Wednesday, March 29, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - ஒரு முன்னோட்டம்

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - ஒரு முன்னோட்டம் 


இராவணனோடு போர் தொடங்கும் முன்பு, ஒரு சமாதான தூது விடுவது என்று இராமன் முடிவு செய்கிறான். போரை முடிந்தவரை தவிர்ப்பது என்பது நம் யுத்த தர்மமாக இருந்தது.  


வாலியின் மைந்தன் அங்கதனை தூது அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. 


ஒரு 43 பாடல்கள். மிக அருமையான பாடல்கள். 


அரசியல் சூழ்ச்சிகள், தனிமனித ஆசா பாசாங்கள், சொற்சுவை, பொருள் சுவை என அத்தனை இனிமைகளும் நிறைந்த பாடல்கள். 



வாலியோடு சண்டை என்ற போது தூது விடாத இராமன், இராவணனுக்கு மட்டும் ஏன் தூதுவிட்டான் என்ற கேள்வி வரும். 



இராவணனோடு கொண்ட பகை, சொந்தப் பகை. இராமனின் மனைவியை இராவணன் அபகரித்துச் சென்றுவிட்டான். அது இராமனுக்கும், இராவணனுக்கும் உள்ள தனிப் பகை. 



https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html


(pl click the above link to continue reading)


வாலியோடு இராமனுக்கு தனிப் பகை எதுவும் இல்லை. தம்பி மனைவியை கவர்ந்தான் என்ற குற்றத்திற்கு தண்டனை வழங்கினான். 


மறைந்து இருந்து அம்பு விட்டது சரிதானா என்ற கேள்வி நிற்கிறது. 



வாலி இறந்த பின், எவ்வளவோ நாட்களுக்குப் பின் இலங்கையில் யுத்தம் நடக்க இருக்கிறது. இராமன் அங்கதனை தூது விடுகிறான். அங்கதனும் மகிழ்ச்சியோடு செல்கிறான். தன் தந்தையான வாலியை கொன்றவன் இராமன் என்ற   கோபமோ, வருத்தமோ அவனிடம் இல்லை. 



அங்கதன், அது சரி என்று நினைத்து இருக்கலாம். அல்லது அதை மறந்து மன்னித்து இருக்கலாம். அல்லது, வாலியே இறுதியில்  அது தவறு அல்ல என்று முடிவு செய்து அங்கதனை இராமனிடம் அடைக்கலம் என்று ஒப்புவித்தபின்  அதை மேலும் மேலும் தோண்டுவதில் அர்த்தம் இல்லை என்று நினைத்து இருக்கலாம்.



இராமன் வாலியைக் கொன்றது எல்லாம் இந்த அங்கதன் தூதில் வருகிறது. 


சுவாரசியமான பகுதி. 


வாருங்கள் சுவைப்போம். 

2 comments:

  1. அண்ணா
    மகிழ்ச்சி . தங்கள் எழுத்துகள் மிகந்த உற்சாகத்தை தரும் . காத்துள்ளேன் .

    ReplyDelete
  2. மிகுந்த உற்சாகம் ஏற்படுகிறது தங்கள் தமிழ்க் கட்டுரைகளைப் படிக்கும் பொழுதெல்லாம்

    ReplyDelete