Sunday, July 17, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு 


கணவன் மனைவி உறவு என்பது சிக்கலானது. முன் பின் தெரியாத இருவர், எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்கள். முன் பின் தெரியாத ஒருவரிடம் வாழ்வின் மீதி நாட்களை ஒப்புக் கொடுக்கிறார்கள். எனக்கு நீ, உனக்கு நான் என்று வாழத் தலைப் படுகிறார்கள். 


ஆயிரம் சிக்கல்கள் வரும். பணம் இருந்தாலும் சிக்கல். இல்லாவிட்டாலும் சிக்கல். 


எப்படி இதைச்  சமாளிப்பது? 


இராமாயணத்தில் எவ்வளவோ இருக்கிறது தெரிந்து கொள்ள. 


கணவன் மனைவி உறவு பற்றி ஏதாவது இருக்கிறதா?  


இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டார்கள், கானகம் போனார்கள். இராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். பின் இணைந்தார்கள். சுபம் என்று முடிந்து விடுகிறது. 


இடையில் ஆரண்ய காண்டத்தில் இயற்கையை இருவரும் இரசிக்கிறார்கள். பின் இருவரும் பிரிவில் வாடுகிறார்கள். 


தாரை, மண்டோதரி, ஊர்மிளை (இலக்குவன் மனைவி) எல்லாம் வருகிறார்கள். ஒரு ஆழ்ந்த உறவு பற்றிய செய்தி இல்லை. 


ஆச்சரியமாக, தயரதன் வாழ்க்கை பல விடயங்களை தருகிறது இந்த உறவு பற்றி. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


(please click the above link to continue reading)



மனைவியோ, கணவனோ, திருமணம் என்று ஆனபின் ஒருவரை ஒருவர் போற்றத் தான் வேண்டும். 


அந்த உறவை கொண்டாட வேண்டும். பொன் போல பொதிந்து காக்க வேண்டும். 


ஒருவருக்கு பிடிக்காததை மற்றவர் செய்யலாம், பேசலாம். சகிக்கத்தான் வேண்டும். 


பல திருமணங்களில் பிள்ளைகளால் சிக்கல் வந்து சேரும். 


பிள்ளையை எப்படி வளர்ப்பது என்பதில் கணவன் மனைவி சண்டையிட்டுக் கொள்வார்கள். யார் சொல்வது சரி, யார் பிழை என்று. யார் செல்லம் கொடுத்து கெடுப்பது, யார் ரொம்ப கண்டிப்பு காட்டுவது, என்பதில் எல்லாம் கருத்து வேறுபாடு வரும். 


நான் பெரிய ஆள். நான் நிறைய படித்து இருக்கிறேன். எவ்வளவு சம்பாதிக்கிறேன். நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது. என்ற ஆணவம் தலை தூக்கத்தான் செய்யும். 


உன் வீட்டார், என் வீட்டார் என்ற பாகுபாடு வரும். 


தயரதன் மூலம் கம்பன் இத்தனை சிக்கலுக்கும் விடை தருகிறான். 


ஆச்சரியமான விடயங்கள். 


என்னைக் கேட்டால், கம்ப இராமாயணத்தில் மற்ற எல்லாவற்றையும் கூட விட்டு விடலாம். தயரதன் மூலம் கம்பன் காட்டும் இல்லறத்தை படித்தால் கூட ஏ கணவன் மனைவி உறவு அவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. 


சசிந்திப்போம். 





No comments:

Post a Comment