Saturday, October 19, 2013

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான்

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான் 


புகழ் அடைவதற்கு தானம் செய்வது சிறந்த வழி. தானம் என்பது பொருளாக இருக்க வேண்டும் என்று அல்ல. நல்ல சொல், கல்வி தானம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

திருக்குறளில் புகழ் என்று ஒரு அதிகாரம். அது ஈகை என்ற அதிகாரத்தின் பின் வருகிறது. வள்ளுவர் ஏன் அப்படி வைத்தார் என்பதற்கு பரிமேலழகர் உரை எழுதுகிறார் 

"புகழ் என்பது இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின் , அதன்பின் வைக்கப்பட்டது" 

ஈதலினால் புகழ் வரும். 

கர்ணனுக்கு எவ்வளவுதான் வலிமை இருந்தாலும், வித்தை இருந்தாலும் தன் குலம் பற்றி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. தகப்பன் பெயர் தெரியாதவன் என்று அவன் மேல் உள்ள பழி இருந்து கொண்டே இருந்தது. உள்ளுக்குள் அது அவனை அரித்துக் கொண்டு இருந்தது. 

அந்த பழியை போக்கி, புகழ் அடைய கர்ணன் தானம் செய்யத் தொடங்கினான். நாளடைவில் அது அவனது இயற்கை குணமாகி விட்டது. கடைசியில், உயிர் போகும் நேரத்தில், செய்த தானம் அத்னையும் கண்ணனுக்கு தானம் செய்தான். 

இது உண்மையா ? கர்ணன் தன் பழி போக்கவா தானம் செய்தான் ? அது அவனது பிறவி குணம் இல்லையா ? பழி போக்கவா தானம் செய்தான் ?

வில்லி புத்துராழ்வார் சொல்கிறார்..."புறம் சுவர் கோலம் செய்வான்" என்று. உள்ளுக்குள் ஆயிரம் அழுக்கு , வெளி சுவரை அழகு படுத்தி வைப்பது மாதிரி, என்று அர்த்தம். 

துரியோதனன் சபை. கண்ணன் தூது வரப் போகிறான் என்ற செய்தி வந்திருக்கிறது. என்ன செய்வது என்று ஆலோசனை நடக்கிறது. அப்போது கர்ணன் சொல்கிறான் என்று ஆரம்பிக்கிறார் வில்லியார்...

பாடல் 

இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து, எதிர்ந்த வேந்தர் 
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்தபோதில், 
அறம் செறி தானம், வண்மை, அளவிலாது அளித்து, நாளும் 
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்:

பொருள் 

இறைஞ்சிய = அடி பணிந்த 

வேந்தர்க்கு = அரசர்களுக்கு 

எல்லாம் = எல்லோருக்கும் 

இருப்பு அளித்து = (துரியோதனன்) அவர்கள் அமர இருக்கை தந்து 

எதிர்ந்த வேந்தர்  = துரியோதனை எதிர்த்த வேந்தர்களின் 

நிறம் செறி குருதி வேலான் = மார்பில் தன் வேலைப் பாய்ச்சி, அதனால் சிவந்த வேலைக் கொண்ட துரியோதான் 

நினைவினோடு இருந்தபோதில் = சிந்தித்துக் கொண்டு இருந்த போது  

அறம் செறி தானம் = அறம் நிறைந்த தானம். அதாவாது கெட்ட காரியத்துக்கு தானம் செய்து உதவ மாட்டான் கர்ணன் 

வண்மை = வீரம் அல்லது தியாகம் 

அளவிலாது அளித்து = அளவு இல்லாமல் அளித்து. இவ்வளவு தானம் செய்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ள மாட்டான் கர்ணன். 

நாளும் = ஒவ்வொரு நாளும் 

புறம்  சுவர் கோலம் செய்வான் = வெளிச் சுவரை அழகு படுத்தும் கர்ணன் 

பூபதிக்கு உரைக்கலுற்றான் = அரசனான துரியோதனுக்கு சொல்லத் தொடங்கினான் 

Friday, October 18, 2013

திருக்குறள் - தூக்கம்

திருக்குறள் - தூக்கம் 


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

தூங்கிச் செயற்பால தூங்குக = தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களை தூங்கிச் செய்ய வேண்டும் 
தூங்காது செய்யும் வினை, தூங்கற்க = தூங்காமல் செய்யும் வேலைகளை, தூங்காமல் செய்ய வேண்டும். 

அது என்ன தூங்கிச் செய்வது, தூங்காமால் செய்வது ?

வேலைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் - நல்லவை, கெட்டவை என்று. 

கெட்ட காரியம் மனதில் தோன்றினால் , அதைத் தள்ளிப் போட வேண்டும். உடனே செய்து விடக் கூடாது. ஆறுவது சினம் என்றாள் அவ்வை. ஆறப் போட்டால் ஆறி விடும் சினம். கோபம் வந்தவுடன் ஏதாவது எழுதுவது, பேசுவது கூடாது. கொஞ்சம் தள்ளிப் போட வேண்டும். 

வர்ற ஆத்திரத்திக்கு அவனை அப்படியே வெட்டிப் போடலாம் என்று தோன்றும். உடனே செய்து விடக் கூடாது. தள்ளிப் போட்டால் அந்த ஆத்திரம் வடியும்.

அழகான பெண் தான்....தொடலாம் போல தோணும்...தொட்டு விடலாமா ?

அதேப் போல நல்ல எண்ணம், காரியம் தோன்றினால் உடனே செய்து விட வேண்டும். தள்ளிப் போடக் கூடாது. 

படிக்க வேண்டும் என்று நினைத்தால், உடனே படிக்க வேண்டும். அப்புறம் நாளைக்கு படிக்கலாம் என்று தள்ளிப் போடக் கூடாது. 

ஒன்றே செய்யவும், நன்றே செய்யவும் வேண்டும், அதுவும் இன்றே செய்ய வேண்டும், அதுவும் இன்னெ செய்ய வேண்டும். 

எந்த வேலையும் செய்வதற்கு ஏற்ற நேரத்தில் செய்ய வேண்டும். 

எல்லா வேலையும் உடனே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

Wednesday, October 16, 2013

இராமாயணம் - விதியும் தருமமும்

இராமாயணம் - விதியும் தருமமும் 


பரதன் நாடாள்வான் , நீ காடாளாப் போ என்று கைகேயி சொன்ன பின், இராமன் அவள் மாளிகையை விட்டு வருகிறான். கோசலையை காண வருகிறான். 

தனியாக வருகிறான். முடி சூட்டி சக்ரவர்த்தியாக வர வேண்டிய இராமன், தனியாக யாரும் இல்லாமல் நடந்து வருகிறான். அதை தூரத்தில் இருந்து கைகேயி பார்க்கிறாள். 

முன்னால் வீசி விரும் கவரி இல்லை. 

பின்னால் தாங்கி வரும் வெண்கொற்றக் குடை இல்லை. 
 
பிள்ளை தனியாக வருகிறான். அவள் கண்ணுக்கு வேறு இரண்டு பேர் தெரிகிறார்கள். 

இராமனுக்கு முன்னே விதி செல்கிறது. அவன் பின்னே தர்மம் வருகிறது. 

விதி என்ன என்று யாருக்கும் முதலில் தெரியாது...வாழ்க்கை செல்ல செல்லத் தான் விதியின் வெளிப்பாடு தெரியும். அடுத்த அடி எடுத்து வைத்த பின் தான் அது எங்கே வைக்கிறோம் என்று தெரிகிறது. 

விதி இராமனை முன்னே பிடித்து இழுத்து செல்கிறது...இராமன் பிறந்தது , கானகம் சென்று இராவணணை கொல்ல. அந்த விதி அவனை முன்னே இருந்து இழுத்து செல்கிறது. 

பின்னால் தர்மமோ , போகாதே இராமா, நீ போவது தர்மம் அல்ல என்று பின்னால் நின்று கெஞ்சி கேட்கிறது. 

இந்த விதிக்கும், தர்மத்திற்கும் நடுவில், மகுடம் சூட்டி வருவான் என்று ஆவலோடு இருந்த கோசலை முன் இராமன் தனியாக வந்து நின்றான். 

பாடல் 

குழைக்கின்ற கவரி இன்றி,
     கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
     தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
     ஒரு தமியன் சென்றான்.

பொருள் 

குழைக்கின்ற கவரி இன்றி = வீசப் படும் கவரி இல்லாமல் 
கொற்ற வெண்குடையும் இன்றி, = வெண் கொற்ற குடையும் இல்லாமல் 
இழைக்கின்ற விதி முன் செல்ல = வரைக்கின்ற விதி முன்னால் செல்ல 
தருமம் பின் இரங்கி ஏக, = தர்மம் பின்னால் இருந்து ஏங்க 
‘மழைக்குன்றம் அனையான் = மழை மேகங்களால் சூழப் பட்ட மலையை போன்ற இராமன் 
மௌலி  = மணி முடி , கிரீடம் 
கவித்தனன் வரும்’ என்று என்று = சூடி வரும் என்று 
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன் = மகிழ்வோடு இருந்த (கோசலை யின் முன் 
ஒரு தமியன் சென்றான் = தனியாக சென்று நின்றான் 


குழைக்கின்ற கவரி இன்றி,
     கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
     தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
     ஒரு தமியன் சென்றான்.

Tuesday, October 15, 2013

இராமாயணம் - கணையாழியின் கதை

இராமாயணம் - கணையாழியின் கதை 


இராமன் கணையாழியை சீதையை காணச் சென்ற அனுமானிடம் கொடுத்து அனுப்பினான். சீதை அதைக் கண்டு மகிழ்ந்தாள். பின் , திரும்பி வந்த அனுமன் அந்த கணையாழியை இராமனிடம் திருப்பி தந்ததாக தெரியவில்லை. 

பதிநான்கு வருடம் முடிந்து இராமன் அயோத்தி வர வேண்டும். வரவில்லை. பரதன் தீயில் விழுந்து உயிரை விடுவேன் என்று துணிகிறான். 

எங்கே பரதன் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வானோ என்று பயந்து அனுமானை அனுப்புகிறான். 

அனுமன் நந்தியம்பதியை அடைந்து, பரதனை கண்டு, இராமன் வரும் செய்தியை சொல்லி அவனிடம் கணையாழியை காண்பிக்கிறான். 

பரதன் கணையாழியை கண்டு அடைந்த மகிழ்ச்சியை கம்பன் விவரிக்கிறான்....

பாடல் 


மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்

பொருள்

மோதிரம் வாங்கித் = கணையாழியை வாங்கி 
தன் முகத்தின் மேலணைத்து = தம் முகத்தின் மேல் அணைத்து. அணைத்து என்பது இனிய பத பிரயோகம். 
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ = இராமன் நினைவாகவே பரதன் விரதம் பூண்டு இருந்தான். ஊன் உறக்கம் மறந்து, உடல் மெலிந்து காணப் பட்டான். இராமன் வந்தால், அவன் அன்பை பெரும் அளவிற்க்கு இவன் உடல் தாங்குமா என்று எல்லோரும் நினைத்தார்கள். அந்த சந்தோஷத்திலேயே இவன் உயிரை விட்டு விடுவான்  

எனா ஓதினர் = என்று கூறியவர்கள் 

நாணுற = வெட்கப் படும்படி 

ஓங்கினான் = மகிழ்ச்சியில் உயர்ந்து பூரித்து எழுந்தான் 
தொழும் தூதனை = தன்னிடம் தொழுது நின்ற தூதனான அனுமானை 
முறைமுறை தொழுது துள்ளுவான் = மீண்டும் மீண்டும் தொழுது துள்ளுவான் 

கணையாழி கடைசியில் பரதனிடம் வந்து சேர்ந்தது. இராமாயணத்தில், அதன் பின் அந்த கணையாழி வேறு எங்கும் போக வில்லை. 

கணையாழி இரண்டாம் முறையாக உயிர் காத்தது....

அது சரி, அந்த கணையாழி இன்றும் பல்வேறு விதத்தில் இன்றும் நம்மிடம் நிலவி வருகிறது...அது எது தெரியுமா ?

நாளை அதைப் பற்றி சிந்திப்போம்....




Sunday, October 13, 2013

இராமாயணம் - கணையாழி என்ன ஆயிற்று ?

இராமாயணம் - கணையாழி என்ன ஆயிற்று ?


சீதையை காண அனுமன் போன போது, இராமன் தன் கணையாழியை அனுமானிடம் கொடுத்த்து அனுப்பினான். சீதை அதை கண்டு மகிழ்ந்தாள். அனுமானை வாழ்த்தினாள்....

அது எல்லாம் சரி, அந்த கணையாழி என்ன ஆயிற்று ? அனுமன் அதை இராமனிடம் திருப்பித் தந்தானா ?

அது பற்றி ஒரு குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. 

காப்பிய முடிவில் அந்த கணையாழி பரதனிடம் சென்று சேர்கிறது. 

ஏன் ? எப்படி ?

மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்

நெடுநல் வாடை - விசிறியும் குளிரும்

நெடுநல் வாடை - விசிறியும் குளிரும் 


நெடு நல் வாடை - பெயரே இனிமையானது. தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கிறார்கள். அது வாடைக் காலம். தலைவனைப் பிரிந்த தலைவிக்கு அது நீண்ட வாடைக் காலமாக இருக்கிறது. தலைவியை சென்று சேரப் போவதால் அவனுக்கு அது நல்ல வாடைக் காலமாக இருக்கிறது. 

இதில் உள்ள பாடல்கள் எல்லாம் வாடைக் காலத்தை பின்னனியாகக் கொண்டு எழுதப் பட்டவை. மிக மிக இனிமையான பாடல்கள். அதிலிருந்து சில பாடல்கள்....

அது ஒரு வாடைக் காலம். மாலை நேரம் தாண்டி முன்னிரவு வந்து விட்டது. குளிர் காற்று சிலு சிலு என்று அடிக்கிறது.  தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் குளிருக்கு இதமாக, நீண்ட பிரிவை ஆற்றும் வகையில் கட்டி அணைத்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் , பாடல் ஆசிரியர் இதை நேரடியயாகச் சொல்லவில்லை. மறைமுகமாக சொல்கிறார். 

எப்படி ?

அழகான விசிறி ஆணியில் தொங்குகிறது. குளிர் காற்று உள்ளே வராமல் இருக்க பள்ளி அறையின் கதவு தாழிடப் பட்டிருக்கிறது. அவ்வளவுதான் சொல்கிறார். 

ஏன் படுக்கை அறையின் கதவு தாழிடப் பட்டிருக்கிறது என்பதை நாம் யூகத்திற்கு விடுகிறார். 

சொல்லாமல் சொன்ன கவிதை இது 


கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க
வான் உற நிவந்த மேனிலை மருங்கின்
வேனில் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர் வாய் கதவம் தாழொடு துறப்பக் 

பொருள்

கைவல் = கை வேலைப்பாடு நிறைந்த 
கம்மியன் = தொழிலாளியின் 
கவின் பெறப் புனைந்த = அழகு நிறைந்த 
செங்கேழ் = சிவந்த விசிறி 
வட்டஞ் சுருக்கிக் = வட்டமான அந்த தோற்றத்தை சுருக்கி, மடக்கி வைத்து 
கொடுந்தறிச் = வளைந்த சுவற்றில் உள்ள ஆணியில் 
சிலம்பி = சிலந்தி 
வான் நூல் = வலை போல 
வலந்தன தூங்க = தூங்க. அதாவது, ஆணியில் மாட்டப்பட்ட விசிறி சிலந்தி வலை போல இருக்கிறதாம். என்ன ஒரு உவமை. 
வான் உற நிவந்த = வானத்தை எட்டும் படி உயர்ந்த 
மேனிலை = மாடி 
மருங்கின் = மாடத்தில் 
வேனில் = வேனில் காலத்தில் 
பள்ளித் = படுக்கை அறையில் 
தென்வளி = தென்றல் காற்று 
தரூஉம் = வரும் 
நேர் வாய்க் கட்டளை = நேராக வரும் வழி 
திரியாது = திரியாமல் , உள்ளே வர விடாமல் 
திண்ணிலைப் = தின்மையான, உறுதியான 
போர் வாய் = பெரிய வாசலை உடைய 
கதவம் =கதவு 
தாழொடு  துறப்பக் = தாழ்பாழை இட்டு கிடக்க 

பாடல் அவ்வளவுதான். அது சொல்லியது அவ்வளவுதான். சொல்லாமல் விட்டது ஏராளம். 

திருக்குறள் - மனைவிக்குப் பயந்தவன்

திருக்குறள் - மனைவிக்குப் பயந்தவன் 



மனையாளை யஞ்சு மறுமையி லாளன் 
வினையாண்மை வீறெய்த லின்று.

மனைவிக்கு பயந்தவனுக்கு இரண்டு தீமைகள் நிகழ்கின்றன. 

ஒன்று , இந்தப் பிறவியில் அவனுக்கு நன்மை கிடையாது. அவன் செய்யும் வினைகளுக்கு வெற்றி கிடையாது. அதாவது, மனைவிக்கு பயந்து அவள் சொல்வதை கேட்டு அதன்படி செய்பவனுக்கு காரியம் வெற்றி பெறாது. அவன் தோல்வியே அடைவான்.

இரண்டாவது, அவனுக்கு மறு பிறப்பிலும் அல்லது சொர்கத்திலும் நல்லது நடக்காது. இம்மை பயன் மட்டும் அல்ல, மறுமை பயனும் கிடைக்காது அவனுக்கு. 

பொருள் 

மனையாளை = மனைவியின். மனையாள் என்றால் அது மனைவியை குறிக்காது என்று தமிழ் தெரியாத சிலர் வாதம் புரியக் கூடும். மனையாள், மனை விழைவான் என்பன ஆகு பெயர்கள். அந்த வீடு சொர்கம் போல என்றால் அந்த வீட்டில் உள்ள செங்களும் சிமின்டும் அல்ல. அதில் உள்ள மனிதர்கள், அவர்களின் குண நலன்கள். தமிழில் பல ஆகு பெயர்கள் உண்டு. 

யஞ்சு = அஞ்சுபவன், அவள் சொல்வதை கேட்டு நடப்பவன், அவள் சொல்வதருக்கு மறுப்பு சொல்லாதவன் 

மறுமையி லாளன் = அவனுக்கு மறுமை பயன் எதுவும் இல்லை. வாழ்க்கையே இல்லை என்கிறோமே அது போல  

வினையாண்மை வீறெய்த லின்று = வினை + ஆண்மை + வீறு + எய்தல் + அன்று = அவன் செய்யும் வினைகள் எந்த பயனையும் தராது. 

இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராதது - மனைவி சொல்லை கேட்பது. 

வள்ளுவர் சொல்கிறார். பரிமேல் அழகர் சொல்கிறார்....

Saturday, October 12, 2013

பிரபந்தம் - புறம் சுவர் கோலம் செய்து

பிரபந்தம் - புறம் சுவர் கோலம் செய்து 


வீடு உள்ளே எப்படியோ அலங்கோலமாக இருக்கிறது. வெளியே மட்டும் அழகாக வெள்ளை அடித்து சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். 

மன அழுக்கு ஆயிரம் இருக்கு. ஆனால் வெளியே மத சின்னங்கள் ஆயிரம். நெற்றியில், கழுத்தில், கையில், தலையில், தோளில் என்று வித விதமான சின்னங்கள். 

சின்னங்கள் ஒவ்வொவுன்றும் ஒரு சுவர்கள். இந்தியன் என்று சுவர், இந்து என்று ஒரு சுவர், சைவன்/வைணவன் என்று ஒரு சுவர், அதற்க்குள் இன்னும் எத்தனையோ சுவர்கள். இத்தனை சுவர்களையும் தாண்டி அதற்கு பின்னால் நாம் இருக்கிறோம். இப்படி ஒவ்வொருவரை சுற்றியும் பலப் பல சுவர்கள். நம் கவனம் எல்லாம் சுவர்களை அழகு படுத்துவதில்தான். 

என்ன தான் இந்த உடம்பை பல வித மதச் சின்னங்கள் இட்டு அழகு படுத்தினாலும், இது ஓட்டைச் சுவர். ஒரு நாள் விழும். புரண்டு புரண்டு விழும். உயிர் போகும் நாள் ஒன்று வரும். இந்த புற சுவர்கள் நம்மை  எமனிடம் இருந்து காக்க முடியாது என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார் 

பாடல் 

மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.

பொருள்

இராமாயணம் - பெண்களால் மரணம்

இராமாயணம் - பெண்களால் மரணம் 


சுக்கிரீவனுக்கு முடி சூட்டிய பின், இராமன் அவனுக்கு சில அறிவுரைகள் கூறுகிறான். அந்த காலத்தில் ஒருவன் ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்ளப் போகிறான் என்றால் பெரியவர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவது வழக்கம். இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்று அறிவித்தவுடன் , அவனுக்கு வசிட்டர் அறிவுரை வழங்கினார்.

இங்கே இராமன் வழங்குகிறான்.

மக்களுக்கு பெண்களால் எப்போதும் துன்பம்தான். துன்பம் என்று லேசாக சொல்லவில்லை. பெண்களால் மரணம் வரும் என்கிறான். இதில் சந்தேகமே இல்லை. அவர்கள் கட்டாயம் உயிரை எடுப்பார்கள். வாலியின் வாழ்க்கையும் எங்கள் வாழ்க்கையும் இதற்கு உதாரணம் என்கிறான். 

பாடல் 

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ? 

பொருள் 

மங்கையர் பொருட்டால்  = பெண்களால் 
எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல், = மக்களுக்கு மரணம் வரும் 

சங்கை இன்று உணர்தி;  - சந்தேகம் இல்லாமல் இதை உணர்ந்து கொள் 
வாலி செய்கையால் சாலும்; = இது வாலியின் செய்கையாலும் 
இன்னும் = மேலும் 
அங்கு அவர் திறத்தினானே = அவர்கள் (பெண்களின்) திறமையால் 
அல்லலும் = துன்பமும்
பழியும் ஆதல் = பழியும் வந்து சேர்ந்ததை 
எங்களின் காண்டி அன்றே; = எங்கள் வாழ்க்கையில் இருந்து பார்த்துக் கொள்
இதற்கு  வேறு உவமை உண்டோ = இதற்கு வேறு ஒரு சான்றும் தேவையா 

இது இராமன் சொன்னது. 

இராமன் சொல்லாமல் விட்டது ....

கூனியால் , கைகேயியால் ... சக்ரவர்த்தி தசரதன் இறந்தான் 
சுக்கிரீவன் மனைவியால் வாலி இறந்தான் 
சூர்பபனாகியால், சீதையால் - இராவணன் இறந்தான், கும்ப கர்ணன் இறந்தான், இந்திரஜீத் இறந்தான், மாரிசன் இறந்தான் 





 

Friday, October 11, 2013

திருக்குறள் - மனைவி பேச்சை கேட்டால்

திருக்குறள் - மனைவி பேச்சை கேட்டால் 


இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 
நல்லாருள் நாணுத் தரும்.


மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும். (மு. வ. உரை )


முதலில் மனை விழைவார் என்றால் மனைவி இல்லை என்று சிலர் சொல்லக் கூடும். இப்போது இல்லாள் என்று கூறுகிறார்.  இதற்க்கும் மனைவி என்று பொருள் இல்லை. வேறு ஏதாவது பொருள் இருக்குமோ ?

இதற்கு பரிமேல் அழகர் என்ன சொல்லுகிறார் ?

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை – ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் – அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். 

பெண் என்பவள் அஞ்சி நடப்பவள். அவளிடம் அஞ்சி நடப்பது என்பது ஒரு இயல்பாக இருக்க முடியாது. கணவன், மனைவிக்கு பயந்து நடந்தால், அவளை யாராலும் கட்டுப் படுத்த முடியாது. ஒரு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பெண்ணினால் எல்லாவிதமான குற்றங்களும் , எப்போதும் விளையும் என்கிறார் வள்ளுவர். 

பரிமேலழகரின் உரை கீழே...சந்தேகம் உள்ளவர்கள் படித்து தெளிந்து கொள்ளலாம். 

(அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, ‘எஞ்ஞான்றும் நாணுத்தரும்’ என்றார்.)

இல்லாளுக்கு (மனைவிக்கு) தாழ்ந்து போகக் கூடாது 
மனைவி என்பவள் கட்டுக்குள் வைத்திருக்கப் பட வேண்டியவள். அதாவது கணவன் சொற்படி கேட்டு நடக்க வேண்டியவள்.

இந்த குறளுக்கு உங்கள் எண்ணங்களை அறிந்து கொண்ட பின், மேலும் எழுத உத்தேசம். 



Tuesday, October 8, 2013

திருக்குறள் - பெண் விழைவான்

திருக்குறள் - பெண் விழைவான் 




பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

முதலில் பரிமேலழகர் உரையை பார்ப்போம்

பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; 

பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்.

ஏன் நாணம் தரும் ?

எப்பப் பார்த்தாலும் பெண்டாட்டி பின்னாடியே சுத்திக் கொண்டு இருந்தால் , செல்வதை காப்பது, செல்வதை அனுபவிப்பது , செல்வதை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை செய்ய முடியாது. எனவே நாணம் தரும். 

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ? இந்த செல்வம் எல்லாம் அவன் மனைவி சாமர்த்தியதால் வந்தது, இவனுக்கு ஒண்னும் தெரியாது என்று நினைப்பார்கள். அதுவும் நாணம் தரும். 

Monday, October 7, 2013

தேவாரம் - வயதான போது

தேவாரம் - வயதான போது 


முதுமை. 

இளமையில், உடலில் வலு இருக்கும் போது உலகை வென்று விடலாம் என்று தோன்றும். நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்று தோன்றும். விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி என்று இலகுவன் கூறியது போல விதியை புரட்டி போட்டு விடலாம் என்று தோணும்....

வயதாகும்...

புலன்கள் தளரும். நினைத்ததை செய்ய முடியாது. 

கண்ணால் கண்டு உணர வேண்டியதை கையால் தடவி உணருவோம். மனம் பேச நினைத்ததை  வாய் பேசாமல் குளறும். நிற்க முடியாது. நடக்க முடியாது. சொன்னது மறந்து போய் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருப்போம். 

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இன்றி அறிவு மங்கிப் போகும் நேரம். 

மனைவியும் மக்களும் சுற்றமும் நட்பும் கேலி செய்யும். யார் துணையும் இன்றி மனம் தவிக்கும்....அப்போது 

அஞ்சேல் , நான் இருக்கிறேன் உனக்கு என்று சொல்பவன் இறைவன் மட்டுமே. அவன் அருள் செய்பவன் அமரும் கோவில் திருவையாறு. 

அந்த கோவிலில் , பெண்கள் பாட்டு பாடி நடனமாடி வலம் வருகிறார்கள். அப்போது பூஜை நேரம் என்பதால் முரசு அடிக்கிறது. அதை மேகத்தில் இருந்து வரும் இடி என்று நினைத்து சில குரங்குகள் மரதத்ின் மேல் ஏறி மழை வருகிறதா என்று பார்க்கும்.  (ஏன் சில மந்திகள் என்று சம்மந்தர் கூறினார் ?) 


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைமே லுந்தி
யலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங் கோவில்
வலம்வந்த மடவார்க ணடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவை யாறே

சீர் பிரிப்போம்:

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்து ஐமேல் உந்தி
அலமந்த போது அஞ்சேல் என்று அருள் செய்வான் அமருங் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடனம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி
சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே

பொருள்:

புலன் ஐந்தும் = ஐந்து புலன்களும்

பொறி கலங்கி = கலக்கமுற்று

நெறி மயங்கி = வழி தெரியாமல்

அறிவு அழிந்து = அறிவு அழிந்து

ஐமேல் உந்தி = ஐந்து புலன்களும் உந்தித் தள்ள

அலமந்த போது = இறுதி காலம் வந்த போது

அஞ்சேல் என்று = அச்சப் படாதே என்று

அருள் செய்வான் = அருள் செய்யும் இறைவன்

அமருங் கோயில் = உறையும் கோவில்

வலம் வந்த =அந்த கோவிலை சுற்றி வரும்

மடவார்கள்  = பக்தர்கள்

நடனம் ஆட = நடனம் ஆட

முழவு அதிர = முரசு, மத்தளம் ஒலிக்க

மழை என்று அஞ்சி = ஏதோ மழை வரப்போகிறது என்று அஞ்சி

சில மந்தி = சில குரங்குகள்

அலமந்து = மாலை நேரத்தில்

மரமேறி  = மரத்தின் உச்சியில் ஏறி

முகில் பார்க்கும் = மழை மேகம் வருகிறதா என்று பார்க்கும்

திருவையாறே = திருவையாறே 


Wednesday, October 2, 2013

திருக்குறள் - பெண்வழிச் சேறல்

திருக்குறள் -  பெண்வழிச் சேறல்


பெண் சொல்வதை , குறிப்பாக மனைவி சொல்வதை கேட்டால் நல்ல பயனை அடைய மாட்டார்கள் என்றும் ; நல்ல பயனை விரும்புவார்கள் மனைவி சொல்வதை கேட்க மாட்டார்கள் என்றும் வள்ளுவர் சொல்கிறார்.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.

பொருள்


மனைவிழைவார்  = மனைவியின் அன்பை, அவள் தரும் இன்பத்தை அடைய விரும்புவார்
மாண்பயன் எய்தார் = சிறந்த பயன்களை அடைய மாட்டார்கள்
வினைவிழைவார் = செயலை விரும்புபவர்கள்
வேண்டாப் பொருளும் அது. =  வேண்டாத அல்லது விரும்பாத பொருளும் அது. அதாவது செயல் திறனை விரும்புபவர்கள் மனைவியின் பேச்சை கேட்க மாட்டார்கள்

இது நான் சொல்லுவது இல்லை.

பரிமேலழகர் சொல்கிறார் ... மனைவியின் சொல்லை கேட்பவர்கள் அறத்தின் பயனை அடைய மாட்டார்கள் என்று.


மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்;

வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம்.

மனக் குடவர் , தேவ நேய பாவாணர் போன்றோரும் இதைப் போலவே உரை எழுதி இருக்கிறார்கள்.

வள்ளுவர் பொய்யா மொழி புலவர். பரிமேலழகர் மிகச் சிறந்த உரை ஆசிரியர்.

அவர்கள் பிழையாக ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல , பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார் வள்ளுவர் - பெண் வழி சேராதே என்று.....




பிரபந்தம் - மாணிக்கம் கட்டி

பிரபந்தம் - மாணிக்கம் கட்டி 


தாயாக இருப்பது எளிது. தந்தையாக இருப்பது மிகக் கடினம். 
ஏன் ?
தாய் என்பது இயற்கையாக இருப்பது. ஒரு தாய் தன் பிள்ளையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறாள். பின், தன் உதிரத்தை பாலாக்கி பிள்ளைக்கு தருகிறாள். அவளுக்கும் குழந்தைக்கும் உள்ள தொடர்பு உயிர் சார்ந்தது , உடல் சார்ந்தது. 

தந்தை அப்படி அல்ல. அவனுக்கும் பிள்ளைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஒரு தந்தை பிள்ளை மேல் வைக்கும் பாசம் மிகக் கடினமானது. அவன் மிக மிக முயற்சி செய்ய வேண்டும். 

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 

A mother is a natural phenomenon 
whereas a father is social phenomenon என்று 

தாயின் அன்பைக் காட்டிலும் தந்தையின் அன்பு மிக மிக உயர்வானது. 

பெரியாழ்வார்  தன்னை கண்ணனின் தாயாக பாவித்து பாடல்கள் எழுதி இருக்கிறார். அவ்வளவு இனிமீயான பாடல்கள். 

பொதுவாக எல்லோரும் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்போம். 

சில பேர் அப்படி கேட்காவிட்டாலும், இறைவா , என்னை நல்லபடி வைத்து இருக்கிறாய், உனக்கு நன்றி என்று சொல்லுவார்கள். 

சில பேர், இறைவனை திட்டவும் செய்வார்கள். உனக்கு எவ்வளவு பூஜை எல்லாம் செய்தேன், என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் , உனக்கு கண் இல்லையா , உன் மனம் என்ன கல்லா என்று வைப்பவர்களும் உண்டு. 

இறைவன் உண்டென்பார், இல்லை என்பார் நமக்கில்லை கடவுள் கவலை என்று இருப்பாரும் உண்டு. 

யாராவது, கடவுளே , இங்கே வா, என்னிடம் வா, நான் உன்னை நல்லபடியாக பார்த்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது உண்டா. இறைவா , நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தியது உண்டா ? 

பெரியாழ்வார்  சொல்கிறார். 

பெரியாழ்வார்  பாடல்களில் இருந்து சில எனக்குப் பிடித்த சில பாடல்களைத் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.

இந்தப் பாடல்களை அறிவதால் என் வாழ்க்கைக்கு என்ன பயன் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. 

சிறகடித்து சிலிர்த்து பறக்கும் சிட்டுக்குருவி, காதோரம் கவிதை பாடும் தென்றல், காலோரம் கதை பேசும் கடல் அலை, பால் தெளிக்கும் நிலவு, விரல் பிடிக்கும் பச்சை குழந்தையின் கைகள், உயிர் பூக்க வைக்கும் ரோஜா மலர்...இவற்றை எல்லாம் பார்பதால் என்ன பயனோ அதே பயன்தான்...

இறைவனை தொட்டிலில் இட்டு தாலாட்டித் தூங்கப் பண்ணுகிறார் ஆழ்வார்....இறைவனுக்கு தாய் இல்லை என்ற குறையை போக்குகிறார்...

பாடல்

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!

பொருள்

Monday, September 30, 2013

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

யார் பெரியவர் ? 

சிவனா ? அபிராமியா ?

முப்புரங்களை எரிக்க தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு சண்டை போட்டு வென்றவரா அல்லது அப்பேர்பட்ட சிவனின் உடலில் பாதியை தன்னுடைய மார்பகத்தால் வென்ற அபிராமியா ?


தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

பொருள்

தங்கச் சிலை கொண்டு = தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு 
தானவர் முப்புரம் சாய்த்து = அசுரர்களின் முப்புரங்களை சாய்த்து 

மத = மதம் கொண்ட 

வெங் கண் = சிவந்த கண்களை கொண்ட 
கரி = யானையின் 
உரி = தோலை உரித்து 
போர்த்த = மேலே போர்த்திக் கொண்ட 
செஞ்சேவகன் = சிவந்த மேனியை கொண்ட சேவகன் 
மெய்யடையக் = உடலில் பாதியை அடைய 

கொங்கைக் குரும்பைக் = குரும்பை போன்ற   கொங்களை 
குறியிட்ட நாயகி = குறியாகக் கொண்ட நாயகி 
கோகனகச் = பெரிய தங்கம் போன்ற 

செங் கைக் கரும்பும் = சிவந்த கையில் கரும்பும் 
மலரும் = மலரும் 
எப்போதும் என் சிந்தையதே. = எப்போதும் என் சிந்தையுள்ளே 

ஆண், வெளியே எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் , பெண்ணின் அழகின் முன்னால் அவன் தோற்றுத் தான் ஆக வேண்டும்.

அது பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை 
ஆணுக்கு கிடைக்கும் கம்பீரம் 

மேருவை வில்லாக வளைத்த சிவனின் கதி அது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் ...



 

Sunday, September 29, 2013

குறுந்தொகை - மணந்த மார்பே

குறுந்தொகை - மணந்த மார்பே 


குறுந்தொகை போன்ற பாடல்களை படிக்கும் போது அவை எழுதப் பட்ட காலத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத காலம். சின்ன கிராமங்கள். விவசாயம் மட்டுமே பிரதானமாய் இருந்த காலம். ஊரை அடுத்து காடு இருக்கும். சில சமயம் காட்டில் இருந்து விலங்குகள் ஊருக்குள் வருவதும் உண்டு. 

அது ஒரு குளிர் காலம். முன் பனிக் காலம். பின்னிரவு நேரம். நிலவொளியில் ஊரே குளித்துக் கொண்டிருக்கிறது. குளிர் காற்று உயிரையும் சேர்த்து வருடிச் செல்லும் காலம். 
குளிர் மனிதர்களுக்கு மட்டும் அல்லவே. காட்டில் உள்ள மான்களையும் அது சென்று காதோரம் காதல் பேசி விட்டு செல்கிறது. குளிர் தாங்காமல் அவை மெல்ல மெல்ல அந்த கிராமத்துக்கு வருகின்றன. அங்குள்ள வயல்களில் உளுந்து விளைந்திருக்கிறது. அவற்றை அவை உண்ண நினைக்கின்றன. உணவு உண்டால் கொஞ்சம் உடல் சூடு பிறக்கும். இந்த குளிரை தாங்க முடியும் என்று அவை நினைகின்றன. 

அந்த ஊரில் உள்ள தலைவிக்கும் தூக்கம் வரவில்லை. ஜன்னலோரம் அமர்ந்து நிலவொளியில் வயல் வரப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறாள். மான்கள் மெல்ல மெல்ல வருவது தெரிகிறது. 

ஹ்ம்ம்ம் என்ற பெரு மூச்சு வருகிறது...அவன் அருகில் இருந்தால் இந்த குளிருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாள். அவன் மார்பில் சாய்ந்து இந்த குளிர் தரும் துன்பத்தை போக்கிக் கொள்ளலாமே என்று நினைக்கிறாள். 

பாடல் 

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை அவர் மணந்த மார்பே.

பொருள்

பூழ்க்கால் = காடை என்ற பறவையின் காலைப் 

அன்ன = போல 
செங்கால் = சிவந்த கால்களை உடைய 
உழுந்தின் = உளுந்து செடியின் 

ஊழ்ப்படு = காலத்தால் 
முதுகாய் = முற்றிய காய்களை 
உழையினங் கவரும் = மான் இனம் கவரும். உண்பதற்கு வரும் 
அரும்பனி = கடுமையான பனி
அற்சிரம் = அந்த சிரமத்தை  
தீர்க்கும் = போக்கும் 
மருந்து பிறிதில்லை = மருந்து பிறிது இல்லை 
அவர் மணந்த மார்பே = அவரோடு நான் இணைந்திருந்த அவரின் மார்பை தவிர 

யோசித்துப் பார்த்தேன்....எதுக்கு இந்த மான், உளுந்து எல்லாம் இந்த பாடலில். பேசாமல் குளிர் வேதனை போக்க மருந்து அவன் மார்பு என்று சொல்லி விட்டுப் போய் விடலாமே ?

சொல்லலாம். 

மான்கள் வருவது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருக்கும் அந்த ஊரின் தன்மை, உளுந்து விளையும் மண்ணின் தன்மை, குறைந்த மழை பெய்யும் அடி வருடும் வறட்சி, பயிர்களை உண்ணத் தலைப்படும் மான்களின் பசி, அது இரவு நேரமாக இருக்கும் என்ற யூகத்திற்கு இடம் தருவதும், (பகலில் வந்தால் விரட்டி விடுவார்களே), தூக்கம் வராதா தலைவி அதை பார்த்துக் கொண்டிருப்பதும், தலைவனை நினைத்து ஏங்குவதும் ... 

யோசித்துப் பாருங்கள்...எவ்வளவு அழகான பாடல் 
 

 


Saturday, September 28, 2013

இராமாயணம் - குகன் அறிமுகம்

இராமாயணம் - குகன் அறிமுகம் 


குகன், இராமன் இருக்கும் இடம் வருகிறான். வாசலில் காவல் நிற்கும் இலக்குவன் கேட்டான் "நீ யார்" என்று. 

குகன் என்ன சொன்னான் என்பது  ஒரு புறம் இருக்கட்டும். 

நம்மை யாராவது "நீங்கள் யார் " என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ? 

நம் படிப்பு, வேலை, திறமை , சொத்து என்று நம் பெருமைகளை சொல்லுவோம். 

குகன் கங்கை கரை நாட்டுக்கு அரசன், ஆயிரம் படகுகளுக்குச் சொந்தக்காரன், எவ்வளவு பணிவாய் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் பாருங்கள்.....

பாடல் 

கூவா முன்னம், இளையோன் குறுகி, 'நீ
ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;
'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான்.

பொருள்

கூவா முன்னம் = குகன் அழைப்பதற்கு முன்னே 

இளையோன் குறுகி = இளையவனான இலக்குவன் அவனை சென்று அடைந்து 

'நீ ஆவான் யார்?' என = நீ  யார் என 

அன்பின் இறைஞ்சினான் = அன்போடு கெஞ்சிக் கேட்டான். இறைஞ்சினான் என்கிறான் கம்பன். 

'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென் = தேவா, உன் திருவடிகளைச் வணங்குவதற்கு வந்தேன் என்றான்.  குகன் இதுவரை இராமனைப் பார்த்தது கிடையாது. இலக்குவனைப் பார்த்து அவன் தான் இராமன் என்று நினைத்த்துக் கொண்டான். உன்னை சேவிக்க வந்தேன் என்றான். உண்மையில் அவன் சேவிக்க வந்தது இராமனை 

நாவாய் வேட்டுவன் = படகுகள் ஓட்டும்  ஒரு வேடன் 

நாய் அடியேன்' என்றான் = நாய் போல அடிமையானவன் என்கிறான். 

என்ன ஒரு பணிவு. 

அடக்கம் அமரருள் உய்கும் என்றான் வள்ளுவன். தன்னை இவ்வளவு பணிவாக அறிமுக படுத்திக் கொண்டவன் யாரும் இல்லை இந்த உலகில். 

பெரியவர்களிடம் இந்த அடக்கம் எப்போதும் நிறைந்து கிடக்கிறது. 

மாணிக்க வாசகரிடம் இருந்தது - நம்மையும் ஓர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்று வித்து என்பார். 
அபிராமி பட்டரிடம் இந்த அடக்கம் இருந்தது - அடியேனுடைய நாய்த் தலையே என்பார். 

குகனிடம் அவ்வளவு அன்பு.. அவ்வளவு அடக்கம். 


மூதுரை - தீயார் உறவு

மூதுரை - தீயார் உறவு 


தீயவர்களைக் காண்பதும் தீதே - பார்த்தால் என்ன ஆகும் ? அட, இவன் இவ்வளவு தப்பு செய்கிறான், சட்டத்தை மீறுகிறான், அயோக்கியத்தனம் பண்ணுகிறான் இருந்தும் நல்லாதான் இருக்கான், ஒழுங்கா நேர்மையா இருந்து நாம என்னத கண்டோம், நல்லதுக்கு காலம் இல்லை...நாமும் கொஞ்சம் அப்படி செய்தால் என்ன என்று தோன்றும். கொஞ்சம் செய்வோம். மாட்டிக் கொள்ளவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் செய்யத் தோன்றும். இப்படிப்  போய் கடைசியில் பெரிதாக ஏதாவது செய்து மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, தீயவர்களை காணாமல் இருப்பதே நல்லது.

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

தீயார் சொல்லை கேட்பதும் தீதே....தீயதைக் கூட நல்லது மாதிரி சொல்லி நம்மை தீய வழியில் செலுத்தி விடுவார்கள். ஒரு தடவைதானே சும்மா முயற்சி செய்து பாருங்கள், பிடிக்கலேனா விட்டுருங்க என்று கேட்ட பழங்கங்களை நமக்கு அறிமுக படுத்தி விடுவார்கள்.

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

தீயார் குணங்களை ஊரைப்பதும் தீதே ...தீயவர்களின் குணங்களைப் பற்றி பேசக் கூட கூடாது. இன்றைய தினம் தொலைக் காட்சிகளிலும், தினசரி இதழ்களிலும் கொலை செய்தவன், கொள்ளை அடித்தவன், கற்பழித்தவன் , வெடி குண்டு வைத்தவன் ....இவர்கள் பற்றிய செய்திகள்தான் அதிகம் வருகிறது. அது கூடாது என்கிறார் அவ்வையார்

அவரோடு இணங்கி இருப்பதும் தீதே .... அவர்களோடு ஒன்றாக இருப்பதும் தீதே

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

பாடல்

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

Friday, September 27, 2013

மூதுரை - பிளவு

மூதுரை - பிளவு 


உங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களா ? அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா ? வந்த கோபம் இன்னும் இருக்கிறதா ? அப்படி யாராவது இருக்கிறார்களா உங்கள் பட்டியலில் ? உங்களுக்கு முன்பு தீமை செய்தவர்கள், உங்களை ஏமாற்றியவர்கள், என்று யாராவது இருக்கிறார்களா ? யோசித்துப் பாருங்கள்....

அந்த பட்டியல் அப்படி ஒரு புறம் இருக்கட்டும்....

இந்த கல்லு இருக்கிறதே அது ஒரு முறை உடைந்து விட்டால் பின் ஒட்டவே ஒட்டாது. என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும். 

பொன் இருக்கிறதே, அதில் கொஞ்சம் பிளவு வந்து விட்டால் உருக்கி ஒட்ட வைத்து விடலாம். ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிடணும்

இந்த தண்ணீரின் மேல் அம்பை விட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப் பொழுதில் மீண்டும் சேர்ந்து கொள்ளும். அம்பு பட்ட தடம் கூட இருக்காது. 

கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால் வாழ் நாள் பூராவும் மறக்க மாட்டார்கள். நமக்கு எப்படி மறு தீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள். இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல 

நல்லவர்களுக்கு நாம் ஒரு தவறு செய்துவிட்டால், கொஞ்ச நாள் மனதில் வைத்து இருப்பார்கள்....பின் மறந்து விடுவார்கள் - பொன் மேல் பிளவு போல 

ஆன்றோர் அல்லது பெரியோர் இருக்கிறார்களே, அவர்களுக்கு நாம் ஏதாவது  தீமை செய்து விட்டால் உடனடியாக மறந்து மன்னித்து விடுவார்கள்....நீர் மேல் பிளவு போல 

பாடல் 

கற்பிளவோ ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்

பொருள்