Thursday, July 21, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி

 

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html

)


இராமனுக்கு முடி சூட்டிவதாய் முடிவாகி விட்டது.  முடிவு செய்த நேரம் பின்னிரவு. 


தயரதன் எங்கே போயிருக்க வேண்டும்? இராமனின் அன்னை கோசலையிடம் போய் அதைச் சொல்லி இருக்க வேண்டும். 


மாறாக கைகேயின் அரண்மனைக்கு வருகிறான். 


இராமனுக்கு முடி சூட்டுவதில் தயரதனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதை தன் அன்புக்குரிய மனைவியிடம் பகிர்ந்து கொள்ள ஆவலோடு வருகிறான். 


அவ்வளவு அன்பு, ஆசை அவள் மேல்.  நாளைக்கு காலையில சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கவில்லை. 


அங்கே கம்பனின் கவிதை கொஞ்சுகிறது. 


பாடல் 


நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை,

யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்,

‘வாழிய’ என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் -

ஆழி நெடுங் கை மடங்கள் ஆளி அன்னான்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


(please click the above link to continue reading) 




நாழிகை = நேரம் 


கங்குலின் = இரவின் 


நள் அடைந்த பின்றை = நடு (இரவை) அடைந்த பின் 


யாழ் இசை = யாழின் இசையை 


அஞ்சிய = வெல்லும் 


அம் சொல் = அழகிய சொல்லை உடைய 


ஏழை = பெண்ணாகிய  (கைகேயின்) 


கோயில் = மாளிகைக்கு 


‘வாழிய’ என்று = வாழ்க என்று 


அயில் மன்னர் = வேல் ஏந்திய மன்னர்கள் 


துன்ன, வந்தான் - = சூழ வந்தான் 


ஆழி = சக்கரம் ஏந்திய  (அரச சக்கரம்) 


நெடுங் கை = நீண்ட கைகளை கொண்ட 


மடங்கள் ஆளி அன்னான். = சிங்க ஏறு போன்ற (தயரதன்) 



இந்த கங்குல் என்ற சொல் முன்பு எப்போதோ பிரபந்தத்தில் படித்த ஞாபகம் 


கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே


(for meaning click here: http://interestingtamilpoems.blogspot.com/2012/04/blog-post_9408.html)





தயரதன், கைகேயின் அரண்மனைக்கு வருகிறான். 


கைகேயின் அரண்மனையில் சில யாழ் வாத்தியங்கள் இருந்தனவாம். அவை, ஒலி எழ்ப்பப் பயப்படுமாம். காரணம், கைகேயின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்குமாம். அவள் குரலுக்கு முன்னால் நாம் எம்மாத்திரம் என்று யாழ் வாயை மூடிக் கொண்டு இருக்குமாம்.  



வந்த பின் என்ன நடந்தது ?






No comments:

Post a Comment