Friday, July 22, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள்

  

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 3  - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியை சொல்ல கைகேயின் அரண்மனைக்கு தயரதன் வருகிறான். 


அங்கே....


அலங்கோலமாக கிடக்கிறாள் கைகேயி. 


அந்தக் காலத்தில் சில விடயங்களை மங்களகரமானவை என்று வைத்து இருந்தார்கள். அவற்றைச் செய்ய வேண்டும் என்று விதித்து இருந்தார்கள். அதை செய்யாமல் இருப்பது அமங்கலம் என்று நினைத்தார்கள். 


உதாரணமாக பெண்கள் தலையில் பூச் சூடி கொள்வது, நெற்றியில் திலகம் இட்டுக் கொள்வது, போன்றவை. 


இப்போது எல்லாம் அவை வழக்கொழிந்து போய் விட்டன. பெண்கள தாலியை கழற்றி வைத்துவிட்டு வேலைக்குப் போகிறார்கள். இரவு உறங்கும் போது "உறுத்துகிறது" என்ற கழட்டி தொங்க விட்டு விடுகிறார்கள். 


சடங்கு, சம்ப்ரதாயம், விதி, கோட்பாடு என்பதெல்லாம் மதிபிழந்து கொண்டு இருக்கிறது. 


நம் கலாசாரத்தின் பெருமை தெரியாமல் மேலை நாட்டு கலாசாரத்தை கண்டு மயங்கும் காலம் வந்துவிட்டது. இதனால் விளைவது என்ன? இங்கும் அல்ல அங்கும் அல்ல என்ற ஒரு திரிசங்கு நிலையில் நிற்கிறது நம் சமுதாயம். 


அந்தக் காலத்தில் பெண்கள் முகம் கழுவும் போது மறந்தும் கூட தங்கள் திலகத்தை அழித்து விடக் கூடாது, முகத்தில் நீரை அள்ளி தெளிப்பார்கள். குங்குமத்தை கை கொண்டு அழித்து தேய்க்க மாட்டார்கள். 


கணவன் மேல் கொண்ட அன்பு, மரியாதை, காதல். 


கைகேயி என்ன செய்தாள் என்று சொல்லுவதன் மூலம் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று கம்பன் பட்டியல் இடுகிறான். 


இரண்டு வரங்களை கேள் என்று சொல்லிவிட்டு கூனி போன பின், 


"கைகேயி கட்டில் இருந்து கீழே இறங்கி தரையில் படுக்கிறாள். கூந்தலில் உள்ள பூவை பியித்து எறிகிறாள்"


பாடல் 


கூனி போன பின், குல மலர்க் குப்பைநின்று இழிந்தாள்;

சோனை வார் குழல் கற்றையில்  சொருகிய மாலை,

வான  மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,

தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


(please click the above link to continue reading) 


கூனி போன பின் = கூனி போன பின் 


குல = குல மகளான கைகேயி 


மலர்க் குப்பை நின்று இழிந்தாள்; = குப்பை என்றால் குவியல். மலர்கள் குவிந்து கிடக்கும் இடமான கட்டிலில் இருந்து இறங்கினாள். படுக்கை அறையை மணம் நிறைந்ததாக வைத்துக் கொள்ள வேண்டும். 



சோனை = கருமேகம் 


வார் = வார்த்து எடுக்கப்பட்ட, வாரிய 


குழல் கற்றையில் = தலை முடியில் 


சொருகிய மாலை, = சூடிய மாலையை 


வான = வானத்தில் 


மா மழை  நுழைதரு = பெரிய மழை தரும்  மேகதில் இருந்து  (நுழை = நுழைந்து வெளி வருவது போல) 


 மதி  = நிலவு 


பிதிர்ப்பாள்போல், = பிரிந்து வெளி வருவது போல 


தேன் = தேனை 


அவாவுறு = விரும்பும் (அவா = ஆசை, விருப்பம்) 


வண்டினம் = வண்டுகள் 


அலமர = சிதறி ஓட 


சிதைத்தாள். = சிதைதாள் 


கூந்தலில் இருந்த மலர்களை பியித்து எறிந்தாள் என்று சொல்ல வேண்டும். அதற்குக் கூட கம்பன் உவமை சொல்கிறான். 


கரிய மேகத்தில் இருந்து வெளிவரும் நிலவு போல, அவளுடைய கரிய கூந்தலில் இருந்து மலர்கள் பிரிந்து போயின என்று. 


அந்தக் காலத்தில் பெண்கள் தங்கள் தலையில் சூடிய மலர்களை தாங்களே எடுக்க மாட்டார்கள். வேறு யாரையாவது கொண்டுதான் எடுக்கச் சொல்லுவார்கள். திலகத்தை அழிப்பது, பூவை எடுப்பது என்பதெல்லாம் அமங்கலம் என்று கருதினார்கள். 


அவற்றைச் செய்தாள் கைகேயி. 


என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். 


கூந்தலில் உள்ள பூவை எடுத்து எறிந்தது மட்டும் அல்ல...இன்னும் ஒரு கொடுமையான செயலைச் செய்தாள் என்கிறான் கம்பன்....




No comments:

Post a Comment