Saturday, July 9, 2022

திருக்குறள் - பொறையுடைமை - மறப்போம், மன்னிப்போம்

  

 திருக்குறள் - பொறையுடைமை - மறப்போம், மன்னிப்போம் 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


குறள் 51: அகழ்வாரை)  https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_6.html

)


பொறுமையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். 


ஆனால், பொறுமையாக இருந்து கொண்டு, மற்றவர்கள் நமக்கு செய்த தீமைகளை நினைத்துக் கொண்டே இருந்தால், அது நமக்கு நல்லதா?


அவன் இப்படிச் செய்தான், அவள் இப்படிச் சொன்னாள், எனக்கு வர வேண்டிய நல்ல வாய்ப்பை அவனால் இழந்தேன், இப்படி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்ற சுய பச்சாதாபம், தன்னிரக்கம் மேலோங்காதா? 

அப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா?

பொறுமையாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் நடந்த தீமைகளை நினைத்து வருந்தவும் கூடாது என்றால் அதற்கு என்ன வழி?


வள்ளுவர் சொல்கிறார் "மறந்து விடு" என்கிறார்.



"பொறுமையாக இருப்பது நல்லது. அதை விட அதை மறப்பது மிக நல்லது" என்கிறார். 


பாடல் 


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனின்று நன்று



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


(please click the above link to continue reading)


பொறுத்தல் = பொறுமையாக இருப்பது 


இறப்பினை =  மற்றவர்கள் செய்த தீமையை 


என்றும் = எப்போதும் 


அதனை = அந்தத் தீமையை 


மறத்தல் = மறந்து விடுவது 


அதனின்று நன்று = அதை விட நல்லது 


பொறுமையாக இருப்பது நல்லது. அதை விட நல்லது அதை மறப்பது என்கிறார். 


எதுக்காக தேவையில்லாததை நினைவில் வைத்துக் கொண்டு துன்பப் படுவானேன்?




No comments:

Post a Comment