திருவாசகம் - நான் யார் ?
நமக்கு ஊரில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள ஆசை.
எந்த நடிகர்/நடிகை எந்தப் படத்தில் நடிக்கிறார்கள், அது எப்போது வெளி வருகிறது.
நடிகர் இல்லாவிட்டால் அரசியல் தலைவர். இல்லை என்றால் ஆன்மீகத் தலைவர். அவர் எங்கே எப்போது உபன்யாசம் செய்யப் போகிறார்.
அதுவும் இல்லாவிட்டால் "என் மனைவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை", "அவருக்கு என்னதான் வேண்டும்", "வர வர இந்தக் காலத்துப் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை" ....
என்று மற்றவர்களை புரிந்து கொள்ளவே நாம் முயற்சி செய்கிறோம். அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நம்மை நாம் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சி செய்வது இல்லை.
"என்னைப் பற்றி எனக்கு என்ன புரியாது. என்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்" என்று நாம் நினைக்கிறோம். அது சரி அல்ல. நாம் நம்மை புரிந்து கொள்ள முயற்சி செய்வதே இல்லை.
"நான் யார்" என்ற இரண்டு வார்த்தை தான் இரமண மகரிஷியின் உபதேசமாக இருந்தது.
எப்போதாவது நாம் "நான் யார்" என்ற கேள்வியை கேட்டது உண்டா?
நான் என்பது இந்த உடலா, நினைவா, உயிரா, உறவுகளின் கலவையா? கணவனா? மனைவியா? பிள்ளையா? அறிவாளியா? முட்டாளா? பணக்காரனா? ஏழையா?
நான் என்பது யார்?
நமக்குள் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பல விஷயங்களை திணித்து வைத்து இருக்கிரறார்கள். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம் பார்த்த சினிமாக்கள், படித்த புத்தகங்கள் என்று எல்லோரும் சேர்ந்து நம் மண்டைக்குள் உட்கார்ந்து இருக்கிறார்கள். நான் என்பது தனி ஒருவன் இல்லை. பெரும் கும்பல் உள்ளே இருக்கிறது.
இதில் உண்மையான நான் யார்?
நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? நீங்கள் நம்பவில்லை, உங்களுக்கு சின்ன வயது முதல் அப்படி நம்பும்படி சொல்லப் பட்டது. நீங்களும் அதை கடை பிடிக்கிறீர்கள். ஒரு நாத்திக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தால், நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். நீங்கள் நம்புவது என்பது பெரிய விஷயம் இல்லை.
சுத்த சைவம், ரொம்ப ஆச்சாரம், எல்லாமே கற்பித்தவை. நமது என்று சொந்தமாக எதுவம் இல்லை. சைவ வீட்டில் பிறந்ததால் நான் சைவமாக இருக்கிறேன். இதில் என் பெருமை என்ன?
இந்த கும்பலை விரட்டி விட்டு யோசித்துப் பாருங்கள். நீங்கள் யார் என்று தெரியும்.
மாணிக்க வாசகர் தன்னைத்தானே கேட்கிறார்.
"நான் யார்? என் உள்ளம் என்பது என்ன? என் அறிவு/ஞானம் என்பது என்ன? என்னை யார் அறிவார்" என்று.
மாணிக்கவாசகருக்கு அந்த கேள்வி எழுந்து இருக்கிறது.
பாடல்
நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.
சீர் பிரித்த பின்
நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி
ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ
என் ஞானங்கள் இல்லாமல் போனது.
இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ?
அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?
ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_20.html
click the above link to continue reading
நான் யார் ? = நான் யார்
என் உள்ளம் யார் ? = என் உள்ளம் யார்
ஞானங்கள் யார் ? = ஞானங்கள் யார் அல்லது எது
என்னை யார் அறிவார் ? = என்னை யார் அறிவார் ?
வானோர் பிரான் = வானில் உள்ள பிரான்
என்னை ஆண்டிலனேல் = என்னைஆட் கொள்ளவில்லை என்றால்
மதி மயங்கி = மதி மயங்கி
ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் = இறைச்சி இருந்த உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து உண்ணும் அம்பலத்தில் ஆடும் அவன்
தேனார் கமலமே = தேன் உள்ள தாமரை மலருக்கு
சென்று ஊதாய் கோத்தும்பீ = சென்று பாடுவாய் தும்பியே
இறைவன் என்னை ஆட்கொள்ளமால் விட்டு விட்டால், நான் என்ன ஆகி இருப்பேன் என்று பதறுகிறார்.
தேடுங்கள். நீங்கள் யார் என்று அறிய முயற்சி செய்யுங்கள்.
Know Thyself என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
நம்மை அறிவதை விட்டு விட்டு, உலகில் உள்ள எல்லோரையும் அறிய நினைக்கிறோம். என்ன ஒரு அறிவீனம்.