Tuesday, March 28, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - பதடி எனல்

  

  திருக்குறள் - பயனில சொல்லாமை - பதடி எனல் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


வள்ளுவர் சொல்லுவதைப் பார்த்தால் நாம் பேசவே முடியாது போல இருக்கே. எப்போது பார்த்தாலும் 

ஒரு கல்லூரி பேராசிரியர் மாதிரி பயனுள்ள சொற்களையே பேசிக் கொண்டிருக்க முடியுமா? சில சமயம் நண்பர்களோடு, உறவினர்களோடு அரட்டை அடித்து, பேசி, சிரித்து மகிழ்ந்து இருக்கக் கூடாதா?


வள்ளுவர் அப்படிச் சொல்லவிலை. 



நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத எதையும் வள்ளுவர் சொல்ல மாட்டார். 



இல்லறத்தில் இருப்பவன் ஒரு சில சமயம் பயனற்ற சொற்களை பேச வேண்டி வரலாம். 



ஆனால், எல்லா நேரமும் அப்படியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. 


அப்படி பேசுபவனை மக்களுள் பதர் என்று சொல்ல வேண்டும் என்கிறார். 



பாடல் 


பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி எனல்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


(please click the above link to continue reading)



பயனில்சொல் = பயனற்ற சொற்களை 


பாராட்டு வானை = நீண்ட காலமாக சொல்லுபவனை 


மகன்எனல் = மக்களில் ஒருவராக சொல்லக் கூடாது 


மக்கட் = மக்களுள் 


பதடி எனல் = பதர் என்று கூற வேண்டும் 


பதர் என்பது அரிசி உள்ளே இல்லாத நெல்லைக் குறிக்கும். 


மனிதருள் பதர் என்றால் அறிவு இல்லாததால் அவனை பதர் என்று சொல்ல வேண்டும் என்கிறார். 


அதாவது, அறிவில்லாதவன்தான் பயனற்ற வார்த்தைகளை பேசிக் கொண்டிருப்பான் என்கிறார். 


அறிவுள்ளவன், அளந்து, பயனுள்ள வார்த்தைகளையே பேசுவான் என்பது குறிப்பு. 


யாரவது வளவள என்று  அர்த்தம் இல்லாமல், பயனற்ற முறையில், அடிக்கடி பேசிக் கொண்டிருந்தால், அவனுடைய அறிவின் ஆழத்தை நாம் புரிந்து கொள்ளலாம் என்கிறார். 



(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html




No comments:

Post a Comment