Sunday, July 24, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 4 - மானை யானை தூக்கியது போல

   

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 4   - மானை யானை தூக்கியது போல 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html




)


இது உங்கள் வீட்டிலும் நிகழ்ந்து இருக்கலாம். 


ஏதோ ஒரு காரணத்தால் மனைவி வருத்தமாக இருக்கிறாள். சாப்பிடவில்லை. அலங்காரம் பண்ணிக் கொள்ளவில்லை. ஒரே சோகம். தரையில் கையை தலைக்கு வைத்து படுத்து இருக்கிறாள். 


கணவன் வீட்டுக்கு வருகிறான். மனைவியின் சோர்ந்த, வருத்தமான முகத்தைப் பார்க்கிறான். அவள் படுத்திருக்கும் நிலையை பார்க்கிறான்.


பெரும்பாலும் என்ன நடந்திருகும்?


"என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா? ஏன் தரையில படுத்திருக்க? டாக்டர் கிட்ட போகனுமா? காய்ச்சல் அடிக்குதா?"  என்று கணவன் விசாரிக்கலாம். 


வேண்டும் என்றால் காப்பி போட்டுக் கொடுக்கலாம். 


உங்கள் வீட்டில் எப்படி என்று உங்களுக்குதான் தெரியும். 


தயரதன் வீட்டில் என்ன நடந்தது என்று கம்பன் காட்டுகிறான். 


"உள்ளே வந்த தயரதன், கைகேயின் நிலையைப் பார்க்கிறான். பார்த்தவுடன் அவன் மனதில் துயரம் வருகிறது. மனைவிக்கு ஏதோ சங்கடம் என்று நினைத்த மாத்திரத்தில், அந்த சோகம் அவனையும் பற்றிக் கொள்கிறது. அவன் மனம் வாடுகிறது. அவள் அருகில் சென்று, என்ன உடம்புக்கு என்றெல்லாம் கேட்கவில்லை..அவளை அப்படியே தன் இரண்டு கைகளாலும் ஏந்திக் கொள்கிறான்...ஒரு மானை யானை தன் தும்பிக்கையில் தூக்குவதைப் போல"   என்கிறான் கம்பன். 


பாடல் 


அடைந்து , அவண் நோக்கி,  ‘அரந்தை என்கொல் வந்து

தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு  சோரும் நெஞ்சன்,

மடந்தையை, மானை எடுக்கும் ஆனையேபோல்,

தடங்கை கள் கொண்டு தழீஇ,  எடுக்கலுற்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html


(please click the above link to continue reading) 



அடைந்து = (தயரதன், கைகேயின் அரண்மனையை) அடைந்து 


அவண் நோக்கி = அவள் இருந்த நிலையை நோக்கி 


‘அரந்தை = இந்தப் பெண்ணுக்கு 


என்கொல் வந்து = என்ன வந்தது 


தொடர்ந்தது?’ = அதுவும் தீராமல் நிற்கிறது (தொடர்கிறது) 


எனத் துயர்கொண்டு = என்று மனதில் துயரம் அடைந்து 


சோரும் நெஞ்சன், = வருந்தும், தளரும் நெஞ்சினோடு 


மடந்தையை = கைகேயியை 


மானை எடுக்கும் = ஒரு மானை எடுக்கும் 


ஆனையேபோல், = யானையைப் போல 


தடங்கை கள்  = நீண்ட கைகளைக் 


கொண்டு தழீஇ = தழுவிக் கொண்டு 


எடுக்கலுற்றான். = அவளைத் தூக்கினான் 


யோசித்துப் பாருங்கள். 


நீங்கள் கணவனாக இருந்தால், கடைசியாக எப்போது உங்கள் மனைவியை இரண்டு கைகளில் ஏந்தி இருக்கிறீர்கள் என்று. 


நீங்கள் மனைவியாக இருந்தால், எப்போது உங்கள் கணவர் உங்களை இரண்டு கைகளால் தூக்கி இருக்கிறார் என்று. 


எத்தனை ஆண்களால் இன்று தங்கள் மனைவியை தூக்க முடியும் - திருமணமான ஆண் பிள்ளை இருக்கும் வயதில். 


எத்தனை பெண்களை இன்று தூக்க முடியும்? 


தூக்குகிறேன் பேர்வழி என்று முதுகு பிடித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.


அந்த வயதிலும் தயரதனிடம் அவ்வளவு வலிமை. அந்த வயதிலும் கைகேயின் மென்மை. பட்டது அரசி. மூன்று வேளையும் நன்றாகச் உண்டு உடல் பெருத்து இருக்கலாம். இல்லை, மான் குட்டி போல அவ்வளவு எடை இல்லாமல், தூக்க சுகமாக இருக்கிறாள். 


இரசிக்க வேண்டும். :)





2 comments: