Friday, July 8, 2022

தாயுமானவர் பாடல் - சந்தைக் கூட்டம்

தாயுமானவர் பாடல் - சந்தைக் கூட்டம்  


தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ்

    சந்தையிற் கூட்டம் இதிலோ

  சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை

    சதுரங்க சேனையுடனே

வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம்

    வஞ்சனை பொறாமைலோபம்

  வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ

    வாஞ்சனையி லாதகனவே

எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே

    இரவுபக லில்லாவிடத்

  தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே

    யானென்ப தறவுமூழ்கிச்

சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ

    தேடரிய சத்தாகிஎன்

  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

    தேசோ மயானந்தமே.

No comments:

Post a Comment