Saturday, July 23, 2022

திருக்குறள் - பொறையுடைமை - தகுதியான் வென்று விடல்

        

திருக்குறள் - பொறையுடைமை -  தகுதியான் வென்று விடல் 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 



குறள் 57:  அறன் அல்ல செய்யாமை 

)


நம்மைவிட வலிமையான ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை நாம் ஒன்றும் செய்ய முடியாது. நம்மை விட பல விதங்களில் பலம் பொருந்தியவன். அவனிடம் பணம் இருக்கிறது. பெரிய இடத்து தொடர்பு இருக்கிறது. அடியாள், அது இது என்று வைத்து இருக்கிறான். நம்மிடம் ஒன்றும் இல்லை. 


என்ன செய்வது?


நான் பொறுமையை கடைப் பிடிக்க மாட்டேன். அவனோடு சென்று மோதி ஒரு கை பார்க்கிறேன் என்று இறங்கினால் என்ன ஆகும். இருக்கிற ஒரு கையும் போகும். 



அல்லது, நேரடியாக அவனை வீழ்த்த முடியாது எனவே எதாவது வஞ்சனை, சூது என்று செய்து அவனை வீழ்த்தலாமா என்று நினைத்தால், அதில் தோற்றுவிட்டால் என்ன ஆகும்? நம் மீது பெரிய பழி வந்து சேரும்.  



எதார்த்தமான உண்மை என்ன என்றால், பொங்கி எழுவதை விட்டு விட்டு பொறுமை காப்பதுதான் நல்லது என்கிறார் வள்ளுவர். 



அவனிடம் பணம், செல்வாக்கு, ஆள், அம்பு, சேனை, அதிகாரம் எல்லாம் இருக்கலாம். ஆனால், அவனிடம் இல்லாத் ஒன்று நம்மிடம் இருக்கிறது. அதன் மூலம் அவனை வெல்ல முடியும் என்கிறார். 


அதுதான் "பொறுமை".


பாடல் 


மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.


பொருள் 




(pl click the above link to continue reading)


மிகுதியான் = தன்னிடமுள்ள பெரிய பலத்தால் 


மிக்கவை = வரம்பு மீறி தகாதனவற்றை 


செய்தாரைத் = செய்தவர்களை 


தாம்தம் = ஒருவன் தன்னுடைய 


தகுதியான் = தகுதியால் 


வென்று விடல். = வென்று விடுக 



தகுதி என்றால் பொறுமை என்று உரை சொல்கிறார் பரிமேலழகர். காரணம், இந்த அதிகாரம் "பொறையுடைமை" என்பதால்.


"தகுதியான் பொறுத்துக் கொள்ளுதல்" என்று கூறவில்லை. 


"தகுதியான் வென்று விடல்" என்று கூறினார்.  பொறுமையாக இருப்பது என்பது தோல்வி அல்ல. அது ஒரு வெற்றி என்கிறார். 


1 comment: