Wednesday, July 27, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 5 - மன்னன் ஆவி அன்னாள்

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 5   - மன்னன் ஆவி அன்னாள்




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


பாகம் 4 - மானைத் தூக்கிய யானை போல 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html





)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியைச் சொல்ல தயரதன் கைகேயி அரண்மனைக்கு வருகிறான். அங்கே கைகேயி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். அவளை அப்படியே வாரி எடுக்கிறான் தயரதன். 


"கைகேயி அவன் கைகளை தள்ளிவிட்டு, கீழே நழுவி விழுகிறாள். ஒரு மின்னல் தரை இறங்கி வந்தது போல இருந்தது அது. ஒன்றும் பேசவில்லை. பெரு மூச்சு விடுகிறாள், தயரதனின் உயிர் போன்ற கைகேயி"


பாடல் 


நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,

மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்.

ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள் -

மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.



பொருள்   


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/5.html


(please click the above link to continue reading) 


நின்று = ஒரே இடத்தில் நின்று 


தொடர்ந்த =மேலும் நீண்ட, மேலும் நெருங்கி வந்த 


நெடுங் கை  தம்மை நீக்கி, = (தயரதனின்) நீண்ட கைகளை தள்ளிவிட்டு 


மின் துவள்கின்றது போல = மின்னல் துவழ்ந்து வருவது போல 


மண்ணில் வீழ்ந்தாள். = மண்ணில் விழுந்தாள் 


ஒன்றும் இயம்பலள்; = ஒன்றும் பேசவில்லை 


நீடு உயிர்க்கலுற்றாள் - = நீண்ட பெரு மூச்சு விட்டாள் 


மன்றல் = மணம் பொருந்திய 


அருந் தொடை  = அழகிய மலர்களைக் கொண்டு செய்த மாலை அணிந்த 


மன்னன் = தயரதனின் 


 ஆவி அன்னாள். = உயிர் போன்றவள் 


கைகேயி என்றால் தயரதனுக்கு அவ்வளவு அன்பு. உயிர் போன்றவள். 


கணவன் மனைவி இடையில் உள்ள சிக்கல் எப்படி எழுகிறது, அது எப்படி தொடர்கிறது என்று பார்ப்போம். 







No comments:

Post a Comment