Monday, July 25, 2022

திருக்குறள் - பொறையுடைமை - துறந்தாரின் தூய்மை உடையார்

  

திருக்குறள் - பொறையுடைமை -  துறந்தாரின் தூய்மை உடையார்  


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 



குறள் 57:  அறன் அல்ல செய்யாமை 

குறள் 57:  தகுதியான் வென்று விடல்



)


முன்பு இரட்டைத் தேர்வு (double promotion) என்று ஒரு முறை இருந்தது. அதாவது, மிக மிக நன்றாக படிக்கும் மாணவனை, தேர்ச்சி முறையில் அடுத்த வகுப்பைத் தாண்டி அதற்கு மேல் உள்ள வகுப்புக்கு அனுப்புவது. 


உதாரணமாக நன்றாகப் படிக்கும் மாணவனை ஆறாவது வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்புக்கு அனுப்புவது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாழ்வின் படிகளை சிந்தித்தால் இல்லறம், துறவறம்,  வீடு பேறு என்று விரியும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"பொறுமை உள்ள இல்லறத்தான் துறவியை விட உயர்ந்தவன் " 


என்று. 


பாடல் 


துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்



பொருள் 




((pl click the above link to continue reading)



துறந்தாரின் = முற்றும் துறந்த துறவிகளை விட 


தூய்மை உடையார் = தூய்மை உடையவர்கள் (யார் என்று கேட்டால்) 


இறந்தார்வாய் = அறத்தை மீறியவர்கள் வாயில் (இருந்து  வரும்) 


இன்னாச்சொல் = கொடிய சொற்களை 


நோக்கிற் பவர் = பொறுத்துக் கொள்பவர் 



இல்லறத்தில் இருந்தாலும், தன் மேல் பிறர் தகாத வார்த்தை கூறினாலும், அதை பொறுத்துக் கொள்பவர், துறவிகளைவிட தூய்மை உள்ளவர்கள் என்று கூறுகிறார். 


அதாவது, ஒரு இல்லறத்தான் துறவு நோக்கி விரைவாகச் செல்கிறான், ,சரியான பாதையில் செல்கிறான் என்று சொல்கிறார். 


"துறந்தாரின் தூய்மை உடையார்" என்பதில் "தூய்மை" என்றால் என்ன என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


"தூய்மை என்றால் மனத்தின் கண் மாசு இன்மை" என்று. 



யாரால் பொறுமையாக இருக்க முடியும்?


மனதில் குற்றம் இல்லாமல் இருந்தால்தான் பொறுமையாக இருக்க முடியும். 


பொறுமை இழப்பதற்கு காரணம் என்ன?


கோபம், தான் பெரியவன் என்ற ஆணவம், நான் தவறே செய்ய மாட்டேன் என்ற நினைப்பு, அப்படியே செய்தாலும் மற்றவன் யார் என்னைச் சொல்ல என்ற மற்றவன் பற்றிய குறைவான மதிப்பீடு போன்ற குற்றங்கள். 


நம் மனதில் குற்றம் இல்லை என்றால், பொறுக்கும் குணம் தானே வந்து விடும். 


அப்படியானால், பொறுமை இல்லாதவர்கள், தங்கள் குறைகளைத் தேடி களைய வேண்டும். அல்லாமல், அவன் இப்படிச் சொன்னான், இவள் இப்படிச் செய்தாள் என்று மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. 



அப்படி தன் குறைகளை கண்டு அறிந்து அவற்றை நீக்கிக் கொள்ளுபவன் குறை ஒன்றும் இல்லாத தூய மனத்தவனாய் இருப்பான். 


அப்படிட்பட்டவன் துறைவியை விட தூய்மையானவன் என்கிறார். 


அனைத்தையும் துறந்து, காடு போய், தவம் எல்லாம் செய்வதை விட, இல்லறத்தில் இருந்து கொண்டே மன மாசுக்களை அகற்றி, பொறுமையைக் கடை பிடித்தால் போதும் என்கிறார். 



ஆழ்ந்த கருத்து. 



உள்வாங்கிக் கொள்ளுங்கள். அது உள்ளே போய் வேலை செய்யும். 

No comments:

Post a Comment