Monday, September 13, 2021

கம்ப இராமாயணம் - உயிர் உண்டு எனின் துயர் உண்டு

 கம்ப இராமாயணம் - உயிர் உண்டு எனின் துயர் உண்டு 


அசோகவனத்தில் சிறை இருக்கும் சீதை புலம்புகிறாள். அவளுடைய துயருக்கு எல்லை இல்லை. 



என் உயிர் இருக்கும் வரை இந்தத் துன்பம் இருக்கும் இருக்கும் போல் இருக்கிறது. என் உயிர் போகும் போதுதான் இந்தத் துயர் விலகி, "சீதை உயிரை விட்டாள்" என்ற புகழ் வரும் போல் இருக்கிறது என்று புலம்புகிறாள். 



பாடல் 


என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,

மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;

'ஒன்று என்உயிர் உண்டு எனின், உண்டு இடர்; யான்

பொன்றும்பொழுதே, புகழ் பூணும்' எனா,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_13.html



(Please click the above link to continue reading)



என்று என்று = எப்போது எப்போது என்று 


உயிர் விம்மி = உயிர் விம்மி 


இருந்து அழிவாள் = நினைந்து வருந்துவாள் 


மின் துன்னும் = மின்னலைப் போன்ற 


மருங்குல் = இடையை 


விளங்கு = கொண்ட 


இழையாள் = சீதை 


'ஒன்று என் உயிர் = என்னுடைய உயிர் 


உண்டு எனின் = உண்டு என்றால் 


உண்டு இடர் = துன்பம் உண்டு 


யான் = நான் 


பொன்றும்பொழுதே = இறக்கும் பொழுதே 


புகழ் பூணும் = புகழ் அடையும் 


எனா = என்று 


உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைக்கும் அளவுக்கு அவளின் துயரம் அவளை வருத்துகிறது. 



1 comment:

  1. பாடலைப் படிக்கும்போதே வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete