Thursday, November 30, 2023

திருக்குறள் - என்ன செய்தாலும் புகழ மாட்டேன் என்கிறார்களே..

 திருக்குறள் -  என்ன செய்தாலும் புகழ மாட்டேன் என்கிறார்களே..


என்ன செய்தாலும், பாராட்டி ஒரு வார்த்தை கிடையாது. என்ன செய்தாலும், அதில் ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, நம்மை குறை சொல்வதையே எல்லோரும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி இதுதான் வழக்கமாக இருக்கிறது. இதில் எங்கிருந்து புகழ் பெறுவது. 


ஒருவருக்கும் பாராட்டும் மனம் இல்லை. இவர்கள் மத்தியில் புகழ் பெறுவது என்பது நடவாத காரியம்....


இது எல்லோருக்கும் நடப்பதுதான். செஞ்சு செஞ்சு அலுத்துப் போய், புகழும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று விட்டு விடத் தோன்றும். 


வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 


பாடல் 


புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_30.html


(please click the above link to continue reading)


புகழ்பட = புகழ் கிடைக்கும்படி 


வாழாதார் = வாழ்க்கையை நடத்தாதவர்கள் 


தம்நோவார் தம்மை = தன்னைத் தான் நொந்து கொள்ளாமல் 


இகழ்வாரை  = தம்மை இகழ்பவர்களை 


நோவது எவன் = குறை சொல்வது எதனால் ?


நீ புகழ் அடையாமல் இருப்பதற்கு காரணம் நீ தான், இதற்கு எதற்கு மற்றவர்களை குறை சொல்கிறாய் என்று வள்ளுவர் கேட்கிறார். 


ஏன் மற்றவர்கள நம்மை குறை சொல்லப் போகிறார்கள்?  அவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்றால், அதற்கு பரிமேலழகர் பதில் தருகிறார். 


புகழ் அடைய ஆயிரம் வழிகள் இருக்கிறது. அப்படி இருக்க, ஒன்றையும் செய்யாமல், புகழ் இல்லாமல் வாழ்பவனை உலகம் ஏசத்தான் செய்யும். 


முயன்றால் எந்த வழியிலும் புகழ் அடையலாம். 


புகழ் என்றால் ஏதோ ஜனாதிபதி கையால் பரிசு வாங்க வேண்டும், மெடல் வாங்க வேண்டும் என்று இல்லை. 


வகுப்பில் முதலாவதாக வருவதும் புகழ்தான். 


அட, இன்னைக்கு காப்பி சூப்பர் என்று பாராட்டு பெறுவதும் புகழ்தான்.


அவங்க வீட்டுக்குப் போய் இருந்தேன். வீட்டை என்னமா அழகா வச்சிருக்கு அந்த பொண்ணு...என்று சொல்லப் படுவதும் புகழ்தான். 


குப்பை போல வீடு, எப்பவும் போல ஒரே மாதிரி சாப்பாடு, ஏதோ படித்தோம், தேர்ச்சி பெற்றோம் என்று படிப்பு என்று இருந்தால், உலகம் இகழத்தானே செய்யும். 


அதற்கு காரணம் யார்? அவர்கள் இல்லை, நாம் தான். 


எதையும், சிறப்பாகச் செய்ய வேண்டும், மற்றவர்கள் புகழும்படி செய்ய வேண்டும், நல்ல பேர் எடுக்க வேண்டும். 


ஆங்கிலத்தில் "your job is not done until you get the wow effect" என்று. 


சமையல் செய்வது ஒரு கலை என்றால் அதை பரிமாறுவதும் ஒரு கலைதான். பொரியல் நன்றாக இருக்கிறது என்று அதைச் செய்த இருப்புச் சட்டியோடு கொண்டு வந்து பரிமாறினால் எப்படி இருக்கும்?  அதை இன்னொரு அழக்கான பாத்திரத்தில், கொஞ்சமாக எடுத்து, அதற்கு என்று ஒரு தனிக் கரண்டி போட்டு, பரிமாறினால் அழகாக இருக்கும் அல்லவா. 


நல்ல துணி என்றாலும், அழுக்காக, சுருக்கம் சுருக்கமாக அதை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்?  


எதையும், நேர்த்தியாக, அழுகுபட செய்தால், புகழ் கிடைக்கும். அது நம் கையில் தான் இருக்கிறது. 


வள்ளுவரும், பரிமேலழகரும் இவ்வளவு மெனக்கெட்டதை, ஔவை கிழவி  மூன்றே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். 


"செய்வன திருந்தச் செய் "



அவ்வளவுதான். 


முயல்வோம்.


Wednesday, November 29, 2023

நாலடியார் - வயதான காலத்தில்

 நாலடியார் - வயதான காலத்தில் 


ஒருவன் அல்லது ஒருத்தி எவ்வளவு பாடுபட்டு உழைத்து கணவன்/மனைவி/பெற்றோர், பிள்ளைகள், உறவு, நட்பு என்று எல்லோரையும் அரவணைத்துச் சென்றாலும், வயதான காலத்தில், அவர்களுக்கு மதிப்பு குறைவது என்பது இயல்பு. 


"கிழத்துக்கு வேற வேலை இல்லை, எதையாவது பிதற்றிக் கொண்டே இருக்கும்"


"காதும் கேக்குறது இல்ல, சும்மா இருன்னு சொன்னாலும் இருக்கிறது இல்ல"


"உனக்கு ஒண்ணும் தெரியாது, பேசாம வாய மூடிகிட்டு சிவனேன்னு இறேன்"


இது போன்றவற்றை கேட்க வேண்டி இருக்கும். நேரடியாக முகத்துக்கு நேரே சொல்லாவிட்டாலும், பின் புறம் பேசுவார்கள். 


என்ன செய்யலாம்?


வயதாகி, படுக்கையில் விழும் முன், நமக்கு எது நல்லதோ, அதைச் செய்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நல்லது செய்கிறேன், எனக்கு வேண்டியதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், அந்த அப்புறம் வரும் போது உடலில் வலு இருக்காது. 


அப்போது வருந்திப் பயன் இல்லை. என்ன செய்தாலும், முதுமை வந்தே தீரும். உடலும், மனமும், மூளையும் செயல் குறையும். அதெல்லாம் இப்ப வராது, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது அறிவீனம். 


பாடல் 


மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை

ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்

புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்

தொழுத்தையாற் கூறப் படும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_29.html


(pl click the above link to continue reading)


மூப்பு = வயதாகுதல் 


மேல் வாராமை = மேல் வரும் நாட்களில் வருவதை, அல்லது உண்டது வாய் வழியும், மூக்கு வழியும் வருவது. வயதான காலத்தில் வாயில் நீர் வழிவது இயற்கை. 


முன்னே = அதற்கு முன்னே 


அறவினையை = அறம் சார்ந்த செயல்களை 


ஊக்கி = முயன்று செய்து 


அதன்கண் = அச்செயல்களை 


முயலாதான் = செய்ய முயற்சி செய்யாதவன் 


நூக்கிப் = தள்ளி வைத்து, நீக்கி வைத்து 

 

புறத்திரு = புறத்து இரு. வெளிய போய் இரு 


போ = இருந்து என்ன செய்யப் போற. போ(ய் தொலையேன்) 


கென்னும் = என்று சொல்லும் 


இன்னாச்சொல் = கொடிய சொற்களை 


 இல்லுள் = சொந்த வீட்டில் 


தொழுத்தையாற் = வேலைக்காரர்களால்  


கூறப் படும். = கூறப் படுவீர்கள் 


வீட்டில் உள்ள மனைவி, மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் அல்ல, வீட்டில் வேலை செய்பவர்கள் கூட வயதானவர்களை  மதிக்க மாட்டார்கள். 


அப்படிச்செய்து இருக்கலாம், இப்படிச் செய்து இருக்கலாம் என்று வயதான காலத்தில் வருத்தப் பட்டு பலன் இல்லை. 


இப்போதே அறவினைகளை செய்யத் தொடங்க வேண்டும். 




Sunday, November 26, 2023

திருக்குறள் - புகழோடு தோன்றுக

 திருக்குறள் - புகழோடு தோன்றுக 


இன்று நாம் காண இருக்கும் குறள் நாம் பலமுறை கேட்டு, குழம்பிய குறள். 



தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று


தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும். இல்லை என்றால் தோன்றாமல் இருப்பது நல்லது என்பது நேரடியான பொருள். 


இதற்கு, பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும், இல்லை என்றால் பிறக்காமலே இருப்பது நல்லது என்று பொருள் எடுக்கலாம். 


பிறப்பது நம் கையில் இல்லை. பிறந்து, வளர்ந்து, புகழ் அடையலாம். அது சாத்தியம். பிறக்கும் போதே எப்படி புகழோடு பிறப்பது? குழப்பமாக இருக்கிறது. 


சிலர், தோன்றில் என்ற சொல்லுக்கு, ஒரு துறையில் நுழைதல் என்று பொருள் கொண்டு. எந்த ஒரு வேலையில் இறங்கினாலும், அதை சிறப்பாக செய்து, அதில் நல்ல பேரும் புகழும் பெற வேண்டும். இல்லை என்றால் ஏதோ நானும் செய்தேன் என்று ஒரு செயலை செய்வதை விட, செய்யாமல் விடுவதே நல்லது என்று பொருள் சொல்கிறார்கள். கேட்க சரியாகத்தான் இருக்கிறது. 


படிக்கப் போகிறாயா, அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வர வேண்டும்.  ஓடப் போகிறாயா, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும். என்று உயர்ந்த புகழ் அடையும் நோக்கத்தில் எந்தத் துறையிலும் இறங்கு என்று சொல்லுவதாக பொருள் சொல்கிறார்கள். 


ஆனால், பரிமேலழகர் அப்படிச் சொல்லவில்லை. 


பரிமேலழகர் உரை தவறாக இருக்க வாய்ப்பு இல்லை. அவ்வளவு நுண்ணியமாக படித்தவர். அவர் என்ன சொல்கிறார் என்றால், 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)


"மக்களாய் பிறப்பதாய் இருந்தால் புகழோடு பிறக்க வேண்டும். இல்லை என்றால் விலங்காகப் பிறப்பது நல்லது"


என்கிறார். 


சிக்கல்தான். 


எப்படி அவர் இந்த மாதிரி பொருள் சொல்ல முடியும் என்று அவரே விளக்குகிறார். 


"அஃதிலார்" - அப்படி இல்லாதவர்கள் என்பது உயர் திணை. எனவே, தோன்றுதல் என்பது மனிதர்களைக் குறிக்கும் என்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும் என்றும் பிரித்துக் கொள்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், பிறக்காமலேயே இருந்து விடலாம் என்று அல்ல. பிறப்பது என்பது வினைப் பயன்.  அதைத் தடுக்க முடியாது. மக்களாய் பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும். அது நல்லது என்கிறார். 


ஏன் நல்லது?


விலங்குகள் படிக்கவில்லை, தான தர்மம் செய்யவில்லை, அன்பு செலுத்தவில்லை, பொருள் தேடவில்லை என்று யாரும் குறை சொல்ல மாட்டார்கள். "அது ஒரு சரியான முட்டாள் மாடு" என்று யாரும் ஒரு மாட்டை இழித்துச் சொல்ல மாட்டார்கள். அது படிக்காவிட்டாலும், அதன் மேல் பழி விழாது. ஆனால், மக்கள், முட்டாளாக இருந்தால், "அதோ போகிறான் பார், சரியான மர மண்டை " என்று இகழ்வார்கள். 


அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறார்?


புகழ் இல்லையா, நீ விலங்கை விட கேவலம் என்கிறார். புகழ் இல்லாத விலங்கு ஒன்றும் பாதகம் இல்லை. புகழ் இல்லாத மனிதன், பழி சுமக்க வேண்டி வரும். 


மனிதர்களுக்கு என்று கடமைகள் இருக்கிறது. அவற்றைச் சிறப்பாக செய்ய வேண்டும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் செய்யும் நல் வினை, தீ வினைகள் புண்ணிய, பாவங்களாக மாறி அடுத்த பிறவியில் நமக்கு அவற்றின் பலன்களைத் தரும். 


பரிமேலழகர் உரை செய்யும் போது, "புகழ்" என்பதற்கு "புகழ் அடைவதற்கான குணங்களோடு" என்று உரை செய்கிறார். 


பிறக்கும் போதே புகழ் அடையும் குணங்களோடு பிறக்க வேண்டும். 


அது எப்படி வரும்? முற்பிறவியில் செய்த நல்வினையால் வரும். 


எனவே, அடுத்த பிறவி மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் என்றால், இப்போது நல்லது செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அடுத்த பிறவியில், புகழுக்கு உரிய நற் குணங்களோடு பிறப்போம். புகழும் அடைவோம்.


எனவே, இப்போது நல்லது செய்ய வேண்டும். 


புகழ் ஒரு பிறவியில் வருவது அல்ல. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் , மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"


என்பார் மணிவாசகப் பெருந்தகை. 


அவ்வளவு பிறவி வேண்டி இருக்கிறது.




Saturday, November 25, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே 


அயல்நாட்டுக்கோ அல்லது ஒரு அழகிய மலை பாங்கான இடத்துக்கோ, அல்லது ஒரு அழகிய கடற்கரைக்கோ சுற்றுலா போகிறோம். அந்த இடம் மிக அழகாக இருக்கிறது. இரசிக்கிறோம். 


"அடடா, இப்படி ஒரு இடம் இருப்பது இத்தனை நாளா தெரியாம போச்சே...தெரிஞ்சுருந்தா முன்னாலேயே வந்திருக்கலாமே ..." என்று மனம் நினைக்கும் அல்லவா?  


"இத்தனை நாளா இதை miss பண்ணிவிட்டோமே" என்று மனம் வருந்தும் அல்லவா?


அது போல,


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் "பெருமாளே உன் திருவடிகளை வந்து அடைந்து விட்டேன். இது தெரியாமல் இத்தனை நாள், இந்த பெண்கள், உலக இன்பங்கள் என்று அலைந்து திருந்தி என் வாழ் நாளை வீணடித்து விட்டேனே" என்று  வருந்துகிறார். 


பாடல் 



சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,

புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,

அலம்புரிதடக்கையாயனே மாயா!  வானவர்க்கரசனே!, வானோர்

நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


சீர் பிரித்த பின் 


சிலம்பு அடி உருவில் கரு நெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து,

புலம் படிந்து உண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா,

அலம் புரி தடக்கையாயனே மாயா!  வானவர்க்கு அரசனே!, வானோர்

நலம் புரிந்து இறைஞ்சு உன் திருவடி அடைந்தேன்  நைமிசாரணியத்து உள் எந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_25.html


(pl click the above link to continue reading)


சிலம்பு அடி = கொலுசு அணிந்த கால்கள் 


உருவில் = அவர்கள் மேல் 


கரு  = கருமையான 


நெடுங்  = நீண்ட 


கண்ணார் = கண்களை உடைய பெண்கள் 


திறத்தனாய் = அவர்கள் பின்னே போய் 


அறத்தையே மறந்து = அற நெறிகளை மறந்து 


புலம் படிந்து = புலன்களின் பின்னால் 


 உண்ணும் போகமே  = போகத்தை அனுபவித்து 


பெருக்கிப் = அவற்றையே பெரிது என்று எண்ணி 


போக்கினேன் = வீணாக போக்கினேன் 


பொழுதினை வாளா = என் வாழ்நாளை வீணாக 


அலம் புரி = பக்தர்கள் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு அள்ளி அள்ளித் தரும் 


தடக்கையாயனே  = நீண்ட  கைகளை உடையவனே 


மாயா!  = மாயவனே 


வானவர்க்கு அரசனே!, = தேவர்களுக்கு அரசனே 


வானோர் = வானவர்களுக்கு 


நலம் புரிந்து = நன்மை பல புரிந்து 


இறைஞ்சு = வேண்டும் 


உன் திருவடி அடைந்தேன் = உன் திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்து = நைமிசாரண்யத்தில் 


உள் எந்தாய் = உள்ள என் தந்தையே 


ஒரு வழியாக உன் திருவடிகளை அடைந்து விட்டேன். இதற்கு முன் பெண்கள், புலன் இன்பங்கள் பின்னால் அலைந்து கொண்டிருந்தேன். இறுதியில் உன் திருவடிகளை அடைந்து விட்டேன்.


எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் உண்டு. 


ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஒரு இயற்கையான விடயம்தானே. அதை ஏன் இவ்வளவு பெரிய விடயமாக்க வேண்டும். ஆன்மீகத்தில் உள்ள எல்லா பெரியவர்களும் மனைவி, பெண் ஆசை என்பதை ஏதோ பஞ்ச மா பாதகம் போல் ஏன் சித்தரிக்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்க,


இந்தப் பாடல்களை படிக்கும் பெண்கள் மனநிலை எப்படி இருக்கும். 


நான், என் கணவரின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறேனா ? என்ற எண்ணம் ஒரு பெண்ணின் மனதை பாதிக்காதா?


ஒரு பெண், ஆணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறாள் என்றால் ஒரு ஆண், பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்க மாட்டானா?  


இது பற்றி யாரும் பேசுவதே கிடையாது. 


ஏன் ?







 



Thursday, November 23, 2023

திருக்குறள் - வித்தகர்க்கு அல்லால் அரிது

 திருக்குறள் - வித்தகர்க்கு அல்லால் அரிது



புகழ் அடைவது என்பது எளிதான காரியம் அல்ல. மிகுந்த முயற்சி தேவை. பண விரயம், கால விரயம், உடல் உழைப்பு என்று நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். 


வள்ளுவர் கேட்கிறார், நிலையில்லாதனவற்றை கொடுத்து நிலையானதைப் பெற்றுக் கொள்வதில் என்ன சிக்கல் என்று. 


இந்த செல்வம், இளமை (உடல்), ஆயுள் எல்லாம் நாம் என்ன செய்தாலும், செய்யாவிட்டாலும் நம்மை விட்டு ஒரு நாள் போய் விடும். அப்படி போவதை, நல்ல காரியத்துக்காக செலவழித்து அதன் மூலம் புகழ் அடைவது அல்லவா சிறப்பு. 


வாழ்நாள் எல்லாம் வெட்டிப் பொழுதாக கழித்து, இருக்கின்ற பணத்தை ஏதோ கொஞ்சம் செலவழித்து, கொஞ்சம் சேமித்து வைத்து, இறுதியில் கண்டது என்ன?  


இதை அறிந்தவன் என்ன செய்வான்?  பணத்தையும், நேரத்தையும், உடல் உழைப்பையும் புகழ் அடைய செலவழிப்பான். முதலில் அதை அறிய வேண்டும். அந்த அறிவு பெரும்பாலானோருக்கு இருப்பது இல்லை. எனவே, அப்படி செய்வது அறிவுள்ளவர்களுக்கு மட்டும் தான் முடியும் என்கிறார். 


பாடல் 


நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_23.html

(please click the above link to continue reading)


நத்தம்போல் = ஆக்கம் தரும் 


கேடும் = கேடும் 


உளதாகும் = தக்கவைக்கும் 


சாக்காடும் = சாக்காடு (இறப்பு) 


வித்தகர்க்கு = அறிஞர்களுக்கு 


அல்லால் அரிது = தவிர மற்றவர்களால் முடியாது 


கொஞ்சம் சிக்கலான குறள்.


ஆக்கம் தரும் கேடும் 


உள்ளது ஆக்கும் சாக்காடு 


அது என்ன ஆக்கம் தரும் கேடு, உளது ஆக்கும் சாக்காடு?


எப்படி கேடும், சாக்காடும் நல்லது ஆகும்? அதுவும் அது அறிஞர்களால் மட்டுமே முடியும் என்கிறாரே. 


ஒரே குழப்பாக இருக்கிறது அல்லவா?


நத்தம் என்றால் ஆக்கம், சிறப்பு, உயர்வு. ஆக்கம் தரும் கேடு எது என்றால், பசித்தவனுக்கு நாம் பொருளுதவி செய்கிறோம். நம்மிடம் இருந்த பொருள் குறைந்து விட்டது. நிறைய பேருக்கு அப்படி செய்தால் செல்வம் மிகுவாக குறையும். செல்வம் குறைவது கேடுதான். ஆனால், அந்தக் கேடு ஆக்கத்தைத் தரும். புகழ் என்ற ஆக்கத்தைத் தரும். 


ஒரு தாய் தன் இளமை, அழகு எல்லாம் இழந்து பிள்ளையை வளர்க்கிறாள். அவளது இளமைக்கும், அழகுக்கும் அது கேடுதான். இருப்பினும், ஒரு தாய் அதை மகிழ்ந்து செய்கிறாள். காரணம், அந்த இழப்பு, அவளுக்கு ஒரு குழந்தையைத் தருகிறது. அந்த ஆக்கம் , அவளது இழப்பை விட உயர்ந்தது. 


அது போல, தானம் செய்வது, பிறருக்கு உழைப்பது எல்லாம் ஒரு விதத்தில் கேடுதான், ஆனால் அந்தக் கேடு மிகப் பெரிய புகழைத் தரும்.


எப்படி சாக்காடு சிறப்பு ஆகும்?


இந்த பூத உடல் இறந்து போகும். ஆனால், புகழுடம்பு என்றும் நிலைத்து நிற்கும். உடம்புக்கு அழிவு கட்டாயம் வரும். அந்த அழிவில் இருந்து என்ன கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். 


நிலையில்லா இளமையையும், செல்வத்தையும் கொடுத்து நிலையான புகழைப் பெற வேண்டும் என்பது கருத்து. 




Tuesday, November 21, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன் 


நைமிசாரண்யம் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமாள் மேல் திருமங்கை ஆழ்வார் பத்துப் பாசுரங்கள் மங்களாசாசனம் செய்து இருக்கிறார். 


அற்புதமான பாடல்கள். 


இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று நினைப்பது நம் அறிவின் குறைபாடு. உருவம் இல்லா ஒன்றை நம்மால் சிந்திக்க முடியாது. ஏதோ ஒரு உருவத்தைப் பற்றிக் கொள்கிறோம். சிக்கல் என்ன என்றால், அதை விடுத்து மேலே போவது இல்லை. அதுவே சதம் என்று இருந்து விடுகிறோம். 


நம் மதம், அதில் இருந்து விடுபட பல வழிகளைச் சொல்லித் தருகிறது. 


பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன், விக்ரகத்தை கடலில் கரைத்து விடுகிறார்கள். ஏன்?  வேலை மெனக்கெட்டு செய்வானேன், பின் அதைக் கொண்டு கடலில் போடுவானேன்?


காரணம் என்ன என்றால்,


உருவமாய் இருந்தது, இப்போது அருவமாகி விட்டது. பிள்ளையார் வடிவில் இருந்த அந்த உருவம், இப்போது கடலில் கரைந்து விட்டது. இப்போது கடலைப் பார்த்தால், அதில் அந்த உருவம் இருக்கிறது என்று தெரியும். ஆனால், அதை காண முடியாது. அடுத்த கட்டம், கடலையும் தாண்டி, இந்த உலகம் பூராவும் அந்த சக்தி நிறைத்து கரைந்து நிற்கிறது என்று உணர்வது. 


இதை ஏன் சொல்கிறேன் என்றால், 


நைமிசாரண்யம் என்பது ஒரு காடு. அந்த காட்டையே இறைவானாகக் கண்டார்கள். திருவண்ணாமலையில், அந்த மலையே சிவன் என்று கொண்டாடுவார்கள். 


நைமிசாரன்யத்துள் உறை பெருமாளே, உன்னிடம் சரண் அடைந்தேன் என்று உருகுகிறார் திருமங்கை.


"இந்த பெண்ணாசையில் கிடந்து நீண்ட நாள் உழன்று விட்டேன். அது தவறு என்று உணர்ந்து கொண்டேன். இந்த பிறவி என்ற நோயில் இருந்து விடுபட எண்ணம் இல்லாமல், இந்த உலக இன்பங்களில் மூழ்கிக் கிடந்தேன். இப்போது அதையெல்லாம் அறிந்து வெட்கப் படுகிறேன். உன் திருவடியே சரணம் என்று வந்துவிட்டேன் " என்று உருகுகிறார். 


பாடல்   


வாணிலா முறுவல் சிறுனுதல் பெருந்தோள் மாதரார் வனமுலைப் பயனே


பேணினேன் அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயறுப்பான்,


ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க் கலவியிந் திறத்தை


நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_21.html


(please click the above link to continue reading)



வாணிலாமுறுவல் = வான் + நிலா + முறுவல் = வானில் உள்ள நிலவைப் போல ஒரு புன்முறுவல்  


சிறுனுதல் = சிறிய நெற்றி 


பெருந்தோள் = பெரிய தோள்கள் 


மாதரார் = பெண்கள் 


வனமுலைப் = வனப்பான மார்பகங்களே 


பயனே = அதுதான் இன்பம் என்று 



பேணினேன்  = போற்றினேன் 


அதனைப் = அப்படி போற்றியதை 


பிழையெனக்கருதிப் = தவறு என்று உணர்ந்து 


பேதையேன் =  அறிவில்லா பேதையான நான் 


பிறவிநோயறுப்பான் = பிறவி என்ற நோயை நீக்கும் ,


ஏணிலேனிருந்தேன் = ஏண் இலேன் இருந்தேன் = ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்தேன் 

 


னெண்ணினேன் = எண்ணினேன் (யோசித்துப் பார்த்தேன்)  


னெண்ணி = எண்ணிய பின் 


இளையவர்க் = அறிவில் சிறியவர்களின் 


கலவியிந்திறத்தை = கலவியின் திறத்தை = அவர்களோடு சேர்ந்து இருப்பதை 



நாணினேன் = வெட்கப்பட்டேன் 


வந்துந் = உன்னிடம் வந்து 


திருவடியடைந்தேன் = உன்னுடைய திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்துளெந்தாய் = நைமிசாரண்யம் என்ற இடத்தில் எழுந்து அருளி இருக்கும் என் தந்தை போன்றவனே 


ஒரு தவறில் இருந்து மீள வேண்டும் என்றால், முதலில் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும். 


Alcoholic Anonyms என்று ஒரு இயக்கம் இருக்கிறது. மது, போன்ற போதை பொருள்களுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள நினைப்பவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பு.  அந்த அமைப்பில் உள்ளவர்கள் முதலில் சொல்லுவது...


"I am so-and-so and I am an addict"


என்று ஆரம்பிப்பார்கள். 


காரணம், எது தவறு என்று தெரிந்தால் தானே அதில் இருந்து விடுபட முடியும். 


தவறு செய்து பழகி விட்டால், அதைச் செய்வதற்கு ஒரு ஞாயம் கற்பிக்கத் தொடங்கி விடுவோம். 


முதலில் ஆழ்வார், இதெல்லாம் நான் செய்த தவறுகள் என்று பட்டியலிடுகிறார். 


- பெண்ணாசையில் மூழ்கிக் கிடந்தது 

- சிறியோர் தொடர்பு 

- பிறவி பற்றி எண்ணம் இல்லாமல் இருந்தது 


அது மட்டும் அல்ல , அதை ஏன் செய்தேன் தெரியுமா என்று அதை நியாயப் படுத்த முயலவில்லை. 


"நாணினேன்", வெட்கப் படுகிறேன் என்கிறார். 


சரி, இதெல்லாம் தவறு என்று தெரிகிறது. திருத்தி என்ன செய்வது?


"அதெல்லாம் எனக்குத் தெரியாது...உன்னிடம் வந்து விட்டேன்...இனி உன்பாடு' என்று பெருமாளிடம் விட்டு விடுகிறார்.   


பாசுரத்தை மீண்டும் படித்துப் பாருங்கள். ஏதோ பெருமாளிடம் நேரில் பேசுவது போல இருக்கும். 



Monday, November 20, 2023

திருக்குறள் - புலவரைப் போற்றாது

 திருக்குறள் - புலவரைப் போற்றாது 


நமது வாழ்வில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடக்கிறது. நமக்கு மட்டும் அல்ல, பொதுவாகவே இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்தே நிற்கிறது. 


இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்து நிற்கிறது. இப்படி கலக்காமல் தனித் தனியே இருக்கும் உலகம் இருக்குமா? 


இருக்கிறது என்கிறார்கள். 


இன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம் சுவர்க்கம் எனப்படுகிறது. 


துன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம், நரகம் எனப்படுகிறது. 


சுவர்க்கம் என்பதை புத்தேள் உலகு இன்று குறித்தார்கள் அந்த நாட்களில். 


அது அப்படி இருக்கட்டும் ஒரு புறம். 


யார் இந்த புத்தேள் உலகுக்குப் போவார்கள்? அங்கே போனாலும் என்ன மரியாதை இருக்கும் ?  மகாத்மா காந்தியும் போகிறார், நானும் போகிறேன் என்றால் யாருக்கு மதிப்பு அதிகம் இருக்கும்?  


ஒரு ஞானியும், ஒரு இல்லறத்தானும் புத்தேள் உலகம் போனால், அங்குள்ள தேவர்கள் யாரை அதிகம் மதிப்பார்கள்?  ஞானியையா? அல்லது இல்லறத்தானையா?  


பாடல் 


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு


பொருள் 



(pl click the above link to continue reading)


நிலவரை = நிலத்தின் எல்லை வரை. அதாவது, இந்த பூ உலகம் நிற்கும் வரை 


நீள்புகழ் = நீண்ட புகழை 


ஆற்றின் = ஒருவன் பெறுவானானால் 


புலவரைப் = ஞானியரை 


போற்றாது = சிறப்பாக நினைக்காது 


புத்தேள் உலகு = சொர்க்கம் 


ஞானியை விட இல்லறத்தில் இருந்து புகழ் பெற்றவனுக்குத் தான் மதிப்பு அதிகம். 


ஞானியாரைப் போற்றாது புத்தேள் உலகு.


ஏன் போற்றாது? இல்லறத்தில் இருப்பவன் எப்படி ஞானியை விட சிறந்தவனாக முடியும்?


இருவருமே புத்தேள் உலகம் போக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.


ஞானி, ஒரு தனி மனிதனாக, தன் முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டு போகிறான். 


ஆனால், இல்லறத்தில் இருப்பவனோ, தான், பிள்ளை, மனைவி, மக்கள், சுற்றம், நட்பு, விருந்து என்று எல்லோரையும் அணைத்துக் கொண்டு சிறப்பாக இல்லறம் நடத்தி, இங்கும் புகழ் பெறுகிறான், மேலே சென்று அங்கும் புகழ் பெறுகிறான். 


ஒருவன் சிறப்பாக இல்லறத்தை நடத்தினான் என்றால், அவன் புகழ் இந்த வையம் இருக்கும் வரை நிற்கும்.  அவனுக்கு இங்கும் சிறப்பு, அங்கும் சிறப்பு. 


சொர்க்கம் போக வேண்டுமா, இல்லறத்தை சிறப்பாக நடந்த்துங்கள். அது போதும். 


அது என்ன சிறப்பான இல்லறம் என்றால், இதுவரை நாம் பார்த்த அனைத்து குறள் வழியும் நின்றால் போதும். அதுதான் சிறந்த இலல்றம். 


அறன் , வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல், அன்புடைமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, விருந்தோம்பல்....என்று படித்ப் படியாக வளர்ந்து பின் ஒப்புரவு, ஈகை, அண்ட் ஆகி இறுதியில் புகழ் என்பதில் வந்து நிற்கும் இல்லறம். 


சொர்க்கம் போக short-cut ...