் = துன்பம் தரும், நடுக்கம் தரும்

வினைத்தொழில் = தொழிலை

தொடங்கியுளளேனும். = அவள் தொடங்கி இருந்தாலும்

‘பெண்’ என = அவள் ஒரு பெண் என்று

மனத்திடை பெருந்தகை நினைந்தான்.= மனதில் பெருந்தகையான இராமன் நினைத்தான்

பள்ளிக் கூடத்தில் பாடம் படித்து விட்டு வெளி வருகிறோம்.

படித்ததை எல்லாம் அப்படியே நடை முறையில் செயல் படுத்த முடியாது என்பதைக் காட்டும் இடங்கள் இவை.

இராமன் செயல் படமால் பேசாமல் நிற்கிறான்.

அடுத்து என்ன நடந்தது என்று பார்பதற்கு முன்னால் , தாடகை போன்ற ஒரு அரக்கியிடம் கூட  கருணையோடு நடந்து கொண்ட இராமன் சீதையை துன்பப் படுத்தியது  ஏன் என்ற கேள்வியும் சிலர் மனதில் எழலாம்.

சீதையை தீ குளிக்க சொன்னது. அவளை காட்டில் கொண்டு போய் விட்டது எல்லாம்  சரியா போன்ற கேள்விகளும் மனதில் எழலாம்.

அவற்றையும் சிந்திப்போம்.



Sunday, September 27, 2015

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?


வயிற்று வலி, பல் வலி என்று உடலுக்கு ஏதாவது ஒரு வலி வந்து விட்டால்,  "கடவுளே, இந்த வலி தாங்க முடியவில்லையே, இந்த வலியில் இருந்து என்னை காப்பாற்று, உன் கோவிலுக்கு வருகிறேன், மொட்டை போடுகிறேன், அபிஷேகம் பண்ணுகிறேன்..."என்று எல்லா தெய்வத்தையும் வேண்டுவோம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட தாங்க முடியாத வலி வரும்போது இறைவனை நினைக்கிறான்.

உடல் வலி என்று இல்லை, எந்த நோவு வந்தாலும் ...பணக் கஷ்டம், நெருங்கிய உறவுகளுக்கு உடல் நிலை சரி இல்லை, காதலில் தோல்வி, பரிட்சையில் தோல்வி என்று எத்தனையோ நோவுகள் வருகின்றன.

அத்தனை நோவிலும் மனிதன் கடவுளை இரகசியமாகவேனும் நினைக்கிறான்.

ஞானசம்பந்தரிடம் கடவுள் எங்கு இருக்கிறான் என்று கேட்ட போது , வலி உள்ளவன் வாயில் கடவுள் இருக்கிறான் என்றார்.

பெருமாளே என்னை காப்பாற்று...

முருகா என் பிள்ளையை காப்பாற்று...

பிள்ளையாரப்பா என் கணவனை காப்பாற்று ...

என்று அவரவர் , தங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பெயரை சொல்லிச் வேண்டுகிறார்கள்.

சத்தியமாக அவர்கள் இறைவனை நம்புகிறார்கள்...எப்போதும் இல்லாவிட்டாலும் அந்த நோவு உள்ள பொழுதிலேனும் நம்புகிறார்கள்.

அவர்கள் வாயில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான் என்றார் ஞான சம்பந்தர்.

பாடல்


நுண்ணியான் மிகப்பெரியான்
நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்அந்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே.


பொருள்

நுண்ணியான் = மிக மிக நுட்பமானவன்

மிகப்பெரியான் = மிக மிக பெரியவன்

நோவுளார் வாயுளான் = அப்பேற்பட்ட இறைவன், வலி உள்ளவர்கள் வாயில் இருப்பவன்


தண்ணியான் = குளிர்ச்சியானவன்

வெய்யான் = வேப்பமானவன்

அந் தலைமேலான் = தலைக்கு மேலே உள்ளவன்

மனத்துளான் = மனதுக்கு உள்ளேயும் உள்ளவன்

திண்ணியான் = உறுதியானவன்

செங்காட்டங் குடியான் = செங்காட்டங்குடி என்ற ஊரில் உள்ளவன்

செஞ் சடை = சிறந்த சடை

மதியக் கண்ணியான் = நிலவை ஆபரணமாக  தலையில் அணிந்தவன்

கண்ணுதலான் = நெற்றியில் கண் உள்ளவன்  (நுதல் = நெற்றி)

கணபதீச் சரத்தானே. = கணபதிச்சீரம் என்ற ஊரில் உள்ளவனே

என்கிறார்.

அது என்ன தலைக்கு மேல் உள்ளவன், மனதுக்கு உள்ளே உள்ளவன் ?



இறைவன் இரண்டு இடத்தில் இருக்கிறான் என்று மணிவாசகர் சொல்கிறார்.

தலைக்கு மேலே சில அங்குல உயரத்தில். இதயத்தின் உள்ளே.


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

நெஞ்சுக்கு நேரே இரண்டு கையையும் சேர்த்து கூப்பி வணங்குவது ஒரு முறை. 

தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி ஒன்றாகச் சேர்த்து வணங்குவது இன்னொரு  முறை.

தலைக்கு மேலே கையை உயர்த்தி வணங்குபவர்களை உயரச் செய்வான் அவன் என்கிறார்  மணிவாசகப் பெருந்தகை. 

செய்து பாருங்கள். 

நெஞ்சுக்கு நேரே கை கூப்புவதற்கும், தலைக்கு மேலே கை கூப்புவதற்கும் வித்தியாசம்  தெரிகிறதா என்று செய்து பாருங்கள். 

ஞான சம்பந்தரும், மாணிக்க வாசகரும் சொல்லுகிறார்கள். 


Saturday, September 26, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி 


நம் மனம் நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. ஒரு நிமிடம் அமைதியாக இரு என்றால் இருக்காது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும்.

மனதை கட்டுப் படுத்துவது என்பது சாதாரண வேலை இல்லை.

மனம் இருப்பதால்தானே மனிதன் !

பெரிய பெரிய மகான்கள் எல்லாம் ரொம்ப பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள்.

மனம் , அது தன் பாட்டுக்கு  வேலை செய்கிறது. அதனால் தான்  நம்மாழ்வார் முதலிலேயே தன் மனதுக்கு சொல்லி விடுகிறார்...அவனை தொழுது எழு என்  மனமே என்று

உடனே மனம் கேட்கும்,  எதற்கு அவனை நான்  தொழ வேண்டும் என்று ? அவன் என்ன அப்படி என்ன பெரிய ஆளா என்று ?

மனதுக்கு சமாதனம் சொல்கிறார்....அவன் யார் தெரியுமா ...

அதற்கு மேல் வேறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த நலன்களை  கொண்டவன், மயக்கம் இல்லாத மதி நலம் தருபவன் அவன், அமரர்களுக்கு அவன் அதிபதி, நம்  துன்பங்களை எல்லாம் போக்குபவன் அவன்..எனவே அவனை தொழுது ஏழு என் மனமே "

என்று மனதுக்கு சொல்கிறார்.

" உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் 
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் 
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன் 
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே "


இங்கே, திருவரங்கதமுதனார், இராமானுஜரைப் பற்றி கூறும் போது ,

"என் மனமே, உன்னை நான் அடி பணிகின்றேன். இறை நம்பிக்கை இல்லாதவர்களின் தொடர்பை விடுத்து, இராமானுசரிடம் அன்பு கொள்ளவோர் அடிக் கீழ் என்னை சேர்த்ததற்கு  "

பாடல்

பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள்

பேரியல்நெஞ்சே!  = பெரிய மனமே

அடி பணிந்தேனுன்னைப் = உன்னை அடி பணிந்தேன்

பேய்ப் பிறவிப் = பேய் போன்ற பிறவி கொண்ட

பூரிய ரோடுள்ள = மக்களோடு உள்ள

சுற்றம் புலத்திப்  = உறவை நீக்கி

பொருவருஞ்சீர் = ஒப்பற்ற குணங்கள் உடைய

ஆரியன்= ஆரியன்

செம்மை = சிறந்த

இராமானுச = இராமானுசன்

முனிக் கன்பு செய்யும் = முனிவனுக்கு அன்பு செய்யும்

சீரிய பேறுடை யார் = சீரிய பேறு உடையவர்கள்

அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே = அடிக்கு கீழ் என்னை சேர்ததற்கே.



Friday, September 25, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2


கல்வி கற்கும் முறை.

நாம் எவ்வாறு கல்வி கற்கிறோம் ?

முதலில் நமக்கு சிலவற்றை சொல்லித் தருகிறார்கள். பின் சிறிது நாள் கழித்து, முதலில் சொன்னவை அவ்வளவு சரியில்லை, என்று திருத்திச் சொல்கிறார்கள்.

முதலில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று சொல்லித் தருகிறார்கள். பின்னாளில், சூரியன் உதிப்பது இல்லை. அது ஒரே இடத்தில் தான் இருக்கிறது.  பூமிதான் சுற்றி வருகிறது என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் உயர் வகுப்புகளுக்குப் போனால், சூரியன் நிலையாக இல்லை, அதுவும் பால்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

ஏன், முதலிலேயே இதை சொல்லித் தரக்கூடாதா ?

பொருள்கள் மூன்று நிலையில் இருக்கின்றன. திட, திரவ, வாயு நிலையில் இருக்கின்றன என்கிறார்கள். பின், அதெல்லாம் சரி இல்லை....பொருள்கள் எல்லாம் அணுவால் ஆனது என்கிறார்கள். பின், அணு கூட இல்லை, அவை எலேக்டரோன் , ப்ரோடான், நியுட்ரான் என்ற துகள்களால் ஆனது என்கிறார்கள்.

ஏன் , மூன்றாம் வகுப்பிலேயே இதை சொல்லித் தரக் கூடாதா என்றால் சொல்லித் தரக் கூடாது. சொல்லித் தந்தால் புரியாது.

படிப்படியாகத் தான் சொல்லித் தர முடியும். படிக்க படிக்க , முன்னால் படித்தது மாறும்.

இராமன், முதலில் வசிஷ்டரிடம் பாடம் பயின்றான். அது ஒரு உயர் நிலை பள்ளி மாதிரி.

அடுத்து விச்வாமித்ரரிடம் பாடம் பயிலப் போகிறான். அது கல்லூரி படிப்பு மாதிரி.

வசிட்டர் சொல்லித் தந்த அறங்களை இன்னும் கூர்மை படுத்தி, அவற்றின் நெளிவு சுளிவுகளை விஸ்வாமித்ரர் சொல்லித் தருகிறார்.

பொய் சொல்லக் கூடாது என்பது ஒரு அறம் .

புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் , பொய்யும் சொல்லலாம் என்பது இன்னொரு அறம்.

முரண்பட்ட அறங்களை எதிர் கொள்ள நேரும்போது என்ன செய்ய வேண்டும்.

எப்படியும் ஒரு அறத்தை விட்டு விலகித்தான் போக வேண்டி இருக்கும்.

அப்படி என்றால், எந்த அறத்தை விடுவது, எதை கைகொள்வது ?

இந்த சிக்கலுக்கு இராமன் வழி காட்டுகிறான்.

இந்த மாதிரி சிக்கல் வரும்போது, பற்றற்ற ஞானிகளின், உலக நன்மையில் நாட்டம் கொண்ட சான்றோர் சொல்வதை கேட்டு நடப்பது என்பது இராமன் காட்டிய வழி.

நாம் படித்த பாடங்கள் நமக்கு சரியான ஒரு முடிவை எடுக்க உதவி செய்யாவிட்டால், கற்றறிந்த சான்றோரிடம் கேட்பதுதானே முறை.

இராமன் அதைத்தான் செய்தான்.

முதலில் தாடகை வதத்தை எடுத்துக் கொள்வோம்.

இராமனுக்கு தெரிகிறது  தாடகை ஒரு பெண், அவளைக் கொல்லக் கூடாது என்று. அப்படித்தான் வசிட்டர் சொல்லித் தந்திருக்கிறார்.

ஆனால் இப்போது தாடகையை கொல்லவில்லை என்றால் அவள் இராமனையும், இலக்குவனையும், விச்வாமித்ரரையும் கொன்று விடுவாள்.

என்ன செய்வது ?




இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி

 இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி 



பக்தி செய்யும் போது மனதில் உள்ள ஆணவம், அகத்தை அழிய வேண்டும். சில பேர் பக்தி செய்வதிலேயே கூட கர்வம் கொள்வது உண்டு ...

"திருமலை பெருமாளுக்கு இத்தனை இலட்சம் நன்கொடை தந்தேன் "

"தினப்படி இரண்டு நேரம் பூஜை பண்ணுகிறேன், சுலோகம் எல்லாம் எனக்கு அத்துப்படி "

என்று பக்தி செய்வதில் ஒரு அகந்தை வந்து விடுகிறது. நான் அவனை விட அதிகம் பக்தி செய்கிறேன், நான் அவனை விட அதிகம் கோவில்களுக்குச் செய்கிறேன் என்று.

இந்த பக்தியால் ஏதாவது பலன் உண்டா ?

பக்தி என்பது இயல்பாக , மூச்சு விடுவது போல, கண் இமைப்பதுபோல இயல்பாக இருக்க வேண்டும்..

அந்த பக்தி எப்படி இயல்பாக வரும் ?

பக்தி இல்லாதவர்களை விட்டு நீங்கி இருக்க வேண்டும். பக்தர்கள் மத்தியில் இருந்தால் பக்தி என்பது ஒரு இயல்பான ஒன்றாக ஆகி விடும்.

பாடல்

கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.


பொருள்



கள் ஆர் மொழில் தென் அரங்கன்

கள்ளார் = தேன் நிறைந்த

பொழில் = பூங்காவனங்கள் சூழ்ந்த

தென் னரங்கன் = திருவரங்கத்தில் பள்ளி கொண்ட அரங்கனின்

கமலப் பதங்கள் = தாமரை போன்ற பாதங்களை

நெஞ்சிற் = மனதில்

கொள்ளா = வைக்காத

மனிசரை = மனிதர்களை

நீங்கிக் = விட்டு நீங்கி

குறையல் பிரானடி = திருமங்கை மன்னனுடைய திருவடிகள்

கீழ் = அடியில்

விள்ளாத அன்பன் = என்றும் நீங்காத அன்பன்

இராமா னுசன் = இராமானுசன்

மிக்க சீலமல்லால் = உயர்ந்த குண நலன்களைத் தவிர

உள்ளாதென் னெஞ்சு = உள்ளாது என் நெஞ்சு = நினைக்காது என் நெஞ்சு

ஒன்றறியேன் = இதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது

எனக்குற்ற பேரியல்வே.= எனக்கு அமைந்த இயல்பு அது

இயல்பான பக்தி. இயல்பான ஒரு மரியாதை.

Thursday, September 24, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1



தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றது சரியா ?

வாலியை மறைந்து நின்று கொன்றது சரியா ?


அன்று தொட்டு இன்று வரை இந்த சர்ச்சை நடந்து கொண்டேதான் இருக்கிறது.  எத்தனை முறை முடிவுகளை எட்டினாலும், ஒரு திருப்தி இல்லை.

இராமன் ஏன் அப்படிச் செய்தான் ? இராமன் அப்படி செய்யலாமா ? இது ஒரு தவறு இல்லையா ? இராமன் செய்தான் என்பதால் அது சரியாகி விடுமா ? இராமன் வழியில் செல்ல நினைப்பவர்களுக்கு இது ஒரு தடை இல்லையா ?

தாடகை, அவள் எவ்வளவுதான் பெரிய அரக்கியாக இருந்தாலும், அவள் பெண் தானே. ஒரு பெண்ணைக் கொல்வது அறமாகுமா ?

வாலி, எல்லா விதத்திலும் சுக்ரீவனை விட உயர்ந்தவன். பின் எதற்காக அவனைப் பகைத்து சுக்ரீவன் கூட நட்பு பாராட்டினான். சரி, அது வேண்டுமானால் எப்படியோ போகட்டும், மறைந்து நின்று தாக்கலாமா ?

இவை இரண்டும் அறத்தின்பாற்பட்டு நில்லாத செயலாகவே தோன்றுகிறது.


தாடகையை கொன்றது, வாலியை மறைந்து நின்று கொன்றதற்கு முன்னால் இராமன் செய்த இன்னொரு தவறும் கூட இருக்கிறது.

அப்பா சொன்னார் என்பதற்காக கடமையை விட்டு விடுவதா ? நாட்டு மக்களை காக்கும் கடமை இராமனுக்கு இல்லையா ? தந்தை சொன்னார் என்பதற்காக கடமையில் இருந்து நழுவலாமா ?


அவை அப்படியே இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம்.

இப்போது, இன்னொரு கேள்வியை எடுப்போம்.

ஒன்றுக்கு ஒன்று முரணான அறங்கள் இருந்தால் எதை கையில் எடுப்பது. ஒன்றைச் செய்தால் மன்றொன்று அடிபட்டுப் போகும்.

உதாரணமாக,

ஒருவன் மது போதையில், ஒரு பெண்ணை துரத்தி வருகிறான். அவன் கையில் அவள் அகப்பட்டால் அவள் கற்பு பறிபோவது திண்ணம். அவளை கொலை கூட செய்து விடுவான். அந்தப் பெண் ஓடிவந்து உங்கள் கண் எதிரிலேயே ஒரு இடத்தில் மறைந்து கொள்கிறாள்.  போதையில் வந்த அந்த ஆள் , அந்தப் பெண் எங்கே என்று கேட்கிறான்.

நீங்கள் என்ன செய்வீர்கள் ?

பொய் சொல்வது அறத்தின் பாற்பட்ட செயல் அல்ல.

உண்மை சொன்னால், அந்த பெண்ணின் மானமும் உயிரும் போகும்.

என்ன செய்வீர்கள் ?

வள்ளுவர் சொன்னார் , பொய்மையும் வாய்மை இடத்து, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று.

ஒரு வேளை நீங்கள் உண்மை சொல்லி, அந்த மனிதன் அந்தப் பெண்ணை கெடுத்து கொலையும்  செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நீதி அவனை  தூக்கில் போடும்.

அப்போதும் அந்த மனிதன் என்ன சொல்லுவான் "நான்தான் குடி வெறியில் இருந்தேன் என்று தெரியும் தானே உனக்கு...எதற்காக அந்தப் பெண்ணை காட்டிக் கொடுத்தாய் ...இப்போது பார் ...நீ சொன்ன உண்மையால் இரண்டு உயிர்கள் போகப் போகின்றன ..." என்று.

பொய் சொல்வது அறம் அல்லதான். இருந்தும் எல்லோரும் அந்த இடத்தில் பொய் தான் சொல்லி இருப்பார்கள்.

சரி, இது ஒரு வாதம்.

இன்னொன்றைப் பார்ப்போம்.

அறம் என்பது முடிந்த முடிவா ? இது தான் அறம் என்று யாராவது இறுதியாகக் கூற முடியுமா ?

கொல்வது பாவம் தான். ஆனால் ஊரில் பல பேரை கொன்றவனை நீதி தூக்கில் போடுகிறது. அது பாவம் இல்லையா ? நாடுகளுக்கு இடையே சண்டை வரும் போது  ஒரு நாட்டின் இராணுவம் இன்னொரு நாட்டின் இராணுவத்தில் உள்ளவர்களை கொல்கிறது . அது பாவம் இல்லையா ?

போதைப் பொருள்களை உட்கொள்ளுவது பாவம் தான். அறம் இல்லை தான். ஆனால், தாங்க முடியாத வலியில் ஒருவன் துடிக்கும் போது அவனுக்கு சிறிது போதைப் பொருளை மருந்து போல கொடுத்து அவன் வலியை தணிப்பது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை.

அறம் என்பது முழுவதுமாக வரையறுக்கப் பட்டது அல்ல. அது காலம், இடம், பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும்.

மீண்டும் இராமனிடம் வருவோம்....







Tuesday, September 22, 2015

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க 


"இத்தனை நாள் வாழ்ந்து நீங்க என்ன கிளிச்சீங்க ? கொஞ்சம் கூட வெக்கம் இல்லை உங்களுக்கு. இப்படியே போனால் கொஞ்ச நாளில் இறந்து போவீர்கள். நீகள் இறந்த பின்,  இந்த உடல் இருக்கிறதே, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கும் ஒரு பொருளாகப் போய் விடும்"

என்று வெறுத்து கோபித்து சொல்கிறார் திருநாவுகரசர்.

பாடல்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.


பொருள்

நடலை = துன்பமான

வாழ்வு = இந்த வாழ்வை

கொண்டு = வைத்துக் கொண்டு

என் செய்தீர் = என்ன செய்தீர்கள்

நாணிலீர் = நாணம் இல்லாதவர்களே

சுடலை = சுடு காடு

சேர்வது = போய்ச் சேர்வது

சொற் பிரமாணமே = சத்ய வாக்கே

கடலின் = திருபாற்கடலில்

நஞ்சமு துண்டவர் = நஞ்சை அமுதமாக உண்டவர்

கைவிட்டால் = கை விட்டு விட்டால்

உடலி னார்  = இந்த உடல்

கிடந்து = கிடந்து

ஊர் = ஊர்

முனி = கோபிக்கும்

பண்டமே. = பொருளே

என்னய்யா, இன்னுமா எடுக்கல, சீக்கிரம் எடுங்கள் என்று ஊர் கூடி கோபித்து  அனுப்பும்  இந்த உடலை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருகிறீர்கள் என்று  கேட்கிறார் நாவுக்கரசர் .

பதில் ?



இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை

இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை 


ஒரு நாள் நம் உடையை சரியாக இஸ்திரி (iron ) போடாமல் போட்டுக்கொண்டு வெளியே செல்ல முடியுமா ? கசங்கின ஆடையை உடுத்திச் செல்வோமா ?

உடம்பை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகள், அல்லது தொள தொள என்று தொங்கும் ஆடைகளை நம்மால் உடுக்க முடியுமா ? எவ்வளவு சங்கடப் படுவோம் ?

சகர்வர்த்தியின் பிள்ளைகள் , இராமனும், சீதையும், இலக்குவனும் மர உறி உடுத்துச் சென்றார்கள்.

அது உடலோடு சரியாகப் பொருந்தாது. மெத்தென்று மென்மையாக இருக்காது. அங்கங்கே குத்தும். உரசும். எரிச்சல் தரும்.

அப்பா சொன்னார் , என்ற ஒரே காரணத்துக்காக இராமன் மர உரி உடுத்து கானகம் போனான்.

கணவன் போகிறான் என்ற ஒரே காரணத்துக்காக சீதை மாற உரி உடுத்து, அவன் பின் கானகம் போனாள் .

அண்ணன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக இலக்குவன் சென்றான்.

இவர்கள் சென்றதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது.

அப்பாவின் மேல் உள்ள மரியாதை, கணவன் மேல் உள்ள காதல், அண்ணன் மேல் உள்ள பாசம் என்று.

அவர்களை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வர  பரதனும் மர உரி உடுத்து கானகம் போனான்.

அறத்தை நிலை நாட்ட மட்டுமே அவன் சென்றான்.

மந்திரிகளை விட்டு அழைத்து வரச் சொல்லி இருக்கலாம்.

அல்லது அவனே கூட சாதாரண ஆடை அணிந்து சென்றிருக்கலாம். அதை விடுத்து அவனும் மர உரி உடுத்துச் சென்றான்.


பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தை அடைகிறான். பரதனைப் பார்த்து அவர் கேட்கிறார்

"நீ முடி சூடி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. முடியெல்லாம் சரியாக சீவாமல் சடை பிடித்துப் போய் இருக்கிறது. இப்படி மர உரி உடுத்து இங்கு எதைத் தேடி வந்தாய் " என்று.

பாடல்


‘எடுத்த மா முடி சூடி நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான்.

பொருள் 

‘எடுத்த மா முடி = உன் தாய் எடுத்துக் கொடுத்த பெரிய மணி முடியை

சூடி = தலையில் அணிந்து

நின்பால் = உன்னிடம்

இயைந்து = அனுசரித்து வந்த

அடுத்த பேர் அரசு ஆண்டிலை = அந்த பெரிய அரசை நீ ஆளவில்லை

ஐய! நீ = ஐயனாகிய நீ

முடித்த = தலையை வாராமல் முடித்து

வார் சடைக் கற்றையை  = சடை கற்றையை

மூசு =  மொய்க்கும்

தூசு = தூசு என்றால் ஆடை

உடுத்து  = உடுத்து

நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான். = இந்த கானகத்திற்கு வந்ததன் காரணம் என்ன ?

மூசு தூசு என்றால் உடலை சுற்றி இருக்கும் ஆடை. பொருந்தாத ஆடை. மர உரி.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

ஏதோ பேருக்கு போய் அண்ணனைப் பார்த்து விட்டு வந்தவன் அல்ல பரதன்.

வருத்ததோடு, சிரத்தையோடு போனவன்.

தவறுக்கு வருந்தி பிராயாசிதம் தேடி போனவன்.



Saturday, September 19, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே 


பெரிய பெரிய மகான்கள் தோன்றிய பூமி  இது.எவ்வளவோ நல்ல நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள். அவர்களிடம் இருந்து அந்த நல்ல விஷயங்களைப் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு அதை சொல்ல மனம் வரவில்லை. அப்படி சொல்லாமல் போனால் அந்த பெரிய உண்மைகள் நாளடைவில் மறைந்து போகும். அது மட்டும்  அல்ல,அதை கண்டு சொன்ன அந்த மகான்களின் பேரும் பெருமையும் மறைந்து போகும்.

தான் கற்ற திவ்ய மந்திரங்களை எல்லோரும் உய்ய ஊருக்கே சொன்னவர் இராமானுஜர்.

அதனால், அதை பெற்றவர்கள்  வாழ்ந்தார்கள்.

அந்த உண்மைகள் நிலைத்தன.

அந்த மந்திரங்களை கண்டு சொன்ன பெரியவர்களின் பெயரும் நிலைத்தது.

அப்பேற்பட்ட மகான் இராமானுஜர். அவரின் பாதார விந்தங்களைச் சேர அவருடைய நாமங்களைச் சொல்லுவோம்.

பாடல்


பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.


பொருள்

(மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.  இந்த பாசுரத்தில் பல இடத்தில் மன்னு என்ற வார்த்தை  வருகிறது. மன்னு புகழ் கோசலை மணி வயிறு வாய்த்தவன் )


பூமன்னு = பூவில் நிலைத்து வாசம் செய்யும்

மாது = திருமகள்

பொருந்திய  மார்பன் = பொருத்தமாக வந்து சேர்ந்த மார்பை உடையவன்

புகழ்மலிந்த = புகழ் நிறைந்த

பாமன்னு = நிலைத்து நிற்கும் பாடல்களை தந்த

மாறன்  = நம்மாழ்வார்

அடிபணிந் துய்ந் தவன் = திருவடிகளை பணிந்து உயர்ந்தவன்

பல்கலையோர் = பல கலைகளை கற்ற பெரியோர்

தாம்மன்ன = அவர்கள் நிலைத்து நிற்க

வந்த = வந்த

இராம னுசன் = இராமானுசன்

சர ணாரவிந்தம் = திருவடித் தாமரைகளை

நாம்மன்னி = நாம் என்றும் நிலையாக அடைந்து

வாழநெஞ்சே!  = வாழ்வதற்கு நெஞ்சே

சொல்லுவோம்  = சொல்லுவோம்

அவன் நாமங்களே = அவனுடைய நாமாங்களையே

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்ன மாதிரி ,

இராமானுஜர் திருவடிகளை அடைய அவருடைய நாமங்களே துணை



திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே

திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே 


சில மதங்களைப் பார்த்தால், அவை, எங்கள் கடவுளை வணங்குபவர்களுக்குத்தான் சொர்க்கம், எங்கள் புனித நூலை பின் பற்றுபவர்களுக்குத்தான் சொர்க்கம், வீடு பேறு என்று கூறும். நற்கதி  அடைய வேண்டும் என்றால் முதலில் அவர்கள் மதத்துக்கு மாற வேண்டும்.

இந்து மதப் பெரியவர்கள் அப்படி எல்லாம் நினைக்கவில்லை.

ஞான சம்பந்தர் கூறுகிறார்.....

வையகம் துயர் தீர்கவே என்று. இந்த உலகம் பூராவிலும் உள்ள துயரங்கள் தீரட்டும் என்று.

இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, சைவ சமயத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் அல்ல....உலகில் உள்ள அனைத்து துயரமும் தீரட்டும் என்று வேண்டுகிறார்.

பாடல்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.


பொருள்

வாழ்க அந்தணர் = அந்தணர்கள் வாழ்க

வானவ ரானினம் = தேவர்கள் , பசுக்கள்  வாழ்க

வீழ்க தண்புனல் = குளிர்ந்த மழை விழட்டும்

வேந்தனு மோங்குக = அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்து பெருமை அடையட்டும்

ஆழ்க தீயதெல் லாம் = தீயது என்று சொல்லப் பட்டது எல்லாம், மூழ்கிப் போகட்டும்

அரன் நாமமே சூழ்க = சிவனின் நாமமே எங்கும் நிறையட்டும்

வையக முந்துயர் தீர்கவே. = வையகமும் துயர் தீரட்டும்

அந்தணர்கள் வாழ்க என்றார். ஏன் அந்தணர் மட்டும் வாழ வேண்டும். மற்றவர்கள் வாழ வேண்டாமா ?

அந்தணர் என்போர் அறவோர் என்பார் திருவள்ளுவர். அறவழியில் நிற்பவர்கள் யார் என்றாலும் அவர்கள் அந்தணர்கள் தான். அறவழியில் நிற்பவர்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

மக்கள் அற வழியில் நிற்க வேண்டும்.
நல்ல மழை பொழிய வேண்டும்.
பசுக்கள் வாழ வேண்டும் என்றால் நிறைய புல் வேண்டும். ஊரெல்லாம் பச்சை பசேலென்று இருக்க வேண்டும்.
அரசன் நல்ல ஆட்சியை தர வேண்டும்.
தீமை எல்லாம் குழி தோண்டி  புதைக்கப் பட வேண்டும்
வையகம் துயர் தீர வேண்டும். வையகத்தில் யாரும் துன்பப் படக் கூடாது.

எவ்வளவு பெரிய  மனம்.எவ்வளவு உயர்ந்த எண்ணம்.

அப்படிப்பட்ட பெரியவர்கள் வாழ்ந்த நாடு இது.





திருப் புகழ் - இவன் நம்ம ஆளு

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு 


ஆளும் கட்சி ஆள் என்றால் காவல் துறை தொடப் பயப்படும். நமக்கு எதுக்கு பெரிய இடத்து வம்பு என்று.

அது போல, முருகனின் பக்தர்கள் என்றால், எமன் தொடப் பயப்படுவான்.

ஆனால், நீங்கள் முருகனின் பக்தர்கள் என்று யார் சொல்வது ? யார் சொன்னால் எமன் கேட்பான் ?

முருகனே வந்து சொன்னால் , அதுக்கு வேற அப்பீல் இல்லை அல்லவா ?

எமன் வரும்போது, முருகன் நேரில் வந்து அவனிடம், "இவன் நம்ம ஆளு" என்று சொல்வானாம்.

எப்ப தெரியுமா ?

கடைசி காலத்தில், நம்மைச் சுற்றி கொஞ்ச பேர் நிற்ப்பார்கள்....அப்போது வருவான்....

யார் எல்லாம் அந்த கொஞ்சப் பேர்?

பசி என்று அறிந்து, பால் தந்து, முதுகு தடவி விட்ட தாயார்,
உடன் பிறந்த தம்பி
வேலை ஆட்கள்
அன்பான தங்கை (அது என்ன தங்கைக்கு மட்டும் அன்பான ?)
மருமக்கள்
பிள்ளைகள்
மனைவி

எல்லோரும் சுத்தி நின்று வருந்தி நிற்கும் போது , மயில் மேல் வலிய ஏறி வந்து, பயப்படாதே என்று ஆறுதல் கூறி, இந்த மனிதன் நம் அன்பன் என்று அந்த எமனிடம் கூறுவாயே,

சிவன் தந்தவனே, திருச்செந்தில் இருப்பவனே....

என்று பொழிகிறார் அருணகிரிநாதர்.

திருச்செந்தூர் திருப்புகழ்.....

பாடல்

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

சீர் பிரித்த பின்

தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து
முதுகு தடவிய தாயார்

தம்பி

பணிவிடை செய் தொண்டர்

பிரியமுள தங்கை

மருகருயிர் எனவே சார்

மைந்தர்

மனைவியர்

கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி

பகர் கேடா

வந்து தலை மயிர் அவிழ்த்து தரை புக மயங்க

ஒரு மகிட (எருமை)  .மிசை ஏறி

அந்தகனும் எனை அடர்ந்து  வருகையில்

இனி அஞ்சல் என வலிய மயில் மேல் நீ

அந்த மறலியொடு அந்த மனிதன்
எமது அன்பன் எனது அன்பன் என மொழிய வருவாயே

சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் (மார்பகங்கள்)

சிந்து பய மயிலும் அயில் வீரா (சிந்தும் பாலினை அருந்தும் கூர்மையான வேலினைக் கொண்ட வீரனே) 

திங்கள் அரவு நதி  துன்று சடிலர்  அருள் (நிலவும், பாம்பும், கங்கை நதியும் தலையில் கொண்ட சிவன் அருளிய )

செந்தில் நகரில் உரை பெருமாளே