Saturday, July 30, 2022

கந்தரனுபூதி - ஒரு முன்னுரை

 கந்தரனுபூதி -  ஒரு முன்னுரை 


 கந்தரனுபூதி என்ற நூல் அருணகிரிநாதர் அருளிச் செய்தது. 


அருணகிரினாதற்கே உரிய சந்த நடையில், மிக மிக ஆழமான தத்துவ உண்மைகளை உள்ளடக்கிய நூல். சைவ சமயத்தின் ஆழ்ந்த தத்துவங்களை பிழிந்து எடுத்து தரும் நூல். 


சைவ சித்தாந்தம் என்றவுடனே சிலருக்கு சற்றே சங்கடம் வரும். 


இறை நம்பிக்கை இல்லாதவர்கள் "கடவுளே இல்லை என்கிறேன், இதில் சைவம் எங்கிருந்து வந்தது...இதை ஏன் நான் படிக்க வேண்டும்" என்று கேட்கலாம். 


இந்து சமயத்தில் மற்ற பிரிவுகளைச் சார்ந்தவர்கள் "என் பிரிவுக்கு வேறு கடவுள், வேறு தத்துவங்கள் இருக்கின்றன. நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்" என்று கேட்கலாம். 


மற்ற சமயத்தைச் சார்ந்தவர்கள், "இந்து மதமும், சைவமும் உயர்வா? என் மதம் அதை விட உயர்ந்தது. எங்களுக்குத் தனிக் கடவுள் உண்டு, தத்துவம் உண்டு...நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்" என்றும் கேட்கலாம். 


அவர்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது. 



https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


(Pl click the above link to continue reading) 


தத்துவம் என்பது உண்மையை விளக்குவது. ஏதோ ஒரு தத்துவத்தைப் படித்தால் போதும். அதில் இருந்து இன்னொரு தத்துவத்தை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். 


இந்தத் தத்துவங்களை படிப்பதன் மூலம் உங்கள் தத்துவங்களின் ஆழம் மேலும் உங்களுக்குப் புரிய வரும். 


இறுதியில்,உண்மை என்பது ஒன்றுதான். 


போய்ச் சேரும் இடம் ஒன்றுதான். வழிகள்தான் வேறு வேறு. இன்னொரு வழியைத் தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதை ஏற்றுக் கொல்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம். 


ஒரு அறிவுத் தேடலுடன் இதை அணுகுவோம்.  ஏதேனும் புது விடயங்கள் கிடைக்கலாம்.


நம் அறிவை அது விரிவாக்கும். 


நமது பக்தி இலக்கியங்களில் பக்தி இருக்கும், இந்த உலகம் பற்றிய அறிவியல் சிந்தனை இருக்கும்,வாழ்கைக்குத் தேவையான தத்துவங்கள் இருக்கும், இசை, சந்தம், இனிமை இருக்கும். 


அவற்றில் ஒரு அறிவுத் தேடல் இருக்கும். இந்த உலகம் எப்படி வந்தது, ஏன் வந்தது, நாம் எப்படி வந்தோம், ஏன் வந்தோம், எது நிரந்தரம், ,எது தற்காலிகமானது, எது இன்பம், எது துன்பம், ஏன் இந்த இன்ப துன்பங்கள் வருகின்றன, அவற்றை எப்படி கையாள்வது, இது போன்ற பல விடயங்களில் அவை தங்கள் முடிவுகளைத் தெரிவிக்கும். 


ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம். 


அவர்கள் தேடி இருக்கிறார்கள். தேடிக் கண்டு பிடித்தத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். என்னதான் கண்டு பிடித்தார்கள் என்று அறிந்து கொள்ள முயல்வோம். 


இனி நூலுக்குள் நுழைவோம். 

Thursday, July 28, 2022

திருக்குறள் - பொறையுடைமை - நோற்பாரின் பின்

   

திருக்குறள் - பொறையுடைமை -  நோற்பாரின் பின்


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 





குறள் 51: அகழ்வாரை



குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 



குறள் 57:  அறன் அல்ல செய்யாமை 

குறள் 58:  தகுதியான் வென்று விடல்



குறள் 59:  துறந்தாரின் தூய்மை உடையார்  




)



இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளுக்கு வந்து விட்டோம். 

வாழ்வின் நோக்கம், மனிதப் பிறவியின் நோக்கம் வீடு பேறு அடைவது. அந்த வீடு பேறு அடைவதற்கு பெரிய நீண்ட வரிசை நிற்கிறது. அந்த வரிசையில் முன்னால் நிற்பவர்கள், உலகப் பற்றுகளை துறந்து, உண்ணா விரதம் இருந்து, தவம் செய்யும் முனிவர்கள். 


அவர்களுக்குப் பின்னால் தான் இல்லறத்தில் உள்ளவன். 


அவர்கள் எப்போது போவது, இவன் என்று வீடு பேறு அடைவது. 


வவ்ளுவர் ஒரு சிறப்பு வழி சொல்கிறார். இல்லறத்தில் உள்ளவன்  முனிவர்களை, துறவிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னால் போய் விடலாம், எப்படி என்றால் பொறுமையை கடைப் பிடித்தால் என்கிறார். 



பாடல் 



உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்


பொருள் 




((pl click the above link to continue reading)



உண்ணாது நோற்பார் = உணவை உண்ணாமல் விரதம் மேற்கொள்ளும் 


பெரியர் = பெரியவர்கள், உயர்ந்தவர்கள், முனிவர்கள், துறவிகள் 


பிறர்சொல்லும் = மற்றவர் சொல்லும் 


இன்னாச்சொல் = நன்மை தராத சொற்களை 


நோற்பாரின் பின் = பொறுத்துக் கொண்டவர்களுக்குப் பின்னால் 


என்னத்துக்கு அனாவசியமா இருக்குறதை எல்லாம் துறந்து, சோறு தண்ணி இல்லாம, காட்டுல போய் கஷ்டப் படணும் ?

இல்லறத்தில் இருந்து கொண்டே அந்தப் பலன்களை எல்லாம் பெறமுடியும் என்கிறார் வள்ளுவர்.

அது மட்டும் அல்ல, அதில் இன்னொரு ஆழமான செய்தியும் புதைந்து கிடக்கிறது. 


ஒரு வேளை உணவை நம்மால் விட முடிகிறதா? அந்த நேரத்துக்கு வயிற்றில் மணி அடித்து விடுகிறது. சாப்பிடாவிட்டால் ஒரு பதற்றம் வருகிறது, லேசா தலை வலிக்கிறது, சோர்வு வருகிறது. 


அதையே ஒரு வழக்கமாகக் கொள்வது எவ்வளவு கடினம்?


பொறுமையாக இருப்பவர் அவர்களுக்கு முன்னால் என்றால், பொறுமையாக இருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்து கொள்ள முடியும். 


அதிலும் இல்லறத்தில் இருந்து கொண்டு பொறுமையாக இருப்பது என்பது மிக மிகக்  கடினம். 


இதுவரை திருக்குறளுக்கு பரிமேலழகர் ஊடாக உரை கண்டோம்.


இந்த அதிகாரத்தை நான் இன்னொரு விதமாகவும் பார்க்கிறேன். இது நிச்சயம் வள்ளுவர் கூறியதோ, பரிமேலழகர் கூறியதோ அல்லது வேறு உரை ஆசிரியர்கள் கூறியதோ அல்ல. எனவே, பிழை எல்லாம் என் பொறுப்பே. நான் சொல்ல நினைப்பது அதிகாரத்தோடு நேரடி தொடர்பு இல்லாதது ஆனால் இப்படி சிந்தித்தால் என்ன என்று தோன்றியது. 



பொறுமை என்பது மற்றவர்கள் நமக்குச் செய்யும் அல்லது சொல்லும் தீய சொற்களை பொறுப்பது மட்டும் அல்ல. 

வாழ்வில் பொறுமை பல விதங்களில் தேவைப் படுகிறது. பொறுமை இல்லாததால் பல துன்பங்கள் நமக்கு வந்து சேர்கின்றன. 


நல்லது செய்தால் கூட, அதன் விளைவுகளை காண, பெற பொறுமை அவசியமாகிறது. 


நான் எவ்வளவு செய்தேன், ஒரு நன்றி இல்லையே, ஒரு பாராட்டு இல்லையே என்று நாம் சில சமயம் வருந்தாலம். பொறுமை வேண்டும். சில சமயம் நல்ல விடயங்களுக்கு பலன் கிடைக்க காலம் ஆகலாம். 



எத்தனை நாள் உடற் பயர்ச்சி செய்கிறேன், உணவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். எடை குறையவே மாட்டேன் என்கிறதே என்றால், பொறுமை. அவசரப் படக்கூடாது. 


சில விதைகள் ஓரிரு நாளில் துளிர்விடும். சில விதைகள் நாள் கணக்கில் புதைந்து கிடக்கும். 


இவ்வளவு வேலை செய்தேன், பதவி உயர்வு வரவில்லை, சம்பள உயர்வு வரவில்லை என்று வருந்தக் கூடாது. வரும். பொறுமை அவசியம். 


பிள்ளைகளுக்கு திருமணம், வேலை, அவர்கள் பிள்ளைகள் பெறுவது, எல்லாவற்றிலும் நமக்கு ஒரு அவசரம். பொறுமை கிடையாது. நாம் அவசரப்பட்டால் இரண்டு நிகழும். 


ஒன்று அவசரத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டு காலம் எல்லாம் வருந்த நேரலாம். 


அல்லது, நமக்கு ஒரு பதற்றம், மன அழுத்தம், இரத்த அழுத்தம், தூக்கமின்மை என்று வரலாம். 


இரண்டும் தேவை இல்லாதவை. 



பொறுமை இல்லாததால் எரிச்சல், கோபம், வருத்தம் எல்லாம் வரும். ஏன் இந்த போக்குவரத்து இவ்வளவு மெதுவாகப் போகிறது? என்று அவசரமாக வண்டியை வேகமாக ஓட்டி, எங்காவது மோதி, அனாவசியமான சிக்கல்கள் வந்து சேரும். 


பொறுமை இல்லாததால், நாம் நின்று நிதானமாக வாழ்வை இரசிக்க முடிவதில்லை. 


சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும், சீக்கிரம் வீடு கட்ட வேண்டும், சீக்கிரம் பதவி உயர்வு வேண்டும், சீக்கிரம் எல்லாம் வேண்டும் என்று குறிக்கோளிலேயே மனம் நிற்கிறது. 


மனைவியை இரசிக்க நேரம் இல்லை, பிள்ளைகளை கொஞ்ச நேரம் இல்லை, கணவனோடு அன்பாகப் பேச நேரம் இல்லை, மழையில் நனைய, இசையை இரசிக்க, காலாற குடும்பத்தோடு நடக்க, பேசி மகிழ, எதற்குமே நேரம் இல்லாமல் போய் விட்டது.  காரணம் எல்லாம் வேண்டும், இன்றே வேண்டும். 


கொஞ்சம் வேகத்தைக் குறைத்து, பொறுமையாக இருந்தால் வாழ்வை பலமடங்கு இரசிக்கலாம். 


"வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க"

(திருவாசகம்).

நான் சொன்னது குறளுக்கு வெளியேதான். குறளுக்கு உரை அல்ல. அது ஒரு சிந்தனை அவ்வளவுதான். 


பிடித்தால் இரசியுங்கள்.




Wednesday, July 27, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 5 - மன்னன் ஆவி அன்னாள்

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 5   - மன்னன் ஆவி அன்னாள்




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


பாகம் 4 - மானைத் தூக்கிய யானை போல 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html





)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியைச் சொல்ல தயரதன் கைகேயி அரண்மனைக்கு வருகிறான். அங்கே கைகேயி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். அவளை அப்படியே வாரி எடுக்கிறான் தயரதன். 


"கைகேயி அவன் கைகளை தள்ளிவிட்டு, கீழே நழுவி விழுகிறாள். ஒரு மின்னல் தரை இறங்கி வந்தது போல இருந்தது அது. ஒன்றும் பேசவில்லை. பெரு மூச்சு விடுகிறாள், தயரதனின் உயிர் போன்ற கைகேயி"


பாடல் 


நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,

மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்.

ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள் -

மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.



பொருள்   


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/5.html


(please click the above link to continue reading) 


நின்று = ஒரே இடத்தில் நின்று 


தொடர்ந்த =மேலும் நீண்ட, மேலும் நெருங்கி வந்த 


நெடுங் கை  தம்மை நீக்கி, = (தயரதனின்) நீண்ட கைகளை தள்ளிவிட்டு 


மின் துவள்கின்றது போல = மின்னல் துவழ்ந்து வருவது போல 


மண்ணில் வீழ்ந்தாள். = மண்ணில் விழுந்தாள் 


ஒன்றும் இயம்பலள்; = ஒன்றும் பேசவில்லை 


நீடு உயிர்க்கலுற்றாள் - = நீண்ட பெரு மூச்சு விட்டாள் 


மன்றல் = மணம் பொருந்திய 


அருந் தொடை  = அழகிய மலர்களைக் கொண்டு செய்த மாலை அணிந்த 


மன்னன் = தயரதனின் 


 ஆவி அன்னாள். = உயிர் போன்றவள் 


கைகேயி என்றால் தயரதனுக்கு அவ்வளவு அன்பு. உயிர் போன்றவள். 


கணவன் மனைவி இடையில் உள்ள சிக்கல் எப்படி எழுகிறது, அது எப்படி தொடர்கிறது என்று பார்ப்போம். 







Monday, July 25, 2022

திருக்குறள் - பொறையுடைமை - துறந்தாரின் தூய்மை உடையார்

  

திருக்குறள் - பொறையுடைமை -  துறந்தாரின் தூய்மை உடையார்  


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 



குறள் 57:  அறன் அல்ல செய்யாமை 

குறள் 57:  தகுதியான் வென்று விடல்



)


முன்பு இரட்டைத் தேர்வு (double promotion) என்று ஒரு முறை இருந்தது. அதாவது, மிக மிக நன்றாக படிக்கும் மாணவனை, தேர்ச்சி முறையில் அடுத்த வகுப்பைத் தாண்டி அதற்கு மேல் உள்ள வகுப்புக்கு அனுப்புவது. 


உதாரணமாக நன்றாகப் படிக்கும் மாணவனை ஆறாவது வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்புக்கு அனுப்புவது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாழ்வின் படிகளை சிந்தித்தால் இல்லறம், துறவறம்,  வீடு பேறு என்று விரியும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"பொறுமை உள்ள இல்லறத்தான் துறவியை விட உயர்ந்தவன் " 


என்று. 


பாடல் 


துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்



பொருள் 




((pl click the above link to continue reading)



துறந்தாரின் = முற்றும் துறந்த துறவிகளை விட 


தூய்மை உடையார் = தூய்மை உடையவர்கள் (யார் என்று கேட்டால்) 


இறந்தார்வாய் = அறத்தை மீறியவர்கள் வாயில் (இருந்து  வரும்) 


இன்னாச்சொல் = கொடிய சொற்களை 


நோக்கிற் பவர் = பொறுத்துக் கொள்பவர் 



இல்லறத்தில் இருந்தாலும், தன் மேல் பிறர் தகாத வார்த்தை கூறினாலும், அதை பொறுத்துக் கொள்பவர், துறவிகளைவிட தூய்மை உள்ளவர்கள் என்று கூறுகிறார். 


அதாவது, ஒரு இல்லறத்தான் துறவு நோக்கி விரைவாகச் செல்கிறான், ,சரியான பாதையில் செல்கிறான் என்று சொல்கிறார். 


"துறந்தாரின் தூய்மை உடையார்" என்பதில் "தூய்மை" என்றால் என்ன என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


"தூய்மை என்றால் மனத்தின் கண் மாசு இன்மை" என்று. 



யாரால் பொறுமையாக இருக்க முடியும்?


மனதில் குற்றம் இல்லாமல் இருந்தால்தான் பொறுமையாக இருக்க முடியும். 


பொறுமை இழப்பதற்கு காரணம் என்ன?


கோபம், தான் பெரியவன் என்ற ஆணவம், நான் தவறே செய்ய மாட்டேன் என்ற நினைப்பு, அப்படியே செய்தாலும் மற்றவன் யார் என்னைச் சொல்ல என்ற மற்றவன் பற்றிய குறைவான மதிப்பீடு போன்ற குற்றங்கள். 


நம் மனதில் குற்றம் இல்லை என்றால், பொறுக்கும் குணம் தானே வந்து விடும். 


அப்படியானால், பொறுமை இல்லாதவர்கள், தங்கள் குறைகளைத் தேடி களைய வேண்டும். அல்லாமல், அவன் இப்படிச் சொன்னான், இவள் இப்படிச் செய்தாள் என்று மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. 



அப்படி தன் குறைகளை கண்டு அறிந்து அவற்றை நீக்கிக் கொள்ளுபவன் குறை ஒன்றும் இல்லாத தூய மனத்தவனாய் இருப்பான். 


அப்படிட்பட்டவன் துறைவியை விட தூய்மையானவன் என்கிறார். 


அனைத்தையும் துறந்து, காடு போய், தவம் எல்லாம் செய்வதை விட, இல்லறத்தில் இருந்து கொண்டே மன மாசுக்களை அகற்றி, பொறுமையைக் கடை பிடித்தால் போதும் என்கிறார். 



ஆழ்ந்த கருத்து. 



உள்வாங்கிக் கொள்ளுங்கள். அது உள்ளே போய் வேலை செய்யும். 

Sunday, July 24, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 4 - மானை யானை தூக்கியது போல

   

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 4   - மானை யானை தூக்கியது போல 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html




)


இது உங்கள் வீட்டிலும் நிகழ்ந்து இருக்கலாம். 


ஏதோ ஒரு காரணத்தால் மனைவி வருத்தமாக இருக்கிறாள். சாப்பிடவில்லை. அலங்காரம் பண்ணிக் கொள்ளவில்லை. ஒரே சோகம். தரையில் கையை தலைக்கு வைத்து படுத்து இருக்கிறாள். 


கணவன் வீட்டுக்கு வருகிறான். மனைவியின் சோர்ந்த, வருத்தமான முகத்தைப் பார்க்கிறான். அவள் படுத்திருக்கும் நிலையை பார்க்கிறான்.


பெரும்பாலும் என்ன நடந்திருகும்?


"என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா? ஏன் தரையில படுத்திருக்க? டாக்டர் கிட்ட போகனுமா? காய்ச்சல் அடிக்குதா?"  என்று கணவன் விசாரிக்கலாம். 


வேண்டும் என்றால் காப்பி போட்டுக் கொடுக்கலாம். 


உங்கள் வீட்டில் எப்படி என்று உங்களுக்குதான் தெரியும். 


தயரதன் வீட்டில் என்ன நடந்தது என்று கம்பன் காட்டுகிறான். 


"உள்ளே வந்த தயரதன், கைகேயின் நிலையைப் பார்க்கிறான். பார்த்தவுடன் அவன் மனதில் துயரம் வருகிறது. மனைவிக்கு ஏதோ சங்கடம் என்று நினைத்த மாத்திரத்தில், அந்த சோகம் அவனையும் பற்றிக் கொள்கிறது. அவன் மனம் வாடுகிறது. அவள் அருகில் சென்று, என்ன உடம்புக்கு என்றெல்லாம் கேட்கவில்லை..அவளை அப்படியே தன் இரண்டு கைகளாலும் ஏந்திக் கொள்கிறான்...ஒரு மானை யானை தன் தும்பிக்கையில் தூக்குவதைப் போல"   என்கிறான் கம்பன். 


பாடல் 


அடைந்து , அவண் நோக்கி,  ‘அரந்தை என்கொல் வந்து

தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு  சோரும் நெஞ்சன்,

மடந்தையை, மானை எடுக்கும் ஆனையேபோல்,

தடங்கை கள் கொண்டு தழீஇ,  எடுக்கலுற்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html


(please click the above link to continue reading) 



அடைந்து = (தயரதன், கைகேயின் அரண்மனையை) அடைந்து 


அவண் நோக்கி = அவள் இருந்த நிலையை நோக்கி 


‘அரந்தை = இந்தப் பெண்ணுக்கு 


என்கொல் வந்து = என்ன வந்தது 


தொடர்ந்தது?’ = அதுவும் தீராமல் நிற்கிறது (தொடர்கிறது) 


எனத் துயர்கொண்டு = என்று மனதில் துயரம் அடைந்து 


சோரும் நெஞ்சன், = வருந்தும், தளரும் நெஞ்சினோடு 


மடந்தையை = கைகேயியை 


மானை எடுக்கும் = ஒரு மானை எடுக்கும் 


ஆனையேபோல், = யானையைப் போல 


தடங்கை கள்  = நீண்ட கைகளைக் 


கொண்டு தழீஇ = தழுவிக் கொண்டு 


எடுக்கலுற்றான். = அவளைத் தூக்கினான் 


யோசித்துப் பாருங்கள். 


நீங்கள் கணவனாக இருந்தால், கடைசியாக எப்போது உங்கள் மனைவியை இரண்டு கைகளில் ஏந்தி இருக்கிறீர்கள் என்று. 


நீங்கள் மனைவியாக இருந்தால், எப்போது உங்கள் கணவர் உங்களை இரண்டு கைகளால் தூக்கி இருக்கிறார் என்று. 


எத்தனை ஆண்களால் இன்று தங்கள் மனைவியை தூக்க முடியும் - திருமணமான ஆண் பிள்ளை இருக்கும் வயதில். 


எத்தனை பெண்களை இன்று தூக்க முடியும்? 


தூக்குகிறேன் பேர்வழி என்று முதுகு பிடித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.


அந்த வயதிலும் தயரதனிடம் அவ்வளவு வலிமை. அந்த வயதிலும் கைகேயின் மென்மை. பட்டது அரசி. மூன்று வேளையும் நன்றாகச் உண்டு உடல் பெருத்து இருக்கலாம். இல்லை, மான் குட்டி போல அவ்வளவு எடை இல்லாமல், தூக்க சுகமாக இருக்கிறாள். 


இரசிக்க வேண்டும். :)





Saturday, July 23, 2022

திருக்குறள் - பொறையுடைமை - தகுதியான் வென்று விடல்

        

திருக்குறள் - பொறையுடைமை -  தகுதியான் வென்று விடல் 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 



குறள் 57:  அறன் அல்ல செய்யாமை 

)


நம்மைவிட வலிமையான ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை நாம் ஒன்றும் செய்ய முடியாது. நம்மை விட பல விதங்களில் பலம் பொருந்தியவன். அவனிடம் பணம் இருக்கிறது. பெரிய இடத்து தொடர்பு இருக்கிறது. அடியாள், அது இது என்று வைத்து இருக்கிறான். நம்மிடம் ஒன்றும் இல்லை. 


என்ன செய்வது?


நான் பொறுமையை கடைப் பிடிக்க மாட்டேன். அவனோடு சென்று மோதி ஒரு கை பார்க்கிறேன் என்று இறங்கினால் என்ன ஆகும். இருக்கிற ஒரு கையும் போகும். 



அல்லது, நேரடியாக அவனை வீழ்த்த முடியாது எனவே எதாவது வஞ்சனை, சூது என்று செய்து அவனை வீழ்த்தலாமா என்று நினைத்தால், அதில் தோற்றுவிட்டால் என்ன ஆகும்? நம் மீது பெரிய பழி வந்து சேரும்.  



எதார்த்தமான உண்மை என்ன என்றால், பொங்கி எழுவதை விட்டு விட்டு பொறுமை காப்பதுதான் நல்லது என்கிறார் வள்ளுவர். 



அவனிடம் பணம், செல்வாக்கு, ஆள், அம்பு, சேனை, அதிகாரம் எல்லாம் இருக்கலாம். ஆனால், அவனிடம் இல்லாத் ஒன்று நம்மிடம் இருக்கிறது. அதன் மூலம் அவனை வெல்ல முடியும் என்கிறார். 


அதுதான் "பொறுமை".


பாடல் 


மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.


பொருள் 




(pl click the above link to continue reading)


மிகுதியான் = தன்னிடமுள்ள பெரிய பலத்தால் 


மிக்கவை = வரம்பு மீறி தகாதனவற்றை 


செய்தாரைத் = செய்தவர்களை 


தாம்தம் = ஒருவன் தன்னுடைய 


தகுதியான் = தகுதியால் 


வென்று விடல். = வென்று விடுக 



தகுதி என்றால் பொறுமை என்று உரை சொல்கிறார் பரிமேலழகர். காரணம், இந்த அதிகாரம் "பொறையுடைமை" என்பதால்.


"தகுதியான் பொறுத்துக் கொள்ளுதல்" என்று கூறவில்லை. 


"தகுதியான் வென்று விடல்" என்று கூறினார்.  பொறுமையாக இருப்பது என்பது தோல்வி அல்ல. அது ஒரு வெற்றி என்கிறார். 


Friday, July 22, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள்

  

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 3  - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியை சொல்ல கைகேயின் அரண்மனைக்கு தயரதன் வருகிறான். 


அங்கே....


அலங்கோலமாக கிடக்கிறாள் கைகேயி. 


அந்தக் காலத்தில் சில விடயங்களை மங்களகரமானவை என்று வைத்து இருந்தார்கள். அவற்றைச் செய்ய வேண்டும் என்று விதித்து இருந்தார்கள். அதை செய்யாமல் இருப்பது அமங்கலம் என்று நினைத்தார்கள். 


உதாரணமாக பெண்கள் தலையில் பூச் சூடி கொள்வது, நெற்றியில் திலகம் இட்டுக் கொள்வது, போன்றவை. 


இப்போது எல்லாம் அவை வழக்கொழிந்து போய் விட்டன. பெண்கள தாலியை கழற்றி வைத்துவிட்டு வேலைக்குப் போகிறார்கள். இரவு உறங்கும் போது "உறுத்துகிறது" என்ற கழட்டி தொங்க விட்டு விடுகிறார்கள். 


சடங்கு, சம்ப்ரதாயம், விதி, கோட்பாடு என்பதெல்லாம் மதிபிழந்து கொண்டு இருக்கிறது. 


நம் கலாசாரத்தின் பெருமை தெரியாமல் மேலை நாட்டு கலாசாரத்தை கண்டு மயங்கும் காலம் வந்துவிட்டது. இதனால் விளைவது என்ன? இங்கும் அல்ல அங்கும் அல்ல என்ற ஒரு திரிசங்கு நிலையில் நிற்கிறது நம் சமுதாயம். 


அந்தக் காலத்தில் பெண்கள் முகம் கழுவும் போது மறந்தும் கூட தங்கள் திலகத்தை அழித்து விடக் கூடாது, முகத்தில் நீரை அள்ளி தெளிப்பார்கள். குங்குமத்தை கை கொண்டு அழித்து தேய்க்க மாட்டார்கள். 


கணவன் மேல் கொண்ட அன்பு, மரியாதை, காதல். 


கைகேயி என்ன செய்தாள் என்று சொல்லுவதன் மூலம் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று கம்பன் பட்டியல் இடுகிறான். 


இரண்டு வரங்களை கேள் என்று சொல்லிவிட்டு கூனி போன பின், 


"கைகேயி கட்டில் இருந்து கீழே இறங்கி தரையில் படுக்கிறாள். கூந்தலில் உள்ள பூவை பியித்து எறிகிறாள்"


பாடல் 


கூனி போன பின், குல மலர்க் குப்பைநின்று இழிந்தாள்;

சோனை வார் குழல் கற்றையில்  சொருகிய மாலை,

வான  மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,

தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


(please click the above link to continue reading) 


கூனி போன பின் = கூனி போன பின் 


குல = குல மகளான கைகேயி 


மலர்க் குப்பை நின்று இழிந்தாள்; = குப்பை என்றால் குவியல். மலர்கள் குவிந்து கிடக்கும் இடமான கட்டிலில் இருந்து இறங்கினாள். படுக்கை அறையை மணம் நிறைந்ததாக வைத்துக் கொள்ள வேண்டும். 



சோனை = கருமேகம் 


வார் = வார்த்து எடுக்கப்பட்ட, வாரிய 


குழல் கற்றையில் = தலை முடியில் 


சொருகிய மாலை, = சூடிய மாலையை 


வான = வானத்தில் 


மா மழை  நுழைதரு = பெரிய மழை தரும்  மேகதில் இருந்து  (நுழை = நுழைந்து வெளி வருவது போல) 


 மதி  = நிலவு 


பிதிர்ப்பாள்போல், = பிரிந்து வெளி வருவது போல 


தேன் = தேனை 


அவாவுறு = விரும்பும் (அவா = ஆசை, விருப்பம்) 


வண்டினம் = வண்டுகள் 


அலமர = சிதறி ஓட 


சிதைத்தாள். = சிதைதாள் 


கூந்தலில் இருந்த மலர்களை பியித்து எறிந்தாள் என்று சொல்ல வேண்டும். அதற்குக் கூட கம்பன் உவமை சொல்கிறான். 


கரிய மேகத்தில் இருந்து வெளிவரும் நிலவு போல, அவளுடைய கரிய கூந்தலில் இருந்து மலர்கள் பிரிந்து போயின என்று. 


அந்தக் காலத்தில் பெண்கள் தங்கள் தலையில் சூடிய மலர்களை தாங்களே எடுக்க மாட்டார்கள். வேறு யாரையாவது கொண்டுதான் எடுக்கச் சொல்லுவார்கள். திலகத்தை அழிப்பது, பூவை எடுப்பது என்பதெல்லாம் அமங்கலம் என்று கருதினார்கள். 


அவற்றைச் செய்தாள் கைகேயி. 


என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். 


கூந்தலில் உள்ள பூவை எடுத்து எறிந்தது மட்டும் அல்ல...இன்னும் ஒரு கொடுமையான செயலைச் செய்தாள் என்கிறான் கம்பன்....