Sunday, July 31, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - முன்னுரை

 திருக்குறள் - அழுக்காறாமை - முன்னுரை 


பொறையுடைமை என்ற அதிகராதுக்குப் பின் அழுக்காறாமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை. 


பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


என் மனைவி அழகுதான்.அன்பாக இருக்கிறாள். பொறுப்பாக இருக்கிறாள். அவளோடு நான் இன்பமாக குடும்பம் நடத்த முடியும். அயல் வீட்டான் மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் வந்துவிட்டால், என் மனைவி எனக்கு ஒரு சாபமாகத் தெரிவாள். "எனக்குன்னு வந்து வாச்சுதே" நு வரம் சாபமகிவிடும். 


என் செல் போன் நல்லதுதான். அடுத்தவன் கை பேசி என் கை பேசியைவிட் விலை உயர்ந்தது என்றால், என் கை பேசி மேல் வெறுப்பு வந்து விடுகிறது. 


நான் அந்த நடிகர் மாதிரி அழகாக இல்லை, என் பிள்ளை மற்றவன் பிள்ளை மாதிரி நன்றாக படிக்கவில்லை, நான் அவனை  மாதிரி சம்பாதிக்கவில்லை  இப்படி மற்றவன் ஆக்கத்தை கண்டு பொறாமை பட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும். 


இது ஆணுக்கு மட்டும் அல்ல. பெண்ணுக்கும் தான். 



https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


(Pl click the above link to continue reading)


அவளை விட நான் என்ன அழகில் குறைச்சல், அவள் புது நகை வாங்கி விட்டாள், அவள் கணவன் அவளை பல இடங்களுக்கு கூட்டிக் கொண்டு போகிறான், அவள் புது புது உடை அணிகிறாள், என்னை விட மெலிந்து சின்னப் பெண் போல இருக்கிறாள் ...என்று இப்படி ஆயிரம் பொறாமை. 


கோபம், எரிச்சல் போல பொறாமையை வெளியே காட்ட முடியாது. உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்க வேண்டியதுதான். 


இரத்த அழுத்தம், மன அழுத்தம் என்று பல உடல் உபாதைகளை கொண்டு வந்து சேர்க்கும். 


வாழ்வை இரசிக்க விடாது. 


சொர்கத்தை நரகமாக்கிவிடும். 


இல்லறம் சிறக்காது. மனைவி மேல், கணவன் மேல், பிள்ளைகள் மேல், தன் மேலேயே கூட வெறுப்பும், கோபமும், ஏமாற்றமும் வரும். நிம்மதி போய் விடும். 


எனவே, இல்லறம் இனிதே நடக்க வேண்டும் என்றால் இந்த அழுக்காறை விட வேண்டும். 


இனி அதிகாரத்துக்குள் நுழைவோம். 



No comments:

Post a Comment