Monday, July 18, 2022

திருக்குறள் - பொறையுடைமை - ஒரு நாள் இன்பம்

      

திருக்குறள் - பொறையுடைமை -  ஒரு நாள் இன்பம் 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




)


இந்த அதிகாரத்தை இது வரை படித்தவர்களுக்கு ஒன்று மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். 


இப்படி எல்லாம் பொறுமையாக இருக்க முடியுமா? இருந்துதான் என்ன பயன்? பொறுமையாக இருப்பவரை இந்த உலகம் ஏமாளி, கோமாளி, பலவீனமானவன் என்றுதானே நினைக்கும். பதிலுக்குப் பதில் கொடுத்தால்தானே அடங்கி இருப்பார்கள் என்று தோன்றும். 

ஒருவன் நமக்கு தீமை செய்தால் அவனுக்கு உடனே நாம் பதிலுக்கு தீமை செய்தால்தானே நமக்கு ஒரு நிம்மதி, ஒரு திருப்தி, ஒரு இன்பம். 

"அவன் என்னை ஒன்று சொன்னான். நான் பதிலுக்கு நாலு விடு விட்டேன். அப்படியே வாய் அடைச்சு போய்ட்டான்...யாரு கிட்ட" என்று ஒரு பெருமிதத்தோடு சொல்லிக் கொள்வோம். 

பதிலுக்கு செய்வதில், சொல்வதில் இன்பம் இல்லையா?  என்று கேட்டால் கட்டாயம் இன்பம் இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 

உன்னை ஒருவன் அடித்தால், பதிலுக்கு அவனை திருப்பி அடித்தால் ஒரு சந்தோஷம், இன்பம் இருக்கத்தான் செய்கிறது என்று ஒத்துக் கொள்கிறார் வள்ளுவர். 

ஆனால், 

உனக்கு ஒரு நாளைக்கு இன்பம் வேண்டுமா அல்லது நீண்ட நாட்களுக்கு இன்பம் வேண்டுமா என்று கேட்கிறார் வள்ளுவர்.



பாடல்



ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்



பொருள் 





(pl click the above link to continue reading)



ஒறுத்தார்க்கு = தனக்கு துன்பம் செய்தவற்குகு பதில் துன்பம் செய்தவருக்கு 


ஒருநாளை இன்பம் = அந்த ஒரு நாள் மட்டுமே இன்பம் 


பொறுத்தார்க்குப் = மாறாக, தனக்கு துன்பம் செய்தவரை பொறுத்துக் கொண்டவருக்கு 


பொன்றும் =  அழியும் அளவும் 


துணையும் = துணை நிற்கும் 


புகழ் = அவனது புகழ்



பதிலுக்குப் பதில் செய்துவிட்டால் அந்த ஒரு நாளைக்கு இன்பம் இருக்கும். ஆனால், அது பெரிதாக ஒன்றும் செய்து விடாது. நமக்கும் மறந்து போகும். மற்றவர்களும் மறந்து போவார்கள். 


மாறாக பொறுமையாக இருந்தால், நமக்குத் தீமை செய்தவன் கூட வாழ் நாள் எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பான். உலகம் நம்மைப் போற்றும். 



இங்கே "பொன்றும் துணையும் புகழ்" என்றார். 


அழியும் வரை துணையாக புகழ் இருக்கும் என்கிறார். எது அழியும் வரை என்று சொல்லவில்லை. 



அதற்குத்தான் பரிமேலழகர் வேண்டும். 


இந்தப் புகழ் எங்கு தங்கி இருக்கும்? இந்த உலகில்தானே புகழ் தங்க வேண்டும்? எனவே, இந்த உலகம் உள்ள அளவும் அவன் புகழ் நிற்கும் என்று உரை எழுதினர். 


"ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது"


பொறுமையாக இருந்தால் புகழ் இருக்குமா இருக்காதா என்று நமக்குத் தெரியாது. 


ஆனால் 


பொறுமை இல்லாமல் பதிலுக்குப் பதில் நிறைய செய்திருப்போம். பேசி இருப்போம், செய்திருப்போம். அவற்றால் என்ன பயன் என்று சிந்தித்துப் பார்ப்போம். ஒரு வேளை அப்படிச் செய்யாமல், பேசாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்போம். 


No comments:

Post a Comment