Thursday, July 14, 2022

திருக்குறள் - பொறையுடைமை - நிறையுடைமை வேண்டின்

    

 திருக்குறள் - பொறையுடைமை - நிறையுடைமை வேண்டின்


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :


)


ஏன் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்?


பிறரால் நல்லவன், பெரியவன், உயர்ந்தவன் என்று பாராட்டப் படுவதை விரும்பாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? 



புகழ் என்பது எல்லோருக்கும் விருப்பமான ஒன்றுதான். எல்லோராலும் இகழப் படுவதை யார் விரும்புவார்கள்?



பிறர் புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும், நமக்கு நாமே ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டாமா?


சிறந்த வாழக்கை என்றால் என்ன?  


தமிழிலே "சால்பு? என்று ஒரு வார்த்தை உண்டு. 


சால்பு என்றால் உயர்ந்த, சிறந்த, மேன்மை மிகுந்த, நிறைவு பட்ட என்று அர்த்தம். 


அந்த சால்பு என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் "சான்றோர்" என்ற சொல். அனைத்து நல்ல குணங்களும் நீங்காமல் இருக்கப் பெற்றவர்கள் என்று அர்த்தம். 


"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்டத் தாய்"


என்பார் வள்ளுவப் பெருந்தகை. 

 
சால்புடைய வாழ்கையே நிறைவான வாழ்க்கை. 

"அப்படிப்பட்ட ஒரு நிறைவான வாழக்கை வாழ வேண்டும் என்றால், பொறுமையை விடாமல் கடைப் பிடிக்க வேண்டும்"  என்கிறார் வவ்ள்ளுவர்.


அதாவது, பொறுமையாக இருந்தால், நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.



பாடல் 


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்


பொருள் 




(pl click the above link to continue reading)



நிறையுடைமை  = நிறைவான வாழ்கை, சால்புடைய வாழ்க்கை என்பார் பரிமேலழகர் 


நீங்காமை வேண்டின் = எப்போதும் தன்னுடன் இருக்க ஒருவன் விரும்பினால் 


பொறையுடைமை = பொறுமை என்ற குணத்தை 


போற்றி ஒழுகப் படும் = விரும்பி, விடாமல் எப்போதும் காக்க வேண்டும். 


வெறுமனே "ஒழுகப்படும்" என்று போட்டு இருக்கலாம். "போற்றி ஒழுகப்படும்" என்று கூறினார். 


வேண்டா வெறுப்பாக, கடமையே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருப்பது அல்ல. விரும்பி, முழு மனதுடன், இது நமக்கு நல்லது செய்யும் என்று எண்ணி, பொறுமையை கடைப் பிடிப்பது. 


உயர்ந்த குணங்களை கடைப் பிடிப்பதில் பெருமை கொள்ள வேண்டும். ஏதோ விதியே என்று கடைப் பிடித்தால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு வாய்ப்பு கிடைத்தால் நழுவ விட்டு விடுவோம். 


தீயவை செய்பவர்கள், அதைச் செய்வதில் பெருமை கொள்கிறார்கள். நல்லதைச் செய்ய நல்லவர்கள் தயங்குகிறார்கள், சந்தேகம் கொள்கிறார்கள். 


புகை பிடிப்பவன் அது ஏதோ பெரிய செயற்கரிய செயல் போல் பிடிக்கிறான். தண்ணி அடிப்பவன் அது ஏதோ ஒரு மகத்தான செயல் போல் செய்கிறான். அந்தக் கூட்டத்தில் இருக்கும் தண்ணி அடிக்காதவன் கூனி, குறுகிப் போகிறான். "வேண்டாம், நான் மது அருந்துவதில்லை" என்று சொல்ல வெட்கப் படுகிறான். அவனை எல்லோரும் கேலி செய்கிறார்கள். 


மது அருந்தாதவன் நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல வேண்டாமா? அவன் முன்னால் மது அருந்துபவன் வெட்கப் பட வேண்டாமா? 


மது அருந்துவது சரியா தவறா என்பதல்ல இங்கே கேள்வி. 


சரி என்று படுவதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். விரும்பிச் செய்ய வேண்டும். மது அருந்துபவன் எப்படி அதை மகிழ்வோடு செய்கிறானோ, அதே போல அருந்தாதவனும் செய்ய வேண்டும். 


"போற்றி" ஒழக வேண்டும். 


ஒழுகுதல் என்றால் விடாமல் கடைப் பிடித்தல். எந்த சூழ்நிலையிலும் அதை விட்டு விடக் கூடாது. முடிந்தவரை கடைப் பிடிப்போம், இல்லை என்றால் விட்டு விடுவோம் என்று அல்ல. 



அரிச்சந்திரன் மாதிரி, என்ன ஆனாலும் சரி, பொய் சொல்லுவதில்லை என்பதில் உள்ள வைராக்கியம். 



பிள்ளை இறந்தாலும், மனைவியை விற்க வேண்டி வந்தாலும், கொண்ட கொள்கையில் இருந்து மாறுவது இல்லை என்ற பிடிப்பு இருக்க வேண்டும். 



அப்படி இருந்தால், நிறையுடைமை ஒருவனை விட்டு ஒருபோதும் நீங்காது. 



பொறுமை என்பது நாம் மற்றவர்களுக்குச் செய்யும் உபகாரம் அல்ல. நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை. 


No comments:

Post a Comment