Wednesday, September 21, 2022

திருக்குறள் - வெஃகாமை - முன்னுரை

 திருக்குறள் - வெஃகாமை - முன்னுரை 


பொறாமை பற்றி முந்தைய அதிகாரத்தில் படித்தோம். 


பொறாமை வந்தால் என்ன ஆகும்?


மற்றவன் பெற்ற ஆக்கத்தைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாது. அது அவனுக்கு இல்லாமல் போக வேண்டும் என்று நினைவு வரும். "பெரிய வண்டி வாங்கிடானாம்...வேகமா போய் எங்காவது விபத்து நடந்து மருத்துவ மனையில் கட்டுப் போட்டு கிடந்தாதான் அவன் ஆணவம் அடங்கும்" என்று மனதுக்குள் சாத்தான் ஓதும். 


இல்லை என்றால் அவன் பொருள் தனக்கும் வேண்டும் என்று ஆசை வரும். 


அவன் பொருளை தான் எப்படி கொள்ள முடியும்?



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


(Please click the above link to continue reading)



அதிகாரம் இருந்தால், மிரட்டி வாங்கிவிடலாம்.  பல அரசியல்வாதிகள் சாதாரண மக்களின் நிலத்தை, வீட்டை, தொழில் நிறுவனங்களை மிரட்டி வாங்கிவிடுவதை பற்றி செய்திகள் படிக்கிறோம். 


அதிகாரம் இல்லாவிட்டால், ஏமாற்றி எடுத்துக் கொள்ளலாமா என்று நினைப்பது. 


பொருள் மட்டும் அல்ல, மற்றவனுக்கு ஒரு அழகான மனைவி இருந்தால் அவள் மேல் ஆசைப் படுவது.


இராவணன் பட்ட மாதிரி, இந்திரன் ஆசை கொண்ட மாதிரி. 


ஒருவன் புகழை அழிக்க நினைப்பது. 


ஒருவன் கருத்தை களவாடி தன் கருத்துப் போல சொல்லுவது. 


இப்படி இந்த பொறாமை பல விதங்களில் வெளிப்படும். 


அதில் ஒன்று பற்றி அடுத்த அதிகாரத்தில் கூற இருக்கிறார். 


 வெஃகாமை 


பிறனுடைய பொருளை நடுவு நிலைமை இன்றி கவர நினைத்தல். 


கவர்வது குற்றம். அதற்கு சட்டப்படி தண்டனை உண்டு. 


கவர நினைப்பது கூட குற்றமாம். நினைப்பதற்கு சட்டப்படி தண்டனை கிடையாது. ஆனால், அதுவும் குற்றம்தான். 


"வவ்வக் கருதாமை" என்பார் பரிமேலழகர். 


 வெஃகாமை பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் இந்த  வெஃகாமை இருக்கக் கூடாது. அவனுக்கு கிடைத்தது அவனுக்கு. நமக்கு கிடைத்தது நமக்கு என்று இருக்க வேண்டும். 


பிறன் பொருளை கவர நினைத்தால், இல்லறம் சிதையும். நீ அவன் பொருளை எடுக்க நினைக்கும் போது, உன் பொருளை வேறொருவன் எடுக்க நினைப்பான். எங்கு போய் முடியும் இது?


இல்லறத்தில் இருப்பவன் இதை தவிர்க் வேண்டும். 



மேலும் சிந்திப்போம். 






No comments:

Post a Comment