Thursday, September 11, 2014

வில்லி பாரதம் - பாரதம் பாடிய காரணம்

வில்லி பாரதம் - பாரதம் பாடிய காரணம் 


பாரதம் ஏன் பாடினேன் என்பதற்கு காரணம் கூறுகிறார் வில்லி புத்துராழ்வார்.

பாரதம் மறை ஓதும் தேவர்களும், முனிவர்களும் , மற்றவர்களும் கூறும் அரிய  பெரிய கருத்துகளை கொண்டது என்பதினால் அல்ல, அதில் இடை இடையே மாதவனான கண்ணனின் சரித்திரம் இடையிடையே வரும் என்ற ஆசையால் இந்த பாரதத்தை நான் எழுதுகிறேன்  என்கிறார்.


பாடல்

முன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறரும்
பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன்
மன்னு மாதவன் சரிதமு மிடையிடை வழங்கும்
என்னு மாசையால் யானுமீ தியம்புதற் கிசைந்தேன்.

பொருள்

முன்னு = அனைத்திற்கும் முன்னால்  இருக்கும்

மாமறை = பெரிய வேதங்களை (கூறும்)

முனிவருந் = முனிவர்களும்

தேவரும் = தேவர்களும்

பிறரும் = மற்றவர்களும்

பன்னு = சொல்லும்

மாமொழிப் = பெரிய கருத்துகள் உள்ளதும்

பாரதப் பெருமையும் பாரேன் = பாரத கதையில் உள்ள பெருமைக்காக இல்லை

மன்னு= என்றும் நிலைத்து நிற்கும்

மாதவன் = கண்ணன்

சரிதமு மிடையிடை வழங்கும் = சரித்திரம் இடை இடையே வரும்

என்னு மாசையால்  = என்ற ஆசையால்

யானும் = நானும்

ஈது = இதை

இயம்புதற் கிசைந்தேன் = சொல்லுவதற்கு ஒத்துக் கொண்டேன்



No comments:

Post a Comment