Thursday, March 23, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சீர்மை சிறப்பொடு நீங்கும்

 

  திருக்குறள் - பயனில சொல்லாமை - சீர்மை சிறப்பொடு நீங்கும்


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


சில பேர் நிறைய நல்லது செய்வார்கள். மற்றவர்களுக்காக ஓடி ஓடி உழைப்பார்கள். தன்னலம் பாராமல் உதவி செய்வார்கள். இருந்தும் அவர்களுக்கு ஒரு நல்ல பேர் இருக்காது. 


ரொம்ப தூரம் போவானேன், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களை அறிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதை நாம் காண்கிறோம். எல்லாம் அவன்/அவள் நன்மைக்காகத்தானே செய்தேன். ஏன் என்னை வெறுக்கிறார்கள் என்று வருந்துவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், 


"எவ்வளவுதான் நல்லது செய்தாலும், ஒருவர் பயனற்ற சொற்களை பேசுவாராயின் அவருக்கு உள்ள சிறப்பும், பெருமையும் போய் விடும்"


பாடல் 


சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


(please click the above link to continue reading)



சீர்மை = நன்மை  


சிறப்பொடு = சிறப்பு 


நீங்கும் = நீங்கும் 


பயன்இல = பயன் இல்லாத சொற்களை 


நீர்மை = நல்ல குணம்  


உடையார் = உள்ளவர்கள் 


சொலின் = சொல்வாராயின் 


நல்லதும் போகும், சிறப்பும் போகும். 


அது எப்படி?  யோசிப்போம். 


பொதுவாக வீடுகளில் நடப்பதுதான். 


அம்மாவுக்கு பிள்ளை மேல் அளவு கடந்த பாசம் இருக்கும். மருமகள் ஏதோ ஒன்று செய்யப் போக, அம்மா ஏதோ ஒன்று சொல்ல, அதை அவள் தன் கணவனிடம் சொல்ல, அம்மாவுக்கும் மகனுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகும். 


காரணம் என்ன?


மருமகளைப் பற்றிய பயனற்ற சொற்கள். 


அலுவகலத்தில் சிலர் மிக கடுமையாக உழைப்பார்கள். நல்ல திறமையும் இருக்கும். இருந்தும் நல்ல பதவி உயர்வு கிடைக்காது.  காரணம், மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவது.  அவர் பேச்சை  மற்றவர்கள் ஒன்றுக்கு இரண்டாக திரித்துக் கூறி அவர்கள் முன்னேற்றத்தை தடுத்து விடுவார்கள். 


இப்படி, பயனற்ற சொற்களைப் பேசி மனத் துன்பம், பணத் துன்பம், உறவுச் சிக்கல், தனிமை, வெறுமை என்று பல துன்பகளை நிறைய பேர் சம்பாதித்துக் கொள்கிறார்கள். 


அவர்களுக்கு தெரிவது இல்லை...தங்கள் பயனற்ற சொற்கள்தான் தங்களது எதிரி என்று. 


மனதில் பட்டதை பட் என்று பேசி விடுவேன்.....


உள்ள கள்ளம் கபடம் இல்லாமல் பேசி விடுவேன் ...


நம்ம கிட்ட எப்போதும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டுதான் ...


இப்படி எல்லாம் பேசுவதால் துன்பமே மிஞ்சும். 


"நீர்மை உடையார் சொலின்" என்பதில் "சொன்னால்"  என்பது ஒரு கேள்வியாக நிற்கிறது. "கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம்" என்றால் கடினமாக உழைப்பது எளிது அல்ல என்று விளங்கும். 


நீர்மை உடையவர்கள் அப்படிச் 'சொன்னால்' என்பதில், சொல்ல மாட்டார்கள் என்பது தெளிவு. 


பயனுள்ள சொற்களை பேசி பழக வேண்டும். ஒரு நாளில் வந்து விடாது. கொஞ்சம் கொஞ்சமாக பழக வேண்டும். 


அப்படிப் பழகினால், வாழ்க்கை வசந்தமாக இருக்கும். 





(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html





No comments:

Post a Comment