Tuesday, November 10, 2020

திருக்குறள் - தானம், தவம்

 திருக்குறள் - தானம், தவம் 


தமிழர் வாழ்கை முறையே அறம் சார்ந்ததுதான். எல்லாவற்றையும் அறத்தின் அடிப்படையிலே சிந்தித்தார்கள். அறம் என்றால் ஒரு ஒழுங்கு, இயற்கை, நியதி. 


வாழ்வை இரு பெரும் கூறாக பிரித்தார்கள் - இல்லறம், துறவறம் என்று. 

கூடி வாழ்வது, மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு, பொருள் சேர்த்தல், புகழ் சேர்த்தல் என்று பெருக்கிக் கொண்டே போவதும் அறம்தான். அது இல்லறம். 

ஒன்றும் வேண்டாம் என்று ஒவ்வொன்றாக துறப்பதும் அறம் தான். அது துறவறம். 

சேர்ப்பதும் அறம். விடுவதும் அறம். 


இல்லறம் பற்றி சில விதி முறைகள், துறவறம் பற்றி சில விதி முறைகள் என்று வகுத்து வைத்தார்கள். 


வாழ்கை ஒரு பயணம் என்றால் அது இல்லறத்தில் தொடங்கி, துறவறம் வழியாக வீடு பேற்றை அடைவது என்பதுதான். 


இல்லறத்தை ஒழுங்காகக் கடை பிடித்தால், அது நம்மை தானே துறவறத்தில் கொண்டு போய் நிறுத்தும். 


துறவறத்தை ஒழுங்காக கடை பிடித்தால் அது வீடு பேற்றில் கொண்டு போய் விட்டு விடும். 

சரி, அது எல்லாம் எதுக்கு இந்த வான் சிறப்பு என்ற அதிகாரத்தில்?


பாடல் 


தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_10.html

(pl click the above link to continue reading)

தானம் = தானம், கொடை 

தவம் = தவம் செய்வவது 

இரண்டும் = என்ற இரண்டும் 

தங்கா வியன்உலகம் =தங்காது இந்த விரிந்த உலகில் 

வானம் = வானம் 

வழங்கா தெனின் = வழங்கவில்லை என்றால் 


இதற்கு பரிமேல் அழகர் உரை எழுதி இருக்கிறார். 


தானம் என்றால் அறத்தின் வழி அடைந்த பொருளை தக்கவர்களுக்கு உவைகையுடன் கொடுத்தல் என்று. 


தவம் எனது, பொறி வழி செல்லும் புலன்களை கட்டுப் படுத்துதல் என்று பொருள்.


இதில் தானம் என்பது இல்லறத்துக்கு சொன்ன அறம். 

தவம் என்பது துறவறத்துக்கு சொன்ன அறம். 

மழை இல்லாவிட்டால் தானமும் தவமும் கெடும் என்றால் இல்லறமும், துறவறமும் கெடும் என்று அர்த்தம். அப்படி என்றால் மொத்த வாழ்க்கையே கெடும் என்று அர்த்தம். 


மழை, அறம், வாழ்கை என்று எப்படி பிணைந்து கிடக்கிறது.




1 comment:

  1. தானம், தவம் என்ற சொற்களின் பொருள் இனிமை. நம்மை யோசிக்க வைக்கின்றன.

    நன்றி.

    ReplyDelete