Thursday, April 6, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - பயனில சொல்லாமை நன்று

   

 திருக்குறள் - பயனில சொல்லாமை - பயனில சொல்லாமை நன்று



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


பயனற்ற சொற்களை பேசுவதை எவ்வளவு தூரம் வள்ளுவர் கண்டிக்கிறார் என்பதற்கு இன்று நாம் பார்க்க இருக்கும் குறள் ஒரு உதாரணம். 


நீதியற்ற சொற்களை, இனிமை இல்லாத சொற்களை சொன்னால் கூட ஒருவிதத்தில் பரவாயில்லை, ஆனால் ஒரு போதும் பயனற்ற சொற்களை சொல்லக் கூடாது என்கிறார். 



நல்ல பலன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தீய பயன் தந்தால் கூடப் பரவாயில்லை, ஒரு பயனும் இல்லாத சொற்களை சொல்லாதே என்கிறார். 




பாடல் 


நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று



பொருள் 




(please click the above link to continue reading)



நயனில = நீதியற்ற, இனிமையற்ற 


சொல்லினும் = (சொற்களை) சொன்னாலும் 


சொல்லுக = சொல்லலாம் 


சான்றோர் = பெரியவர்கள் 


பயனில = பயனற்ற (சொற்களை)  


சொல்லாமை  = சொல்லாமல் இருப்பது 


நன்று = நல்லது 


அதற்காக, வள்ளுவரே சொல்லிவிட்டார் அறன் அல்லாத சொற்களை பேசலாம் என்று ஆரம்பிக்கக் கூடாது. 


"ஐயோ டாக்டர் இந்த பல் வலி தாங்க முடியவில்லை. செத்தாலும் பரவாயில்லை, அந்த பல்லை பிடுங்குருங்க " என்று ஒரு நோயாளி சொன்னால், கொல்வதற்கு அனுமதி அளித்து விட்டான் என்று கொள்ளக் கூடாது.  


"உயிரே போனாலும்" என்பதில் உள்ள 'ம்', போகக் கூடாது என்பதை அறிவுறுத்தும். 



அது போல 


நயனில சொல்லினும் 


என்பதில் உள்ள 'ம்' சொல்லக் கூடாது என்பதை அறிவுறுத்தும். 


ஒரு வேளை , அரிதான ஒரு சமயத்தில் சொல்ல வேண்டி வந்தால், சொல்லலாம் ஆனால் ஒரு காலத்திலும் பயனற்ற சொற்களை பேசக் கூடாது. 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

No comments:

Post a Comment