Sunday, March 24, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - கொல்வதும், தின்பதும்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - கொல்வதும், தின்பதும் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_24.html


இப்போது எல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் அசைவ உணவை உற்பத்தி செய்கிறார்கள். விலங்குகளை கொல்வதும், அதை சரியானபடி வெட்டி, பதப்படுத்தி, தேவையான மசாலா பொருட்களை சேர்த்து, டப்பாவில் அடைத்து விற்கிறார்கள். அந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?


"நான் அசைவ உணவு உண்பது இல்லை. யாரோ உண்கிறார்கள். அவர்களுக்காகத்தானே இந்த விலங்குகளை கொல்கிறோம். என்னைப் பொறுத்தவரை இது ஒரு வேலை. இது பாவம் என்றால், எனக்கு இந்தப் பாவத்தில் பங்கு இல்லை"


என்று சொல்லுவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார்...


"தின்பவர் யாரும் இல்லை என்றால், விலங்குகளை கொல்பவர் யாரும் இருக்க மாட்டார்கள். தின்பவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்"


என்கிறார். 


பாடல் 


தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்

விலைப்பொருட்டா லூன்தருவா ரில்.


பொருள் 


தினற்பொருட்டாற் = தின்பதற்கு என்று 


கொள்ளாது = வாங்காது 


உலகெனின்  = உலகில் உள்ளவர்கள் என்றால் 


யாரும் = ஒருவரும் 


விலைப்பொருட்டால் = விலைக்கு விற்பதற்கு என்று 


லூன்தருவா ரில் = ஊன் தருவார் இல். அதாவது ஊனை விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 


வாங்குபவர்கள் யாரும் இல்லை என்றால், விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 


வாங்குபவர்கள் என்றால் வாங்கி உண்பவர்கள். மாமிசத்தை உண்பவர்கள் இருப்பாதால் தான், உயிர்களை கொன்று அவற்றின் உடலை விற்பவர்கள் இருக்கிறார்கள். 


எனவே, தின்பவர்கள்தான் அந்த கொலைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிறார். 




No comments:

Post a Comment