Friday, July 15, 2022

திருக்குறள் - பொறையுடைமை - பொன் போல பொதிந்து

     

திருக்குறள் - பொறையுடைமை - பொன் போல பொதிந்து 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :




)



ஒருவன் நமக்கு தீங்கு செய்கிறான். அவனுக்கு நாம் பதிலுக்கு தீமை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக ஒருவன் நம்மை ஒரு தகாத சொல் சொல்லி திட்டிவிடுகிறான். நாமும் கோபம் கொண்டு இன்னொரு தகாத வார்த்தை சொல்லி திட்டி விடுகிறோம்.


இப்போது என்ன ஆயிற்று? 


அவன் தகாத வார்த்தை சொன்னான். நாமும் தகாத வார்த்தை சொன்னோம். ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ? அவன் முதலில் சொன்னான், நாம் இரண்டாவது சொன்னோம் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் என்ன?

அவன் முதலில் சேற்றை வாரி நம் மீது எறிந்தான். பதிலுக்கு நாம் அவன் மீது சேற்றை வாரி எறிந்தோம். இப்போது இருவர் முகத்திலும் சேறு. வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? 

மாறாக,  அவன் ஒரு கடும் சொல் சொல்கிறான். நாம் பொறுமையாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.  என்ன ஆகும்?



உலகம் இரண்டு விதமாக பேசும்,


சிலர் நம்மை "சரியான ஏமாளி, கையாலாகதவன், பலவீனமானவன்" என்று எள்ளி நகையாடுவார்கள் 


வேறு சிலர், "அந்த மடையன் எவ்வளவு சொன்னாலும், இவனைப் பார் எப்படி பொறுமையாக இருக்கிறான். இவன் மனிதனா? அவன் மனிதனா"" என்று நம்மை பற்றி பெருமையாக நினைப்பார்கள். 


யார் நம்மை பெருமையாக நினைப்பார்கள் என்றால், படித்த, அறிவுடைய,சான்றோர் அப்படி நினைப்பார்கள். 


யார் நம்மை இகழ்வாக நினைப்பார்கள் என்றால் அறிவு மற்றும் அனுபவ முதிர்ச்சி இல்லாதவர்கள். 


யாருடைய எண்ணங்களுக்கு நாம் மதிப்பு தரப் போகிறோம்?  படித்தவர்களுக்கா, முட்டாள்களுக்கா?


வள்ளுவர் சொல்கிறார் 


"தீமை செய்தவனுக்கு பதிலுக்கு தீமை செய்தவனை பெரியவர்கள் இருவரையும் ஒரே மாதிரித்தான் கொள்வார்கள். மாறாக, பொறுமையாக இருப்பவரை பொன்னைப் போல மனதில் போற்றி பாதுகாப்பாக வைப்பார்கள்" 

என்று. 



பாடல் 


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து



பொருள் 





(pl click the above link to continue reading)


ஒறுத்தாரை= தனக்கு தீங்கு செய்தவருக்கு பதிலுக்கு தீங்கு செய்பவர்களை 


ஒன்றாக  = ஒரு பொருட்டாக, சிறப்பாக 


வையாரே = வைத்து எண்ண மாட்டார்கள் (ஆன்றோர்) 


வைப்பர் = வைப்பார்கள் 


பொறுத்தாரைப் = பொறுத்துக் கொண்டவரை 


பொன்போல் பொதிந்து = பொன்னைப் போல பத்திரமாக மனதில் பொதிந்து 




இங்கே ஒன்றாக என்பதற்கு முதல் இடத்தில் என்று பொருள் கொள்ள வேண்டும். 


"ஒருவனைத் தருதி" என்று விஸ்வாமித்திரன் தசரதனிடம் கேட்டான். ஒருவன் = உயர்ந்தவன், இராமன். 


"ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன்" என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.



பொன் போல் பொதிந்து = மற்றதெல்லாம் வீட்டில் கண்டபடி கிடந்தாலும், பொன் நகையை பத்திரமாக எடுத்து பெட்டகத்தில் வைப்போம் அல்லவா?



மற்றவர்கள் எல்லாம் எப்படியோ இருந்தாலும், பொறுமை காப்பவர்களை மனதுக்குள் உயர்வாக நினைப்பார்கள்.


No comments:

Post a Comment