Saturday, July 13, 2013

ஜடாயு - படர் கற்பினாள்பால் மோகம் படைத்தான்

ஜடாயு - படர் கற்பினாள்பால் மோகம் படைத்தான் 




இராவணன் முத்தலை சூலாயுதத்தை ஜடாயு மேல் எறிந்தான். அந்த வேல், ஜடாயுவை தாக்காமல் திரும்பி வந்தது. இராவணன் அடுத்த படையை எடுப்பதற்கு முன் பறந்து வந்து இராவணனின் தேர் பாகனின் தலையை கொய்து இராவணன் மேல் எறிந்தான்.

பாடல்

வேகமுடன், வேல இழந்தான் படை வேறு எடாமுன்,
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப்
பாகம் தலையைப் பறித்து, படர் கற்பினாள்பால்
மோகம் படைத்தான் உளைவு எய்த, முகத்து எறிந்தான்.

பொருள்


ஜடாயு - உவமையின் உச்சம்

ஜடாயு - உவமையின் உச்சம் 


இந்தப் பாடல் கம்பனின் உவமையின் உச்சம்.

ஜடாயுவுக்கும் இராவணனுக்கும் பலத்த போர்.

இராவணன் சக்தி வாய்ந்த ஒரு சூலாயுதத்தை ஜடாயு மேல் எறிகிறான்.

உன் சூலாயுதத்தை கண்டு நான் பயப்படுவேன் என்று நினைக்கிறாயா என்று துணிந்து தன் மார்பை காட்டுகிறான் ஜடாயு. அந்த வேல் அவனை நோக்கி வேகமாக வருகிறது. ஒரு நிமிடம் திகைத்து பின் மீள்கிறது.

அந்த வேல் எப்படி நின்றது பின் எப்படி சென்றது என்று கூற வந்த கம்பன் மூன்று உவமைகளை சொல்கிறான். இதுவரை யாரும் யோசித்துக் கூட இருக்க முடியாது.....

முதல் உவமை - விலை மகளின் வீட்டுக்கு கையில் பணம் இல்லாமல் சென்றவன் எப்படி, அவள் வீட்டு வாசலில் தயங்கி நின்று பின் திரும்புவானோ அது மாதிரி திரும்பியது. அவள் வீட்டு வாசலில் நிற்பான்...உள்ளே போகலாமா அல்லது வேண்டாமா என்று தயங்குவான், வாசலில் நின்று அவள் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று நிற்பான் . பின் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு போவான் அது போல அந்த சூலாயுதம் நின்று பின் சென்றது.

இது முதல் உதாரணம், முதல் உவமை.


இரண்டாவது, ஒருவர் வீட்டுக்கு விருந்தினாராய் சென்ற ஒருவன், சரியானபடி உபசாரம் இல்லை என்றால் எப்படி மனம் வருந்தி திரும்புவானோ, அப்படி திரும்பியது. முதலில் ஆர்வமாய் போவான், பின் சிறப்பான உபசாரம் இல்லை என்றால் எப்படி மனம் வருந்தி செல்வானோ அது போல் வேகமாக சென்ற சூலாயுதம், வருந்தி மீண்டது. இப்படி ஒரு நல்லவனை கொல்ல வந்தோமே என்று வருந்தி சென்றது.

இது இரண்டாவது உதாரணம்.

அடுத்தது, ஒரு உண்மையான துறவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துவிட்ட ஒரு குடும்பப் பெண் எப்படி மனம் வருந்தி தன் பார்வையை சட்டென்று எப்படி திருப்பிக் கொள்வாளோ, அப்படி அந்த சூலாயுதம் வெட்கி திரும்பியது.

பாடல்

பொன் நோக்கியர்தம் புலன் 
     நோக்கிய புன்கணோரும், 
இன் நோக்கியர் இல் வழி 
     எய்திய நல் விருந்தும், 
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் 
     தம்மைச் சார்ந்த 
மென் நோக்கியர் நோக்கமும், ஆம் 
     என மீண்டது, அவ்வேல்.

பொருள்


Friday, July 12, 2013

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும்

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும் 



உலகிலேயே மிக அற்பமான செயல் ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பது. அதை விட அற்பமானது ஒன்று இருக்கிறது. இலட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு, பசிக்கிறது என்று யாசகம் கேட்டு வருபவனுக்கு ஒன்றும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுவது, பிச்சை எடுப்பதை விட கேவலமானது. சில்லறை இல்லை அந்தப் பக்கம் போய் கேளு என்று வயதான பாட்டியை, கை இல்லாத பிச்சை காரனை விரட்டுவது, அந்த பிச்சை எடுப்பதை விட கேவலம்.

உண்மைதானே. அவனிடம் இல்லை. உதவி கேட்க்கிறான். வைத்துக் கொண்டு பொய் சொல்லுவது உயர்ந்ததா தாழ்ந்ததா ?

கேட்காமலே ஒருவருக்கு வலிய சென்று உதவி செய்வது உயர்ந்தது. அதைவிட உயர்ந்தது எது என்றால், அப்படி தந்த உதவியை வேண்டாம் என்று சொல்லுவது.

அப்படிச் சொன்னவர் திருநாவுக்கரசர்.

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறவின் விளங்கினார்

அப்படி எல்லாம் வாழ்ந்த பரம்பரை நம் பரம்பரை.



ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

என்பது புறநானூற்றுப் பாடல்.

இதைப் பாடியவர் கழை தின் யானையார் என்ற புலவர்


ஜடாயு - வில் இட்டு உயர்ந்த நெடு மேகம்

ஜடாயு - வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் 


இலக்கியங்கள் நம் கற்பனையின் எல்லைகளை மிக மிக விரிவுபடுத்கின்றன.  நாம் சிந்திக்க முடியாத அளவுக்கு நம் கற்பனையை விரிவாக்குகின்றன.

இறை என்ற சக்தி நம் கற்பனைக்கு எட்டாதது.

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி என்பார் மணிவாசகர்.

நம் அறிவு என்பது நம்  உணர்வுக்கு உட்பட்டது. நாம் உணராத ஒன்றைப் பற்றி நமக்கு எந்த அறிவும் கிடையாது. கண் இல்லாதவனுக்கு நிறம் பற்றிய அறிவு இருக்காது.

நாம் , நம் புலன்களின் எல்லைகளை கருவிகளின் துணை கொண்டு விரிவாக்கலாம். ஒரு தொலை நோக்கியின் உதவியால் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பொருகளை பார்க்க முடியும். இப்படியே புதுப்  புது கருவிகள்  நம் புலன்களின் எல்லைகளை பெரிதாக்குகின்றன.

மனம் என்ற கருவியின் எல்லையை எப்படி விரிவாக்குவது.

கற்பனை தான் நம் மன எல்லைகளை விரிவாக்கும் கருவி.

எப்படி கற்பனையை விரிப்பது ?

இராமாயணம் போன்ற காப்பியங்கள் நம் கற்பனையை விரிவாக்க உதவுகின்றன

வானவில் பாத்து இருகிறீர்களா ? மழை நேரத்தில் வான வில் தெரியும். கம்பன் சொல்கிறான்,

அந்த வானவில்லை மேகங்கள் தூக்கி வந்ததாக கற்பனை பண்ணுகிறார் . அது எப்படி இருக்கிறது என்றால் இராவணனின் வில்லை ஜடாயு வானில் தூக்கிக்  கொண்டு பரந்த மாதிரி இருந்ததாம்.

வானவில் மாதிரி இராவணணின் பெரிய வில்.

மேகம் பறப்பது மாதிரி பறக்கும் ஜடாயு

பாடல்

எல் இட்ட வெள்ளிக் கயிலைப் 
     பொருப்பு, ஈசனோடும் 
மல் இட்ட தோளால் எடுத்தான் 
     சிலை வாயின் வாங்கி, 
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் 
     எனப் பொலிந்தான்- 
சொல் இட்டு அவன் தோள் வலி, 
     யார் உளர், சொல்ல வல்லார்?


பொருள்


திருக்குறள் - நட்பின் கடமை

திருக்குறள் - நட்பின் கடமை 


நட்பு என்றால் என்ன ?

நண்பர்கள் என்றால் நாம் பொதுவாக என்ன நினைப்போம் ?

அவர்கள் வீட்டில் ஏதாவது நல்லது கெட்டது நடந்தால் அழைப்பார்கள். அதே போல் நாமும் அழைப்போம். பணம் காசு வேண்டும் என்றால் ஒருத்தருக்கு ஒருவர் உதவி செய்வது. முடிந்தால் அப்பப்ப மெயில் அனுப்புவது, அல்லது போன் பண்ணுவது.

இதுதானே நண்பர்களுக்கு அடையாளம் ?

வள்ளுவர் நட்பை ஒரு மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்.

வள்ளுவருக்கு எல்லாமே அறம் தான். வாழ்கையை அற வழியில் செலுத்த நட்பு மிக மிக அவசியம்.


அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

வள்ளுவர் கூறுகிறார்

நண்பன் அறம் அல்லாத வழியில் செல்லும் போது அவனை (ளை ) தடுத்து நிறுத்தி, அவனை நல்ல வழியில் செலுத்தி அப்படி நல் வழியில் செல்லும் போதும் துன்பம் வந்தால் அவனோடு சேர்ந்து அந்த துன்பத்தை அனுபவிப்பது நட்பு.

அற வழியில் செல்லும் போது துன்பம் வருமா என்றால் பரிமேல் அழகர் சொல்லுகிறார் தெய்வத்தால் வரும் கேடு என்கிறார். முன் வினைப் பயனால் வரும் கேடு.

 
அழிவின் அவைநீக்கி = அழிவு வரும் போது அவற்றை நீக்கி. அழிவு பல விதங்களில் வரலாம். அறம் அல்லாத வழியில் செல்வதால் அழிவு வரும் என்கிறார் பரிமேல் அழகர். நீங்கள் அதை விரித்து பொருள் கொள்ளலாம். அழிவில் இருந்து நண்பர்களை காக்க வேண்டும்.

ஆறுய்த்து = ஆறு + உய்த்து = ஆறு என்றால் வழி. வழி என்றால் நல்ல வழி என்பது பெரியவர்களின்எண்ணம் . நெறி அல்லா நெறி தன்னை, நெறியாக கொள்வேனை என்பார் மாணிக்க வாசாகர். நெறி அல்லாத நெறி என்பது தீய நெறி. நெறி என்றால் நல்ல நெறிதான். நல்ல வழியில் நண்பர்களை செலுத்தி.

அழிவின்கண்  = இதையும் மீறி அழிவு வந்தால்

அல்லல் உழப்பதாம் நட்பு = அந்த துன்பத்தை, நண்பரோடு சேர்ந்து அனுபவிப்பது நட்பு

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அப்படி நண்பர்களாய் இருக்கிறோம் ?

நம் பிள்ளகைளுக்கு அப்படி நண்பர்களாய் இருக்க கற்றுத் தருவோம்.













Thursday, July 11, 2013

குசேலோபாக்கியானம் - செல்வரும் கடலும்

குசேலோபாக்கியானம் - செல்வரும் கடலும் 


நிறைய செல்வம் இருக்கும். ஆனால், பிறருக்கு உதவி செய்யும் மனம் இருக்காது.

செல்வம் குறைவாக இருந்தால் கூட, சில பேருக்கு மற்றவர்களுக்கு உதவும் ஈர உள்ளம் இருக்கும்.

அது எப்படி இருக்கிறது என்றால்

கடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால், அதனால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால், கரையில் சின்ன சின்ன ஊற்று இருக்கும். அந்த ஊற்று, தன் நீரின் மூலம் மக்கள் தாகம் தீர்க்கும்

பாடல்


  பெருகிய செல்வ ருள்ளும் 
          பயனிலார் உளராற் பேணி 
     அருகிய செல்வ ருள்ளும் 
          பயனுளார் உளரென் றாய்ந்து 
     பெரியவர் சொலுஞ்சொல் தேற்றும் 
          பெரியநீர்க் கடலும் ஆங்காங்
     குரியவெண் மணற்சிற் றூறற்
          கேணியும் உரிய நீரால்.

பொருள் 

ஜடாயு - இராவண ஜடாயு யுத்தம்

ஜடாயு - இராவண ஜடாயு யுத்தம் 


ஜடாயு எவ்வளவோ புத்தி சொன்னான்.

இராவணன் கேட்டான் இல்லை.

இருவருக்கும் பெரிய சண்டை மூழ்கிறது.

கம்பனின் யுத்த வர்ணனைகள் பற்றி தனியே ஒரு புத்தகம் எழுதலாம்.

சண்டையில், இராவணன் ஜடாயுவை தாக்கி அவனை மூர்ச்சையாக செய்கிறான்.

ஜடாயு சுதாரித்துக் கொண்டு எழுகிறான்

எழுந்தவுடன் இராவணனை பயங்கரமாக தாக்குகிறான் அவன் பத்து தலைகளையும் தன் அலகினால் கொத்தினான், தன் கூறிய நகத்தால் கீறினான், அவனுடைய பறந்த (பரந்த) சிறகுகளால் அடித்தான்..

பாடல்
 

ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; 
     அவன் தோள் 
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் 
     தத்தி, மூக்கால் 
கொத்தா, நகத்தால் குடையா, 
     சிறையால் புடையா, 
முத்து ஆர மார்பில் கவசத்தையும் 
     மூட்டு அறுத்தான்.

பொருள்