Saturday, July 30, 2022

கந்தரனுபூதி - ஒரு முன்னுரை

 கந்தரனுபூதி -  ஒரு முன்னுரை 


 கந்தரனுபூதி என்ற நூல் அருணகிரிநாதர் அருளிச் செய்தது. 


அருணகிரினாதற்கே உரிய சந்த நடையில், மிக மிக ஆழமான தத்துவ உண்மைகளை உள்ளடக்கிய நூல். சைவ சமயத்தின் ஆழ்ந்த தத்துவங்களை பிழிந்து எடுத்து தரும் நூல். 


சைவ சித்தாந்தம் என்றவுடனே சிலருக்கு சற்றே சங்கடம் வரும். 


இறை நம்பிக்கை இல்லாதவர்கள் "கடவுளே இல்லை என்கிறேன், இதில் சைவம் எங்கிருந்து வந்தது...இதை ஏன் நான் படிக்க வேண்டும்" என்று கேட்கலாம். 


இந்து சமயத்தில் மற்ற பிரிவுகளைச் சார்ந்தவர்கள் "என் பிரிவுக்கு வேறு கடவுள், வேறு தத்துவங்கள் இருக்கின்றன. நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்" என்று கேட்கலாம். 


மற்ற சமயத்தைச் சார்ந்தவர்கள், "இந்து மதமும், சைவமும் உயர்வா? என் மதம் அதை விட உயர்ந்தது. எங்களுக்குத் தனிக் கடவுள் உண்டு, தத்துவம் உண்டு...நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்" என்றும் கேட்கலாம். 


அவர்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது. 



https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


(Pl click the above link to continue reading) 


தத்துவம் என்பது உண்மையை விளக்குவது. ஏதோ ஒரு தத்துவத்தைப் படித்தால் போதும். அதில் இருந்து இன்னொரு தத்துவத்தை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். 


இந்தத் தத்துவங்களை படிப்பதன் மூலம் உங்கள் தத்துவங்களின் ஆழம் மேலும் உங்களுக்குப் புரிய வரும். 


இறுதியில்,உண்மை என்பது ஒன்றுதான். 


போய்ச் சேரும் இடம் ஒன்றுதான். வழிகள்தான் வேறு வேறு. இன்னொரு வழியைத் தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதை ஏற்றுக் கொல்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம். 


ஒரு அறிவுத் தேடலுடன் இதை அணுகுவோம்.  ஏதேனும் புது விடயங்கள் கிடைக்கலாம்.


நம் அறிவை அது விரிவாக்கும். 


நமது பக்தி இலக்கியங்களில் பக்தி இருக்கும், இந்த உலகம் பற்றிய அறிவியல் சிந்தனை இருக்கும்,வாழ்கைக்குத் தேவையான தத்துவங்கள் இருக்கும், இசை, சந்தம், இனிமை இருக்கும். 


அவற்றில் ஒரு அறிவுத் தேடல் இருக்கும். இந்த உலகம் எப்படி வந்தது, ஏன் வந்தது, நாம் எப்படி வந்தோம், ஏன் வந்தோம், எது நிரந்தரம், ,எது தற்காலிகமானது, எது இன்பம், எது துன்பம், ஏன் இந்த இன்ப துன்பங்கள் வருகின்றன, அவற்றை எப்படி கையாள்வது, இது போன்ற பல விடயங்களில் அவை தங்கள் முடிவுகளைத் தெரிவிக்கும். 


ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம். 


அவர்கள் தேடி இருக்கிறார்கள். தேடிக் கண்டு பிடித்தத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். என்னதான் கண்டு பிடித்தார்கள் என்று அறிந்து கொள்ள முயல்வோம். 


இனி நூலுக்குள் நுழைவோம். 

No comments:

Post a Comment