Showing posts with label Thiru Vaasgam. Show all posts
Showing posts with label Thiru Vaasgam. Show all posts

Wednesday, August 24, 2022

திருவாசகம் - திரு அம்மானை - தாய்போல் தலையளித்திட்டு

    

 திருவாசகம் - திரு அம்மானை  -   தாய்போல் தலையளித்திட்டு


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



அவனும் அவளும் அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள். சில நேரம் ஒரு சின்ன புன்னகை.  ஒரு நாள் தைரியமாக அவன் அவளிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். அவர்கள் அடிக்கடி சந்திக்கிறார்கள்.பேசி, சிரித்து மகிழ்கிறார்கள். முதன் முதலாக அவன் அவள் கரங்களைப் பற்றுகிறான். அவளுக்குள் நாணம் ஒரு புறம், சந்தோசம் மறுபுறம், இதயம் பட பட என்று அடித்துக் கொள்கிறது. ரோமம் எல்லாம் சிலிர்கிறது. யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ஒரு புறம். சற்று நெருங்கி அமர்கிறார்கள்.....


அந்த நேரத்தில் அவள் அனுபவித்த அந்த உணர்வை சொல் என்றால் எப்படிச் சொல்வாள். எல்லாம் தெரியும், இருந்தும் ஒன்றும் சொல்ல முடியாது. தன் அனுபவம் தான் இருந்தும் சொல்ல முடியாது. 


இறை அனுபவமும் அப்படித்தான். 


மாணிக்கவாசகர் தவிக்கிறார். என்ன என்று சொல்லுவது, எப்படிச் சொல்வது, கடல் போன்ற இன்பம். அதை எப்படி வார்த்தைகளுக்குள் அடக்குவது? 


பாடல் தேனாக உருகி வருகிறது....


இறைவன் திருக்கருனையை நினைத்து நினைத்து உருகுகிறார் 


"வானில் உள்ள மால், அயன், இந்திரன் முதலிய தேவர்கள் எல்லாம் உன்னை அடைய பாடு படுகிறார்கள். அவர்களுக்கு காட்சி தராமல், கீழான என்னை ஒரு தாய் போல் அன்பு செய்து ஆண்டு கொண்டாய். என் உரோமங்கள் சிலிர்கிறது. புது உயிர் பிறந்தது போல இருக்கிறது. தேன் போல இனிக்கிறது. அமுதம் போல் இருக்கிறது. உன் திருவடிகள் எவ்வளவு ஒளி பொருந்தி இருக்கிறது. அந்தத் திருவடிகளைப் பாடுங்கள் அம்மானை ஆடும் பெண்களே" என்கிறார். 


பாடலைப் படித்துப் பாருங்கள். அந்த உணர்வு ஓட்டம் புரியும். 



பாடல் 



வான் வந்த தேவர்களும், மால், அயனோடு, இந்திரனும்,

கான் நின்று வற்றியும், புற்று எழுந்தும், காண்பு அரிய

தான் வந்து, நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு,

ஊன் வந்து உரோமங்கள், உள்ளே உயிர்ப்பு எய்து

தேன் வந்து, அமுதின் தெளிவின் ஒளி வந்த,

வான் வந்த, வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


(pl click the above link to continue reading)




வான் வந்த தேவர்களும் = வானில் உள்ள தேவர்களும் 


மால் = திருமாலும் 


அயனோடு = பிரமன் 


இந்திரனும் = இந்திரனும் 


கான் நின்று = காட்டில் நின்று (தவம் செய்து) 


வற்றியும் = உடல் வற்றி மெலிந்தும் 


புற்று எழுந்தும் = அவர்களைச் சுற்றி புற்று எழுந்தும் 


காண்பு அரிய = காண முடியாத 


தான் வந்து = (அவன்) தானே வந்து 


நாயேனைத் = நாய் போல கீழான என்னை 


தாய்போல் = ஒரு தாயைப் போல 


தலையளித்திட்டு, = அன்பு செய்து 


ஊன் வந்து = என் உடலில் புகுந்து 


உரோமங்கள் = உரோமங்கள் 


உள்ளே உயிர்ப்பு எய்து = உயிர் பெற்று 


தேன் வந்து = தேனைப் போல 


அமுதின் = அமுதத்தின் 


தெளிவின் = தெளிவைப் போல 


ஒளி வந்த = ஒளி பொருந்திய 


வான் வந்த = வானில் இருந்து வந்த 


வார் கழலே = வெற்றித் திருவடிகளை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானைப் பெண்களே 




Friday, August 19, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அந்தம் இலா ஆனந்தம்

   

 திருவாசகம் - திரு அம்மானை  -   அந்தம் இலா ஆனந்தம்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



ஒரு நிறுவனத்தின் மேல் அதிகாரியாக இருப்பார் அவர். அவரைக் கேட்டுக் கொண்டுதான் எல்லாம் நடக்கும். அவர் கையெழுத்துப் போட்டால்தான் எதுவும் நகரும். என்னை விட்டால் இந்த நிறுவனத்தை செலுத்த யார் இருக்கிறார்கள் என்று பெருமிதம் கொள்வார். நான் இல்லாவிட்டால் இந்த நிறுவனம் என்ன ஆகுமோ என்று கவலை கொள்வார். 


ஒரு நாள் அவர்  ஓய்வு அடையும் வயதை அடைவார். அவரை பாராட்டி வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த நிறுவனம் அவர் இல்லாமல் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருக்கும். 


அவருக்குத் தான் தாங்க முடியாது. நான் அவ்வளவு செய்தேனே...என்னைத் தவிர யாருருக்குத் தெரியும்..நான் இல்லாமல் எப்படி நடக்கிறது, அப்படி என்றால் நான் ஒன்றும் அப்படி ஒரு பெரிய ஆள் இல்லையா, நான் இல்லாவிட்டால் இன்னொருவன் என்றால் நான் சாதரணமானவன் தானா என்று மறுகுவார்.  சில பேர் அந்த வெறுமையை தாங்க முடியாமல் மாரடைப்பு வந்து இறந்தும் இருக்கிறார்கள். 


நமக்கு அதை நினைத்தால் சிரிப்பாக இருக்கும். 


சிரிப்பதற்கு முன் சற்று யோசிப்போம். 


நம் வீட்டில் என்ன நடக்கிறது என்று. 


நான் இல்லாவிட்டால் என் பிள்ளைகள் என்ன ஆகும், என் மனைவிக்கு ஒன்றுமே தெரியாது, நான் இல்லாவிட்டால் என் கணவருக்கு ஒரு காப்பி கூட தெரியாது, அவரை அல்லது அவளை யார் பார்த்துக் கொள்வார்கள், என்று நமக்கு நாமே பெரிய ஆளாக நினைத்துக் கொள்வோம். நம்மை விட்டால் இந்த குடும்பமே சீரழிந்து விடும் என்று நினைப்போம். நாம் தான் இந்த குடும்பத்தை தாங்கி நிற்கிறோம் என்று நினைப்போம். 


அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. சந்தேகம் இருந்தால் உங்களை சுற்றி உள்ளவர்களை கேட்டுப் பாருங்கள். உபசாரத்துக்கு வேண்டும் என்ன்றால்"ஐயோ, நீ இல்லாத வாழ்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" என்பார்கள். அத்தனையும் பொய். யார் இல்லாவிட்டாலும், உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும். 


நாமே நினைத்துக் கொள்வதுதான்...நாம் பெரிய ஆள், இந்த குடும்ப பாரத்தை நாம் தான் கொண்டு செல்கிறோம் என்று. அப்படி சொல்லிக் கொண்டு நம் பந்த பாசங்களை மேலும் மேலும் இறுக்கமாக்கி கொள்கிறோம். விட்டால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும், விடவே முடியாது என்று நாமே கற்பனை செய்து கொண்டு "என் குடும்பம், என் பிள்ளைகள், என் கணவன், என் மனைவி, ,என் பொறுப்பு"  ஆணவத்தை வளர்த்துக் கொள்கிறோம். 


அதை விட முடிவது இல்லை. 


விட்டு விட்டு என்ன செய்வது என்ற பெரிய கேள்வி எழும். அதற்கு விடை காண முடியாது. அதற்கு பயந்து, நாம் இதற்கு பின்னால் ஒளிந்து கொள்கிறோம். 


இந்தப் பற்றுகள் விட வேண்டும் என்றால் அவன் அருள் வேண்டும். 


நான் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது என்று சொல்ல எத்தனை பேரால் முடியும்? 


"நான் ஒன்றும் பெரிசாக செய்து விடவில்லை. நான் இல்லாவிட்டாலும் எல்லோரும் சந்தோஷமாகத் தான் இருப்பார்கள். இருக்கும் வரை என்னால் முடிந்ததைச் செய்கிறேன்" என்று இருந்தால் மனம் லேசாகும். நான் நான் என்று பறக்காது. என்னை விட்டால் யாரும் இல்லை என்று இறுமாப்பு கொள்ளாது, என்னை கேட்காமல் எப்படிச் செய்யலாம் என்று மனம் கொக்கரிகாது.


"அவரவர்கள் அவர்கள் வேலையை பார்த்துக் கொள்வார்கள்" என்று விட்டு விட்டால் நம் வேலை என்ன என்ற சிந்தனை பிறக்கும். அந்தக் கேள்வியில் இருந்து எல்லையில்லா ஆனந்தம் பிறக்கும் என்கிறார் மணிவாசகர். 





பாடல் 


இந்திரனும், மால், அயனும், ஏனோரும், வானோரும்,

அந்தரமே நிற்க, சிவன் அவனி வந்தருளி,

எம் தரமும் ஆட்கொண்டு, தோள் கொண்ட நீற்றன் ஆய்;

சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்,

பந்தம் பறிய, பரி மேல்கொண்டான், தந்த

அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


(pl click the above link to continue reading)


இந்திரனும், = இந்திரனும் 


மால் = திருமாலும் 


அயனும் = பிரமாவும் 


ஏனோரும் = மற்றையவர்களும் 


வானோரும், = வானில் உள்ளவர்களும் 


அந்தரமே நிற்க = அந்தரத்தில் நிற்க 


சிவன் = சிவ பெருமான் 


அவனி = இந்த உலகிற்கு (பூமிக்கு) 


வந்தருளி = வந்து அருளி 


எம் தரமும் = எம்முடைய தரத்துக்கு எங்களையும் 


ஆட்கொண்டு = ஆட் கொண்டு 


தோள் கொண்ட நீற்றன் ஆய்; = தோள்களிலே திருநீற்றை அணிந்து 


சிந்தனையை = மனதை 


வந்து உருக்கும் = வந்து உருக்கும் 


சீர் ஆர் பெருந்துறையான், = சீரிய சிறந்த திருப் பெருந்துறையில் உறைபவன் 


பந்தம் பறிய = நம்முடைய பந்தங்களை எல்லாம் நீக்கி 


பரி மேல்கொண்டான் = குதிரை மேல் வந்தான் 


தந்த = அருள் தந்த 


அந்தம் இலா ஆனந்தம் = முடிவு இல்லாத ஆனந்தம் 


பாடுதும் காண்; அம்மானாய்! = அதைப் பாடுவோம் அம்மானை ஆடும் பெண்ணே 



பந்தங்களை நீக்கியவுடன், அந்தம் இல்லாத ஆனந்தம் தோன்றியது என்கிறார் 


மணிவாசகர் பாண்டிய மன்னன் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். பாண்டிய மன்னன் நிறைய பொருள் கொடுத்து குதிரைகள் வாங்கி வர அனுப்பினான். அவரும் கிளம்பி விட்டார். 


பார்த்தார் சிவ பெருமான். தன் பக்தன் இப்படி குதிரை வாங்கவும், நாட்டை ஆள்வதில் உதவி செய்வதிலும் பிறவியை வீணே கழிக்கிறானே என்று அவர் மேல் அருள் கொண்டு அவரை தடுத்து ஆட்கொண்டார். 


சிந்திப்போம், மூன்று வேளை சமையல் செய்வதும், துணி துவைத்து உலர்துவதும், வேலை ஆட்களை மேற் பார்வை செய்வதும், நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் ஏதோ ஒரு அலுவலகத்தில் செய்த வேலையையே வருடக் கணக்கில் செய்து கொண்டு இருப்பதுவா வாழ்வின் நோக்கம்?  


இதையே ஏதோ பெரிய இமாலய சாதனை என்று நினைத்துக் கொள்வதும், இதைச் செய்ய என்னை விட்டால் ஆள் இல்லை என்று இறுமாப்பதும் விட்டு விட்டு,கரை சேரும் வழியை நினைப்போம். 


திருச்சிற்றம்பலம் 


Monday, August 15, 2022

திருவாசகம் - திரு அம்மானை - வாரா வழியருளி

  

 திருவாசகம் - திரு அம்மானை  -   வாரா வழியருளி


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்




)


வீட்டில் அப்பா(வோ அல்லது அம்மாவோ) ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கலாம். அல்லது அரசியலில் ஒரு பெரிய தலைவராக இருக்காலம். அவரைப் பார்க்க பலர் , பல நாள் காத்துக் கிடப்பார்கள். ஒரு இரண்டு நிமிடம் கிடைத்தால் போதும் என்று தவம் கிடப்பார்கள். 


ஆனால், வீட்டில் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு அவர் சாதாரண கணவன் அல்லது தந்தைதான். நான் நாட்டுக்கு முதல் மந்திரி என்று பிள்ளையிடம் இருக்க முடியுமா? அலுவலகத்தில் இருந்து வரும் போதே "பிள்ளை எங்கே" என்று தேடிக் கொண்டு வருவார். 


"உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டு இப்பத்தான் தூங்கப் போனான்" என்று மனைவி சொல்லுவாள்.


சரி, இரு போய் பார்த்துட்டு வந்துர்றேன் என்று தூங்கும் பிள்ளையை பார்க்க இவர் ஓடுவார். 


ஊரெல்லாம் இவரைக் காண தவம் கிடக்கிறது. இவர் பிள்ளையை காண ஓடுகிறார். 


இதை காதலன், காதலி மேல் வைத்துப் பாருங்கள். காதலன் பெரிய வேலையில் இருக்கிறான். வருகிறேன் என்று நேரத்துக்கு வரவில்லை. காதலி கோபித்துக் கொள்கிறாள். எவ்வளவு இறங்கி வருவான். எத்தனை முறை 'சாரி' சொல்லுவான். அது அன்புப் பரிமாற்றம். 


மணிவாசகர் சொல்கிறார் 


"விண்ணுலகம், பாதாள உலகம் போன்ற உலகில் உள்ளவர்கள் எல்லாம் சிவனே உன்னைக் காண முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால், நீ எங்களுக்கு எளிமையானாவன்.  எங்களுக்கு உன் மேல் ஒரு பைத்தியம் பிடிக்க வைத்து விட்டாய். அது மட்டும் அல்ல, நாங்கள் இந்த உலகில் மீண்டும் வாராத வழியை அருளினாய். எங்கள் உள்ளத்தில் புகுந்து விட்டாய். கடலில் மீன் பிடிப்பவனைப் போல எம் போன்ற பக்தர்களை நீ வலை வீசிப் பிடிக்கிறாய்" என்கிறார். 


பாடல் 


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்

ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய

பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி

வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த

ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்

பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய் 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


(pl click the above link to continue reading)



பாரார் = பாரில், இந்த உலகில், உள்ளவர்கள்


விசும்புள்ளார் = விசும்பு என்றால் வானம். வானுலகில் உள்ளவர்கள்


பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள்


புறத்தார் = இதற்குப் புறத்தும் உள்ள உலகில் உள்ளவர்கள்


ஆராலுங் = யாராலும்


காண்டற் கரியான் = காண்பதற்கு அரியவன்


எமக்கெளிய = எமக்கு எளிய


பேராளன் = பெரிய அன்பு உள்ளவன்


தென்னன் = தென்னாடுடையவன்


பெருந்துறையான் = திருப் பெருந்துறையில் உள்ளவன்


பிச்சேற்றி = நமக்கு அவன் மேல் பித்தை ஏற்றி


வாரா = திரும்பி இந்த உலகத்திருக்கு வந்து பிறக்காமல் இருக்கும் (திரும்பி வரமால்)


வழியருளி = வழியை தந்து அருளி


வந்தென் = அவனே வந்து


உளம்புகுந்த = என் உள்ளம் புகுந்து


ஆரா அமுதாய் = தீராத அமுதமாய்


அலைகடல்வாய் = அலை கடலில்


மீன்விசிறும் = மீன் பிடிக்கும் மீனவன் போல


பேராசை வாரியனைப் = பேராசைக் காரனை (பக்தர்களை வல போட்டு பிடிக்கும்)


பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை  பாடி ஆடுவோம்


.பிச்சு என்றால் பைத்தியம். பித்து. "உன்ன இரண்டு நாளா பாக்காம பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்குடி" என்று காதல்/காதலி சொல்லுவது போல. 


இறைவன் மேல் அவ்வளவு காதல். அவரை பார்க்காமல் பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்காம். 


"வாரா வழி அருளி"....திரும்பி வர முடியாத வழியைச் சொல்வாராம். அந்த வழியில் போனால், மீண்டும் இந்த பிறவி என்ற ஊருக்கு வர முடியாது. ஒரு வழிப் பாதை. நேரே வீடு பேறுதான். 


மணிவாசகரைத் தவிர யார் இதை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியும்!


முன்பு கூறியது போல, திருவாசகம் என்பது உணர வேண்டிய ஒன்று. அறிய வேண்டிய ஒன்று அல்ல. 


ஒன்றுக்கு பல முறை வாசித்துப் பாருங்கள். 



Thursday, August 11, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அறைகூவி, வீடு அருளும்

 

 திருவாசகம் - திரு அம்மானை  -   அறைகூவி, வீடு அருளும்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html



)


மற்ற பாடல்களுக்கு விளக்கம் சொல்லுவது போல திருவாசகத்துக்கு சொல்லிக் கொண்டு போக முடியாது. சொல்லவே முடியாது என்பது தான் உண்மை. அது ஒரு உணர்வு சார்ந்த விடயம். இருந்தும், என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, படித்ததும், கேட்டதும், சிந்தித்ததும் என்று பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. அவ்வளவுதான். 


நம் வீதிகளில் வண்டியில் காய்கறி விற்பவர்கள், பழங்கள் விற்பவர்கள், கீரை விற்பவர்கள் கூவி கூவி விற்பதை கேட்டு இருகிறீர்களா? 


இராகம் போட்டு விற்பார்கள். "கீரேரேரேரேய்ய்ய்ய்" என்று நீட்டி முழக்கி கீரையை விற்பார்கள். அந்த சத்தத்தில் நமக்குத் தெரியும் கீரை வண்டிக்காரர் வந்து இருக்கிறார் என்று. கீரை வேண்டும் என்றால் போய் வாங்கி வரலாம். நாம் கடைக்குப் போக வேண்டியது இல்லை. சாமான்கள் நம் வீடு தேடி வரும். அதை விற்பவரும் ஒரு இடத்தில் அமர்ந்து விற்றால் அவ்வளவாக விற்காது. நாலு தெரு சுற்றி திரிந்து, கூவி விற்றால் நிறைய விற்கும். 


சரி தானே?


மணிவாசகர் சொல்கிறார்.....


ஆண்டவனிடம் வீடு பேறு என்ற சரக்கு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான்?  "எல்லோரும் வாங்க, வந்து வீடு பேறு வாங்கிட்டுப் போங்க" என்று கூவி கூவி அழைத்து கொடுப்பானாம். 


"அப்படியா மணிவாசகர் சொல்லி இருக்கிறார்? இருக்காது. நீங்கள் ஏதோ இட்டு கட்டிச் சொல்கிறீர்கள்" என்று நீங்கள் நினைக்கலாம். 


 "அறைகூவி, வீடு அருளும்"


என்கிறார் பாடலில். சத்தம் போட்டு கூப்பிட்டு கொடுப்பானாம். நீங்கள் எங்கும் போக வேண்டாம். அவனே வந்து, உங்களை கூப்பிட்டு கொடுப்பானாம். 


பரவாயில்லையே. இது கொஞ்சம் புதுமையான விடயம்தான். இருந்தாலும் நல்லா இருக்கு. சரி, அவர் அறை கூவி வீடு பேறு தருவார் சரி. அவர் எப்படி வருவார். நமக்குத் தெரிய வேண்டாமா?


மணிவாசகர் அடையாளம் சொல்கிறார். 


அவருக்கு அழகிய கண்கள் இருக்கும். அந்தணன் வடிவில் வருவார். என்கிறார். 


"அம் கணன், அந்தணன் ஆய்,"


"நல்லது. வீடு பேறு தருவார். வாங்கிக் கொள்ளலாம். பதிலுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? விரதம், பூஜை, தானம், தவம், வழிபாடு இதெல்லாம் ஏதாவது செய்ய வேண்டுமா? நமக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லையே.  நமக்குத் தருவாரா அல்லது அவருடைய சிறந்த பக்தர்களுக்கு மட்டும் தான் தருவாரா? " என்று கேட்டால் 


மணிவாசகர் சொல்கிறார் 


"ஆண்டவனுக்கு நம்மிடம் இருந்து பெற வேண்டியது ஒன்றும் இல்லை. அவனிடம் இல்லாதது நம்மிடம் என்ன இருக்கப் போகிறது. மேலும், நாம் என்ன தான் முயன்றாலும், வீடு பேறு பெறும் அளவுக்கு நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்ய முடியும். ஒரு கவலையும் படாதீர்கள். அவன் நம் தகுதி எல்லாம் பார்ப்பது இல்லை. வருகிறவர்களுக்கு எல்லாம் வீடு பேறுதான்"


"எம் தரமும் ஆட்கொண்டு"


நம்முடைய தரத்துக்கும், நம்மை ஆட்கொண்டு வீடு பேறு தருவான். 


"அது எப்படி முடியும்? நாம் செய்த வினை இருக்கிறதே? அதற்கு இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?"


அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். உங்கள் பிறவித் தொடரை அறுத்து, உங்களுக்கு வீடு பேறு தருவான் என்கிறார். 


"எங்கள் பிறப்பு அறுத்திட்டு"


ஒண்ணும் செய்ய வேண்டாம்னு சொல்றீங்க. அவனே வந்து கூப்பிட்டு கொடுப்பான்னு சொல்றீங்க. பிறவித் தொடரை அறுப்பான்னு சொல்றீங்க. அப்ப நாம என்னதான் செய்யணும். ஒண்ணுமே செய்ய வேண்டாமா என்று கேட்டால்


"இவ்வளவையும் நமக்கு இலவசமாகக் கொடுத்த அவன் கருணையை நினைத்து நன்றியோடு பாடுவோம்" அவ்வளவுதான் நாம் செய்யக் கூடியது என்கிறார். 


மனதை அப்படியே உருக்கும் பாடல். 


அம்மானை என்பது இளம் பெண்கள் சிறு சிறு கற்களை மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டு என்று பார்த்தோம். அதை விளையாட்டும் பெண்களை "அம்மானாய்" என்று சொல்லுவார்கள். 


குழந்தையை "என் இராசா" என்று சொல்லலாம். "என் ராசால்ல , என் செல்லம்ல..." என்றும் கொஞ்சலாம். 


"அம்மானாஆஆய் " என்று செல்லமாக, ,அன்போடு கூப்பிடுவதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். 


பாடல் 




செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும், காண்பு அரிய

பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி,

எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு,

தெங்கு திரள் சோலை, தென்னன் பெருந்துறையான்,

அம் கணன், அந்தணன் ஆய், அறைகூவி, வீடு அருளும்

அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_11.html


(pl click the above link to continue reading)



செம் கண் = சிவந்த கண்களை உடைய 


நெடுமாலும் = உயர்ந்த திருமாலும் 


சென்று = போய் 


இடந்தும் = பூமியை தோண்டியும் 


காண்பு அரிய = காண முடியாத 


பொங்கு = பொலிவுடன் விளங்கும் 


மலர்ப் பாதம் = மலர் போன்ற திருவடிகள் 


பூதலத்தே  = இந்த பூமியிலே 


போந்தருளி, = சென்று அருளி 


எங்கள் பிறப்பு அறுத்திட்டு = எங்களது பிறவித் தொடரை அறுத்து 


எம் தரமும் = எங்களுடைய தரத்தைப் பார்க்காமல், எங்களுக்கு கூட 


ஆட்கொண்டு, = ஆட் செய்து 


தெங்கு திரள் சோலை, = தென்னை மரங்கள் சூழ்ந்த சோலைகள் உள்ள 


தென்னன் = தென்னாட்டவன் 


பெருந்துறையான், = திருபெருந்துறையில் உறைபவன் 


அம் கணன் = அழகிய கண்களை உடைய அவன் 


அந்தணன் ஆய் = அந்தண வடிவில் வந்து 


அறைகூவி,  = கூவி கூவி 


வீடு அருளும் = வீடு பேற்றை அருளும் 


அம் கருணை =அந்தக் கருணை நிறைந்த 


வார் கழலே = கழல் அணிந்த வீரத் திருவடிகளை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவதைப் பார் அம்மானாய் 


இந்தப் பாடலுக்கு பல நுணுக்கமான விளக்கங்கள் சொல்வார்கள். 


திருமால் பன்றி உருவம்  கொண்டு திருவடியை காணச் சென்றார். காண முடியவில்லை. அவ்வளவு பாதளத்தில் இருக்கும் திருவடி எவ்வளவு கரடு முரடாக, கருப்பாக,  உறுதியானதாக இருக்கும்?


அதுதான் இல்லை, "விளங்கும் பொங்கு மலர் பாதம்"  என்கிறார். 


பாதாளத்தில் இருந்தாலும், அது ஒளி பொருந்திய, மலர் போன்ற மென்மையான பாதங்கள். 


ஆனானப்பட்ட திருமாலாலே காண முடியவில்லை என்றால் நாம் எல்லாம் எம்மாதிரம் . நாம் எப்படி காண முடியும் என்ற ஆயாசம் வரும் அல்லவா?


நாம் போக வேண்டாம். அந்த பாதங்களே நம்மை நாடி வரும். 


"பூதலத்தே போயருளி" 


அவரே இங்கு வருவார். 


வந்தவர் "என் பிறப்பை அறுத்து எனக்கு வீடு பேறு தந்தார்" என்று சொல்லவில்லை. 


"எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு"


எங்கள் என்று பன்மையில் குறிக்கிறார்.  நம் எல்லோருக்கும். 


ஐயோ, ,எனக்கு ஒரு தகுதியும் இல்லையே. எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்று நினைத்தால் 


"எம் தரமும் ஆட்கொண்டு"


உங்கள் தரத்தை எல்லாம் அவன் பார்ப்பது இல்லை. அவனுக்கு அந்த பாகுபாடெல்லாம் கிடையாது. 


கண்ணப்பன் என்ற வேடனுக்கு முக்தி கொடுக்கவில்லையா ?


திருநீலகண்டர் என்ற குயவருக்கு முக்தி கொடுக்கவில்லையா?


அவன் தரம் பார்ப்பது இல்லை. 


என்ன, இப்படி ஒரு கடவுளா? அளவு கடந்த கருணை உடையவனாக இருக்கிறானே...அவனுக்கு நாம் என்னதான் செய்வது?



"அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!"


அவ்வளவுதான். 


மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். 


(பதிவு சற்று நீண்டு விட்டது. பொறுத்தருள்க)

Monday, August 8, 2022

திருவாசகம் - திரு அம்மானை - ஒரு முன்னுரை

 திருவாசகம் - திரு அம்மானை  - ஒரு  முன்னுரை 


இளங்கன்று பயம் அறியாது என்று சொல்லுவார்கள். அது போல திருவாசகம் போன்ற மிக உயரிய நூல்களுக்கு நானும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். 


படிக்கப் படிக்க அது மேலும் மேலும் உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. எங்கு நிறுத்துவது, இவ்வளவுதான் என்று அறுதியிட்டு கூற முடியாமல் இருக்கிறது. 


எங்காவது தொடங்க வேண்டுமே....


ஒரு சமுதாயம் இறை உணர்வு உள்ள சமுதாயமாக இருக்க வேண்டும் என்றால் அதில் உள்ள பெண்களுக்கு இறை உணர்வு இருக்க வேண்டும். அவர்கள்தான் பிள்ளை வளர்க்கும் போது அந்த இறை உணர்வை பிள்ளைகளுக்கு இளமையில் இருந்தே ஊட்டுவார்கள். 


தாலாட்டில், உணவு ஊட்டும் போது, குளிப்பாட்டும் போது, கதை சொல்லி தூங்க வைக்கும் போது அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை, கதைகளை சொல்லுவார்கள். அந்த பாடல்களும், கதைகளும் இறை உணர்வு சம்மந்தபட்டதாய் இருந்தால், தங்களை அறியாமலேயே அந்த விதையை அவர்கள் பிள்ளைகள் மனதில் தூவி விடுவார்கள். பிள்ளைகள் அறியாமலேயே அவர்களுக்குள் அது வளர்ந்து வரும். .


பின்னாளில் எத்தனை தத்துவங்கள் வந்து மோதினாலும், அந்த இளம் வயது உணர்வு மிக ஆழமாக இருக்கும். அசைக்க முடியாது. 


சரி, இந்த தேவாரம், திருவாசகம்  போன்றவற்றை பள்ளிக் கூடத்தில் பாட திட்டமாக வைத்து சொல்லிக் கொடுக்க முடியுமா என்றால் அது கடினம். அதுவும் அந்தக் காலத்தில், குருகுல வாசம் உள்ள காலத்தில், பெண் பிள்ளைகளை அனுப்பி பாடம் சொல்லித் தருவது எப்படி?


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


(pl click the above link to continue reading)


பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் அந்தத் தத்துவங்களை எளிய , சந்தம் நிறைந்த பாடல்களாக மணிவாசகர் அமைத்துத் தருகிறார். 


ஊஞ்சல் ஆடும் போதும், பூ கொய்யும் போது , அம்மானை ஆடும் போது என்று பெண்கள் செய்யும் செயல்களோடு பாடல்களை அமைத்துத் தருகிறார் அடிகளார். 


அவர்கள் விளையாட்டுப் போக்கில் அதைப் பாடுவார்கள். நாளடைவில் அது மனப்பாடம் ஆகி விடும். அர்த்தம் தெரியாது. ஆனால் பாட்டு மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும். 


அங்கொன்றும், இங்கொன்றுமாக அர்த்தம் புலப் படத் தொடங்கும். கொஞ்சம் ஆர்வம் பிறக்கும். ஒரு தேடல் வரும். அப்படியே அது அவர்களை நன்னெறியில் இட்டுச் செல்லும். 


என்ன ஒரு ஆழமான சிந்தனை!


அம்மானை என்பது இளம் பெண்கள் மூன்று அல்லது ஐந்து கற்களை வைத்து மேலே தூக்கிப் போட்டு பிடிக்கும் ஒரு வித விளையாட்டு. 


மேலே போன கல் கீழே வருவதற்குள் கீழே உள்ள கற்களை ஏதோ ஒரு விதிப்படி கையில் எடுக்க வேண்டும். அதற்குள் மேலே சென்ற கல் கீழே வரும். அதையும் தரையில் விழாமல் பிடிக்க வேண்டும். 


அதில் ஒரு இலயம் வேண்டும். ஒரு கட்டு வேண்டும். 


மணிவாசகர் அந்த இலயத்தோடு பாடல்களை அமைக்கிறார்.  


அதில் காதல், சிருங்காரம், போன்ற உணர்வுகள் உண்டு. அது அந்தப் பெண்களுக்கு ஒரு உற்சாகத்தைத் தரும். 


அதில் இருந்து அப்படியே பக்திக்குள் கொண்டு செல்லும் இரசவாதம் மணிவாசகர் ஒருவரால் மட்டுமே முடியும். 


அப்படி அமைந்த பத்துப் பாடல்களைக்  சிந்திக்க இருக்கிறோம். 


வாருங்கள். 

Thursday, July 14, 2022

திருவாசகம் - பரிணாம வளர்ச்சி

 திருவாசகம் - பரிணாம வளர்ச்சி 


ஒரு காலத்தில் தமிழ் புலவர்களை திருவாசகத்துக்கு உரை எழுதித் தாருங்கள் என்று சொன்னால் "கடலில் விழுந்து சாகச் சொல்கிறீர்களா....சந்தோஷமாக சாகிறேன்...திருவாசகத்துக்கு உரை எழுத என்னால் முடியாது " என்று சொல்லி ஓடி விடுவார்களாம். 


திருவாசகம் என்பது அப்படிப்பட்ட ஒரு நூல். 


உணர்வு என்றால் உணர்ச்சி கொட்டிக் கிடக்கும் நூல். 


ஞானம் என்றால் ஞானத்தின் உச்சியை தொடும் நூல். 


இது ஏதோ சொல்லுக்கு உரை சொல்லும் கதை அல்ல. 


படிக்கப் படிக்கப் புதுப் புது அர்த்தங்கள் வந்து கொண்டே இருக்கும் ஒரு நூல். இதுக்கு இதுதான் அர்த்தம் என்று சொல்லி விட முடியாது. 


இன்று இப்படித் தோன்றுகிறது. நாளை என்ன தோன்றுமோ? யாருக்குத் தெரியும். 


மணிவாசகரிடமே கேட்டார்கள்...."நீங்கள் எழுதிய இந்த நூலுக்கு என்ன பொருள்" என்று. சிவன் திருவடியைக் காட்டி "இது தான் பொருள்" என்று சொல்லி அதில் ஐக்கியமானார் என்று சொல்லுவார்கள். 


சிவ பெருமான், தானே தன் கையால் எழுதிய நூல் என்பார்கள். ஊழிக் காலத்தில் இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் அழிந்த பின்,தனித்து நிற்கும் இறைவன் தான் வாசிக்க ஒரு நூல் வேண்டும் என்று திருவாசகத்தை தன் கைப்பட எழுதினான் என்று சொல்லுவார்கள். 



பாடல் 


புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,

பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,

கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,

வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!

மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;



https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_63.html


(Please click the above link to continue reading)


நாம் பலமுறை கேட்டது தான். வாசித்தது தான். 


நாம் புல், பூண்டு, புழு இவற்றில் இருந்து வந்தோமா?


சரி, ஏதோ ஒரு பரிணாம வளர்ச்சியில் வந்தோம் என்று வைத்துக் கொள்வோம். இன்றைய அறிவியலும், டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றி கூறும் போது நாம் ஒரு செல் நுண்ணுயிரிகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதர்களானோம் என்கிறது. 


ஆனால், கல்லாய் என்கிறார் மணிவாசகர். கல்லில் இருந்து நாம் வந்தோமா?


உயிரற்ற கல்லில் இருந்து எப்படி உயிர் வந்திருக்கும்? 


அறிவியலில் விடை இல்லை. 


ஒரு எளிய உயிரில் இருந்து ஒரு சிக்கலான உயிர் வருவதை அறிவியல் ஏற்றுக் கொண்டுள்ளது. 


உயிரற்ற ஒன்றில் இருந்து உயிர் வருமா?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இந்த பிரபஞ்சம் தோன்றி, நட்சத்திரங்கள் தோன்றி, ,பின் கோள்கள் தோன்றின. 


நம் பூமியும் அப்படி பிறந்த ஒன்று தான். முதலில் வெறும் தூசியாக இருந்து, ,பின் அவை ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்பட்டு, ஒன்றாகி ஒரு பெரிய பாறையாகி, இந்த பூமி உண்டானது. அந்தப் பாறையின் மேல் அமில மழை, வெயில் காற்று என்று மாறி மாறி தாக்கி அது மணலானது. அதில் இருந்து புல் முளைத்தது என்று நாம் அறிகிறோம். 


முதலில் பாறைதான் இருந்தது. அது வெடித்து, துகளாகி, மணலாகி, அதில் இருந்து தாவரங்கள், மற்றும் பிற உயிர்கள் தோன்றின. 


எனவே, எல்லாம் கல்லில் இருந்துதான் வந்தது. 


மணிவாசகர் சொல்லும் வரிசையில் அவை தோன்றவில்லை. மணிவாசகரும் அப்படிச் சொல்லவில்லை. 


இதற்கு முன்னால் அவையெல்லாம் ஆக இருந்தேன் என்கிறார். அந்த வரிசையில் வந்தேன் என்று சொல்லவில்லை. 


நாம் மனிதர்களாக பிறப்பதற்கு முன்னால் கல்லாகத்தான் இருந்தோம். நம்மை எல்லாம் "star dust" என்று கூறுவார்கள். நட்சத்திர தூசிகள் நாம். 


மணிவாசகருக்கு இந்த உலகம் எப்படி உருவானது என்று தெரியுமா? 


இப்படி ஒரு சிந்தனை அவருக்கு எப்படி வந்தது? 


நம் அறிவியல் ஓர்செல் உயிரில் இருந்து மனிதன் வரை எப்படி உயிர்கள் வளர்ந்தன என்று சொல்கின்றன. 


குரங்கில் இருந்து மனிதன். 


மனிதனில் இருந்து? 


அடுத்து என்ன? தெரியாது.


மணிவாசகர் சொல்கிறார் 



"மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,

வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,"


பரிணாம வளர்ச்சி என்றால் அது மனிதனோடு ஏன் நிற்க வேண்டும்? 


மணிவாசகர் மனிதாராக இருந்து இந்தப் பாடலை எழுதி இருக்கிறார். 


ஆனால்,பேயாகவும் அசுரராகவும், முனிவராகவும், தேவராகவும் இருந்தேன் என்கிறார். 


அதாவது, பரிணாமம் கீழ் நோக்கியும் போகும் என்கிறார். 


தேவராக இருந்து மனிதராக ஆகி, ,பின் புல் பூண்டு கல்லாகவும் முடியும் என்கிறார். 


நாம் பல கதைகளில் படிக்கிறோம். தேவர்கள், கந்தர்வர்கள் சாபம் பெற்று மனிதராக, விலங்குகளாக பிறக்கிறார்கள் என்று படிக்கிறோம். 


கல்லாய் போகும் படி அகலிகை சபிக்கப் பட்டாள் என்று படித்து இருக்கிறோம் அல்லவா. கல் பின் பெண்ணானது. 


"முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக"


என்று இரண்டு தீயவர்களை கவுந்தி அடிகள் சபித்தார் என்று சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம்.  


மனிதர்கள் விலங்காகப் போனதற்கு அது ஒரு கதை. .


திருவாசகத்தை எப்படிப்  புரிந்து கொள்வது? 


படித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். தெரிய வரும் நேரத்தில் தெரியும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 







Saturday, June 11, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - இது செய்மின், இன்றே

திருவாசகம் - யாத்திரைப் பத்து - இது செய்மின், இன்றே 


ஆன்மீகம் சிலசமயம் குழப்பமாகவும், தெளிவற்று மயக்கம் தருவதாகவும் தோன்றும். 


ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறும் கூட்டம். 


இன்னொரு பக்கம் கடவுள் இருக்கிறார் ஆனால் எங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள் எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை என்று கூறும் மதங்கள் ஆயிரம். என் கடவுள் முக்தி தருவார், என் கடவுள் இறுதித் தீர்ப்பு தருவார், என்று ஆளாளுக்கு தங்கள் மதம், கடவுள் பற்றிக் கூறுகிறார்கள். இதில் எது சரி, எது தவறு என்று எப்படி கொள்வது? 


நாம் பிறந்த ஒரே காரணத்தால் என் மதம் உயர்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? 


சரி கடவுள் கூட ஒருவர்தான் என்று ஏற்றுக் கொண்டாலும், அவரை அடையும் வழி எது தெரிய மாட்டேன் என்கிறது. 


மதங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் ஒரு புறம் இருக்கட்டும்.  இந்து மதத்தின் உள்ளே கூட பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம்  என்று பலவிதமான மார்க்கங்கள் இருக்கின்றன. எதை கொள்வது. எதைத் தள்ளுவது என்று புரியாமல் குழப்பம் வரும். 


சரி ஏதோ ஒரு கடவுள், ஏதோ ஒரு மார்க்கம் என்று முடிவு செய்து விட்டால் கூட, அதில் போக எங்கே நேரம் இருக்கிறது?  வீடு, வேலை,  சம்பாத்யம்,  பொழுது போக்கு, உடல் ஆரோக்கியம் என்று ஒவ்வொரு நாளும் போய் விடுகிறது.  


இதில் எங்கே ஆன்மீகத்தில் ஈடுபட எங்கே நேரம் இருக்கிறது? 


இப்படி எல்லாம் குழப்பம் வரும் என்று மணிவாசகருக்குத்  தெரியும். 


" பக்தி செய்யும் பக்தர்களுக்குள் இன்றே வந்து சேராமல், மயக்கம் கொண்டவர்களே, பின்னாளில் நீங்கள் துன்பப்படும் போது உங்களை யார் மதிக்கப் போகிறார்கள்? உங்கள் குழப்பம் தெளிய வேண்டும் என்றால், ஒன்று செய்யுங்கள், சிவலோகத்து அதிபன், பாம்பணிந்த கைகளை கொண்டவனை அடையாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறீர்கள். ஐயோ, ஐயோ, ஐயோ "


என்று பதறுகிறார். 


பாடல் 


 புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர்,

மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்;

தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன்

அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_11.html


(please click the above link to continue reading)



 புரள்வார் = தரையில் கிடந்து புரள்வார் 


தொழுவார் = வணங்குவார் 


புகழ்வார் = போற்றுவார் 


 ஆய் = ஆகி 


இன்றே வந்து = இன்றே வந்து 


ஆள் ஆகாதீர், = ஆட்படாமல் 


மருள்வீர் = மயக்கம் கொள்வீர்கள் 


பின்னை = பின்னாளில் 


மதிப்பார் ஆர்? = உங்களை யார் மதிக்கப் போகிறார்கள் 


மதியுள் கலங்கி = புத்தி குழம்பி 


மயங்குவீர்; = மயக்கம் கொண்டு 


தெருள்வீர் ஆகில் =அதில் இருந்து தெளிவு அடைய விரும்பினால் 


இது செய்மின் = இதைச் செய்யுங்கள் 


சிவலோகக் கோன் = சிவலோகத்து அதிபன் 


திருப்புயங்கன் = பாம்பணிந்த கைகளை கொண்டவன் 


அருள் ஆர் பெறுவார் = அருளை வேறு யார் பெறுவார்கள் ?


அகல் இடத்தே? = வேறு இடத்தில் 


அந்தோ! அந்தோ! அந்தோவே! = ஐயோ, ஐயோ, ஐயோவே 


படித்துக் கொண்டே இருந்தால், சிந்தித்துக் கொண்டே இருந்தால் இருக்க வேண்டியதுதான்.  குழப்பம்தான் மிஞ்சும். 


அவனை அறிவு கொண்டு காண முடியாது. 


அறிவு ஏற ஏற புரளுதலும், தொழுதலும் நிகழ்வது கடினமாகிப் போகும். அறிவு தடுக்கும்.  "தரையில் கிடந்து புரள்வதா?" என்று அறிவு தடுக்கும். 


ஆனால், புரண்டும், தொழுதும், போற்றியும் எளிதாக இறைவனை அடையலாம்.  அதை விட்டு விட்டு, ஏதேதோ செய்து கொண்டிருகிரீர்களே, ஐயோ, ஐயோ, ஐயோ என்று  பச்சாதப் படுகிறார் மணிவாசகர். 


இதெல்லாம் செய்ய நாள் கிழமை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. 


"இன்றே இதைச் செய்மின்" என்கிறார். 


இந்தப் பாடலோடு யாத்திரைப் பத்தில் உள்ள பத்து பாடல்களையும் நாம் பார்த்து விட்டோம். 


வாசித்தமைக்கு நன்றி. 



Saturday, May 7, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய்யில் கிடந்து புரளாதே

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய்யில் கிடந்து புரளாதே 


இறைவன் திருவடிகளை அடைய வேண்டும் விரும்பாத பக்தர்கள் யார் இருக்கிறார்கள். ஆசை இருக்கிறது. எப்படி என்ற வழி தான் தெரியவில்லை. அவர் செய்தார், இவர் செய்தார் என்று அதையே செய்து பார்கிறார்கள். யாருக்கோ எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டுக்கு மருந்து வாங்கி சாப்பிட்டால் என் நோய் குணமாகுமா? அவருக்கு ஆனதே என்றால் அவர் உடல் நிலை வேறு, என் உடல் வேறு. .உடலே அப்படி இருக்கும் போது, ஆன்மாவின் பக்குவம் வேறு வேறாகத்தானே இருக்கும். எல்லோருக்கும் ஒரே வழி எப்படி சரியாக் இருக்க முடியும். 


மணிவாசகர் கூறுகிறார் 


"இறைவன் திருவடியை அடைய வேண்டுமா? நான் போகிற பாதையில் வாருங்கள் என்று சொல்லவில்லை. முதலில் உங்கள் சிந்தனைகளை முதலில் திருத்துங்கள். அதை சரி பண்ணுங்கள். அப்புறம், அவன் திருவடியையே எப்போதும் நினையுங்கள். எப்பவாவது, நேரம் கிடைக்கும் போது அல்ல. எப்போதும். இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க. இந்த பொய்யான விடயங்களை விட்டு விடுங்கள்" என்கிறார். 


பாடல் 




 சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்;

போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம்

ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்!

போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_40.html


(Pl click the above link to continue reading)


சேரக் கருதி = [இறைவன் திருவடிகளை] சேரக் கருதி 


சிந்தனையைத் = சிந்தனையை 


திருந்த வைத்து = திருத்தமாக வைத்து 


சிந்திமின் = சிந்தியுங்கள். இது மிக முக்கியம். முன்னோர் சொன்ன வழியில் போங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் சிந்தியுங்கள் என்கிறார். 


போரில் பொலியும் வேல் = போர்க் களத்தில் போராடி அதனால் கூரான வேல் போன்ற 



 கண்ணாள் = கண்களை உடைய உமா தேவியின் 


பங்கன் = பாதி இடமாகக் கொண்டவன் 


புயங்கன் = பாம்பை அணிந்தவன் 


அருள் அமுதம் = அவனுடைய அருளாகிய அமுதத்தை 


ஆரப் பருகி = நன்றாகப் பருகி 


ஆராத ஆர்வம் கூர = தீராத தாகம் கொண்டு ஆர்வத்துடன் 


அழுந்துவீர்! = அதிலேயே இலயித்து கிடப்பீர் 


போரப் புரிமின் = அடைய விரும்புங்கள் 


சிவன் கழற்கே = சிவன் திருவடிகளையே 


பொய்யில் கிடந்து புரளாதே. = பொய்யில் கிடந்து புரளாதே 


சிந்தி சிந்தி என்றால் எதைச் சிந்திப்பது?


உமை பங்கனை சிந்தியுங்கள் என்கிறார். 


ஏன் உமை பங்களை சிந்திக்க வேண்டும்?


நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், ஒரு போதும் முழுமையான ஒருவராக இருக்க முடியாது. நீங்கள் ஆணாக இருந்தால், பெண் குணங்கள் உங்களுக்குள் அழுத்தி வைக்கப் பட்டு இருக்கிறது. மறைந்து கிடக்கிறது. 


பெண்ணுக்குள் ஆணின் தன்மை அழுத்தி மூடி மறைக்கப் பட்டு இருக்கிறது. 


மறைந்த அந்தத் தன்மை வெளியில் வரும் வரை நீங்கள் முழு மனிதராக முடியாது. 


அழுத்தி வைக்கப் பட்டு இருப்பது வெளியே வர போராடும். வெளியே வர விடாமல் ஏதோ ஒன்று அதை அமுக்கி வைத்துக் கொண்டே இருக்கும். இந்தப் போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். ஓயாத போர் இது. 


இரண்டும் ஒன்றாகக் கலந்தால் தான் சிந்தனையில் அமைதி பிறக்கும். தெளிவு வரும். இறை அனுபவம் சாத்தியப் படும். 


எனவே தான் உமை ஒரு பங்கனை சிந்தியுங்கள் என்றார். 


சிந்திக்க சிந்திக்க உங்களுக்குள் மறைந்து கிடக்கும் உணர்வுகள் வெளி வரும். ஆண், ஆணாகவோ, அல்லது பெண், ஒரு பெண்ணாகவோ இருந்தது எல்லாம் பொய். வெளி வேடம். அது உண்மை அல்ல. அதிலேயே கிடந்து புரண்டு கொண்டு இருக்காதீர்கள். 


ஆணுக்குள் ஒளிந்து கிடக்கும் பெண் வெளியே வருகிறாளோ அன்று தான் அவன் முழு மனிதனாவான். 


பெண்ணுக்கும் அப்படியே. 


இறைவனை அடைவதில் முதல் படி அது. 


நீண்ட யாத்திரையின் முதல் அடி அது. 








Monday, April 18, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - அம்மா என்று அழுது

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - அம்மா என்று அழுது 


இருக்கின்ற நேரத்தை எல்லாம் ஏதேதோ செய்து கழித்து விட்டு, கடைசிக் காலத்தில், ஐயோ, அம்மா காலம் எல்லாம் போய் விட்டதே ...ஏதேதோ வெட்டிக் காரியங்கள் செய்து பொழுதைப் போக்கி விட்டேனே...இப்ப என்ன செய்வது" என்று கண் கலங்கி இருந்தால் என்ன செய்ய முடியும்?  


இறுதிக் காலம் என்று ஒன்று எல்லோருக்கும் வரும்தானே?  அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அது வருவதற்கு முன் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செய்து விட வேண்டாமா? 


நல்ல காரியங்களை எப்போது செய்வது? நம் இறுதிக் காலம் நாளை வரலாம், அடுத்த வாரம், அடுத்த மாதம், வருடம், பத்து இருபது வருடம் கழித்து...எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்னும் நாள் நிறைய இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. எனவே, இன்றே ஆரம்பித்து விட வேண்டும். 


நாளை ஆரம்பிப்பதை விட இன்று ஆரம்பித்தால் ஒரு நாள் கூடக் கிடைக்கும்தானே? 


ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்க எவ்வளவு நாள் ஆகும்?


பரீட்சை யில் தேற வேண்டுமா ஒரு ஐந்து அல்லது ஆறு வருடம் ஆகலாம், நல்ல வீடு வாங்கு வாங்க வேண்டுமா ஒரு பத்து வருடம் ஆகலாம். காரியம் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்ததோ, அந்த அளவுக்கு அது கடினமானதும் கூட. 


நூறு ம் மீட்டர் ஓடப் பழக வேண்டுமானால் ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் பழகி விடலாம். மாரத்தான் ஓடப் பழக வேண்டும் என்றால் எவ்வளவு நாள் ஆகும்? நூறு கிலோ மீட்டர் ஓடுவது என்றால், ஆயிரம் கிலோமீட்டர் ஓடுவது என்றால்? 


சொர்கத்துக்குப் போக வேண்டும் என்றால்? இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்றால்? எளிதான காரியமா? எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியை தள்ளிப் போடலாமா? இன்றே தொடங்க வேண்டாமா? அப்புறம் அழுது ஒரு புண்ணியமும் இல்லை. 


அடுத்தப் பிறவியில் என்னவாகப் பிறப்போமோ? மீண்டும் திருவாசகம் படிக்கும் வாய்ப்பு இருக்குமோ இல்லையோ. யாருக்குத் தெரியும். 


இதெல்லாம் நான் சொல்லவில்லை. மணிவாசகர் சொல்கிறார். 


பாடல் 




பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள்,

அரு மால் உற்றுப் பின்னை நீர், அம்மா! அழுங்கி அரற்றாதே,

திரு மா மணி சேர் திருக் கதவம் திறந்தபோதே, சிவபுரத்து,

திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத் தாள் சென்று சேர்வோமே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_18.html



(please click the above link to continue reading)



பெருமான் = பெருமான், சிவன் 


பேர் ஆனந்தத்துப் = பெரிய ஆனந்ததில் 


பிரியாது இருக்கப் பெற்றீர்காள் = எப்போதும் பிரியாமல் இருக்கப் பெற்றீர்கள் 


அரு மால் உற்றுப்  = அதன் அருமையை உணர்ந்து 


 பின்னை நீர் = பின்நாளில் நீங்கள் 


அம்மா! அழுங்கி அரற்றாதே, = அம்மா ! என்று அழுது அரற்றாமல் 


திரு மா மணி சேர்  = பெரிய மணிகள் கொண்ட 


 திருக் கதவம்  = கோவிலின் கதவுகள் 


திறந்தபோதே, = திறந்த போது 


சிவபுரத்து = சிவபுரத்தின் கோவில் கதவு திறந்த போது 


திருமால் அறியாத் = திருமால் அறியாத 


திருப் புயங்கன் = பாம்பை அணிந்த 


திருத் தாள் = திருவடிகளை 


சென்று சேர்வோமே. = சென்று சேர்வோமே 


இந்தப் பாடலின் நேரான அர்த்தத்தை மேலே பார்த்து விட்டோம். 


சில மறைமுகமான அர்த்தங்களை தெளிந்து கொள்வது நல்லது. 


இந்த சைவ வைணவ பகை என்பது மிக ஆழமானது. எல்லோர்க்கும் அவர்கள் கடவுள் பெரியவர் என்று சொல்லிக் கொள்ளவே ஆசையாக இருக்கும். அது தவறு இல்லை. அதற்காக மற்ற கடவுள்களை மட்டம் தட்ட வேண்டியது இல்லை. 


என் அம்மா எனக்கு அழகு என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அதற்காக அடுத்தவனின் அம்மா அவலட்சணம் என்று ஏன் சொல்ல வேண்டும். 


ஏதோ அடிமட்ட பக்தர்கள் அறியாமையில், அதீத பக்தியில் சொல்லி விட்டார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஒருவருக்கு ஒருவர் மற்ற தெய்வத்தை குறை சொல்லி பாடியது மாதிரியே இருக்கும். 


இங்கும் கூட, "திருமால் அறியா" என்று ஒரு இடம் வருகிறது. 


பழைய கதை. திருமாலும், பிரமனும் சிவனின் அடி முடி தேடிச் சென்றார்கள், காண முடியவில்லை. எனவே, சிவன் எவ்வளவு பெரியவர் என்று சைவர்கள் கூறிக் கொள்வார்கள். 


மணிவாசகர் சொல்வாரா? ஞானத்தின் உச்சம் தொட்டவர். 


என்ன அர்த்தம்?


திருமால், திருமகளை மணந்தவர். 


பிரம்மா, கலைமகளை மணந்தவர். 


செல்வத்தாலும், கல்வி அறிவாலும் இறைவனைக் காண முடியாது.  பக்தி ஒன்றினாலேயே அவனை அடைய முடியும் என்று சொல்லுவதற்காக வந்த கதை அது. 


என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. தான தர்மம் செய்கிறேன், கோவில்களுக்கு நன்கொடை தருகிறேன். எனவே எனக்கு முக்தி கிடைக்கும் என்று நினைக்கக் கூடாது. 


எவ்வளவு படித்து இருக்கிறேன். தேவாரம், திருவாசகம், பிரபந்தம், வேதம், உபநிடதம் எல்லாம் கரைத்துக் குடித்து இருக்கிறேன். எனக்கு வீடு பேறு கட்டாயம் என்று நினைக்கக் கூடாது. 


அது ஒரு செய்தி. 


"திருக் கதவம் திறந்த போதே" என்றால் கோவில் கதவு திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே போக வேண்டும் என்று அர்த்தம் அல்ல. 


அந்தக் கதவு எப்போதும் திறந்து தான் இருக்கும். 


நமக்கு போக நேரம் இருக்காது. நேரம் இருக்கும் போது உடல் ஒத்துழைக்காது. 


எப்படியும் போக முடியாமல் போகும். 


எனவே, இப்பவே அந்த வேலையை தொடங்கி விடுங்கள். இறைவனை நாடும் அந்த வேலையை இன்றே தொடங்கி விடுங்கள். 


ICU வில் படுத்துக் கொண்டு, drips ஏறும் போது, கண் கலங்கி, விட்டதைப் பார்த்து அழுது ஆகப் போவது என்ன?


பருவத்தே பயிர் செய்ய வேண்டும். 




Wednesday, April 6, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - நிற்பார் நிற்க

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - நிற்பார் நிற்க 


நமக்கு ஒரு ஊருக்குப் போக வேண்டும். 


வண்டி ஒரு குறித்த சமயத்தில் கிளம்பி விடும். காலாகாலத்தில் வீட்டை விட்டு கிளம்பினால் தான் வண்டியை பிடிக்க முடியும். ஊர் போய் சேர முடியும். 


இன்னும் நேரம் இருக்கு, இன்னும் நேரம் இருக்கு என்று காலம் தாழ்த்திக் கொண்டே போனால், வண்டியைக் கோட்டை விட்டு விடுவோம் அல்லவா?


சரி, வண்டியைப் பிடிச்சாச்சு. போற வழியில், ஒரு டீ குடித்துவிட்டுப் போகலாம் என்று வண்டியை நிறுத்துகிறோம். கொஞ்ச நேரம் போகிறது. 


இன்னும் கொஞ்ச தூரம் போன பின், போற வழிக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டு போனால் என்ன. படிசுகிட்டே போகலாமே என்று ஒரு புத்தகக் கடையில் வண்டியை நிறுத்துகிறோம். 


அப்புறம்,  துணி வாங்க.  shoe பாலிஷ் போட என்று அங்கங்கே நிறுத்தி போனால் என்ன ஆகும்? வண்டி போய் விடும் அல்லவா?


போனால் என்ன? அடுத்தவண்டியில் போனா போச்சு என்று நினைக்கலாம். 


ஒரு வேளை வேற வண்டியே இல்லாவிட்டால்? இப்போது உக்ரைன் நாட்டில் சண்டை நடக்கிறது. மக்கள் அந்த நாட்டை விட்டு அருகில் உள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுகிறார்கள். அப்படி நாட்டை விட்டு போகிறவர்களை கூட்டிக் கொண்டு போக வண்டி இருக்கிறது. ஒரு வண்டியை விட்டால் அடுத்து எப்போது வண்டி வரும் என்று தெரியாது. அதற்குள் வேறு என்னவெல்லாம் நடக்கும் என்றும் தெரியாது. 


நம் பிறவியும் அப்படித்தான். வீடு பேறு என்ற இடத்துக்குப் போக வேண்டும். 


அதற்கு வழி பார்க்காமல், பராக்கு பார்த்துக் கொண்டு இருக்கிறோம். கல்யாணம், பிள்ளை, கணவன்/மனைவி, சொத்து, உறவு, சினிமா, whatsaap என்று பொழுதை போக்கிக் கொண்டு இருக்கிறோம். 


வண்டி போய் விடும். உயிர் ஒரு நாள் போய் விடும். உடம்பில் வலு போய்விடும். அப்புறம் எழுந்தால் உட்கார முடியாது. உட்கார்ந்தால் எழ முடியாது நேத்து படித்தது இன்று மறந்து விடும். 


ஒரு அவசரம் வேண்டாமா?


அவங்கள்ளெல்லாம் போகலையே, அவங்களும் அதே ஊருக்குதான போகணும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் இருக்க வேண்டியது தான். 


பாடல் 


நிற்பார் நிற்கநில் லாஉலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே

பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே

நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்

பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெம்மானே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_63.html


(pl click the above link to continue reading)



நிற்பார் நிற்க = யாத்திரைக்கு புறப்படமால், நிற்பவர்கள் நிற்கட்டும் 


நில் லா உலகில் = நிலை இல்லா இந்த உலகில் 



நில்லோம் = நான் நிற்க மாட்டோம் 


இனி நாம் செல்வோமே = இனிமேலாவது செல்லத் தலைப் படுவோம் 



பொற்பால்= அழகால் 


ஒப்பாந் திருமேனிப் = தனக்குத் தானே ஒப்புமை உடைய மேனியை உடைய 


புயங்கன் = பாம்பை அணிந்த கைகளை உடையவன் 


ஆள்வான் பொன்னடிக்கே = நம்மை ஆள்பவன் திருவடிகளுக்கே 


நிற்பீர் = வரிசையில் நிற்பீர் 


எல்லாந் தாழாதே = காலம் தாழ்த்தாமல் 


நிற்கும் பரிசே = நீங்கள் நினைத்து நின்ற பரிசே 


 ஒருப்படுமின் = ஒன்றாக வாருங்கள் 


பிற்பால் = அப்புறம் 


நின்று = வராமல் நின்று 


பேழ்கணித்தால் =  வருந்தினால் 


பெறுதற் கரியன் பெம்மானே. = பெறுவதற்கு அரியவன் அவன் 



சும்மா, காலத்தை விரயம் பண்ணிக் கொண்டு இருக்காதீர்கள் . உடனே புறப்படுங்கள் என்கிறார் மணிவாசகர். 



Sunday, February 27, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - காலம் இனி இல்லை

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - காலம் இனி இல்லை 


எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம், ஏதோ பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கப் போவது போல. 


இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், என்று பலப் பல காரியங்கள். முக்கியமானவற்றை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். 


இந்த சில்லறை வேலைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு பெரிய வேலை பார்க்க நினைக்கும் போது நாள் ஓடி இருக்கும். நாமே இருக்க மாட்டோம். இருந்தாலும், மனத்திலும், உடலிலும் வலு இருக்காது. 


எனவே, மனமும், உடலும் உறுதியாக இருக்கும் போது முக்கியமான காரியங்களை செய்து விட வேண்டும். சில்லறைக் காரியங்களை செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை. 


நாம் முக்கியமான காரியங்களை செய்ய விடாமல் நம்மை தடுப்பது எது?


கோபமும், ,காமமும். 


காமம் புரிகிறது. கோபம் எப்படி காரணம் ஆகும்? கோபம் என்றால் முகம் சிவக்க, உதடு துடிக்க, வார்த்தைகள் அனல் போல கொட்ட, சாமான்களை தூக்கி அடிக்கும் செயல் மட்டும் அல்ல. 


சத்தமே போடாமல், யார்மேலும் எரிந்து விழாமலும் கோபம் கொள்ளலாம். 


நம் மேலேயே நமக்கு கோபம் வரும் சில சமயம். 


நம் இயலாமையை நினைத்து, நம் உறுதி அற்ற தன்மையை நினைத்து, நம்முடைய பலவீனங்களை நினைத்து கோபம் வரலாம். 


கோபத்தால் சிந்தனை தெளிவு மாறும். தவறான முடிவுகள் எடுக்க வேண்டி வரும். பின் அதைச் சரி செய்ய மேலும் கால விரயம் ஆகலாம்.  


கோபம் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். 


இதுகெல்லாம் நேரம் இல்லை. இதை எல்லாம் விட்டு விட்டு வாருங்கள்.  சிவலோகத்தின் கதவு சாத்தப்படும் முன், சீக்கிரமாக போய் சேர்வோம் என்று அந்த பயணத்துக்கு நம்மை அழைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை. 


பாடல் 





விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை;

உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்;

அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே;

புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_27.html


(click the above link to continue reading)



விடுமின் = விட்டு விடுங்கள் 


வெகுளி = கோபம் 


வேட்கை நோய் = காம நோய், ஆசை என்ற நோய் 


மிகவே = ரொம்ப 


காலம் இனி இல்லை; = காலம் இனி இல்லை. இருந்த காலம் எல்லாம் போய் விட்டது. 


உடையான் = நம்மை உடையவன் (சிவன்) 


அடிக்கீழ் = திருவடியின் கீழே 


பெரும் சாத்தோடு = பெரிய கூட்டத்தோடு 


உடன் போவதற்கே = ஒன்றாக போவதற்கு 


ஒருப்படுமின்; = ஒன்றாக வாருங்கள் 


அடைவோம் = கட்டாயம் அடைவோம் 


 நாம் போய்ச் = நாம் போய் 


சிவபுரத்துள் = சிவபுரத்துள் 


அணி = அணிகலன்கள் கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்ட 


ஆர் கதவு = பெரிய கதவு 


அது அடையாமே; = அது அடை படுவதற்கு முன் 


புடைபட்டு  = நீக்கமற எங்கும் நிறைந்த 


உருகிப் போற்றுவோம் = உருகி போற்றுவோம் 


புயங்கன் = பாம்பை அணிந்த கரங்களை உடைய அவன் 


 ஆள்வான் = நம்மை ஆழிபவன் 


புகழ்களையே. = புகழைப் (போற்றுவோம்)


போகும் இடத்துக்கு வழி தேடுவதுதானே முக்கியமான வேலை. 


ஏதோ ஒரு காரணமாக வெளியூர் போய் இருக்கிறோம். வேலை முடிந்து எப்படி பழையபடி ஊர் போய் சேர்வது என்று சிந்திக்க வேண்டாமா? வந்த இடத்தில் சுத்திக் கொண்டு இருந்தால் எப்படி ஊர் போய் சேர்வது? 


இந்த உலகில் நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக வந்து இருக்கிறோம். 


எப்படியும் ஒரு நாள் போகத்தான் வேண்டும். நிரந்தரமாக இங்கே இருக்க முடியாது. 


எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்ல வழியை ஆராய வேண்டாமா?


யாத்திரைப் பத்து. 


நம் பயணம் தொடர வேண்டும். எங்கு எப்படி என்று மணிவாசகர் சொல்கிறார். 




Thursday, February 17, 2022

திருவாசகம் - குயிற் பத்து - மணிவாசகர் பாடிய மண்டோதரி

 திருவாசகம் - குயிற் பத்து - மணிவாசகர் பாடிய மண்டோதரி 


இது என்ன புதுக் கதை. 


மணிவாசகர் எதற்காக மண்டோதரியைப் பற்றி பாட வேண்டும்? 


ஒரு முறை மண்டோதரி சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தாள். சிவனும் அவளுக்கு காட்சி தந்தார். "என்ன வரம் வேண்டும்" என்று கேட்ட போது, "பெருமானே நீ குழந்தையாக வேண்டும். நான் உன்னை எடுத்து பிள்ளை போல் கொஞ்ச வேண்டும்" என்று வரம் கேட்டாள்.  அவளின் தாய்மை அப்படி. இறைவனையே குழந்தையாக பார்த்தது.


சிவனும், அவளுக்கு அந்த வரத்தைத் தந்தார். அவள் குழந்தை வடிவான சிவ பெருமானை எடுத்து கொஞ்சி மகிழ்ந்தாள் என்பது ஒரு கதை. 


அதை மணிவாசகர் குறிப்பிடுகிறார். 


"இந்த அழகிய உலகம் போற்றும் படி, நினைத்த உருவத்தை எடுக்கும் கடல் சூழ்ந்த இலங்கை வேந்தன் மனைவி மண்டோதரிக்கு பேரருள் இன்பம் அளித்த திருபெருந்துறை என்ற தலத்தில் எழுந்து அருளி இருக்கும் சிவனை, குயிலே நீ அவன் பெயரைச் சொல்லிக் கூவுவாய்" என்கிறார். 



பாடல் 


ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாம்

ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்

பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்

சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_17.html


(please click the above link to continue reading)


ஏர்தரும் = அழகிய 


ஏழுல கேத்த = ஏழு உலகும் போற்ற 


எவ்வுரு வுந்தன் னுருவாம் = எந்த உருவும் தன் உருவமாய் ஆக்கிக் கொள்ளும் 


ஆர்கலி  = கடல் 


சூழ் = சூழ்ந்த 


தென் னிலங்கை  = தென் புறம் உள்ள இலங்கை 


அழகமர் வண்டோ தரிக்குப் = அழகு குடி கொண்டிருக்கும் மண்டோதரிக்கு 


பேரரு ளின்ப மளித்த = பேரருள் இன்பம் அளித்த 


பெருந்துறை மேய = திருப்பெருந்துறையில் உள்ள சிவனை 


பிரானைச் = என்னைப் பிரியாதவனை 


சீரிய வாயாற் = உன் சிறந்த வாயால் 


குயிலே = குயிலே 


தென்பாண்டி நாடனைக் கூவாய்.  = தென் பாண்டி நாட்டானை (வரக்) கூவுவாய் 


நாமெல்லாம் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்போம். 


மண்டோதரி, இறைவனை பிள்ளை போல் கொஞ்ச வேண்டும் என்று ஆசைப் பட்டாள். இறைவனை அப்படியே கொஞ்ச முடியுமா? எனவே அவனை பிள்ளையாக்கி கொஞ்சி மகிழ்ந்தாள். 


காரைக்கால் அம்மையாரை சிவ பெருமான் "அம்மை" என்று அழைத்தார். 


இங்கே, மண்டோதரி தாயாகி சிவனை கொஞ்சினாள்.


தாய்மைக்கு இணை ஏது? 


Wednesday, February 16, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - விளையாட்டை விடுமின்

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - விளையாட்டை விடுமின் 


நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, மாலையில் விளையாடப் போவோம். விளையாட்டு மும்முரத்தில் நேரம் போவது தெரியாது. அப்போது, அம்மா வந்து "விளையாடினது போதும், விளக்கு வைக்கும் நேரம், வந்து கை கால் முகம் கழுவி படிக்க உக்காரு" என்று கூப்பிடுவாள். 


நாமும், இந்த உலகில் ஏதோ விளையாட்டாகத் தொடங்கினோம். ஒன்றில் இருந்து மற்றொன்றாக விளையாட்டு போய்க் கொண்டே இருக்கிறது. நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறோம். இரவு நெருங்குகிறது. விளையாட்டை நிறுத்திவிட்டு வேலையைப் பார்க்க வேண்டாமா? 


மணிவாசகர் அழைக்கிறார். "போதும் விளையாடியது. அடியவர்களாகிய நீங்கள், இந்த உலக விளையாட்டை விட்டுவிட்டு, இறைவன் திருவடியை அடைந்து, அவன் உளக் குறிப்பை அறிந்து அதன் படி நடவுங்கள். துன்பத்துக்கு இடமான இந்த உடலை விடுத்து, நம்மை சிவலோகம் கொண்டு செல்லும், அந்த பாம்பை அணிந்தவனது திருவடிகளை சரண் அடையுங்கள்" என்கிறார். 



பாடல் 




அடியார் ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை;

கடி சேர் அடியே வந்து அடைந்து, கடைக்கொண்டு இருமின் திருக் குறிப்பை;

செடி சேர் உடலைச் செல நீக்கி, சிவலோகத்தே நமை வைப்பான்

பொடி சேர் மேனிப் புயங்கன் தன், பூ ஆர் கழற்கே புகவிடுமே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_16.html


(Please click the above link to continue reading)


அடியார் ஆனீர் எல்லீரும் = அடியவர்களான நீங்கள் எல்லோரும் 


அகலவிடுமின் = தூர தள்ளிப் போடுங்கள் 


விளையாட்டை = விளையாட்டை 


கடி சேர் அடியே = சிறந்த திருவடிகளை 


வந்து அடைந்து = வந்து அடைந்து 


கடைக்கொண்டு இருமின் = கடைசி வரை பற்றிக் கொண்டு இருங்கள் 


திருக் குறிப்பை = எதை? அவன் உள்ளக் குறிப்பை 


செடி சேர்  உடலைச் = துன்பத்துக்கு இடமான இந்த உடலை 


செல நீக்கி = விட்டு நீங்கி 


சிவலோகத்தே நமை வைப்பான் = நம்மை சிவலோகத்தில் வைக்கும் 


பொடி சேர் மேனிப்  = சாம்பலை உடலில் பூசிக் கொண்ட 


புயங்கன் = பாம்பை அணிந்தவன் 


தன், பூ ஆர் கழற்கே = அவனுடைய பூக்கள் அணிந்த திருவடிகளில் 


புகவிடுமே = புக விடுவான் 


சிறு பிள்ளைகள் கடற்கரையில் விளையாட்டும் போது அங்குள்ள சிப்பி, சங்கு இவற்றை எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ பெரிய பொக்கிஷம் கிடைத்த மாதிரி மகிழ்வார்கள். கொஞ்சம் வயது ஆகும் போது தெரியும் அது ஒண்ணும் அவ்வளவு பெரிய செல்வம் அல்ல என்று. அதை தூக்கிப் போட்டு விடுவார்கள். 


அது போலத்தான், சிகரெட் பெட்டி, குளிர்பானங்களின் மூடிகள், பேனா, கை கடிகாரம், என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை சேர்ப்பதும்,  பின் அது ஒன்றும் இல்லை என்று அதை தூக்கி போட்டுவிட்டு மற்றதின் போவதும் இயற்கையாக இருக்கிறது. 


அப்படி என்றால், இன்று நாம் சிறந்தது, உயர்ந்தது, முக்கியமானது என்று எதைக் கருதிக் கொண்டு இருக்கிறோமோ அது இன்னும் கொஞ்சக் காலத்தில் அர்த்தம் இல்லாதது என்று நாமே தூக்கி எறிவோம்.


பிள்ளையிடம் கேட்டால் சங்கும், சிப்பியும் விலை மதிக்க முடியாத ஒன்று என்று தான் சொல்லும். அதே பின்னொரு நாளில் அதை தூக்கி குப்பையில் போடும்.  அறிவு வளர்ச்சி.  அறிவு வளராமல் இருந்தால் நாற்பது வயதிலும் சங்கையும், சிப்பியையும் சேர்த்துக் கொண்டு இருக்கும். 


உறவுகள், பணம், பதவி, புகழ் என்று நாம் இன்று இன்றியமையாதது என்று நினைப்பவற்றை நாளை நாமே வேண்டாம் என்று தள்ளி வைப்போம்.  


அப்படி வேண்டாம் என்று தூக்கி போடுவதை இன்று ஏன் இவ்வளவு மெனக்கெட்டு தேடி பாதுகாப்பனேன்? அதை விட்டு விட்டு என்றும் மதிப்பு குறையாத ஒன்றை தேடலாம் அல்லவா?


அது, இறைவன் திருவடி என்கிறார் மணிவாசகர். இந்த பணம், புகழ், பதவி என்று தேடும் விளையாட்டு விளையாடினது போதும். நல்லதை தேடுவோம் என்கிறார். 


இல்லை, இறைவன் திருவடி ஒன்றும் உயர்ந்தது அல்ல, பணமும், பதவியும், புகழும் தான் உயர்ந்தது, நிரந்தரமானது என்றால், நம் பிள்ளை பருவத்தை நாம் நினைக்க வேண்டும். அப்போது எது நிரந்தரம் என்று நினைத்தோம்? பின் ஏன் அதை விட்டுவிட்டோம் என்று. 


ஊர் போக நேரம் ஆகிவிட்டது. வில்லையாட்டை விட்டுவிட்டு, பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் யாத்திரைக்கு என்று அழைக்கிறார். 


Sunday, January 23, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய் நீக்கி

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய் நீக்கி 


கணவன்/மனைவி, பிள்ளைகள், சொந்தம், பந்தம், உற்றார், உறவு, நட்பு என்று நாம் பலபேரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் உண்மையா?  இந்த உலகில் நம்மைத் தவிர நமக்கு வேறு எந்த சுற்றமும் கிடையாது. எல்லா உறவும் ஒரு எல்லை வரைதான்.  


பட்டினத்தார் சொன்னது போல, "கொட்டி முழக்கி அழுதிடுவார். மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ கச்சியேகம்பனே". 


ஆற்றில் போட்ட மரக் கட்டைகள் ஆற்று வெள்ளத்தில் சில சமயம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு சிறிது தூரம் செல்லும். பின் வெள்ளம் அந்த இரண்டு மரத் துண்டுகளையும் வேறு இடத்துக்கு இழுத்துச் சென்று விடும். 


நாமும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படுகிறோம். உறவுகள் வரும், போகும். நம்மைத் தவிர நமக்கு எதுவும் நிரந்தர உறவு அல்ல.


சொல்வது, மணிவாசகர். 


உறவு மட்டும் அல்ல. நாம் சேர்த்து வைத்த பொருளும் நமது அல்ல. நாம் நினைத்தாலும் அவற்றை பிடித்து வைக்க முடியாது. அது போகின்ற காலத்தில் போகும். எத்தனை அரசர்கள் எத்தனை அரண்மனை கட்டி வாழ்ந்தார்கள். எங்கே அந்த அரண்மனைகள் எல்லாம்? அரன் மனைகள் இருக்கிறது. அரண்மனைகள் இல்லை. 


நமக்கு வரும் நன்மை தீமைகள் பிறர் நமக்குச் செய்வது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இல்லை. நமக்கு நடக்கும் நல்லதுக்கும் தீயவற்றிற்கும் நாமே பொறுப்பு. நாம் செய்த வினை நமக்கு வந்து சேர்கிறது. ஆழ்ந்து யோசித்தால் நமக்கு நிகழ்ந்த ஒவ்வொன்றிற்கும் நாமே காரணம் என்று புரியும். 


உறவு வெளியில் இல்லை.பொருள் வெளியில் இல்லை. நன்மை தீமைகள் வெளியில் இருந்து வருவது இல்லை. 


ஆனால், நடைமுறையில் அப்படித் தெரியவில்லையே. என் கணவன்/மனைவி என் மேல் உயிரையே வைத்து இருக்கிறார்/ள். நான் என் கணவன்/மனைவி மேல் உயிரையே வைத்து இருக்கிறேன். பிள்ளைகள் மேல் அவ்வளவு பாசம்...என்றெல்லாம் தோன்றும். 


காரணம், நமக்கு உண்மை புரியாத மாயை. அது ஒரு பொய்த் தோற்றம். 


பாடல் 


தாமே தமக்குச் சுற்றமுந் தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_23.html


(please click the above link to continue reading)


தாமே தமக்குச் சுற்றமுந் = ஒருவற்கு சுற்றம், நட்பு எல்லாம் அவரே தான் 


தாமே தமக்கு விதிவகையும் = ஒருவற்கு நடக்கும் நன்மை தீமைகளுக்கு அவர் செய்த வினையின் பலனே விதியாக வந்து சேர்கிறது. 


யாமார் = நான் யார்? 


எமதார் = என்னுடையது எது ?


பாசமார் = பாசம் என்றால் என்ன? 


என்ன மாயம் = இவை எல்லாம் என்ன மாயம், மாயை 


இவைபோகக் = இதெல்லாம் போய்  (மாயை விலகி) 


கோமான் = தலைவன் (சிவன்) 


பண்டைத் தொண்டரொடும் = பழைய தொண்டர்களோடும் 


அவன்றன் = அவனுடைய 


குறிப்பே = மனக் குறிப்பை 


குறிக்கொண்டு = குறியாகக் கொண்டு 


போமா றமைமின் = போகும் + ஆறு + அமைமின் = போகின்ற வழியை அறிந்து கொண்டு 


பொய்நீக்கிப் = பொய்யானவற்றை நீக்கி 


புயங்கன் = பாம்பணிந்த கைகளை உடைய 


ஆள்வான் = நம்மை ஆளும் அவன் 


பொன்னடிக்கே. = திருவடிகளுக்கே 



மற்றது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


எது உண்மை, எது பொய் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 


பொய் என்று தெரிந்தால் அதை விட்டு விட வேண்டாமா?


கவரிங் நகையை உண்மையான நகை என்று நினைத்து அதை காப்பாற்றிக் கொண்டு இருக்க முடியுமா?


நல்ல நகையை கவரிங் நகை என்று அலட்சியமாக போட்டு விட முடியுமா? 


எது உண்மையான உறவு, எது நம் பொருள், எது பாசம் என்றெல்லாம் அறிய வேண்டும். 


ஞான இருள், மாய இருளை போக்கும். 


அந்த ஞானத்தைத் தேடும் பயணத்தை இன்றே தொடங்க வேண்டும். 


யாத்திரைப் பத்து. 


திருச்சிற்றம்பலம். 




Monday, January 10, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - தளராது இருப்பர்

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - தளராது இருப்பர் 


ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பார்ப்போம்.


நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இதுவரை என்ன செய்தோம்?


அதே சாப்பாடு, அதே தூக்கம், அதே வேலை, அதே அரட்டை, அதே உறவுகள், அதே உடை...


அங்கொன்றும் இங்கொன்றும் ஏதோ புதிதாக வரலாம்...நாளடைவில் அதுவும் பழசாகி விடும். இதில் ஒரு அலுப்பு வரவில்லை நமக்கு. 


ஒரு தளர்ச்சி வரவில்லை. 


ஏன் இதை திருப்பி திருப்பி செய்து கொண்டிருக்கிறோம்? என்ன சாதிக்கப் போகிறோம்? என்ன கிடைத்தது இதுவரை. 


நமக்கு ஒவ்வொரு நாளும் ஏதோ புதிதாக இருப்பது போல இருக்கிறது. கொஞ்சம் ஆழமாக யோசித்தால் தெரியும், ஒரு புதுமையும் இல்லை என்று. நாம் யோசிப்பது இல்லை. 


மறந்து விடுகிறோம். 


மணிவாசகர் இன்னும் ஆழமாக யோசிக்கிறார். நேற்று, போன மாதம், போன வருடம் என்று இல்லாமல், இப்படி பிறந்து, வளர்ந்து, இறந்து, பிறந்து என்று போய்க் கொண்டே இருக்கிறதே, இதற்கு ஒரு முடிவு, எல்லை இல்லையா என்று தளர்கிறார். 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பார். 


"தளர்ந்தேன் என்னை தாங்கிக் கொள்ளேன்" என்று கெஞ்சுவார். என்னால் முடியவில்லை, என்னைக் தூக்கிக் கொள் என்று குழந்தை தாயயைப் பார்த்து கெஞ்சுவதைப் போல, கெஞ்சுவார். 


சரி, இதை விட்டு விட்டு என்ன செய்வது? எப்படி செய்வது? நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்த சாப்பாடு, தூக்கம், அரட்டை, டிவி, கை பேசி, இவ்வளவு தான். வேறு என்ன செய்வது?


அதையும் அவரே சொல்கிறார் ....


"புலன்கள் பின்னால் போவதை விடுங்கள். இறைவன் திருவடியை நினையுங்கள். யார் என்ன சொன்னாலும், சிரித்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நமக்கு உதவி செய்ய இறைவன் காத்துக் கிடக்கிறான். அவன் திருவடியை நினைந்தால் நம் தளர்ச்சி எல்லாம் நீங்கும்" என்கிறார். 


இறைவன் நமக்கு உதவி செய்ய வருகிறானாம். அப்போது மற்றவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து கேலி செய்கிறார்களாம். "அவனுக்கு போயா உதவி செய்யப் போகிறாய்...அவன் ஒண்ணுக்கும் உதவாதவன், அவனுக்கு உதவி செய்வதும் ஒண்ணு தான் உதவி செய்யாமல் இருப்பதும் ஒண்ணு தான்..." என்று இறைவனை கேலி செய்வார்களாம். இருந்தும், அதை எல்லாம் பெரிதாக நினைக்காமல், அவன் நமக்கு உதவி செய்ய வருகிறான் என்கிறார். 


பாடல் 



புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்

மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்

நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட

தகவே உடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_10.html


(click the above link to continue reading)


புகவே வேண்டா = நுழைய வேண்டாம் 


புலன்களில்நீர் = நீங்கள் புலன்கள் செல்லும் வழியில் 


புயங்கப் பெருமான் = பாம்பை அணிந்த பெருமாள் 


பூங்கழல்கள் = திருவடிகளை 


மிகவே நினைமின் = எப்போதும் நினையுங்கள் 


மிக்கவெல்லாம் வேண்டா = மத்தது எல்லாம் வேண்டாம் 


போக விடுமின்கள் = போகட்டும், விட்டு விடுங்கள் 


நகவே = பிறர் நகை செய்ய, கேலி செய்ய 


ஞாலத் துள்புகுந்து = தன் இருப்பிடம் விட்டு, இந்த உலகத்துள் வந்து 


நாயே அனைய= நாய் போன்ற 


நமையாண்ட = நம்மை, ஆட்கொண்ட 


தகவே உடையான் = பெருமை உடையவன் 


தனைச்சாரத் = அவனை சார்ந்து இருக்க 


தளரா திருப்பார் = தளர்ச்சி இல்லாமல் இருப்பார்கள் 


தாந்தாமே. = அவரவர்கள் 


ஆழ்ந்து யோசித்தால் நாம் செய்யும் அர்த்தமற்ற காரியங்கள் புரியும். 


என்னதான் சொன்னாலும், "என் பிள்ளையை நான் எப்படி விட முடியும்?  என் கணவனை/மனைவியை/பெற்றோரை" என்று ஏதோ ஒன்றில் பிடிப்பு அதிகம் இருக்கும். அதை விடுவது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. 


மணிவாசகர் சொல்கிறார் 


"மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்"


இறைவனைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். அவை எல்லாம் உங்களை விட்டுப் போக துடித்துக் கொண்டு இருக்கின்றன. நீங்கள் தான் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விட்டால் அவை போய் விடும். அவை உங்களை பிடித்துக் கொண்டு இருக்கவில்லை. நீங்கள் தான் அவற்றை பிடித்துக் கொண்டு இருகிறீர்கள். 


போக விடுங்கள். அவை போய் விடும். 


அது உங்களுக்கும் நல்லது, அவற்றிற்கும் நல்லது. 


சிந்திப்போம். 




Friday, November 26, 2021

திருவாசகம் - யாத்திரைப் பத்து

 திருவாசகம் - யாத்திரைப் பத்து 


எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 


ஏதாவது இலக்கு இருக்கிறதா? இந்த நேரத்தில், இந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று ஏதேனும் குறிக்கோள் இருக்கிறதா? 


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறோம். 


எங்கு போவது என்றும் தெரியாது. எப்படி போவது என்றும் தெரியாது. 


சரி, போகலாம், போகிற வழியில் யாரையாவது விசாரித்துக் கொள்ளலாம் என்றால் கிளம்ப வேண்டுமே. 


எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு பண்ணி வைத்துவிட்டு தானே கிளம்ப முடியும். 


இருக்கிற வீட்டை விட்டு கிளம்புவது என்றாலே gas ஐ மூடினோமா, மின்சாரத்தை ஆப் செய்தோமா, குழாய் எல்லாம் சரியாக அடைத்தோமா, ஜன்னல் எல்லாம் சரியாக சாத்தினோமா என்று ஆயிரம் யோசனை இருக்கிறது. 


இந்த உலகை விட்டு இறைவனை நோக்கிய பயணம் என்றால் எவ்வளவு செய்ய வேண்டும். 


மனைவி/கணவன், பெற்றோர், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், மகன்/மகள், மருமகன், மருமகள், இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள், அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் என்று எவ்வளவு இருக்கிறது. 


இதை எல்லாம் முடித்துவிட்டு கிளம்புவது என்றால், எப்போது கிளம்புவது? 


அலை எப்ப ஓய , தலை எப்ப முழுக?


மணிவாசகர் சொல்கிறார், "இப்ப...இப்பவே கிளம்புங்கள்" என்று. 


ஆன்ம தேடல் வந்து விட்டால், சித்தார்த்தன் மாதிரி, பட்டினத்தார் மாதிரி துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பி விடவேண்டும். 


எல்லாம் முடித்துவிட்டு கிளம்புகிறேன் என்றால் அது ஒரு காலத்திலும் நடக்காது. 


பாடல் 


பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை

ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால்,

`ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்;

போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.



பொருள் 



(Please click the above link to continue reading)


பூ ஆர் சென்னி  = பூக்கள் நிறைந்த தலை 


மன்னன் =எங்கள் மன்னன் 


எம் புயங்கப் பெருமான் = பாம்பை அணிந்த எங்கள் பெருமான் 


சிறியோமை = சிறியவர்களான எங்களை 


ஓவாது உள்ளம் கலந்து  = ஓவுதல் என்றால் நீக்குதல். ஓவாது என்றால் நீங்காமல் எம் உள்ளத்தில் கலந்து 


உணர்வு ஆய் = உணர்வாகி 


உருக்கும் வெள்ளக் கருணையினால், = வெள்ளம் போல் வரும் கருணையினால் நம்மை உருக்கி 


`ஆ! ஆ!' என்னப் பட்டு = அடா என்று ஆச்சரியப் பட்டு 


அன்பு ஆய் ஆட்பட்டீர் = அன்பு உருவமாய் ஆட் கொள்ளப் பட்டீர் 


வந்து ஒருப்படுமின்; = வந்து ஒன்றாகக் கூடுங்கள் 


போவோம் = போகலாம் 


காலம் வந்தது காண் = போக இதுதான் சரியான காலம் 


பொய் விட்டு = பொய்யான இந்த உலகை விட்டு 


உடையான் கழல் புகவே. = அனைத்தும் உடையவன் திருவடிகளை அடைய 


Travel Agent மாதிரி மணிவாசகர் எல்லோரையும் அழைக்கிறார். 


வண்டி எடுக்கப் போறோம். சீக்கிரம் வாங்க என்று அறை கூவி அழைக்கிறார். 


"போவோம், காலம் வந்தது காண்" என்கிறார். 


இதுதான் காலம். 


இந்த உலகில் எதையும் நாம் சரி செய்து வைத்துவிட்டுப் போக முடியாது. 


நமக்கு முன் இந்த உலகம் இருந்தது. 


நமக்கு பின்னும் இருக்கும். 


நாம் ஒழுங்கு படுத்தாவிட்டால் ஒன்றும் கெட்டுப் போய் விடாது. 


யாத்திரைக்கு அழைக்கிறார் மணிவாசகர். 




Tuesday, September 14, 2021

திருவாசகம் - குழந்தை கையில் பொற்கிண்ணம்

 திருவாசகம் - குழந்தை கையில் பொற்கிண்ணம் 


நமக்கு நம்மிடம் இருப்பதன் அருமை தெரிவதில்லை. அது நம்மை விட்டுப் போன பின் தான் அதன் அருமை தெரிகிறது. 


அப்பா, அம்மா, கணவன், மனைவி, ஆரோக்கியம், இளமை,  ஞாபகம், என்று பல விடயங்கள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. அது நம்மை விட்டுப் போன பின், அடடா என்று ஏங்குகிறோம். 


மணிவாசகர் சொல்கிறார், 


"இறைவா, எவ்வளவு பெரிய நீ, மானிட வடிவம் கொண்டு எனக்காக வந்தாய். குழந்தையின் கையில் உள்ள பொற்கிண்ணம் போல, உன் அருமை தெரியாமல் உன்னை விட்டு விட்டேன். பொய்கள் நிறைந்த இந்த உலகில் என்னை உழல விட்டு விட்டு நீ போய் விட்டாய். உனக்கு இது சரிதானா" 


என்று உருகுகிறார். 


சின்ன பிள்ளையின் கையில் ஒரு விலை உயர்ந்த பொற்கிண்ணத்தைக் கொடுத்தால், அந்த பிள்ளைக்கு அதன் அருமை தெரியுமா? ஏதோ விளையாட்டுச் சாமான் என்று விளையாடிவிட்டு தூர போட்டுவிட்டுப் போய் விடும். 


பாடல் 


மையி லங்குநற் கண்ணி பங்கனே

வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்

கையி லங்குபொற் கிண்ண மென்றலால்

அரியை என்றுனைக் கருது கின்றிலேன்

மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்

மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்

பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ

போவ தோசொலாய் பொருத்த மாவதே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_14.html


(Please click the above link to continue reading)



மையி லங்கு  = மை படர்ந்த 

நற் கண்ணி = அழகிய கண்களை கொண்ட உமா தேவியை 

பங்கனே = ஒரு பாகத்தில் கொண்டவனே 

வந்தெ னைப் = வந்து என்னை 

பணி கொண்ட = ஆட்கொள்ள வந்த 

பின் = பிறகு 

மழக் = மழலையின் (குழந்தையின்) 

கையி லங்கு = கையில் விளங்கும் 

பொற் கிண்ண மென்றலால் = பொன் கிண்ணம் போல 

அரியை = அருமையானவன், கிடைத்தற்கு அரியவன் 

என்றுனைக் = என்று உன்னை 

கருது கின்றிலேன் = நினைக்காமல் 

மெய்யி லங்கு = உடல் முழுவதும் 

வெண் ணீற்று மேனியாய் = திரு வெண்ணீறு பூசியவனே 

மெய்ம்மை அன்பர் = மெய்யான உன் அடியார்கள் 

உன் = உன்னுடைய 

மெய்ம்மை மேவினார் = உண்மையை அறிந்து, உன்னை அடைந்தார்கள் 

பொய்யி லங்கெனைப் = பொய்மை மிகுந்த இந்த உலகில் என்னை 

புகுத விட்டுநீ = செல்லும் படி விட்டு விட்டு 

போவ தோ = நீ போகலாமா ?

சொலாய் = நீயே சொல் 

பொருத்த மாவதே. = இது உனக்கு பொருந்திய செயலா? 


நான் தான் சிறு பிள்ளை போல உன்னை விட்டு விட்டேன் என்றால், நீயும் அப்படி இருக்கலாமா? என்று கேட்கிறார். 


கடவுளை நேரில் பார்த்து பேசுவது போல இருக்கும் பாடல்கள். 


இவ்வளவு இனிமையான பாடல், எவ்வளவு எளிமையாக இருக்கிறது. 


என்ன தாமதம்? உடனே திருவாசகத்தை முழுவதும் படித்து விடுங்கள். எவ்வளவு பெரிய பொக்கிஷம். 



Monday, September 6, 2021

திருவாசகம் -திருச்சதகம் - வித்தின்றி விளையச் செய்வாய்

திருவாசகம் -திருச்சதகம் -  வித்தின்றி விளையச் செய்வாய் 


இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள் என்று பல கேள்விகள் இருக்கின்றன. 


ஒரு பானை இருக்கிறது என்றால் அந்தப் பானையை செய்த குயவன் இருப்பான் என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? பானை, தன்னைத் தானே செய்து கொள்ளாது அல்லவா?


அது போல, இந்த உலகம் இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க முடியும். 


எது ஒன்று தோன்றுவதற்கும், அதை தோற்றுவித்த ஒருவன் வேண்டும். எனவே, இந்த உலகைப் படைத்தது இறைவன் என்று பக்திமான்கள் கூறுகிறார்கள். 


அவர்கள் அதோடு நின்று விடுகிறார்கள். எதை ஒன்றை தோற்றுவிப்பதற்கும் அதை உண்டாக்கிய ஒருவன் வேண்டும் என்றால், இறைவனை தோற்றுவித்தது யார் என்ற பதில் கேள்வி எழும். 


இறைவனை யாரும் தோற்றுவிக்கவில்லை, அவன் தானே தோன்றி விட்டான் என்று கூறினால், இந்த உலகமும் தானே தோன்றியது என்றும் கூறலாம். .


சரி, இறைவன் தோற்றிவித்தான் என்றால் எதில் இருந்து இந்த உலகத்தைப் படைத்தான் என்ற கேள்வி வரும். எதில் இருந்தோ என்றால் அதை யார் படைத்தார்கள் என்ற கேள்வி வரும். 


மணிவாசகர் கூறுகிறார் 


"நீ உலகை இரண்டு விதத்தில் படைப்பாய். ஒன்று விதை இல்லாமல் விளைவு செய்வாய். இன்னொன்று இருக்கின்ற உலகை வைத்துக் கொண்டு மேலும் பலப் பல செய்வாய். அப்பேற்பட்ட நீ, என்னை உன் கோவில் வாசலில் பித்தனாக நிற்க வைத்தாய். உன் அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டாய். தாம் நட்ட மரம் விஷ மரம் என்று தெரிந்தாலும், நட்டவர்கள், அந்த மரத்தை அழிக்க மாட்டார்கள். நானும் அந்த மாதிரி ஒரு விஷ மரம்தான். என்னையும் அழித்து விடாதே "


என்று உருகுகிறார். 


பாடல்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_6.html


(Please click the above link to continue reading)



விச்ச தின்றியே விளைவு செய்குவாய்‌ 

விண்ணு மண்ணக முழுதும்‌ யாவையும்‌ 

வைச்சு வாங்குவாய்‌ வஞ்ச கப்பெரும்‌ 

_ புலைய னேனையுன்‌ கோவில்‌ வாயிலில்‌ 

பிச்ச னாக்கினாய்‌ பெரிய வன்பருக்‌ 

குரிய னாக்கினாய்‌ தாம்வ ளார்த்ததோர்‌ 

ரச்சு மாமர மர்யி னுங்கொலார்‌ 

நானு. மங்ஙனே யுடைய நாதனே. 


பொருள் 




விச்ச தின்றியே = விதை இன்றியே 


விளைவு செய்குவாய்‌  = விளைய வைப்பாய் 


விண்ணு மண்ணக முழுதும்‌ = விண்ணும், மண்ணும்


யாவையும்‌  = முழுவதும் 


வைச்சு வாங்குவாய்‌ = செய்வாய், பின் அவற்றை உன்னுள் அடங்கப் பண்ணுவாய் 


வஞ்ச கப் = வஞ்சக மனம் கொண்ட 


பெரும்‌  = பெரிய 


புலைய னேனை = கீழான என்னை 


யுன்‌ = உன் 


கோவில்‌ வாயிலில்‌  = கோவில் வாசலில் 


பிச்ச னாக்கினாய்‌  = பித்தனாக்கினாய் 


பெரிய = மதிப்புள்ள 


வன்பருக்‌ குரிய = அன்பருக்கு உரியவன் 


னாக்கினாய்‌ = ஆக்கினாய் 


தாம் வ ளார்த்ததோர்‌  = தாம் வளர்த்த 


ரச்சு = நச்சு 


மாமர மர்யி னுங்கொலார்‌  = மா மரமாயினும் வைத்தவர்கள் அதை கொல்ல மாட்டார்கள் 


நானு. மங்ஙனே யுடைய நாதனே.  = நானும் அப்படித்ததான், எல்லாம் உடைய நாதனே 



என்ன ஒரு பாடல். எவ்வளவு பொருள் செறிவு. 


பிள்ளை பிறந்து வளர்ந்து விட்டான். சேராத இடம் சேர்ந்து, கெட்டுப் போய் விட்டான். பெற்ற தாய், அந்தப் பிள்ளையை வெறுப்பாளா? ஊருக்கு அவன் கெட்டவனாக இருக்கலாம். ஆனால் , அவனைப் பெற்ற தாய்க்கு அவன் செல்லப் பிள்ளைத் தான். 


சிலர் மரம் வைத்து வளர்ப்பார்கள். வளர்ந்த பின்தான் தெரியும், அந்த மரம் நச்சு கனிகளை கொடுக்கும் மரம் என்று. அதற்காக அதை வெட்டி விட மாட்டார்கள். அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவார்கள். 


அப்படி இருந்தது நம் பண்பாடு. 


இப்போது என்னடா என்றால், சாலை போடுகிறேன், வீடு கட்டுகிறேன், தொழிற்சாலை கட்டப் போகிறேன் என்று நூற்றுக் கணக்கில் மரங்களை வெட்டித் தள்ளுகிறார்கள்.


நச்சு மரத்தை கூட வெட்டாமல் வளர்த்த கருணை நிறைந்த பரம்பரை நம்முடையது. 


இறைவன், ஒன்றும் இல்லாததில் இருந்து இந்த உலகை தோற்றுவித்தான். விதை இல்லாமல் செடி வளர்ப்பவன் என்கிறார் மணிவாசகர். அது எப்படி முடியும் என்றால், நமக்குத் தெரியாது. மணிவாசகருக்கு தெரிந்து இருக்கிறது. 


இல்லை என்றால் வேலை மெனக்கெட்டு "விதை இல்லாமல் விளையச் செய்வாய்" என்று சொல்லுவாரா. நம் அறிவுக்கு எட்டவில்லை. அவ்வளவுதான். 


அது மட்டும் அல்ல, பின்னால் "விண்ணையும் மண்ணையும் வைத்து வாங்குவாய்" என்கிறார். 


இதை சைவ சித்தாந்தம் முதலுர்பவம், புனருற்பவம் என்கிறது. ஆதியில் தொடங்கிய உற்பத்தி, அப்புறம் பின்னால் தோன்றிய உற்பத்தி. 


மெய்கண்டர் உரை எழுதும் போது கூறுவார் 


"பிரபஞ்சம்‌ அகாதியாகலின்‌ அம்முதற்கோடி ஈம்மனோரான்‌ அறியவாராமை 

யானும்‌"

என்றார். நம்மால் அறிய முடியாது என்கிறார். 


நட்ட மரம் நச்சு மரமாயினும் நட்டவர்கள் எப்படி வெட்ட மாட்டார்களோ, அது போல, என்னை நீ தான் படைத்தாய். நான் சரி இல்லை என்றால், அதற்கு நீ தான் பொறுப்பு. எனவே, என்னை ஏற்றுக் கொள் என்கிறார். 


இதெல்லாம் படிக்கணுமா இல்லையா? 





Friday, September 3, 2021

திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - வினை கேடா

திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - வினை கேடா 


இறைவன் உயிரை எடுத்து உண்டு விடுவானாம். உயிர் + உண்ணி (உண்ணுதல், சாப்பிடுதல்). அதாவது, உயிர்களை தனக்குள் அடக்கிக் கொள்வான் என்று பொருள். 


இறைவனை எங்கே தேடுவது? கோவில், குளம், மலை, குகை, என்று எங்காவது இருப்பானா? அல்லது வானத்தில், ஏதோ ஒரு கோளில், நட்சத்திரத்தில், இருப்பானா? எங்கே போய் தேடுவது? 


மணிவாசகர் சொல்கிறார், "எங்கேயும் போய்த் தேட வேண்டாம். அவன் நமக்குள்ளேயே எப்போதும் பிரியாமல் இருக்கிறான்" என்கிறார். நாம் செய்யும் வினகைளை தடுத்து, மறு பிறவி வாராமல் காப்பவன் அவன். 


"நீ எனக்குள்ளே இருக்கிறாய். நான் உன்னை எவ்வாறு காண்பேன், உன்னைப் பார்த்தேன் என்று எப்படி மற்றவர்களிடம் சொல்லி பெருமிதம் கொள்வேன்" என்கிறார். 


பாடல் 


பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாக மதாய்என்

மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப பாகா

செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்

எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_3.html


(Please click the above link to continue reading)


பைந்நாப் = பசிய நாவினை உடைய 


பட = படத்தைக் (பாம்பின் படம்) கொண்ட 


அர = அரவு, பாம்பு, 


ஏர் அல்குல்  = அழகிய அல்குல் உடைய 


உமைபாகம் அதாய்  = உமை அம்மையை பாகமாக உடையவனே 


என் மெய்ந்  = என் உடலில் 


நாள்தொறும் = எப்போதும் 


பிரியா = பிரியாமல் இருப்பவனே 


வினைக் கேடா = வினைகளை அறுப்பவனே 


விடைப பாகா = எருதை வாகனமாகக் கொண்டவனே 


செந்நாவலர் = சிறந்த புலவர் 


பரசும் =போற்றும் 


புகழ்த் = புகழ் கொண்ட 


திருப்பெருந்துறை = திருப்பெருந்துறை என்ற திருத் தலத்தில் 


உறைவாய் = எழுந்து அருளி இருப்பவனே 


எந்நாட்களித்து = உன்னை கண்டு களித்து 


எந்நாள் = எப்போது 


இறு மாக்கேன் = பெருமிதம் கொள்வேன் 


இனி யானே. =இனிமேல் நானே 


நீயோ என்னுள் இருக்கிறாய். உன்னை வெளியில் கண்டதாய் சொல்லி நான் எப்படி பெருமிதம் கொள்வேன். 


"நீர் பெரிய பக்திமான் என்கிறீரே, நீர் கடவுளை கண்டதுண்டா? " என்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன். "ஆமாம், நான் பார்த்து இருக்கிறேன்" என்று இறுமாப்போடு சொல்ல முடியாதே. 


கோவிலுக்குப் போவதும், புனித நீராடுவதும் தவறல்ல. இறைவனை தனக்குள்ளே அறிய அவை படிகள். படிகளை ஏற பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், படியே முடிவு என்று ஆகி விடக் கூடாது. 


சாகும் வரை, கோவில் குளம் என்று அலைந்து கொண்டு இருந்தால் என்ன செய்வது? 


நான்காம் வகுப்பு நன்றாக இருக்கிறது என்று ஆயுள் பூராவும் நான்காம் வகுப்பே படித்துக் கொண்டு இருக்க முடியுமா? 


படிப்பவை நம்மை உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

Tuesday, January 12, 2021

திருவாசகம் - ஒளி செய் மானிடம்

 திருவாசகம் - ஒளி செய் மானிடம் 


திருவாசகம் படிக்க படிக்க கண்ணில் நீர் நிறைவது என்னவோ உண்மைதான். 

நமக்கு கிடைத்து இருக்கும் கொடைகளை எண்ணிப் பாருங்கள். ஆரோக்கியமான உடல். இது நாள் வரை. கண் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? இரண்டு கால் இல்லாமல் இருந்திருந்தால்? எத்தனையோ குறைகள் இல்லாமல் இருக்கிறோம். என்றாவது அது பற்றி மகிழ்ந்தது உண்டா? திருப்தி அடைந்தது உண்டா? 

அறிவு இருக்கிறது. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. படிக்க ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கிறது. அறிவை அள்ளி அள்ளித் தர வரிசையில் நிற்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். 

அதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை. 

இருப்பதை எல்லாம் புறம் தள்ளி விட்டு, இல்லாததை கொண்டா என்று எவ்வளவு கீழ்மையாக நாம் நடந்து கொள்கிறோம். 


மணிவாசகர் உருகுகிறார். 


எனக்கு முன்னால் வந்தவர்கள், உன் கருணை வேண்டும் என்று உண்மையிலேயே வேண்டி, அதைப் பெற்றுக் கொண்டார்கள். எவ்வளவோ பெரிய ஆள் நீ. எனக்காக அருள் செய்ய வந்தாய். அந்தக் கருணையைக் கூட நான் புரிந்து கொள்ளவில்லை. என்னே என் கீழ் மதி 


என்று நொந்து கொள்கிறார். 


பாடல் 


மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை,

வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்;

ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும்,

கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_12.html


click the above link to continue reading


மாறு இலாத = மாற்றம் இல்லாத 

மாக் கருணை = பெரிய கருணை 

வெள்ளமே! = வெள்ளமே 

வந்து = இங்கு வந்து 

முந்தி = எனக்கு முன்னால் 

நின் மலர்கொள் = உன்னுடைய மலர் போன்ற 

தாள் இணை, = இரண்டு திருவடிகளை 

வேறு இலாப் = நீங்குதல் இல்லாத 

பதப் பரிசு பெற்ற = அந்தப் பாதங்களை அடையும் பரிசு பெற்ற 

நின் = உன் 

மெய்ம்மை அன்பர் = உண்மையான அன்பர்கள் 

உன் மெய்ம்மை மேவினார்; = உன்னை அடைந்தார் 

ஈறு இலாத நீ = முடிவே இல்லாத நீ 

எளியை ஆகி வந்து = எளிமையாக வந்து 

ஒளிசெய் மானிடம் ஆக = ஒளி பொருந்திய மானிட வடிவம் பெற்று 

நோக்கியும், = எனக்கு காட்சி தந்தும் 

கீறு இலாத  =  இளகாத 

நெஞ்சு உடைய = மனதை உடைய 

நாயினேன் = நாயைப் போன்றவன் 

கடையன் = கீழானவன் 

ஆயினேன் = ஆயினேன் 

பட்ட கீழ்மையே. = நான் பட்ட கீழ்மையே 


முக்தி வேண்டும், இறைவனை அடைய வேண்டும், அற வழியில் வாழ வேண்டும் என்பார்கள். சரி, எப்படி என்று சொன்னால், அதெல்லாம் சரிப்படாது,  நடை முறைக்கு ஒத்து வராது என்று தள்ளி விடுவார்கள். பின்னும், முக்தி அடைவது எப்படி,  இறைவனை அடைவது எப்படி என்று படிப்பார்கள். 


என்ன சொல்வது அவர்களை. 


இறைவன் எத்தனையோ வழிகளில் வந்து அருள் செய்கிறான். அது வேண்டாம், இது சரி இல்லை என்று தள்ளி விட்டுக் கொண்டே இருந்தால் என்ன செய்வது. உண்மையான  பக்தி உள்ளவர்கள், அருளை பெற்றார்கள். முக்தி அடைந்தார்கள். எனக்கு நீ எவ்வளவோ சொல்லியும், தந்தும் ஒன்றும் புரியாமல்  கடின நெஞ்சோடு வாழ்கிறேனே என்று உருகுகிறார் மணிவாசகர்.

பக்குவம் அடைந்து விட்டால், ஒரு வார்த்தை போதும்.