Saturday, March 31, 2012

கம்ப இராமாயணம் - கருப்பு நிலா

கவிதை என்பது கவிஞனின் மனத்தில் இருந்து வாசகனின் மனத்திற்கு எண்ணங்களையும்
உணர்சிகளையும் நேரடியாக கடத்தும் ஒரு முயற்சி.
கம்பனின் பாடல்களுக்கு விளக்கம் எழுதும் தகுதியும் திறமையும் எனக்கு கிடையாது.
எனக்கு தெரிந்த வரை எழுதுகிறேன். முடிந்தவரை கவிதையை நேரடியாக இரசிக்க முயற்சி
செய்யுங்கள்.


கம்பனின் கவிதைக்கு ஈடு இணை கிடையாது.

-----------------------------------------------------------------------------------------------

செந்ஞாயிறு தெரியும் ... கரு ஞாயிறு தெரியுமா ? கம்பன் காட்டுகிறான் அதை.

-----------------------------------------------------------------------------------------------------------
செஞ்செவே சேற்றில்
தோன்றும் தாமரை, தேரில்
தோன்றும்
வெஞ் சுடர்ச் செல்வன்
மேனி நோக்கின
விரிந்த; வேறு ஓர்
அஞ்சன நாயிறு
அன்ன ஐயனை
நோக்கி, செய்ய
வஞ்சி வாழ் வதனம்
என்னும் தாமரை மலர்ந்தது அன்றே.
----------------------------------------------------------------------------------------------------------------------

இராமனும், லக்ஷ்மணனும், சீதையும் கங்கை கரையில் இரவு தங்கி
இருக்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது.
சிவந்த தாமரை சிவந்த சூரியனின் வரவை கண்டு மலர்ந்தது. அதே
சமயம், கருமையான ஞாயிறை போன்று இருந்த இராமனைப் பார்த்து சீதையின் முகம் மலரன்தது.

செஞ்செவே சேற்றில்
தோன்றும் தாமரை, = செக்க செவேல் என்று சேற்றில் தோன்றும்
தாமரை மலர்

தேரில் தோன்றும் = தேரில் வரும்

வெஞ் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த = வெம்மையான சுடர்
மிகுந்த சூரியனின் மேனி நோக்கி விரிந்தது

வேறு ஓர் = அதே சமயம் வேறு ஒரு

அஞ்சன நாயிறு = கருத்த ஞாயிறு (அஞ்சனம் = கருத்த)

அன்ன = போன்ற

ஐயனை நோக்கி = ஐயனான இராமனை நோக்கி

செய்ய = சிவந்த

வஞ்சி = பெண்

வாழ் வதனம் = உயிருள்ள முகம்

என்னும் தாமரை மலர்ந்தது அன்றே = என்னும் தாமரை
மலர்ந்தது

No comments:

Post a Comment